tag:blogger.com,1999:blog-38569503837578272122024-03-13T16:41:23.335+04:00பாலைவனத் தூதுநிகழ்வுகளின் நிதர்சனம்பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-61912772092606096592011-03-01T08:22:00.002+04:002011-03-01T08:25:30.491+04:00ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்! - பசலை கீரை<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiO8cP76ll6dp9ztroqaoNBdRavRgysJpUl4NAaYd9YF_-2jjm54-ROGs-EsjfmIpmRTx_l6SE4j_0d6EF3QSVydWkoL_wtdvrUgne4zf-Vb2jSCQsyTP5rDbMUqdcU0aDEJXSDMihj0hc/s1600/pasalai%252520keerai3.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 259px; FLOAT: left; HEIGHT: 173px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5578962472713527586" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiO8cP76ll6dp9ztroqaoNBdRavRgysJpUl4NAaYd9YF_-2jjm54-ROGs-EsjfmIpmRTx_l6SE4j_0d6EF3QSVydWkoL_wtdvrUgne4zf-Vb2jSCQsyTP5rDbMUqdcU0aDEJXSDMihj0hc/s400/pasalai%252520keerai3.jpg" /></a>மார்ச்.1:பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் .<br /><br />பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.<br /><br />தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.<br /><br />இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.<br /><br />ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது. இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.<br /><br />இந்த கீரையில் வைட்டமின் A, B C சத்துகள் உள்ளது. சுண்ணாம்பு சத்து நார் சத்து இரும்பு சத்து அடங்கியது. இது தாதுவை கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வரட்ச்சியை அகற்றும். உள சூட்டை போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன. பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.<br /><br />ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.<br /><br />இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.<br /><br />ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.<br /><br />இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலை கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்!</div><div align="justify">source:<span style="color:#ff0000;">tamilheritage</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-28170246391466995942011-02-27T08:16:00.003+04:002011-02-27T08:24:18.525+04:00முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?<div align="justify"> பிப்.27:முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள். <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 248px; DISPLAY: block; HEIGHT: 166px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5578219798148034690" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUjokG2YxTYKMiOhTqbBF2F2030mSM5VY2qLMYAzRQll8SM0B_df6QmRC4g-aXafaIPZBScOG63wciYqnf-rag82kFdMbvLi4tMaOQjs5VCJWboEWavSzFU0Iktidn7qRU3YNYjv-rEGA/s400/1547292_orig.jpg" />அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.<br /><br />முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும். <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 302px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5578219801493693298" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNozg5eqH-IW0VjFrlPRRur509Z_I0SOO7lnvDfgt9xVsruWnMNN8wkjVA8ltgC_FX3IIPYX4mrlBtgkS910d0jmgQTvNno4qnp3ly4eWOPtGaanshKU_r-R4MYyMen8AfB1oTD4MK_Ig/s400/diagram_spine_conditions_57131206_std.jpg" />மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.<br /><br />அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.<br /><br />வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.<br /><br />ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'<br /><br />இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.<br /><br />மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.<br /><br />கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.<br /><br />ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.<br /><br /><strong><span style="color:#ff0000;">இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?<br /><br /></span></strong>முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.<br /><br />இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.<br /><br />மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு<br /><br />சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்<br /><br />அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.<br /><br />மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.<br /><br />இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 312px; DISPLAY: block; HEIGHT: 357px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5578219804700637202" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWQYk-qTp_tzZVtEtSNwuIwilfL5Tcw7js2YhVUzul5jO-PEBxdbLNmKAizcwM3hvmVIjWkD5PB95SpnZTskZkvlJ7Y6AnI8-qHekOCT0iMIsLLCUJQo_nFQpMHk4aZSv9a6aLEl0CW84/s400/sitting-posture1.jpg" />உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.<br /><br />லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-51748579175823128842011-02-24T07:46:00.003+04:002011-02-24T07:52:11.706+04:00நடைப்பயிற்சி<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisjBqB9ZAgA1-n1dgf2tOv6KjQi8p54lLXgjBfK7T7Xz8BbiDdThcpQL1DaJpQ1jiMF8ni-ULQRBB5AhTVbs2CNwQU3meEihIw5sWAPYhf2ACm9nNVdzpKypLxvK2LWV4fur4XeF4a7kc/s1600/walking-silhouette-clip-art.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 235px; FLOAT: left; HEIGHT: 349px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5577098358372915042" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisjBqB9ZAgA1-n1dgf2tOv6KjQi8p54lLXgjBfK7T7Xz8BbiDdThcpQL1DaJpQ1jiMF8ni-ULQRBB5AhTVbs2CNwQU3meEihIw5sWAPYhf2ACm9nNVdzpKypLxvK2LWV4fur4XeF4a7kc/s400/walking-silhouette-clip-art.jpg" /></a>பிப்.24: உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும்.<br /></div><div align="justify">பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.<br /><br />நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது.<br /><br />மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும்.<br /><br />நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.<br /><br /><strong>நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்</strong>.<br /><strong>·</strong> உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும்.<br /><strong>·</strong> உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். வியர்வை நன்கு வெளியேறும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். உடல் வலுப்பெறும்.<br /><strong>·</strong> காற்றை நன்கு உள்வாங்கி வெளியிடுவதால் நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சுவாசத்தை சீராக்குகிறது.<br /><strong>·</strong> நடப்பதால் நரம்புகள் பலமடைகிறது, மூளை புத்துணர்வு பெறுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கிறது.<br /><strong>·</strong> எலும்புகள், பலப்படும். தசைகள் சுருங்கி விரியும்.<br /><strong>·</strong> உடலில் தங்கியுள்ள அதிகமான அதாவது தேவையற்ற கொழுப்புகள் கரையும்.<br /><strong>·</strong> நல்ல உறக்கம் கிட்டும்.<br /><strong>·</strong> நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.<br /><strong>·</strong> முதுமையைத் தள்ளி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும்.<br /><strong>·</strong> கை, கால் மூட்டு வலி நீங்கும்.<br /><strong>·</strong> செரிமான சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.<br /><strong>·</strong> முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.<br /><strong>·</strong> தினமும் 1 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.<br /><br />நடைப்பயிற்சி நமக்கு நலம் தரும் பயிற்சியாகும். ஆரோக்கியத்தை அள்ளித்தரும், பயிற்சி. தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-18759371856316865952011-02-21T11:39:00.003+04:002011-02-21T11:44:30.674+04:00முதுமையை வெல்ல நெல்லிக்கனி<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_8c50HJH_iY2VwhUAzVfxjTe7cOpPJRYS5GZnClyJUiQIkHMpEH-4sP56ohe41N_WPYVL7CXalUt-_Av907fo9lcs5VlSlWLlv85BOiLjE5pJ2LZwY4X4izOdEKto69kSvUZiZ1QRlAU/s1600/images.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 239px; FLOAT: left; HEIGHT: 211px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5576045071823189250" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_8c50HJH_iY2VwhUAzVfxjTe7cOpPJRYS5GZnClyJUiQIkHMpEH-4sP56ohe41N_WPYVL7CXalUt-_Av907fo9lcs5VlSlWLlv85BOiLjE5pJ2LZwY4X4izOdEKto69kSvUZiZ1QRlAU/s400/images.jpg" /></a>பிப்.21:இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.<br /><br />முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.<br /><br />முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது.<br /><br />மேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.<br /><br />தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.<br /><br />கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. </div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-22943396509669003132011-02-19T08:33:00.001+04:002011-02-19T08:36:11.662+04:00அலர்ஜி(ஒவ்வாமை) தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்<div align="justify">பிப்.19:தட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது.<br /><br />பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.<br /><br />வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது.<br /><br />அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.<br />பாதுகாப்பு முறைகள்:<br /><br /><strong>*</strong> உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும்.<br /><br /><strong>*</strong> வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது.<br /><br /><strong>*</strong> உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.<br /><br /><strong>*</strong> சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம்.<br /><br /><strong>*</strong> ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும்.<br /><br /><strong>*</strong> தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.<br /><br /><strong>*</strong> பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.<br /><br /><strong>*</strong> துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம்.<br /><br /><strong>*</strong> சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம்.<br /><br /><strong>*</strong> ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.<br /><br /><strong>*</strong> நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம். </div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-66494016052869056012011-02-08T08:15:00.002+04:002011-02-08T08:17:47.700+04:00பாகற்காயின் மருத்துவ குணங்கள்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzittjGPhaksZUzGXoNqG7kNJr22kfwm_Z_1yANh_rYSVzZDq7UfLxcoYBwiD1jGCwkMBTvRqABl1pv0OV4O6STKVDVjnYlUqnrv6KIQpnMusmpVjYpEQ5c8vimYzimVRTyUQlt7j93mo/s1600/Bittergourd.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 236px; FLOAT: left; HEIGHT: 376px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5571167935621025618" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzittjGPhaksZUzGXoNqG7kNJr22kfwm_Z_1yANh_rYSVzZDq7UfLxcoYBwiD1jGCwkMBTvRqABl1pv0OV4O6STKVDVjnYlUqnrv6KIQpnMusmpVjYpEQ5c8vimYzimVRTyUQlt7j93mo/s400/Bittergourd.jpg" /></a>பிப்.8:நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.<br /><br />உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.<br /><br />1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.<br /><br />2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.<br /><br />3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.<br /><br />4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.<br /><br />5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.<br /><br />6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.<br /><br />7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.<br /><br />8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.<br /><br />9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.<br /><br />10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.<br /><br />11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.<br /><br />12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.<br /><br />13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.<br /><br />14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம். </div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-58112883041076097232011-02-06T22:06:00.003+04:002011-02-06T22:16:00.842+04:00தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன?<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIBfoB_G2x9ap6AAPRxSICF488AuW0d1OPDxt5d41M3T2gblS_fEvIw13ANiMrH5z_QowWvfIJVOQrqPKzKOMsa4qaEg52sgeH_EG5GGHJVML4IkfeeO5vFNDcOegcbK7hQLbdNGnT3_M/s1600/littlegirl-left.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 233px; FLOAT: left; HEIGHT: 290px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5570641389631881698" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIBfoB_G2x9ap6AAPRxSICF488AuW0d1OPDxt5d41M3T2gblS_fEvIw13ANiMrH5z_QowWvfIJVOQrqPKzKOMsa4qaEg52sgeH_EG5GGHJVML4IkfeeO5vFNDcOegcbK7hQLbdNGnT3_M/s400/littlegirl-left.jpg" /></a> பிப்.6:உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன.<br /><br />இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஔி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கின்றனர், இயற்கை வைத்தியர்கள்.<br /><br />தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது. உடலில் இருந்து ஜீவ சத்துக்களைக் கரைத்து திரவமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.<br /><br />மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்களுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது. நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.<br /><br />நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமாகாமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது. முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது.<br /><br />மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.<br /><br />"மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔி பட்ட தண்ணீர்தான்" என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர். இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.<br /><br />சூரிய ஔி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன.<br /><br />சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர். உடலைச் சுத்தபடுத்துவது குளிப்பதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-58816661716333717612011-02-06T08:47:00.003+04:002011-02-06T09:01:28.460+04:00இந்தியர்கள் நோயில் விழும் வாய்ப்புகள் அதிகரிப்பு: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMlzTSysANL_TlTbmp5Ut1kUI_BMdSdpkb2YLk2sl38Un0rsG3fmMtEUXYyTLymdlxUMJVKdIka6vE9p4p1AEXX9h48X6HJo2BQ25xPakTjmj02sVpjRdBEU3FcZa8-grjknT1-XYoglA/s1600/images.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 231px; FLOAT: left; HEIGHT: 218px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5570436669076550386" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMlzTSysANL_TlTbmp5Ut1kUI_BMdSdpkb2YLk2sl38Un0rsG3fmMtEUXYyTLymdlxUMJVKdIka6vE9p4p1AEXX9h48X6HJo2BQ25xPakTjmj02sVpjRdBEU3FcZa8-grjknT1-XYoglA/s400/images.jpg" /></a>ஜெனீவா,பிப்.6:இந்தியர்களின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டன; உடல் உழைப்பு குறைந்துவிட்டது. உடல் பயிற்சி என்பது அறவே கிடையாது.<br /><br />மணிக்கணக்காக தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து தொடர்கள் பார்ப்பதும் நொறுக்குத் தீனி தின்பதும் காபி, டீ அடிக்கடி குடிப்பதும் அதிகரித்துவிட்டது.<br /><br />ஆண்கள் புகையிலை, மதுபான வகைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இரவில் நேரத்தோடு தூங்காமல் நடுநிசிவரை கண் விழிப்பதும் அதிகரித்து வருகிறது. இந்தக் காரணங்களால் இந்தியர்களுக்கு இதய நோய், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, கால் மூட்டுகள் வலுவிழப்பது அதிகம் வரத் தொடங்கியிருக்கிறது என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கிறது.<br /><br />இந்தியாவில் இப்போது நடுத்தர வர்க்கத்தாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுடைய வாழ்க்கை முறை அடியோடு மாறிவருகிறது. உடல் உழைப்பையும், உடலை வருத்தி செய்யும் செயல்களையும் ஏதோ ஒரு காரணத்துக்காக கைவிட்டு வருகிறார்கள்.<br /><br />சத்துள்ள புன்செய் தானியங்கள், நவதானியங்கள், காய்கறி, பழங்களைச் சாப்பிடும் பழக்கம் குறைந்து வழக்கம் அல்லாத பச்சரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவற்றை அதிகம் உட்கொள்கின்றனர்.<br /><br />காபி, டீ ஆகிய சூடான பானங்களுடன் மதுவகைகளை ருசி பார்க்கும் வழக்கம் ஆண்களிடம் அதிகரித்து வருகிறது. இது படிப்படியாக கல்லீரல், குடல் ஆகியவற்றுடன் முழு உடலையும் கெடுத்துவிடும் என்பதை அறிந்தே இப்பழக்கத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.<br /><br />எண்ணெயில் பொரித்தது, அவசரகதியில் மசாலா பொருள்களுடன் தயாரித்தது, காரம், மணம், சுவைக்காக ரசாயனங்கள் சேர்த்தது ஆகியவற்றை விரும்பி உண்ணும் போக்கு அதிகரித்து வருகிறது.<br /><br />குளிர்பானங்களிலும் உள் உறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அதிக அமிலத்தன்மையும் காரத்தன்மையும் உள்ள,சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தப்படும் பானங்களைக் குடிப்பது, ஐஸ்கிரீம், சாக்லெட் போன்ற பல்லுக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் சுவைப் பண்டங்களைத் தின்பது ஆகியவையும் அதிகரித்துவிட்டன.<br /><br />எல்லாவற்றையும் விட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் அரசு அலுவலகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் இளைஞர்களும் உடல் பயிற்சியை அறவே விட்டுவிட்டனர்.<br /><br />காலை, மாலை நேரங்களில் திடல்களில் விளையாடுவது என்பதும் அபூர்வக் காட்சியாகிவிட்டது. இலவச பஸ் பாஸ்களாலும், டூ வீலர் எனப்படும் பெட்ரோல் வாகனங்களாலும் நடப்பது என்பதே மறந்ததுபோல ஆகிவிட்டது.<br /><br />இப்படி எல்லா வழிகளிலும் உடலுக்கு உரம் சேர்க்கும் செயல்களை நிறுத்திவிட்டு, உடலைச் சல்லடையாகத் துளைக்கும் மதுபானங்களையும் தின்பண்டங்களையும் சுவைப்பது அதிகமாகிவிட்டதால் எதிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.<br /><br />மத்திய, மாநில அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உடனே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களை உடல் பயிற்சியில் தீவிரமாகத் திருப்பிவிட்டால்தான் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் குறையும் என்கிறது.<br /><br />மாரடைப்பு, மூளையில் ரத்தம் உறைதல் (பக்கவாதம்), ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுதல், ரத்தக்கொதிப்பு அதிகமாதல், கழுத்துப் பகுதியில் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், எலும்புகள் தேய்ந்து வலுவிழத்தல், மனநலம் குன்றி எப்போதும் சோகத்திலும் விரக்தியிலும் ஆழ்ந்திருத்தல் ஆகியவை அதிகரித்து வருவதாக அதன் களஆய்வு தெரிவிக்கிறது.<br /><br /><strong>கேரளம் தடுப்பு நடவடிக்கை</strong>:<br />பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புகள் எவை என்று தெரிந்து தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்திருக்கிறது. மக்களுக்கு அது விழிப்புணர்வை ஊட்டி வருகிறது.<br /><br />ஆண்டுக்கு 32 லட்சம் மக்கள் உலகமெங்கும் இறக்கின்றனர். அவர்களில் 26 லட்சம் பேர் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.<br /><br />அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வந்த நோய்களை ஆராய்ந்ததில் உடல் பயிற்சி இல்லாததுதான் இறப்புக்குக் காரணம் என்று தெரிகிறது.<br /><br />சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், நீண்ட தொலைவு காலாற நடத்தல், வீட்டு வேலைகளைத் தாங்களே செய்தல், கிணற்றில் நீர் இறைத்தல், துணிகளைத் துவைத்தல், வீடு பெருக்கி மெழுகுதல், காலை மாலை குடும்பத்தவர்களுடன் பூப்பந்து, சிறகுப்பந்து, வளைபந்து போன்றவற்றையாவது ஒரு மணி நேரம் விளையாடுதல் மூலம் உடலையும் உள்ளத்தையும் நலமாக வைத்துக் கொள்ளலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.<br /><br />இதற்கு முதல் படியாக எல்லோர் வீடுகளிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை நாளின் பெரும்பாலான நேரங்களில் மூடி வைப்பதே நல்லது. அது கண்பார்வை கெடுவதை நிச்சயம் தடுக்கும். மனம் அமைதி அடையும்.<br /><br /><span style="color:#ff0000;">தினமணி</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-51535755823060465472011-01-17T23:14:00.003+04:002011-01-17T23:23:13.270+04:00அழிவிற்கு அழைக்கும் அவசர உணவுகள்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUt7udVESX-RsaxYNZhqS7cluHvi_OHkE6utq77YFUZZ8yuriC5UZLNOc_x5bRhjHNFNrkxY6Rvwe4XyzwhecarBEpEAh7nEVSMMoliLhHvaeW6JlMPBc10ctEn8pdZqxjEvLbSH-_QlI/s1600/FatKids_311155840_std.jpg"><img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 365px; FLOAT: right; HEIGHT: 277px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5563237248586205314" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUt7udVESX-RsaxYNZhqS7cluHvi_OHkE6utq77YFUZZ8yuriC5UZLNOc_x5bRhjHNFNrkxY6Rvwe4XyzwhecarBEpEAh7nEVSMMoliLhHvaeW6JlMPBc10ctEn8pdZqxjEvLbSH-_QlI/s400/FatKids_311155840_std.jpg" /></a> ஜன.17:பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்குமுக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.<br /><br />பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு - சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity) ஏற்படுகிறது.<br /><br />இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு தடை செய்தது.<br /><br />நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் இணைக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.<br /><br />2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.<br /><br />அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.<br /><br />மெக்டோனால்டுக்கு அடுத்து அவசர உலகின் ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவது அமெரிக்காதான்.<br /><br />கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.<br /><br />அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா? இந்த நிலை நமது நாட்டுக்கும் வரவேண்டுமா? </div><div align="right"><span style="color:#ff0000;">MSAH</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-74226061246906558452011-01-16T07:55:00.004+04:002011-01-16T07:58:22.187+04:00உடல் இளைக்க வேண்டுமா? இஞ்சி சாறு சாப்பிடுங்க!<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXqpzB5EUAp9LgdjSynPP55AokPZStOOTSpixcEA5TlZKKeLsw4BIY83dxhDOEbiguzGgMZ9NC8PmQROYufgigyuwX88onNEbBnARCj2ym8NhZoD13NTsRzYTa2-GI6yv4-9NOVnoAS80/s1600/4045360402_5a15bda2f2.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 261px; FLOAT: left; HEIGHT: 199px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5562627794219274546" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXqpzB5EUAp9LgdjSynPP55AokPZStOOTSpixcEA5TlZKKeLsw4BIY83dxhDOEbiguzGgMZ9NC8PmQROYufgigyuwX88onNEbBnARCj2ym8NhZoD13NTsRzYTa2-GI6yv4-9NOVnoAS80/s400/4045360402_5a15bda2f2.jpg" /></a>ஜன.16:உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.<br /><br />இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.<br /><br />இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.<br /><br />இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.<br /><br />இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.<br /><br />காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-24697766031902193692011-01-12T08:11:00.003+04:002011-01-12T08:16:01.142+04:00ஒட்டகத்தின் பாலில் புற்று நோய்க்கு மருந்து<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5XTxSF8bMZHNC-4vnhWOpg3Cf3WzzSx2cuMnomcwBASFtowuSlNdrcUbo9RqYlXZSJ_byM5dK7sXG6kkZp-6crfen3_Awgv41BHwZT_tvzt8xz342M-km6LtgD6hONF_Py1JYampk_LE/s1600/Camel-Milk-Dubaiinformer.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 237px; FLOAT: left; HEIGHT: 163px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5561148009060970402" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5XTxSF8bMZHNC-4vnhWOpg3Cf3WzzSx2cuMnomcwBASFtowuSlNdrcUbo9RqYlXZSJ_byM5dK7sXG6kkZp-6crfen3_Awgv41BHwZT_tvzt8xz342M-km6LtgD6hONF_Py1JYampk_LE/s400/Camel-Milk-Dubaiinformer.jpg" /></a>ஷார்ஜா,ஜன.12:ஒட்டகத்தின் பாலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அரப் சயன்ஸ் இன்ஸ்ட்யூட் அண்ட் டெக்னாலஜி ஃபவுண்டேசனின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல் நஜ்ஜார் அறிவித்துள்ளார்.<br /><br />ஒட்டகத்தின் பாலும், சிறுநீரும் கலந்து எலிகள் பின்னர் மனிதர்களில் சோதனை நடத்தியதாக அவர் விளக்கமளித்தார்.<br /><br />2008 ஆம் ஆண்டு ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் துவங்கிய இந்த பரிசோதனை பூர்த்தியானது பாக்தாத் கேன்ஸர் இன்ஸ்ட்யூட்டிலாகும்.<br /><br />இந்த மருந்திற்காக பிரிட்டனில் காப்புரிமைப் பெற்று தனியாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.<br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-90574705028150173182010-12-14T22:19:00.002+04:002010-12-14T22:29:14.690+04:00இரத்தக் குழாய் அடைப்பை நீக்க நவீன லேசர் சிகிச்சை<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix95XjVspiOucPR-YNWYn6pXCG2oZhcFuAoyv1meYZ16AAQBypT9rdtgMr6-jvm20iTupLvxXAWhcR83MC9m1eOstkQ0YPmpBUQ7lGTT58hX2Sf8FbCOx9GJxj6T-X2QiRQ0kctPJSA2oO/s1600/th_excimer%2525201109%25252001.gif"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 231px; FLOAT: left; HEIGHT: 242px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5550606606412637346" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix95XjVspiOucPR-YNWYn6pXCG2oZhcFuAoyv1meYZ16AAQBypT9rdtgMr6-jvm20iTupLvxXAWhcR83MC9m1eOstkQ0YPmpBUQ7lGTT58hX2Sf8FbCOx9GJxj6T-X2QiRQ0kctPJSA2oO/s400/th_excimer%2525201109%25252001.gif" /></a>லண்டன்,டிச.14:இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு, அதிநவீன லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.<br /><br /></div><div align="justify">உலக அளவில் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால், பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர் திடீர் மரணங்களை தழுவும் ஆபத்துடன் வாழ்கின்றனர்.இரத்த குழாய் அடைப்பை நீக்குவதற்கு, பல சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், நிரந்தர தீர்வுக்கு, பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.ஆனால், இந்த அறுவை சிகிச்சை செய்ய பல மணி நேரம் தேவைப்படும். ஆபத்துகளும் அதிகம். நோயாளிகள் குணமாக நீண்ட காலம் தேவைப்படுகிறது.<br /><br />இந்த நிலையில், இரத்த குழாய் அடைப்பை உடனடியாக நீக்கும் வகையில், புதிய லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்குள், 'கதீட்டர்’ என்ற நுண்ணிய குழாயை செலுத்தி, அதன் வழியாக சக்தி வாய்ந்த லேசர் கற்றைகள் பாய்ச்சப்படும்.வெப்பம் காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ள, பகுதிக்குள் படிந்திருக்கும் தேவையில்லாத படிமங்கள் பொடிப் பொடியாக சிதறி விடும். இந்த லேசர் சிகிச்சைக்கு, 'எக்சைமர்’ என பெயரிடப்பட்டுள்ளது.<br /><br />கடந்த ஜூலை மாதம், இரண்டு நோயாளிகளுக்கு இந்த லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. மேலும், அந்த நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்ட மறு நாளே, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.இந்த சிகிச்சை மூலம் நோயாளிகள் ஆச்சர்யமளிக்கும் வகையில் மிக விரைவில் பூரண குணமடைந்தனர்.<br /><br />இந்த சிகிச்சைக்கான இறுதி கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த அதிநவீன லேசர் சிகிச்சை நடைமுறைக்கு வந்தால், இரத்தக் குழாய் அடைப்பால், பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர் பயனடைய வழி பிறக்கும்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-60061299598985211602010-11-21T08:08:00.003+04:002010-11-21T08:14:07.816+04:00சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழச்சாறு<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ7ZCLBhtwjsrWLCF3SNhFcs5nyArbYkNexEp68tRt5spNnizLcEnX_rNhPdzujfGLbj7ngxo2dNlbLVj8Dl_z52F-h0LQNTDevGAMaR9lQPj5h-lSLMvPtPoOb9pTbla99-WLuAlO6dbB/s1600/pomegranate%252520juice.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 217px; FLOAT: left; HEIGHT: 185px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5541851125105075250" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ7ZCLBhtwjsrWLCF3SNhFcs5nyArbYkNexEp68tRt5spNnizLcEnX_rNhPdzujfGLbj7ngxo2dNlbLVj8Dl_z52F-h0LQNTDevGAMaR9lQPj5h-lSLMvPtPoOb9pTbla99-WLuAlO6dbB/s400/pomegranate%252520juice.jpg" /></a>லண்டன்,நவ.21:சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்வில் தெரியவருகிறது,<br /><br />இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது.<br /><br />ஏனெனில், மாதுளம் பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர். இருப்பினும், இந்த சோதனையை இன்னும் பலரிடம் செய்துபார்ப்பது நல்லது என வெஸ்டன் கலிலி மருத்துவமனையில் இந்த ஆய்வை நடத்திய தலைமை மருத்துவ நிபுணர் பட்யா கிறிஸ்டல் தெரிவித்தார்.<br /><br />இந்த செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.<br /><br />புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூறத்தக்கது.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-25474225759372368382010-11-11T08:14:00.002+04:002010-11-11T08:20:02.456+04:00கிவி பழம் சாப்பிட்டால் உடல்நலம் உறுதி<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCeQOGA-xXlDoRyd_wJAJGBDNlJecIg9qLo8JiyAaOOO1ngxoN1kWbQdX2DIMa4Bn3uRqX-Ghoiltx4omvN3HPRIqSU3bC6wPg7XYfJRX7tEWkgZpp93DueBhvqayE5fc9zkyHhQAQ23w-/s1600/kiwi.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 199px; FLOAT: left; HEIGHT: 231px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5538141986590530002" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCeQOGA-xXlDoRyd_wJAJGBDNlJecIg9qLo8JiyAaOOO1ngxoN1kWbQdX2DIMa4Bn3uRqX-Ghoiltx4omvN3HPRIqSU3bC6wPg7XYfJRX7tEWkgZpp93DueBhvqayE5fc9zkyHhQAQ23w-/s400/kiwi.jpg" /></a>நவ.11:'கிவி பழம்'(பசலிப்பழம்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.<br /><br />தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. இதை நம்மூரில் கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம்.<br /><br />அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது.<br /><br />ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறியதாவது: கிவி ப்ரூட்டில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.<br /><br />விட்டமின் சியின் பணிகளை விட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. கிவி ப்ரூட்டில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-22277120894154309472010-11-10T07:50:00.002+04:002010-11-10T07:54:13.347+04:00சர்க்கரை நோய் மற்றும் தீய கொழுப்பை குறைக்கும் பிஸ்தா!<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiwNgkm8kW4K0FgTztQK5SScjaMxPJb7YAUMZ-14gaL8Mx1EvYGiyBw5JQgiRAJWCnT1L_XRMCGBFXS1NoojzYeyMdDPbus91WLtSIKyDmP3rGpqYUZEy3PHUmG83RTpn1DU3CRNm4wEkG/s1600/Pista.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 229px; FLOAT: left; HEIGHT: 181px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5537764267011079362" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiwNgkm8kW4K0FgTztQK5SScjaMxPJb7YAUMZ-14gaL8Mx1EvYGiyBw5JQgiRAJWCnT1L_XRMCGBFXS1NoojzYeyMdDPbus91WLtSIKyDmP3rGpqYUZEy3PHUmG83RTpn1DU3CRNm4wEkG/s400/Pista.jpg" /></a>நவ.10:சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இருதய நோய் தாக்குவதற்கான அபாயம் 4 மடங்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இருதய நோய் தலைநகராக இந்தியா உருவெடுத்து வருகிறது.<br /><br />நாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளை சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமை செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம் என டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.<br /><br />பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. உயர் கார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப் பொருளாக பிஸ்தாவைச் சாப்பிடும் போது, உடலுக்குள் கார்போஹைட்ரேட் கிரகிக்கப்படுவது குறைகிறது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-26995007129653678532010-11-06T08:06:00.003+04:002010-11-06T08:13:33.846+04:00தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrEP3X6oeQomjut_J9AoogWKB0JphH_WJbw5MfzUzlOKJrODpZ4Kf1xtDkN5quJ0C5_-kEHoyE715uVVseu5_Hu9MAVQf_Qp0eIM0OelbYEPwGwoBrhgF_rKDgsa2vkFPigcYWSKG-KDjs/s1600/baby-sleeping-black-and-white.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 294px; FLOAT: left; HEIGHT: 185px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5536284780650390962" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrEP3X6oeQomjut_J9AoogWKB0JphH_WJbw5MfzUzlOKJrODpZ4Kf1xtDkN5quJ0C5_-kEHoyE715uVVseu5_Hu9MAVQf_Qp0eIM0OelbYEPwGwoBrhgF_rKDgsa2vkFPigcYWSKG-KDjs/s400/baby-sleeping-black-and-white.jpg" /></a>நவ.6:தூக்கம் என்பது இரவானதும் நமது உடல் இளைப்பாறக் கிடைத்த விஷயம் என்றுதான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தூக்கத்திற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன.<br /><br />தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலர் படுத்ததும் தூங்கி விடுவர். சிலர் மணி 12ஐ தாண்டினால் தான் தூங்கவே செல்வர். சிலர் புரண்டு புரண்டு படுத்து தூக்கத்துடன் போராடி கடைசியாக தூங்குவர். தூங்குவதிலும் பல வகைகள் உண்டு. ஆழ்ந்த உறக்கம், லேசான உறக்கம் போல பல உண்டு.<br /><br />பொதுவாக கனவுகள் இல்லாத தூக்கமே சிறந்த தூக்கமாகும். கனவுகள் இல்லாமல் தூங்கி எழுந்தால்தான் உண்மையில் ஆழ்ந்த தூக்கத்தை தூங்கினீர்கள் என்று அர்த்தப்படும். கனவுகள் இல்லாத தூக்கத்தைக் கான சுவாசம் சீராக இருக்க வேண்டும். சீரான சுவாசம் இருப்பின் நல்ல தூக்கம் ஏற்படும். சுவாசத்தில் சிதைவு ஏற்பட்டால் தூக்கத்திலேயே மனம் அதிகம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். மனம் வேலை செய்வதுதான் கனவுகளின் அடிப்படையே.<br /><br />சரி தூக்கத்தில் சுவாசத் தடை ஏற்பட என்னக் காரணம் இருக்கும். நமது உணவு முறைதான். தூக்கத்தைக் கெடுக்கும் பல உணவுகள் உள்ளன. தூக்கத்தைக் கொடுக்கும் உணவுகளும் உள்ளன. அவற்றைத் தேர்வு செய்து அளவோடு உண்பதுதான் தூக்கத்திற்குத் தேவையான சீரான சுவாசத்தை அளிக்கும்.<br /><br />இரவில் சாப்பிடும் உணவானது அளவு குறைவான உணவாகவும், காரமில்லாத, வாயு சேர்க்காத உணவாகவும் இருப்பது மிகவும் முக்கியம்.<br /><br />உடல் சுத்தமும், நல்ல காற்றோட்டமும் கூட தூக்கத்திற்கு அடிப்படையாகும். உறங்கப் போகும் முன் முகம், கை கால்களை சுத்தப்படுத்திக் கொள்வதும், நாம் படுக்கும் இடம் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளவும்.<br /><br />சாப்பிட்டவுடன் களைப்போடு சென்று படுக்கையில் விழுவது, சோம்பலையும், கெட்ட கனவுகளையும் அளிக்கும். பகல் தூக்கம் நிச்சயமாக இரவுத் தூக்கத்தைக் கெடுக்கும். சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு படுக்கச் சென்றால் நிச்சயமாக நல்ல தூக்கம் வரும்.<br /><br />தூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, மனத்திற்கும் ஓய்வளிக்கிறது. அதே போல தூங்காத மனிதர்களின் மனமும் சோர்வடைவதை காணலாம். சரியான தூக்கம் இல்லையே என்ற எண்ணமே, மனதிற்குள் கோபமாகவும், துக்கமாகவும் மாறக் கூடும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.<br /><br />நல்ல சீரான தூக்கம் மனதை ஆனந்தமான நிலையில் வைத்திருக்க உதவும். மனமே நமது அன்றாட காரியங்களுக்கு உறுதுணையாக இருக்கும். மனம் ஆனந்தமாக இருந்தால் நமது வேலையும் திருப்தியாக இருக்கும்.<br /><br />தூக்கம் வராத நிலையில் புரண்டு புரண்டு படுப்பதை விட, உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை செய்து பாருங்கள். மனம் உற்சாகம் அடைவதால் வராத தூக்கமும் விரைவில் வந்து சேரும். பிடித்த வேலை என்றால் பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது போன்றவை. தொலைக்காட்சி பார்ப்பதால் பலரது தூக்கம் பாதிக்கப்படுகிறது.<br /><br />தூக்கம் கெட்டு எந்தப் பணியை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியாது. எனவே, தூக்கத்திற்குத் தேவையான விஷயங்களை நாம் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.<br /><br />நன்றி:<span style="color:#ff0000;">வெப்துனியா </span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6479027540278626232010-11-03T07:51:00.003+04:002010-11-03T08:03:14.368+04:00உடலுக்கு சக்தி தரும் வாழைப்பழங்கள்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgltlC2aru9JQYvgOUnDSOot2I0UQ4UhR_FInwmFsj64MYn6SzQby2OYu6Cf6ihWjNVAISCY9IfALXytU9gw8kSEBOsD-J9H02W23tAgxU9sBxI_R57BRKyqhy0TiSajuwFwH0jgY7bFivW/s1600/banana-bsp.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 303px; FLOAT: left; HEIGHT: 224px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5535167246801785410" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgltlC2aru9JQYvgOUnDSOot2I0UQ4UhR_FInwmFsj64MYn6SzQby2OYu6Cf6ihWjNVAISCY9IfALXytU9gw8kSEBOsD-J9H02W23tAgxU9sBxI_R57BRKyqhy0TiSajuwFwH0jgY7bFivW/s400/banana-bsp.jpg" /></a> நவ.3:தினசரி மாலை நேரம் ஒரு மஞ்சள் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கம் இயல்பாக வருகின்றதாம்.<br /><br />தூக்க மாத்திரைக்குப் பழக்கமானவர்கள் அதற்குப் பதிலாக வாழைப் பழத்திற்கு அடிமையாகலாம். அதனால் பின் விளைவு வராது. மூளையைச் சுறுசுறுப்பாகவும், அதிகமான தூக்கமிருந்தால் அதனைக் கட்டுப்படுத்தவும் உறுதுணையாகும் செரடோனின் எனும் `நியூரோ டிரேன் ஸ்மிட்டர்’ வாழைப் பழத்தில் உள்ளதாம்.<br /><br />இங்கிலாந்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வாழைப் பழத்தை ஆராய்ச்சி செய்து அதில் இரண்டு வேதிப் பொருட்களைக் கண்டறிந்தனர். அதனைச் சோதித்தபோது `குடற் புண்ணை’ ஆற்றும் திறன் அவற்றுக்கு இருப்பது உறுதியானது<br /><br />குறிப்பு:கடுமையான ஆஸ்துமா உள்ளவர்கள், நீண்ட கால சர்க்கரை நோய் உள்ளவர்கள், கை, கால் வலிப்பு உள்ளவர்கள், உடல் பருமன் மிக்கவர்கள் வாழைப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-64909939036506521892010-10-29T09:01:00.002+04:002010-10-29T09:05:16.953+04:00மருத்துவ குணம் நிறைந்த வெந்தயம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi8rdbryzC7bQGI4_7PYRV28SsPQjq12wK6ZyTL9DTgdtGYMaqoTdPRhOT6FaXw6JBe-pnpLVBRVm9AfwkHhqct5F3y76plicPzZ9LVZ5CohCFuDMkZrr8Jnm1HrlCL3QYg9tTELaIs9_B/s1600/Fenugreek16.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 214px; FLOAT: left; HEIGHT: 219px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5533329571792327842" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi8rdbryzC7bQGI4_7PYRV28SsPQjq12wK6ZyTL9DTgdtGYMaqoTdPRhOT6FaXw6JBe-pnpLVBRVm9AfwkHhqct5F3y76plicPzZ9LVZ5CohCFuDMkZrr8Jnm1HrlCL3QYg9tTELaIs9_B/s400/Fenugreek16.jpg" /></a>அக்.29:வெந்தயம் ஒரு சிறந்த மணம் மற்றும் வாசனையூட்டும் தாவரப் பொருளாகும். இது அஞ்சரைப் பெட்டியில் தவறாமல் இடம்பெறும் ஒன்றாகும். பல்வேறு மருத்துவத் தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் இது மருத்துவத் தாவரமாகவும் விளங்குகிறது. மட்டுமின்றி வெந்தயத் தழை சிறந்த கீரையாகவும் பயன்படுத்தப்படுகிறது. முற்காலத்திலிருந்தே வெந்தயம் உணவு வகைகளில், மணமூட்டவும், சுவையூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.<br /><br />இது உணவில் பல்வேறு முறைப்படி சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருளுக்கு மணத்தை ஊட்டுவது மட்டுமின்றி, சத்துக்களையும் தருகிறது. கறி, கூட்டு, தோசை, இட்லிகளிலும், சாம்பார்பொடி, ரசப்பொடி, மல்லி, மஞ்சள் இவைகளோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு குழம்புகளில் சேர்க்கப்படுகிறது. பேக்கரி, பிஸ்கட், ரொட்டி தயாரிப்பிலும் வெந்தயம் பயன்படுகிறது.<br /><br />வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் "ஏ" போன்றவைகளும் அடங்கியுள்ளன.<br /><br /><span style="color:#ff0000;"><strong>பயன்கள்:</strong></span><br />வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.<br /><br />வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணை எடுக்கப்படுகிறது. இந்த எண்ணை சோப்பு தயாரிப்பிலும் சமையலிலும் பயனாகிறது.<br /><br />மேலும் வெந்தயத்திலிருந்து ஒரு மணமுடைய எண்ணை எடுக்கப்படுகிறது. இது சென்ட், மணப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.<br /><br />ஒருவகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்பட்டு துணிகளுக்கு வண்ணமேற்ற மாத்திரைகளுக்கு வண்ணம் கொடுக்க பயன்படுகிறது.<br />வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை நூற்பு ஆலைகளிலும், அச்சு தொழில்களிலும் பயன்படுகிறது.<br /><br />சீயக்காய் தூளில் வெந்தயம் சேர்க்கப்படுகிறது.<br /><br /><strong><span style="color:#ff0000;">வெந்தயத்தின் தன்மைகள்:<br /></span></strong>வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. வறட்சியகற்றும் தன்மை கொண்டது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.<br /><br /><strong><span style="color:#ff0000;">சித்த யுனானி முறைகளில் வெந்தயம்:</span></strong><br />சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத்தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணையாக, கரைப்பானாக, லேகியமாக, பொடியாக பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவ முறையில் சளி நீக்கவும், மூல நோய் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.<br /><br /><strong>மருத்துவப் பயன்கள்</strong>:<br /><span style="color:#000099;">சீதபேதி குணமாக:-<br /></span>20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்குமுறை சாப்பிட சீதபேதி நிற்கும்.<br />சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும்.<br /><br />வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடிக்க சீதபேதி கடுப்பு தீரும்.<br /><br />வெந்தயத்தை வாழைப் பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட சீதபேதி குணமாகும்.<br /><br /><span style="color:#000099;">வயிற்று வலி, பொருமல் நீங்க</span>:-<br />மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ண வாய்வு, பொருமல் நீங்கும்.<br /><br />வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும்.<br /><br />இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும்.<br /><br />வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும்.<br /><br />திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க தீரும்.<br /><br />ஐந்து கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இலைகளை எடுத்து நீர் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்று கடுப்பு தீரும்.<br />இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.<br /><br /><span style="color:#000099;"><strong>கணைச்சூடு நீங்க:-</strong></span><br />வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.<br /><br />20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.<br />மாதவிடாய் வயிற்று வலி நீங்க:-<br /><br />100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும்.<br /><br />வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.<br /><br /><span style="color:#000099;"><strong>உடல் பலம் ஏற்பட:-</strong></span><br />200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்.<br /><br />தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படும்.<br /><br /><span style="color:#000099;"><strong>முகப்பரு நீங்க:-<br /></strong></span>ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருவில் பூச பரு மறையும்.<br /><br /><strong><span style="color:#000099;">பேன், பொடுகு நீங்க:-<br /></span></strong>தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.<br />பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.<br /><br />வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.<br /><br />வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வர தோல் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும் இந்த களி.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2488273414900658562010-09-26T07:56:00.004+04:002010-09-26T08:02:59.976+04:00இன்று இருதய தினம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq_C40QzGXOh1j7CDX2lxBC9_fi4Q-HL1-KmH0R9m5sDaF0Gt8K1EJqQDjjP4FUKsIjCBLrzQ6TBBG4paD-HyMlpiJPqbI7jagkS42Z1a8qK5rxM2ZXPI9BA5WsPnKp01-1oBMflHzZ4_4/s1600/heart.gif"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 150px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5521067770236519890" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq_C40QzGXOh1j7CDX2lxBC9_fi4Q-HL1-KmH0R9m5sDaF0Gt8K1EJqQDjjP4FUKsIjCBLrzQ6TBBG4paD-HyMlpiJPqbI7jagkS42Z1a8qK5rxM2ZXPI9BA5WsPnKp01-1oBMflHzZ4_4/s400/heart.gif" /></a>ஒவ்வொரு 20 நொடிகளிலும் ஒரு இருதய அட்டாக் ஏற்படுகிறது. இருதய அட்டாக் மூலம் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒரு மரணம் ஏற்படுகிறது.<br /><br />மிகவும் குறைந்த வயதிலும் இருதய நோய்க்கான அறிகுறிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயங்கரமான சூழலில் நாம் வசித்து வருகிறோம்.<br /><br />நவீன தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்திய பாதிப்பால் மாறிவரும் வாழ்க்கைமுறை, கொழுப்பு சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, முறையான உடற்பயிற்சி இல்லாமை, மது அருந்துதல்,<br />புகைபிடித்தல், நீரழிவு நோய் உள்ளிட்டவை மனித உடலில் ஒட்டு மொத்த செயல்பாட்டையும் கட்டுப்பாடின்றி கொண்டு செல்கின்றன.<br /><br />வாழ்வை அழிக்கும் இத்தகைய அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து அத்தகையதொரு சூழலை மாற்றி முறையான சிகிட்சைகளை மேற்கொண்டு வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுவோம்.<br /><br /><strong><span style="color:#ff0000;">இதயத்தை காக்கும் சில அடிப்படை விஷயங்கள்</span></strong><br /><br />1.உணவு பழக்கமுறை - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரேட், அதிகமான புரோட்டீன்<br /><br />2.உடற்பயிற்சி - இரண்டரை மணிநேரம் நடை பயிற்சி வாரத்திற்கு 5 நாட்கள்.<br /><br />3.புகை பிடிப்பதை அறவே நிறுத்திவிடுங்கள்<br /><br />4.உடல் எடையை கட்டுக்குள் வைத்திடுங்கள்<br /><br />5.இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திடுங்கள்<br /><br />6.மது அருந்துவதை முற்றிலும் ஒழித்துவிடுங்கள்<br /><br />7.கோபத்தைக் கட்டுப்படுத்தி டென்சன் இல்லாத வாழ்க்கையை பழக்கிக் கொள்ளுங்கள்.<br /><br />இதய நோயாளிகளால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) 2007-ஆம் ஆண்டிற்கான ஆய்வு தெரிவிக்கிறது.<br /><br />இதய நோயாளிகளின் எண்ணிக்கைய கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவுக்கு 9 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.<br /><br />இருதய நோய் அற்ற உலகத்தை உருவாக்கிட கடுமையாக முயல்வோம்!</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-56566372893902390332010-09-23T07:37:00.003+04:002010-09-23T07:41:56.968+04:00மூலக்கோளாறு, புற்றுநோயை விரட்டும் பீட்ரூட்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8W3AiKHFVOQacmij2hsCYp8FYyHxG93JwdwQabysi6eIWGIdnRoh3F2hDVjn_DEPLhOKYQVR2tgHj29fH0jdNw30WkINNw5FQcBAWPudBXzZimKpLkMudUAkCpFv61uE3lGr8jWWfsmPv/s1600/untitled.bmp"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 221px; FLOAT: left; HEIGHT: 218px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5519948879923871266" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8W3AiKHFVOQacmij2hsCYp8FYyHxG93JwdwQabysi6eIWGIdnRoh3F2hDVjn_DEPLhOKYQVR2tgHj29fH0jdNw30WkINNw5FQcBAWPudBXzZimKpLkMudUAkCpFv61uE3lGr8jWWfsmPv/s400/untitled.bmp" /></a>செப்.23:பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பஸ மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.<br /><br />மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.<br /><br />மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.<br /><br />தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-66524908157590251392010-09-22T07:56:00.002+04:002010-09-22T07:59:45.788+04:00தோல் சுருக்கம் மறைய அதிகமான தண்ணீரை குடிங்க: ஆராய்ச்சி முடிவு<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKuxCb_W4m6CTcQUqE2fFdkGJJXx64jvW2jS_F4i6pFAmeakbSyB0QXlFIBXyLPrl-H77icv2Zp33OUcmWyG_dm9eVSmmm6LwYxMyAPz_gjxH_CkeBCRlRd4kI1Oq0MkyQoY-38zpSxj1f/s1600/Glass+of+water.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 227px; FLOAT: left; HEIGHT: 323px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5519582525775064818" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKuxCb_W4m6CTcQUqE2fFdkGJJXx64jvW2jS_F4i6pFAmeakbSyB0QXlFIBXyLPrl-H77icv2Zp33OUcmWyG_dm9eVSmmm6LwYxMyAPz_gjxH_CkeBCRlRd4kI1Oq0MkyQoY-38zpSxj1f/s400/Glass+of+water.jpg" /></a>லண்டன்,செப்.22:அழகான தோல் வேண்டும் என்று விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்தத் தோலை பாதுகாக்க என்னென்னவோ செய்கின்றனர். சிறிது சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோ போச்சே என்று கவலை அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.<br /><br />தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய, நிறைய தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல் சுருக்கம் மறைவதோடு, தோலுக்கு ஈரப்பதமும் கிடைக்கிறது. இதனால் இளமையாகத் தோன்றலாம்.<br /><br />இதற்கான ஆராய்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை 8 வாரங்களுக்கு தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவினர் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர். வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் உள்ள லேக் மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கையான மினரல் வாட்டராகும் (நம்மூரில் கேன்களில் வைத்து கொடுக்கின்றனரே, அதுபோல டுபாக்கூர் வாட்டர் அல்ல).<br /><br />இதில் உள்ள சாலிசின் செமித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. சாலிசிலிக் ஆசிடைத் தான் பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் பயன்படுத்துகின்றனர் என்பது இங்கு ஒரு உபரிச் செய்தி . அதாவது, செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாகவே நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் காணமல் போகிறது.<br /><br />இதில் கலந்து கொண்ட பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பின்பும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆராய்ச்சிக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாகத் தோன்றியுள்ளனர்.<br /><br />சாதாரணத் தண்ணீர் குடித்தவர்களுக்கு 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.<br /><br />பிறகென்ன, பக்கெட் தண்ணீரை வைத்துக் கொண்டு படபடவென்று குடித்து தோல் சுருக்கத்தை மடமடவென்று விரட்ட வேண்டியதுதானே..! </div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-35846039683518732692010-09-19T07:25:00.003+04:002010-09-19T07:36:29.221+04:00கொழுப்பைக் குறைக்கும் கொழகொழ வெண்டைக்காய்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHNm9Hia9w2P0WCFL1IBJzGFTQiliIwGJpPQR5wBOh4SO0XgZK5aqPE723fANTbCCc84aR7zQiZCj6gya5d1CPlsPilpekRi7-8JBAwjrLQWUBPqNrfVE44wWa5lIzF3BJ1-yfon2Y1XK4/s1600/okra-300x228.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 212px; FLOAT: left; HEIGHT: 181px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5518462779806610674" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHNm9Hia9w2P0WCFL1IBJzGFTQiliIwGJpPQR5wBOh4SO0XgZK5aqPE723fANTbCCc84aR7zQiZCj6gya5d1CPlsPilpekRi7-8JBAwjrLQWUBPqNrfVE44wWa5lIzF3BJ1-yfon2Y1XK4/s400/okra-300x228.jpg" /></a>செப்.19:வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு.அங்கிருந்து அரேபியா, நைல நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது.<br /><br />கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா,ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (Ladies finger) என்கிறார்கள்.<br /><br />வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள Acetylated Galeturomic அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.<br /><br /><span style="font-size:130%;color:#ff0000;">*</span>பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொழுப்பை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.<br /><br /><span style="font-size:130%;color:#ff0000;">*</span>கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி,குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.<br /><br /><span style="font-size:130%;color:#ff0000;">*</span>வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.<br /><br /><span style="font-size:130%;color:#ff0000;">*</span>வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.<br /><br /><span style="font-size:130%;color:#ff0000;">*</span>10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.<br /><br /><span style="font-size:130%;color:#ff0000;">*</span>வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.<br /><br />ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:<br />கலோரி 25, நார்ச்சத்து - 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 IU, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் - 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் - 46 மில்லி கிராம்.<br /><br />வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு.<br /><br />சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-52256032973789279872010-08-15T12:04:00.002+04:002010-08-15T12:13:33.125+04:00பாரஸெட்டமோல் ஆஸ்துமாவை அதிகரிக்கும்- ஆய்வில் தகவல்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTKAttAaLa6poo2J8QqFced3FM5XoBKEyP2Kg-wXMy4s8ezmwbv-pR6wkQEWTBO6tMWs3d5yI561CrkG3QM3GydPBb6TzfSofRNqM1igUhWIhpzC5M3RnzuKHceVAgdGjbjqDlGdOeaqwC/s1600/paracetamol_big.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 304px; FLOAT: left; HEIGHT: 223px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5505546600041002114" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTKAttAaLa6poo2J8QqFced3FM5XoBKEyP2Kg-wXMy4s8ezmwbv-pR6wkQEWTBO6tMWs3d5yI561CrkG3QM3GydPBb6TzfSofRNqM1igUhWIhpzC5M3RnzuKHceVAgdGjbjqDlGdOeaqwC/s400/paracetamol_big.jpg" /></a>லண்டன்,ஆக,15:சிறிது தலைவலியோ அல்லது காய்ச்சலோ வந்துவிட்டால் போதும் உடனடியாக பாரஸெட்டமோல் மாத்திரையை உட்கொள்ளும் இளைஞர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்.<br /><br />பாரஸெட்டமோல் மாத்திரையை உட்கொண்டால் ஆஸ்துமா நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என 50 நாடுகளில் 3 லட்சம் இளைஞர்களிடம் நியூசிலாந்து மருத்துவ ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.<br /><br />ஆண்டிற்கு ஒருமுறை உபயோகித்தாலே ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதமாம். மாதத்தில் ஒரு முறை பயன்படுத்துவோருக்கு இது இருமடங்காகும்.<br /><br />அதுமட்டுமல்ல,பாரஸெட்டமோல் உடலில் ஏற்படுத்தும் மாற்றத்தால் பல்வேறு அலர்ஜிகள்(ஒவ்வாமை) ஏற்படுவதற்கும் காரணமாகும் என மருத்துவ விஞ்ஞானி கூறுகிறார்.<br /><br />நியூசிலாந்தில் மெடிக்கல் இன்ஸ்டியூட் மருத்துவர் ரிச்சார்டு பீஸ்லியின் தலைமையில் நடந்த ஆய்வில்தான் இது தெரியவந்துள்ளது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-33519531766746497812010-08-12T08:30:00.003+04:002010-08-12T08:36:41.225+04:00உடல் நலத்திற்கு உகந்த பப்பாளி இலை கஷாயம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8bITinw52S0y-fHpwtVRUD__EE3j6ftGXUrkdtkBV3FT1BBU8SsTOEzIBiOP6pcSrc-yIGeTxQeS2oK9E4INOxRtI7YSrJv4PO2eeGxAHO-YYuNbYiksxriJICzuEic4U0gjXTKPrtUcA/s1600/papaya.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 232px; FLOAT: left; HEIGHT: 213px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5504377219153928450" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8bITinw52S0y-fHpwtVRUD__EE3j6ftGXUrkdtkBV3FT1BBU8SsTOEzIBiOP6pcSrc-yIGeTxQeS2oK9E4INOxRtI7YSrJv4PO2eeGxAHO-YYuNbYiksxriJICzuEic4U0gjXTKPrtUcA/s400/papaya.jpg" /></a>ஆக12:கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது.<br /><br />முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.<br /><br />பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.<br /><br />பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.<br /><br />காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.<br /><br />தயாரிப்பது எப்படி?<br />நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும்.<br /><br />இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-78419132779243152602010-08-04T08:45:00.002+04:002010-08-04T08:47:21.034+04:00கோடைக்கு ஏற்ற இயற்கை இளநீர்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ313r4zkVikA7N3FQQxfNHPfAi8g6d7fQPCs5vNsKRyyckk_9YOJSGqTHQO6M9JYG7phqa7QFtPvo6eDh7hPyl88CJoIcWg7ED1CnIQmjND779hzv174_84wXqGeFRAieq8sxzZE3DOfw/s1600/imagesCAWWKZ5Q.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 241px; FLOAT: left; HEIGHT: 195px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5501411620575216242" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ313r4zkVikA7N3FQQxfNHPfAi8g6d7fQPCs5vNsKRyyckk_9YOJSGqTHQO6M9JYG7phqa7QFtPvo6eDh7hPyl88CJoIcWg7ED1CnIQmjND779hzv174_84wXqGeFRAieq8sxzZE3DOfw/s400/imagesCAWWKZ5Q.jpg" /></a>ஆக,4:தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்வு, தசைகள் இறுகுவது நடக்கும்.<br /><br />இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச் சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங்கள் இல்லாமல் போகிறது.<br /><br />இளநீரில் சோடியம் குளோரைடு,பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.<br /><br />இளநீரை உடனடியாக குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, ‘ஃபிரிட்ஜில்’ வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும்.வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம்.<br /><br />இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது.சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0