tag:blogger.com,1999:blog-38569503837578272122024-03-13T16:41:23.335+04:00பாலைவனத் தூதுநிகழ்வுகளின் நிதர்சனம்பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.comBlogger1937125tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-66103627611319756432011-03-15T08:12:00.000+04:002011-03-15T08:13:25.845+04:00அணுசக்தி பாதுகாப்பானதல்ல - சுற்றுச்சூழல் ஆர்வலர்<div align="justify">டோக்கியோ,மார்ச்.15:அணுசக்தி ஒருபோதும் பாதுகாப்பானதல்ல என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் ஸ்டீவ் கேம்பல் தெரிவித்துள்ளார்.<br /><br />பேரழிவு ஏற்பட்ட ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும், அணுசக்தி நிலையங்களின் வெடிப்பும் உலக அளவில் புதிய விவாதத்திற்கு களம் ஏற்படுத்தியதாக கேம்பல் கூறுகிறார்.<br /><br />ஹைடெக் தொழில்நுட்ப கட்டமைப்பைக் கொண்ட ஜப்பானில் அணுசக்தி நிலையங்கள் வெடித்துள்ளதால் அணுசக்தி பாதுகாப்பானதல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.<br /><br />அதிகமான எரிசக்திக்காக அணுசக்தி நிலையங்களை நிறுவும் பொழுது அதன் பாதுகாப்பு மனிதன் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கேம்பல் கூறுகிறார்.<br /><br />உலகில் எங்கும் எப்பொழுதும் இத்தகைய துயரங்கள் ஏற்படலாம். இது அணுசக்தி நிலையங்களைக் குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது என கேம்பல் தெரிவித்துள்ளார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6416072926909316832011-03-15T08:10:00.000+04:002011-03-15T08:11:40.343+04:00போராட்டம்:பஹ்ரைன் அயல்நாடுகளின் உதவியை தேடுகிறது<div align="justify">மனாமா,மார்ச்.15:அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறும் பஹ்ரைனில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த அயல்நாடுகளின் உதவியை அந்நாடு நாடியுள்ளது.<br /><br />வளைகுடா நாடுகளைச் சார்ந்த ராணுவத்தினர் மனாமாவுக்கு வருகைப் புரிந்துள்ளதாக முன்னாள் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரும், நீதிமன்ற ஆலோசகருமான நபீல் அல் ஹாமர் தெரிவித்துள்ளார்.<br /><br />எண்ணெய் நிலையங்கள், மின்சாரம், குடிநீர் விநியோக மையம், வங்கிகள் ஆகிய இடங்களில் வெளிநாட்டுப் படையினர் நிறுத்தப்படுவர். நாட்டில் எதிர்ப்பாளர்கள் பிரிவினையைத் தூண்ட முயலும் சூழலில் ராணுவ ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br /><br />எல்லா நகரங்களிலும் ராணுவத்தை அனுப்ப வேண்டுமெனவும், ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டுமெனவும் அவர்கள்<br />மன்னரிடம் கோரிக்கை விடுத்தனர்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-17023440256829489472011-03-15T08:08:00.000+04:002011-03-15T08:09:42.937+04:00மேற்குகரையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி<div align="justify">டெல்அவீவ்,மார்ச்.15:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் புதிய யூத குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.<br /><br />நூற்றுக்கும் அதிகமான குடியிருப்பு யூனிட்டுகள் புதியதாக கட்டப்படும். அமைச்சரவை கமிட்டியின் அனுமதி நேற்று கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.<br /><br />ஃபலஸ்தீனுடனான சமாதான ஒப்பந்தம் அமுலிலிருக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபீல் அபூ தய்னா பிரச்சனைகளை உருவாக்க இஸ்ரேல் முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.<br /><br />வருகிற நாட்களில் குடியிருப்புகளை கட்டும் பணி துவங்கும் என இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார். குடியிருப்புகளை கட்டும்பணி துவங்கியதைத் தொடர்ந்து ஃபலஸ்தீனுடனான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-81468918520485325112011-03-15T08:05:00.001+04:002011-03-15T08:07:34.669+04:002030 ஆம் ஆண்டில் மணமகள் கிடைப்பது கடினம்<div align="justify">டொரான்டோ,மார்ச்.15:இந்தியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பின் காரணமாக 2030 ஆம் ஆண்டில் ஆண்களுக்கு திருமணம் முடிக்க மணப்பெண் கிடைப்பது அரிதாகும் என கனேடியன் மெடிக்கல் அசோசியேசன் ஜெர்னலில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.<br /><br />20 சதவீதம் ஆண்களுக்கு மணப்பெண் கிடைக்கமாட்டார்கள் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேற்கண்ட நாடுகளில் 105 ஆண் குழந்தைகள் பிறக்கும் பொழுது 100 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர். இது சில கொரிய நகரங்களில் 125 வரை எட்டியுள்ளது.<br /><br />கர்ப்பத்திலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என்பதுக் குறித்து பரிசோதனைச் செய்யும் ஸ்கேனிங் செண்டர்கள் கட்டுப்பாடுகளில்லாமல் செயல்படுவதால் பெண் சிசுக்கொலை அதிகரிப்பதற்கு காரணமாகும்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-9303191985155487912011-03-15T08:00:00.000+04:002011-03-15T08:01:34.516+04:00எகிப்து:ஜனநாயகம் மலருமா? 19-ஆம் தேதி விருப்பவாக்கெடுப்பு<div align="justify">கெய்ரோ,மார்ச்.15:அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தை தடைவிதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை நீக்குவதற்கு எகிப்தின் ராணுவ அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.<br /><br />அரசியல் சட்ட சீர்திருத்தம் குறித்து நடக்கவிருக்கும் மக்கள் விருப்ப வாக்கெடுப்பைத் தொடர்ந்து இதுத்தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.<br /><br />அரசியல் எதிரிகளை 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த முபாரக்கிற்கு உதவிய சட்டமாகும் இது. இந்த தீர்மானம் பாராளுமன்ற, அதிபர் தேர்தல்கள நேர்மையாக நடக்க உதவும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.<br /><br />முன்பு புதிய அரசியல் கட்சியை உருவாக்கினால் முபாரக் கட்சியினர் அதிகமாக அங்கம் வகுக்கும் குழு அங்கீகாரம் வழங்கவேண்டும். இனி இது தேவையில்லை. எகிப்தில் ஜனநாயக புதுவசந்தம் வீச வாய்ப்பு ஏற்படுத்தும் எனக் கருதப்படும் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு வருகிற மார்ச் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.<br /><br />அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தல், எதிர்கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்தல், சுயேட்சைகளின் போட்டியிடும் உரிமையை உறுதிச் செய்தல் போன்ற காரியங்களில் மக்கள் தங்கள் விருப்பத்தை பதிவுச் செய்வர்.<br /><br />எதிர்கால அதிபர்களின் பதவி காலம் இரண்டு தடவை மட்டுமே என்பதுக் குறித்த விஷயத்திலும் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவுச்செய்வர். ஆனால், அரசியல் சட்டத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான பிரிவுகளை மாற்றுவதற்கு போதுமானதல்ல இந்த நெறிமுறைகள் என சிலர் விமர்சித்துள்ளனர்.<br /><br />புதிய நெறிமுறைகளுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என எகிப்தின் மிகப்பெரிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, 1981-ஆம் ஆண்டு எகிப்துல் அதிபர் அன்வர் சதாத்தை கொலைச் செய்ததில் பங்குண்டு எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பேரை ராணுவ கவுன்சில் விடுதலைச் செய்துள்ளது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-37133310756071075372011-03-15T07:44:00.001+04:002011-03-15T07:46:30.109+04:00ஜப்பான்:மீண்டும் பூகம்பம், புகுஷிமாவில் வெடிக்கத் தயாராகும் 4வது அணுஉலை<div align="justify">டோக்கியா,மார்ச்.15:ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 6.3 ரிக்டர் ஸ்கேல் அளவில் பதிவாகியுள்ளது.<br /><br />பூகம்பத்தைத் தொடர்ந்து வடகிழக்கு கடற்பகுதியில் 3 மீட்டர் உயரத்தில் அலைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே புகுஷிமாவில் மீண்டும் மற்றொரு அணுஉலை வெடிப்பு ஏற்படப் போகிறது. ஏற்கனவே மூன்றாவது அணுஉலையின் மேல் பகுதியில் ஹைட்ரஜன் வாயு அடைந்து மூடியதால் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மூன்றாவது அணு உலையிலிருந்தும் புகை வெளிவரத் துவங்கியுள்ளது.<br /><br />சுனாமியினால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவும், தண்ணீரும் இல்லாமல் துயரத்தை அனுபவிக்கின்றனர்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3892621964763876682011-03-15T07:39:00.001+04:002011-03-15T07:42:01.408+04:00ஆப்கானிஸ்தான்:குழந்தைகள் படுகொலையைக் கண்டித்து பேரணி<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEtBIXKARGrZ_cWY5KDEzUXssAtfeYOEweupIJO3PKfQjvFLTDFS7BVL2fRD-MCCpK216LN9PZ3NIX0m2kMlpf7AHzASfnTQxXO5Xz_GvsXxz1KMAh3hOpWtzoEs3EwTrD9zOEVP5MzbY/s1600/afhgan.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 268px; FLOAT: left; HEIGHT: 189px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584146737516840658" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEtBIXKARGrZ_cWY5KDEzUXssAtfeYOEweupIJO3PKfQjvFLTDFS7BVL2fRD-MCCpK216LN9PZ3NIX0m2kMlpf7AHzASfnTQxXO5Xz_GvsXxz1KMAh3hOpWtzoEs3EwTrD9zOEVP5MzbY/s400/afhgan.jpg" /></a>காபூல்,மார்ச்:ஆப்கானிஸ்தான் மாகாணமான குனாரில் அந்நிய ஆக்கிரமிப்புப் படையான நேட்டோவின் கொடூரத் தாக்குதலில் 9 குழந்தைகள் கொலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.<br /><br />போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், 'அமெரிக்காவுக்கு சாவு', 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாவு' என முழக்கமிட்டனர்.<br /><br />குனார் மாகாணத்தில் விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கொலைச் செய்ததுக் குறித்து விசாரணை நடத்தப்படும் என நேட்டோவின் கட்டுப்பாட்டிலுள்ள இண்டர்நேசனல் செக்யூரிட்டி அஸிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்(ISAF) தெரிவித்துள்ளது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">ப்ரஸ் டி.வி</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-32230394220443315472011-03-15T07:37:00.001+04:002011-03-15T07:39:42.555+04:00ஈராக்:ராணுவ தலைமையகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு - 10 ராணுவ வீரர்கள் பலி<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid-ugGIIWhz536PC8GpPNirezwhXPOQhDRPB7Pb-iT6vmEOLXUhMFwWdsgi4ugM3jFjN6TqTVlCdzBZd5RYkjafCIhOa8gXBmbIDSiFPUH9caX_Wu1IjZ77Bw94172uppo_hAfKTPksiY/s1600/iraq.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 169px; FLOAT: left; HEIGHT: 133px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584146145664833378" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEid-ugGIIWhz536PC8GpPNirezwhXPOQhDRPB7Pb-iT6vmEOLXUhMFwWdsgi4ugM3jFjN6TqTVlCdzBZd5RYkjafCIhOa8gXBmbIDSiFPUH9caX_Wu1IjZ77Bw94172uppo_hAfKTPksiY/s400/iraq.jpg" /></a>பாக்தாத்,மார்ச்.15:ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்கு அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 14 ராணுவ வீரர்கள் உள்பட 29 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.<br /><br />குண்டுவெடிப்பின் அதிர்ச்சியில் கட்டிடம் தகர்ந்து வீழ்ந்து ஏராளமான ராணுவத்தினர் உள்ளே சிக்கியுள்ளனர். இவர்களை வெளியேக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.<br /><br />தியாலா மாகாணத்திற்கு அருகில் காரில் வந்த நபர் ராணுவ தலைமையகத்திற்கு அருகே வெடித்துச் சிதறினார். மேலும் ஒரு குண்டு கண்டிபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-62753719692046551272011-03-15T07:29:00.002+04:002011-03-15T07:37:01.242+04:00ஜெர்மனி:அணு சக்தி நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEZA3f9MfY57PVBPum7P6LeAIAzmmkbyueRNksaMVyJ53QEjMjRNsFXxBNjlwqGqtRUApP1U3_CRSC_jDytGTVhrEd3xN6IQ5uU8wGA2fmGlhHQ2XGh28opr7IPYSaiRTQrSLGMqdjCvU/s1600/2_421484_1_249.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 254px; FLOAT: left; HEIGHT: 172px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584145405516114498" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEZA3f9MfY57PVBPum7P6LeAIAzmmkbyueRNksaMVyJ53QEjMjRNsFXxBNjlwqGqtRUApP1U3_CRSC_jDytGTVhrEd3xN6IQ5uU8wGA2fmGlhHQ2XGh28opr7IPYSaiRTQrSLGMqdjCvU/s400/2_421484_1_249.jpg" /></a> பெர்லின்,மார்ச்.15:ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை நீட்டிப்பதுக் குறித்த அரசுத் திட்டத்தை கண்டித்து ஸ்டூட்கர்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.<br /><br />45 கிலோமீட்டர் நீண்ட மனித சங்கிலியில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.<br /><br />அணுசக்தி கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்பது ஜப்பானில் நிரூபணமாகியுள்ளது என போராட்டத்தில் கலந்துக் கொண்டோர் தெரிவித்தனர்.<br /><br />அங்கலா மெர்கலின் அரசு அணுசக்தி நிலையங்கள் செயல்படும் கால அளவை கடந்த ஆண்டு ஒருவருடத்திற்கு நீட்டியது. ஜெர்மனியில் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்புக் குறித்து அரசுக்கு பூரணமான தன்னம்பிக்கை உள்ளதாக மெர்கல் கூறுகிறார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-42696480419153979802011-03-14T21:54:00.003+04:002011-03-15T07:29:33.378+04:00ஆஸ்திரேலியா:இந்திய மாணவி வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsfg9S8QrI-prbvxuEctUNlB-ZwwIkRAJgti_SxGGVHeq95OFHMGtiQZF5cJDsBb0CKURCMYgM7yBva3rX5No38BMH55fNH2XZU9BeQiVUhLrSZ3-vXh3z9w78UaeFB0dp_61zWvHok84/s1600/photo_33825.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 225px; FLOAT: left; HEIGHT: 160px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5584143549504317074" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsfg9S8QrI-prbvxuEctUNlB-ZwwIkRAJgti_SxGGVHeq95OFHMGtiQZF5cJDsBb0CKURCMYgM7yBva3rX5No38BMH55fNH2XZU9BeQiVUhLrSZ3-vXh3z9w78UaeFB0dp_61zWvHok84/s400/photo_33825.jpg" /></a>மெல்பர்ன்,மார்ச்.13:ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியொருவர் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.<br /><br />அவரது உடல் கடந்த வாரம் சிட்னியில் ஒரு கால்வாயில் சூட்கேஸிற்குள் வைத்து கண்டெடுக்கப்பட்டது. மெடோ வங்கிக்கு அருகில் சூட்கேஸை கண்ட கட்டிடத் தொழிலாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.<br /><br />இக்கொலைத் தொடர்பாக தோஷாவின் அயல்வாசி ஸ்டானி ரெஜினால்ட் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது கொலை மற்றும் வன்புணர்வு வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.<br /><br />ஸ்டானி ரெஜினால்டின் முன் ஜாமீன் கோரும் மனுவை உள்ளூர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.<br /><br />கொல்லப்பட்ட 24 வயதான தோஷா தாக்கர் சிட்னி காலேஜ் ஆஃப் பிஸினஸ் அண்ட் ஐ.டியில் கணக்கியல் துறை மாணவியாவார். இவரது கொலைக்கான பின்னணி தெரியவில்லை.<br /><br />செய்தி<span style="color:#ff0000;">:மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-50023567845510169682011-03-14T21:38:00.002+04:002011-03-14T21:54:31.518+04:00அமெரிக்கா:பி.ஜே.க்ரவ்லி ராஜினாமா<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhannZJhTDe1kzUiMn49BA73cCnbItmx0ODQNNHzE0TO9m8z1N_TODFFXU81b7Aqf-oIvGyXloKw841coHNscsAyuCZ1umF9E8PsGYUqLeN5UiSeF-nl3a_w2z0Rf6I40-lUaz3czOo-6M/s1600/US-state-department-spoke-007.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 232px; FLOAT: left; HEIGHT: 162px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583995244105103890" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhannZJhTDe1kzUiMn49BA73cCnbItmx0ODQNNHzE0TO9m8z1N_TODFFXU81b7Aqf-oIvGyXloKw841coHNscsAyuCZ1umF9E8PsGYUqLeN5UiSeF-nl3a_w2z0Rf6I40-lUaz3czOo-6M/s400/US-state-department-spoke-007.jpg" /></a>வாஷிங்டன்,மார்ச்.13:அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவ்லி தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.<br /><br />விக்கிலீக்ஸிற்கு அமெரிக்க தூதரக ஆவணங்களை கசியவிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார் பிராட்லி மானிங். இவர் அமெரிக்க ராணுவ உளவுத்துறையில் பகுப்பாய்வாளராக பணியாற்றியவர். இவரை அமெரிக்க ராணுவம் நடத்தும் முறை குறித்து பி.ஜே.க்ரவ்லி நேற்று முன்தினம் விமர்சித்திருந்தார்.<br /><br />பி.ஜே.க்ரவ்லியின் விமர்சனம் அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.<br /><br />அமெரிக்க ராணுவத்தின் செயல் பரிகசிக்கத்தக்க, முட்டாள்தனமான, விவேகமற்றது என பி.ஜே.க்ரவ்லி கூறியிருந்தார். இது தனது தனிப்பட்ட அபிப்ராயம் எனவும், இதன் முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் பின்னர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்திருந்தார்.<br /><br />க்ரவ்லியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.<br /><br />க்ரவ்லியின் ராஜினாமாவைத் தொடர்ந்து துணைச் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் மைக்கேல் ஹாமர் தற்காலிகமாக க்ரவ்லியின் பதவியை வகிப்பார் என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.<br /><br />கடந்த 2009 மே மாதம் முதல் அமெரிக்க அரசுத்துறையில் செய்தித் தொடர்பாளராக சேவையாற்றி வந்தார் க்ரவ்லி. கிளிண்டன் ஆட்சியின்போது பாதுகாப்பு ஆலோசகரின் சிறப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-78592997146573277252011-03-14T15:59:00.002+04:002011-03-14T16:09:02.233+04:00ஜப்பானில் தொடரும் அணுஉலை வெடிப்பு - 3 வது வெடிப்பால் 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சு பரவல்<div align="justify">சுமோ(ஜப்பான்),மார்ச்.13:ஜப்பானில் அணு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய அணுசக்தி மையமான ஃபுகுஷிமாவின் மூன்றாவது அணுஉலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 19 பேர் படுகாயமடைந்தனர். <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 205px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583906276342765650" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuXf9hyygU2mfUFI-Popojxr9NFX_U7jSrhIn4SGRtJTwPTIVwqXd8zvsD0gzMBTL37BCSz_UH8zfC-6t5E8JB_NNcT5IillB9f2VZm9aZ2tyeU3q2uyrP1Bakg80VMOdOXYYyWDFrcJo/s400/explosion-distant.jpg" />இந்த வெடிப்பு காரணமாக மணிக்கு 20 மைல் வேகத்தில் அணுக்கதிர் வீச்சு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் வேகமாக வெளியேற வேண்டும் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.<br /><br />சமீபத்தில் நில நடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஜப்பானின் 11 அணு உலைகளும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளன. இவற்றால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் அறிவித்துள்ள போதிலும், எந்த கட்டுப்பாடு முறைகளுக்கும் அடங்காமல், அணு உலைகளின் ஹைட்ரஜன் வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளது.<br /><br />ஃபுகுஷிமா டாய்ச்சி அணு சக்தி நிலையத்தில் 5 ரியாக்டர்கள் உள்ளன. இவை ஐந்துமே அபாயகரமானவையாக அறிவிக்கப்பட்டுவிட்டது.<br /><br />இவற்றில் முதல் அணுஉலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து பெரும் புகையுடன் ஹைட்ரஜன் மற்றும் அணு உலைக் கழிவுத்துகள் வெளியேறி வருகின்றன. இதில் மொத்தம் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் முழுமையான கதிரிவீச்சுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.<br /><br />இரண்டாவது அணு உலை இன்று காலை 5 மணிக்கு வெடித்தது. இதிலும் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அணுஉலைகளின் அருகாமைப் பிரதேசங்களில் வசித்தவர்களில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.<br /><br />இந்த நிலையில் பிற்பகலில் ஜப்பான் நாட்டு நேரப்படி 2.41-க்கு வெடித்துள்ளது. இதிலிருந்து மணிக்கு 20 கிமீ வேகத்தில் கதிர்வீச்சுப் பரவ ஆரம்பித்துள்ளதாகவும் அது இன்னும் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.<br /><br />அருகாமைப் பிரதேசங்களில் உள்ள மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அணுசக்தி நிலையத்திலிருந்து 20 கிமீக்கு அப்பால் வசிப்பவர்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.<br /><br />இந்த அணுஉலைகளிலிருந்து முழுமையான கதிரியக்கம் வெளியாக ஆரம்பித்தால் ஏற்படும் அழிவின் அளவு ஹிரோஷிமா - நாகசாகியில் ஏற்பட்டதைவிட 1 லட்சம் மடங்கு அதிகமாக இருக்கும் என ரஷ்யாவில் மூடப்பட்ட செர்னோபில் அணுசக்தி நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-85219112537587686972011-03-14T14:11:00.003+04:002011-03-14T14:21:36.298+04:00கதறல்கள் அடங்காத மியாகி கடலோரம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiygBGMurULyWcchbExahyhDdgsCwMV7jVRa3ZOVLjSiLEr3C74SzpTs_uesbZb0aip9-1C4lFWWmWak6e-uIJ8AQI0qhuX9YlryhLucN-foxuCWLhpqxxzgyiTAfE4Xax5ghGyvmKi41o/s1600/CROPXITS105_Japan_Earthquake.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 224px; FLOAT: left; HEIGHT: 225px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583878682478452082" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiygBGMurULyWcchbExahyhDdgsCwMV7jVRa3ZOVLjSiLEr3C74SzpTs_uesbZb0aip9-1C4lFWWmWak6e-uIJ8AQI0qhuX9YlryhLucN-foxuCWLhpqxxzgyiTAfE4Xax5ghGyvmKi41o/s400/CROPXITS105_Japan_Earthquake.jpg" /></a>டோக்கியோ,மார்ச்.14:எனது அருகிலேயே இருக்கவேண்டுமென்ற தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டிருந்தால், இவ்வளவுதூரம் துயரத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. வீடும், குடும்பமும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்? ஜப்பானின் மியாகியில் ஷின்டோனா கிராமத்தில் ஹரூமிவதனாபெயின் வார்த்தைகள்தாம் இவை.<br /><br />எச்சரிக்கை தகவல் கிடைத்த உடனேயே, பூகம்பம் ஏற்படுவதற்கு ஏறத்தாழ அரைமணி நேரம் முன்பே கடையை பூட்டிவிட்டு விரைவாக வீடு திரும்பினார் அவர். வீட்டு கதவை தகர்த்தெறிந்த பேரலை வயோதிகரான பெற்றோரை தூக்கி வீசிய காட்சிகளைத்தான் அவரால் பின்னர் காணமுடிந்தது.<br /><br />பர்னிச்சர்களின் மேலே ஏறி தப்பிக்க முயன்ற அவரின் கழுத்துவரை தண்ணீர் திரண்டு நின்றது. வீட்டின் முகட்டை தண்ணீர் தொடுவதற்கு சில இன்ச்கள் இடைவெளி. மரணம் தன்னை விட்டுச்சென்ற அந்த கணத்தை மறக்க முடியவில்லை என கூறும்பொழுது வதனாபெயின் கண்களில் கண்ணீர் நிறைந்துக் காணப்படுகிறது.<br /><br />ஜப்பானில் சுனாமி பேரலைகள் ஏற்படுத்திய பேரழிவில் பெருமளவு பாதிக்கப்பட்ட மியாகியில் அபூர்வமாக உயிர் தப்பிய ஒரு சிலரில் வதனாபெயும் ஒருவர்.<br /><br />வாகனங்களையும், கட்டிடங்களையும் துடைத்தெறிந்த சுனாமி பேரலை மீதம் வைத்தது கதறல்கள்தாம்.<br /><br />பூகம்பத்தைத் தொடர்ந்து வெடித்துச் சிதறிய புகஷிமா அணுமின் நிலையத்திற்கு அடுத்துள்ள கடலோரப் பகுதிதான் மியாகி. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இங்கு உயிர் நஷ்டமானது. பலரும் உறவினர்களை இழந்தனர். உணவு, தண்ணீரும் இவர்களுக்கு கிடைப்பது அரிதாக உள்ளது. பள்ளிக்கூடங்கள் தகர்ந்து போனதால் மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர இன்னும் நாட்கள் நீளும். திறக்காத கடைகள் முன்னால் ஆட்கள் நிற்கின்றனர். ரெயில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. பெட்ரோல் பம்பிற்கு முன்னால் மூன்று கிலோமீட்டர் தூரம் க்யூவில் மக்கள் நிற்கின்றனர்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-25970695910577943522011-03-14T14:04:00.000+04:002011-03-14T14:06:05.758+04:00லிபியா:ப்ரீகாவில் கடும் மோதல்<div align="justify">திரிபோலி,மார்ச்.14:லிபியாவின் கிழக்கு எண்ணெய் நகரமான பிரீகாவில் கத்தாஃபி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்குமிடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.<br /><br />கத்தாஃபிக்கு ஆதரவான ராணுவம் எதிர்ப்பாளர்களிடமிருந்து நகரத்தை மீட்டதாக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் தெரிவிக்கிறது.<br /><br />உகாயலாவின் கட்டுப்பாட்டை தன் வசப்படுத்திய ராணுவம் பிரீகாவை மீட்பதற்கு கடுமையான தாக்குதல்களை நடத்திவருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். பிரீகாவை கைப்பற்றியதாக நேற்று முன் தினம் அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.<br /><br />பிரீகாவிற்கு அடுத்துள்ள பிஷரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கத்தாஃபியின் மகன் கமீஸின் ராணுவப் படையில் 32 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.<br /><br />அதேவேளையில், லிபியாவை விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டுமென அரபு லீக் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.<br /><br />சிவிலியன்களை கொலைச் செய்வதை முடிவுக்குக் கொண்டுவர இது முக்கியத்துவம் வாய்ந்தது என அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக விவாதிப்பதற்காக கூடிய அரபு லீக்கின் கூட்டத்திற்கு பிறகு தெரிவித்தார் அவர்.<br /><br />கடந்த சனிக்கிழமை மாலை கத்தாஃபி ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட அல்ஜஸீராவின் கேமராமேன் அலி ஹஸன் அல் ஜாபிரின் பிரிவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. அல்ஜாபிரும் அவரது சக ஊழியர்களும் தாக்கப்பட்ட பெங்காசியில் உயிர்தியாகிகள் மைதானத்தில் பெரும் மக்கள் திரள் பங்கேற்ற ஜனாஸா தொழுகையும், அனுதாப நிகழ்ச்சியும் நடந்தன. அல்ஜாபிரின் உடல் அடக்கம் செய்வத்ற்கு சிறப்பு விமானத்தில் கத்தருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.<br /><br />பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து லிபியாவின் மிஸ்ரத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-7816160634331336922011-03-14T08:25:00.000+04:002011-03-14T08:26:40.483+04:00ஒமான்:ஆட்சி நிர்வாகத்தில் மக்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்<div align="justify">மஸ்கட்,மார்ச்.14:நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் அரசக் குடும்பத்தைச் சாராதவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க ஒமான் மன்னர் சுல்தான் காபூஸ் பின் ஸைத் தீர்மானித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக சட்ட நிர்ணய அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மன்னர் நியமிக்கும் உறுப்பினர்கள் அடங்கு கமிட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.<br /><br />அரசியல் விவகாரங்களில் பங்களிப்பு, வேலையில்லாத் திண்டாட்டத்தை கவனத்தில் கொள்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒமானின் சில பகுதிகளில் போராட்டங்கள் நடந்திருந்தன. இதன் தொடர்ச்சியாகத்தான் மன்னர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.<br /><br />அமைச்சரவையை கலைக்கப் போவதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய சிவில் சர்வீஸ் நியமனங்கள் நடத்தப்படும் எனவும் மன்னர் அறிவித்துள்ளார். சட்ட நிர்மாணத்திற்கு இரண்டு கமிட்டிகளிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட பொழுதிலும் மன்னருக்கான வீட்டோ அதிகாரம் உண்டுமா என்பதுக் குறித்து தற்பொழுது உறுதிச் செய்யப்படவில்லை.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-86266895335709308022011-03-14T08:23:00.000+04:002011-03-14T08:24:24.381+04:00பாகிஸ்தான்:துப்பாக்கிச் சூட்டில் எட்டுபேர் மரணம்<div align="justify">இஸ்லாமாபாத்,மார்ச்.14:வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் வேன் ஒன்றின் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.<br /><br />ஹன்கு மாவட்டத்தில் மாம்மோகவாரிலிருந்து வஸீரிஸ்தானிற்கு சென்றுக் கொண்டிருந்த வேன் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலின் பொறுப்பை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.<br /><br />இதற்கிடையே ஹன்கு மாவட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-55480752971837884272011-03-13T18:57:00.000+04:002011-03-13T18:59:34.044+04:00லிபியா மோதல்:அல்ஜஸீரா கேமராமேன் பலி<div align="justify">திரிபோலி,மார்ச்.13:கிழக்கு லிபியாவில் எதிர்ப்பாளர்களுக்கு அதிக செல்வாக்கு மிகுந்த நகரமான பெங்காசியில் நடந்த தாக்குதலில் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் கேமராமேன் கொல்லப்பட்டுள்ளார். அவருடைய பெயர் அலி ஹஸன் அல் ஜபேர்.<br /><br />பெங்காசிக்கு அருகே ஹவாரி பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. லிபியாவில் அரசுக்கெதிராக போராட்டம் துவங்கி முதல் முறையாக ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />அலி ஹஸன் அல் ஜபேரை தாக்கியது யார் என்பதுக் குறித்து அல்ஜஸீரா தெரிவிக்கவில்லை. ஆனால், இக்கொலைக்கு காரணமானவர்களை வெகு விரைவில் சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என அல்ஜஸீராவின் டைரக்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.<br /><br />ஹவாரியில் எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை படம் பிடித்த பின்னர் பெங்காசிக்கு திரும்பும் வழியில் ஜபேரின் மீது தாக்குதல் நடந்தது. ஜபேருடனிருந்து இன்னொரு நபருரையும் துப்பாக்கிக் குண்டு தாக்கியது. இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த பொழுதிலும், ஜபேரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">மாத்யமம்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-86090482048800622582011-03-13T16:12:00.002+04:002011-03-13T16:17:45.532+04:00ஜப்பானின் ஐந்து அணு உலைகள் வெடிக்கும் அபாயத்தில் - நாடு முழுவதும் பீதி<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXVoycruFsVquCw2Wsd9P5o70r49SgaTqReBUbmiGqciayqxwbgcHM-5N8VZ0nm1KuuXktj6M4iFOSueB8QYpzKWzywjErn_SUyOBRdSgaZ-KU2cH8ajzf9QKf7Au0gulqFQC8eqjNCFU/s1600/Japan-Nuclear-Plant-Explosion1.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 239px; FLOAT: left; HEIGHT: 156px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5583537476745337394" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXVoycruFsVquCw2Wsd9P5o70r49SgaTqReBUbmiGqciayqxwbgcHM-5N8VZ0nm1KuuXktj6M4iFOSueB8QYpzKWzywjErn_SUyOBRdSgaZ-KU2cH8ajzf9QKf7Au0gulqFQC8eqjNCFU/s400/Japan-Nuclear-Plant-Explosion1.jpg" /></a>டோக்கியோ,மார்ச்.13:ஜப்பானில் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து புகஷிமா அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் அதிகரித்துள்ளதால் அந்நாடு அணு விபத்து பீதியில் ஆழ்ந்துள்ளது.<br /><br />40 ஆண்டுகள் பழமையான புகஷிமா அணுசக்தி நிலையத்தின் முதல் அணு உலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. பூகம்பத்தால் சேதமடைந்த அணு உலையின் மேல்பகுதி வெடித்துச் சிதறியதால் அப்பிரதேசம் முழுவதும் அணுக்கதிர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.<br /><br />இதற்கிடையே இன்று,இரண்டாவது அணு உலையிலும் வெப்பமும், அழுத்தமும் பல ஆயிரம் மடங்கு அதிகரித்து வெடித்து சிதறும் நிலையில் உள்ளது. வெப்பத்தைக் குறைத்து வெடிப்பை தவிர்ப்பதற்கான கடுமையான முயற்சியில் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் போராடி வருகின்றனர்.<br /><br />மொத்தம் 6 அணு உலைகளைக் கொண்ட புகஷிமா அணுமின் நிலையத்தில் மேலும் 3 அணு உலைகள் வெப்பக்கட்டுப்பாடு கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இத்துடன் 5 அணு உலைகளும் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.<br /><br />அணு உலைகளில் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழக்கும் பொழுது வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்படும்.<br /><br />அணுமின் நிலையம் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 170000 பேர் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அணுசக்தி நிலையத்திலிருந்து கதிர் வீச்சு கசிந்தால் நீண்டகாலமாக துயரத்தை அனுபவிக்க வேண்டிய சூழல் உருவாகும். உயிருள்ளவையெல்லாம் அழிந்துபோகுமளவுக்கு சக்திக்கொண்ட அணுசக்தி கதிர்வீச்சினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பல ஆண்டுகள் தொடரும். நாட்டை பெரும் ஆபத்திலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளதாக ஜப்பான் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br /><br />ஜப்பானின் 17 அணுசக்தி நிலையங்களில் மொத்தம் 53 அணு உலைகள் செயல்படுகின்றன. நாட்டின் மின்சாரத் தேவையில் 35 சதவீதத்தை பூர்த்திச் செய்வது அணுசக்தியாகும்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-40276901696165886452011-03-13T16:06:00.000+04:002011-03-13T16:09:06.174+04:00சவூதியில் சிறை:இந்திய ஃபெடர்னிடி ஃபாரத்தின் உதவியால் சொந்த ஊர் திரும்பிய தமிழக பெண்<div align="justify">ஜித்தா,மார்ச்.13:சல்மா அப்துல் அஸீஸ், இப்பொழுது நிம்மதி பெருமூச்சு விடுகிறார். சவூதியில் கடந்த ஒன்றை வருடங்களாக கடுமையான உடல் மற்றும் மனரீதியிலான கொடுமைக்கு ஆளான சல்மா இந்திய ஃபெடர்னிடி உதவியுடன் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு திரும்பியுள்ளார்.<br /><br />இந்தியாவைச் சார்ந்த பெண்கள் பல்வேறு அரபு நாடுகளுக்கு பணிப் பெண்களாக வீட்டுவேலைக்காக செல்கின்றனர். இவர்களில் சிலர் பல துன்பங்களுக்கு ஆளாகவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தங்களின் வீட்டு நிலைமையை கருத்தில்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று பல சிரமங்களுக்கு மத்தியில் காசை சம்பாத்தித்து சொந்த ஊருக்கு அனுப்பும் இப்பெண்களில் பலருக்கு ஏற்படும் மனரீதியான, உடல்ரீதியான உளைச்சல்கள் ஏராளம். அதில் ஒருவர்தாம் சல்மா.<br /><br />கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக சவூதிஅரேபியாவின் மதீனா நகருக்கு ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார் அவர். அவ்வீட்டினரின் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளான சல்மா, கொடுமைகளை பொறுக்கமுடியாமல் அவ்வீட்டிலிருந்து வெளியேறி வேறொருவரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவர் நல்ல மனிதர். ஒரு முறை சல்மா மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவிக்கு செல்லும்பொழுது போலீசாரால் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார். அப்பொழுது அவரிடமிருந்த ஆவணங்களை பரிசோதித்த பொழுது அவை காலவதியாகிவிட்டன. தொடர்ந்து இவர் மதீனா சிறையில் 6 மாதகாலமாக அடைக்கப்பட்டார். பின்னர் ஜித்தா நகரில் தர்ஹீலுக்கு மாற்றப்பட்டார்.<br /><br />அப்பாவியான சல்மாவின் பரிதாபமான நிலையை அறிந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் உறுப்பினர்கள் சிறைக்குச் சென்று சல்மாவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவருக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். சல்மாவை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தடையாக இருந்த அனைத்து சட்டரீதியான பிரச்சனைகளையும் வேகமாக முடித்துக் கொடுத்தது இந்திய தூதரகம்.<br /><br />இதனைத் தொடர்ந்து நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் தனது சொந்த ஊருக்கு வந்திறங்கினார் சல்மா. தனது நிற்கதியான சூழலை அறிந்து சிறையிலிருந்து விடுவித்து நாடு திரும்ப உதவிய இந்தியா ஃபெடர்னி ஃபாரத்திற்கும், இந்திய தூதரகத்திற்கும் தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் சல்மா.<br /><br /><span style="color:#ff0000;">Twocircles.net</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-19735640541026899092011-03-13T13:59:00.000+04:002011-03-13T14:00:10.694+04:00யெமன்:எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்<div align="justify">ஸன்ஆ,மார்ச்.13:அரசுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் எதிர்ப்பாளர்களின் தலைநகர் முகாமில் யெமன் போலீஸ் தாக்குதல் நடத்தியுள்ளது.<br /><br />கண்ணீர் குண்டும், தண்ணீர் பீரங்கியும் உபயோகித்து தலைநகரிலிருந்து எதிர்ப்பாளர்களை வெளியேற்ற முயன்ற நடவடிக்கையில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்குமேற்பட்டோர் காயமடைந்தனர்.<br /><br />எதிர்ப்பாளர்களின் முகாம்களில் போலீஸ் அத்துமீறி நுழைந்தது. குண்டடிப்பட்டு மக்கள் இறந்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முகாமிலிருந்து மருத்துவர்களை பிணைக் கைதிகளாக்கியது போலீஸ். வீதிகளில் மோதல் நீண்ட நேரம் நீடித்தது.<br /><br />பாராளுமன்ற முறைக்கு மாறுவதற்கு உகந்த வகையில் அரசியல் சட்டம் திருத்தப்படும் என கடந்த வியாழக்கிழமை யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்திருந்தார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-24255492369287346722011-03-13T13:57:00.000+04:002011-03-13T13:58:12.852+04:00எகிப்து:60 அரசியல் கைதிகள் விடுதலை<div align="justify">கெய்ரோ,மார்ச்.13:எகிப்தில் ராணுவ அரசு 60 அரசியல் கைதிகளை விடுவிக்க தீர்மானித்துள்ளது. தண்டனைக் காலத்தில் பாதியை பூர்த்திச் செய்தவர்கள் விடுதலைச் செய்யப்படுவோரின் பட்டியலில் இடம்பெறுவர்.<br /><br />இதில் 1981-ஆம் ஆண்டு அன்வர்சாதாத்தின் ஆட்சியின் போது தண்டிக்கப்பட்டவர்களும், மன்னிப்பு வழங்கப்பட்டோரும் உட்படுவர்.<br /><br />ராணுவ அரசின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டு சட்ட அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விடுதலைச் செய்யப்படுவோரை போலீஸ் கண்காணிக்கக் கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-81366617333784978262011-03-13T13:55:00.000+04:002011-03-13T13:56:15.302+04:00சீனா:போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர் தேசத்துரோக வழக்கில் கைது<div align="justify">பீஜிங்,மார்ச்.13:மேற்காசியாவில் நடந்துவரும் மக்கள் எழுச்சியை முன்மாதிரியாகக் கொண்டு இணையதளத்தில் சீனாவில் போராட்டத்தி்ற்கு அழைப்பு விடுத்த இளைஞர் ஒருவரை சீன போலீஸ் கைது செய்துள்ளது.<br /><br />ஜியோ வீடோங் என்ற தன்னார்வ தொண்டு இளைஞரை தேசத்துரோக குற்றஞ்சுமத்தி ஹய்னிங்கிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து கடந்த வியாழக்கிழமை போலீஸ் கைது செய்தது.<br /><br />ஆட்சியை கவிழ்க்க முயன்றதால் வீடோங் கைது செய்யப்ப்பட்டதாக போலீஸ் பின்னர் அவருடைய மனைவிக்கு தெரிவித்தது. சீனாவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹாங்காங்கை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-20494857992355315372011-03-13T08:22:00.000+04:002011-03-13T08:23:03.238+04:00நேட்டோ தாக்குதலை நிறுத்த கர்ஸாயி கோரிக்கை<div align="justify">காபூல்,மார்ச்.13:ஆப்கானில் நேட்டோ படையினர் தனது தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்ஸாயி வலியுறுத்தியுள்ளார்.<br /><br />முதல்முறையாக கடுமையான வார்த்தைகளால் அமெரிக்காவை விமர்சித்துள்ளார் கர்ஸாயி. ஆப்கானிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்கா மற்றும் கூட்டுப்படையினர் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஹமீத் கர்ஸாயியை கோபத்திற்குள்ளாக்கியது.<br /><br />நேற்று முன்தினம் நேட்டோ நடத்திய விமானத் தாக்குதலில் கர்ஸாயியின் உறவினர் ஒரு கொல்லப்பட்டிருந்தார். நேட்டோ தாக்குதலில் ஒன்பது சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்ததுக் குறித்து நேட்டோ படைத்தலைவர் டேவிட் பெட்ரோஸ் மன்னிப்புக் கோரியதை கர்ஸாயி நிராகரித்திருந்தார்.<br /><br />குணார் மாகாணத்தில் நேட்டோ நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற கர்ஸாயி நேட்டோ தனது பணியை நிறுத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.<br /><br />"நாங்கள் பொறுமையுடையவர்கள். ஆனால், தற்பொழுது அதனை இழந்துவிட்டோம்" என கர்ஸாயி தெரிவித்துள்ளார்.<br /><br />நேட்டோத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாகாணத்தின் பெரும்பாலானவர்களின் வீடுகளுக்கு ஆறுதல் கூற கர்ஸாயி சென்றார்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-42908508384027520472011-03-13T08:19:00.000+04:002011-03-13T08:20:47.549+04:00லிபியா:எண்ணெய் நகரத்தை கத்தாஃபியின் ராணுவம் மீட்டது<div align="justify">திரிபோலி,மார்ச்.13:கடுமையான மோதலுக்கு பிறகு கத்தாஃபியின் ராணுவம் எண்ணெய் நகரமான ராஸ் லானூஃபை மீட்டுள்ளது.<br /><br />நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் தாங்கள் இருப்பதாக எதிர்ப்பாளர்களின் தலைவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.<br /><br />லிபியாவை விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்படும் பகுதியாக அறிவிப்பதுக் குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமா என்பதுக் குறித்து விவாதிக்க அரபு லீக்கின் அவசரக்கூட்டம் கெய்ரோவில் துவங்கியுள்ளது.<br /><br />விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்படும் பகுதியாக லிபியாவை அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம் என கூட்டம் நடைபெறுவதற்கு முன் அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார்.<br /><br />ஐ.நா, அரபு லீக், ஆப்பிரிக்க யூனியன், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் ஆதரவு இத்தீர்மானத்திற்கு கிடைக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.<br /><br />வருகிற நாட்களில் வலுவாக மீண்டுவருவோம் என எதிர்ப்பாளர்களின் பக்கம் சேர்ந்த முன்னாள் உள்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் ஃபத்தா யூனுஸ் தெரிவித்துள்ளார். போராட்டம் துவங்கிய பிறகு அவர் எதிர்ப்பாளர்களின் பக்கம் சேர்ந்துள்ளார்.<br /><br />ராஸ் லானூஃபில் கடந்த ஒரு வாரமாக கடுமையான போராட்டம் நடந்துவருகிறது. கூடுதல் வெடிப் பொருட்களுடன் வந்த கத்தாஃபி ராணுவம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலும், ஆயுதக் கிடங்குகளிலும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.<br /><br />திரிபோலிக்கு அடுத்துள்ள ஸாவியா நகரத்தை சில தினங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. நகரத்திலிருந்து செய்தியை வெளியிட பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நகரங்களில் பலத்த மோதல் நடந்துவருகிறது.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-14388891026740626612011-03-13T08:16:00.000+04:002011-03-13T08:17:49.155+04:00எகிப்து:கிறிஸ்தவர்களை தாக்கியது முபாரக்கின் ரகசிய போலீஸ்<div align="justify">கெய்ரோ,மார்ச்.13:மக்கள் எழுச்சிக்கு முன்பு எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியது அந்நாட்டின் முன்னாள் ஏகாதிபத்தியவாதி ஹுஸ்னி முபாரக்கின் ரகசிய போலீஸ் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.<br /><br />2010 ஆம் ஆண்டு துவக்கத்தில் தெற்கு நகரமான நாக்ஹம்மாதியில் சர்ச்சில் வழிபாடு நடத்திய காப்டிக் கிறிஸ்தவர்கள் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். புதுவருட கொண்டாட்டத்தின் போது இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி சர்ச் ஒன்றில் குண்டுவெடித்து 24 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.<br /><br />இத்தாக்குதலுக்கு பின்னணியில் காஸ்ஸாவில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என ஹுஸ்னி முபாரக்கின் அரசு கூறியது. தன்னை வெளியேற்றினால் இஸ்லாமியவாதிகள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என தெரிவிக்க முபாரக்கின் ஏஜண்டுகள்தாம் சர்ச்சில் குண்டை வைத்தார்கள் என அல் அரேபியா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.<br /><br />பிரிட்டீஷ் உளவுத் துறையிலிருந்து கசிந்த சில ஆவணங்கள் கூறுவது என்னவெனில், அன்று உள்துறை அமைச்சராக பதவி வகித்த ஹபீப் அல் அத்லி குண்டுவைக்க உத்தரவிட்டார் என்பதாகும்.<br /><br />அல் அத்லி இத்தகைய தாக்குதல்களை நடத்த சிறப்பு பயிற்சி பெற்ற படையை கடந்த 2004 ஆம் ஆண்டே உருவாக்கியுள்ளார். ஜுந்துல்லாஹ் என்ற பெயரில் முபாரக்கின் அரசால் உருவாக்கப்பட்ட ஒரு குழுதான் அலெக்ஸாண்ட்ரியா சர்ச்சில் குண்டு வைத்துள்ளது. குண்டு வைக்க நியமிக்கப்பட்டிருந்த ஏஜண்ட் இடத்தை காலிச் செய்வதற்கு முன்னர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு அதனை தற்கொலைப் படைத் தாக்குதலாக சித்தரித்துள்ளார்.<br /><br />இதனைத் தொடர்ந்து போலீஸார் ஜுந்துல்லாஹ் தலைவரான முஹம்மது அப்துல் ஹாதியை கைது செய்துள்ளது. எகிப்தில் புரட்சி நடக்கும்பொழுது சிறையிலிருந்து தப்பிய ஹாதி பிரிட்டீஷ் தூதரகத்தில் அபயம் தேடினார். கைது செய்யப்பட்ட ஹாதி தாக்குதல்களைக் குறித்த முக்கிய விபரங்களை தெரிவித்துள்ளார். சர்ச்சில் தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்பு காவலுக்கு நின்றிருந்த போலீசார் இடத்தை காலிச் செய்துள்ளனர்.<br /><br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0