tag:blogger.com,1999:blog-38569503837578272122024-03-13T16:41:23.335+04:00பாலைவனத் தூதுநிகழ்வுகளின் நிதர்சனம்பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-92215133238403056302011-03-08T14:27:00.002+04:002011-03-09T08:23:08.078+04:00பெண்மைக்கு எதிரான சவால்கள் - மகளிர்தின சிறப்புக் கட்டுரை<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe-LNI6deYpuYmP0_gQOtch8aytLNsEytMpqqZ5hmQUfRBfbpYecBPLLgbJ0CT4UckAAiGMjDqBrdDwZFY2uO6QWHsBgwOnSi4D8rNmQy54K3zsOxr8RUltV8-a2KkqzpzpObFvsrHe3o/s1600/International_Womens_Day_logo.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 267px; FLOAT: left; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5581655001713841442" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe-LNI6deYpuYmP0_gQOtch8aytLNsEytMpqqZ5hmQUfRBfbpYecBPLLgbJ0CT4UckAAiGMjDqBrdDwZFY2uO6QWHsBgwOnSi4D8rNmQy54K3zsOxr8RUltV8-a2KkqzpzpObFvsrHe3o/s400/International_Womens_Day_logo.jpg" /></a>கருவறையிலிருந்து துவங்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிலவும் இவ்வுலகில் மீண்டும் ஒரு மகளிர் தினம் நம்மை கடந்து செல்கிறது.<br /><br />1978-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியின் விளைவாக உருவானதுதான் மகளிர் தினம்.<br /><br />குஜராத்தும், கஷ்மீரும் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு சாட்சிகளாக திகழ்கின்றன. அன்றாடம் பெண் சமூகம் அனுபவிக்கும் வேதனைகளும், கொடுமைகளும் ஏராளம். சமீபத்தில் கேரள மாநிலத்தில் ரெயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி இறந்துபோன சவுமியாவும், மணிப்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு உடல் தளர்ந்துபோன எரோம் ஷர்மிளாவும் நிகழ்காலத்தின் உதாரணங்களாவர்.<br /><br />சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் படுத்து உறங்கவோ, பயணிக்கவோ, பணிபுரியவோ முடியாத பயங்கரமான சமூக சூழலில்தான் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். பெண்களுக்கு எதிராக ஏதேனும் கொடுமைகள் நிகழும்பொழுது அதனைக் குறித்து விவாதம் தூள் கிளப்பும். ஆனால், அவை அடங்கி சில தினங்களுக்குள்ளாகவே வேறொரு சம்பவம் நிகழ்ந்திருக்கும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக கருதப்படும் வீடுகளில் கூட உடல்-மனோரீதியான கொடுமைகளுக்கும், பாலியல் அராஜகங்களுக்கும் ஆளாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.<br /><br />மனசாட்சியையும் மனித நேயத்தையும் கொலைச் செய்துவிட்டு ஹிந்துத்துவ வெறியூட்டப்பட்ட பாபு பஜ்ரங்கி போன்ற கயவர்களுக்கு பெண்கள் வெறும் ஒரு மாமிசப் பிண்டங்களாக மாறிப்போயினர். பாலியல் வக்கிரமும், மதுபானமும் ஏற்படுத்திய போதையில் ரெயிலிருந்து தள்ளப்பட்ட சவுமியா, கோவிந்தசாமி என்ற பிச்சைக்காரனனின் முன்னால் சதைப் பிண்டமாக மாறினார்.<br /><br />நிலோஃபரும், ஆசியா ஜானும் இன்னும் பல கஷ்மீரின் சகோதரிகள் இந்திய பாதுகாப்புப் படையினரின் தலைக்கேறிய பாலியல் வக்கிரங்களுக்கு ஆளான பொழுது பெண்மைக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியானது.<br /><br />பெண்களின் மானமும், சுதந்திரமும் குதறப்படும் சூழல்கள் எளிதாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டங்களை இயற்றுவது மட்டும் போதுமானதல்ல. சட்டங்களுக்கும், கமிஷன்களுக்கும் நாட்டில் பஞ்சமில்லை. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் எத்தனை பேர் இந்நாட்டில் தண்டிக்கப்பட்டார்கள்?<br /><br />குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொடூரமான பாலியல் வக்கிரங்களுக்கு பலியான பெண்களுக்கு இதுவரை நீதிக் கிடைக்கவில்லை. கஷ்மீர் பெண்களின் துயரங்களுக்கு இதுவரை தீர்வு இல்லை. சட்டத்தின் ஓட்டைகளை பணத்தையும், அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி பாலியல் வக்கிரப்புத்தியைக் கொண்ட கயவர்கள் தப்பிவிடுகின்றனர்.<br /><br />குடும்பம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பாடுபடும் பொறுப்புணர்வுக் கொண்டவனாக, துணிச்சலும், துடிப்பும் மிகைத்தவனாக ஆண் மதிக்கப்படும் வேளையில் பெண்கள், துயரத்தில் உழலும் அபலைகளாகவும், எதையும் தாங்கும் இதயம் படைத்த பொறுமைசாலிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள்.<br /><br />ஆண்கள்-பெண்களுக்கிடையே நிலவும் உறவு என்பது எஜமான் - அடிமை உறவுப் போன்று மாறிவிட்டது.<br /><br />கல்வி மற்றும் சமூகரீதியான துறைகளில் பெண்கள் இன்று மகத்தான முன்னேற்றத்தை பெற்றிருக்கலாம். ஆனால், அவர்களில் பலரும் தங்களது வீடுகளில் நிம்மதியை இழந்தே காணப்படுகின்றனர்.<br /><br />பெண்ணை தெய்வமாக மாற்றி 'பாரத மாதா' என புகழ்ந்துக் கொண்டே பெண்மையை கொலைச் செய்யும் கொடூரமான மதச்சட்டங்களும், அதனை செயல்படுத்த முயலும் மதவெறியர்களும் நம் நாட்டில்தான் உள்ளனர்.<br /><br />சுதந்திரம் என்றாலே அது ஆடைக் குறைப்பும், ஆண்களுடன் பெண்களும் கலந்துறவாடுவதும்தான் என வக்கிரமான இலக்கணம் வகுத்துள்ள மேற்கத்திய கேடுகெட்ட கலாச்சாரத்தின் பாதிப்பு நம் நாட்டையும் தாக்கியுள்ளது ஆச்சரியப்படும் விஷயம் அல்ல.<br /><br />மனிதப் படைப்பு என்ற நிலையில் போதுமான அங்கீகாரமோ, முக்கியத்துவமோ கிடைக்காமல் கொடூரமான புறக்கணிப்புக்கு ஆளாகி வெதும்பியவாறு பெருமூச்சுடன் வாழ்ந்துவரும் எத்தனையோ பெண்கள் இந்நாட்டில் உள்ளனர்.<br /><br />கணவனுக்கும், குழந்தைகளுக்கும் சேவைப்புரிந்துக் கொண்டு வீட்டிலேயே அடைந்துக் கிடப்பதா? என புரட்சி வசனம் பேசி பெண்மையை வெளியே இழுத்தவர்கள் ஆண்களை சுண்டி இழுக்க அவளை அழகு பதுமையாகவும், காட்சிப் பொருளாகவும் மாற்றினார்களே தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை. அவளுடைய பட்டமும், பதவியுமெல்லாம் திருமணச் சந்தைக்கான தகுதிகள் மட்டுமே.<br /><br />அன்பையும், பாசத்தையும் பொழிந்து வளர்க்கும் பெற்றோரிடமிருந்து பிரிந்து திருமண வேளையில் கணவனின் வீட்டிற்கு செல்லும் பெண் பல கட்டுப்பாடுகளுக்கு ஆளாக்கப்படுகின்றாள். ’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என எழுதியவர்கள் நல்லதொரு கணவன் அமைவதைக் குறித்து கூற மறந்தது ஏனோ?<br /><br />பெண்களுக்கு உரிய கருத்து சுதந்திரமும், மரியாதையும் அளித்து அவர்களை அங்கீகரிப்பதன் மூலமே நல்லதொரு குடும்ப சூழலை கட்டியெழுப்ப இயலும். பல குடும்பங்கள் நிம்மதியிழந்து தவிப்பதற்கு காரணம் இதுவே. கல்வியை அளிக்க முன்வரும் பெற்றோர்கள் அப்பெண்ணிடம் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து, பீதிவயப்படுத்துவதால் அநீதங்களை எதிர்க்கும் துணிச்சல் இல்லாத கோழைகளாக பெண்கள் மாறிவிடுகின்றார்கள். இதனால் தங்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்ப அவர்கள் தயங்கியே வருகின்றார்கள்.<br /><br />சுதந்திரம் மற்றும் அமைதியான சூழலில் வளர்ந்து போதிய கல்வியும், நல்லொழுக்கத்தையும், மனோதிடத்தையும் பெற்ற பெண்மணியும் அவளுக்கு உறுதுணையாக நிற்கும் பெற்றோரும், கணவனும், உறவினர்களையும் கொண்ட மனிதநேயமிக்க மனிதர்களைக் கொண்ட சமூகம்தான் இன்றைய உலகிற்கு தேவை.<br /><br />ஆடம்பரம் மற்றும் ஆபரண மோக உலகில் உழலும் பெண்களை அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலான விசாலமான லட்சியத்தை நோக்கி வழிநடத்தும் பொழுதுதான் பெண் சமூகம் முன்னேற்றமடைவதும், சக்திப் பெறுவதும் சாத்தியமாகும்.<br /><br />கெளஸர் பானுவும், நிலோஃபரும், ஆசியா ஜானும், சவுமியாவும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை பார்த்து அனுதாபம் கொண்டுவிட்டு சில நாட்களில் அந்நிகழ்வுகளை மறந்துவிடும் ஆண்களையல்ல, மாறாக அவர்களை தங்களது சொந்த சகோதரிகளாக நினைத்து பெண் சமூகம் சந்திக்கும் கொடுமைகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் மனிதநேயமிக்க மனிதர்கள் தாம் இவ்வுலகிற்கு தேவைப்படுகின்றார்கள்.<br /><br />மனித நேயம் என்பது நவ நாகரீக உலகில் மரணப்படுக்கையில் கிடக்கிறது. நல்லொழுக்கங்களும், நேர்மையும் தேய்ந்துக்கொண்டு வருகிறது. மீதமிருப்பவையோ சில சடங்குகளிலும், வழிபாடுகளுடனும் சுருங்கிவிட்டது.<br /><br />தாய், மனைவி, சகோதரி போன்ற உறவுகளை மதிக்கவும், அவர்களை அங்கீகரிக்கவும் நாம் தயாரகவேண்டும். பிற பெண்களையும் நமது சகோதரிகளாக மதித்து உரிய மரியாதையும், வரம்புகளையும் பேணும் போதுதான் ஒழுக்கமிக்க சமூகம் உருவாகும். ஒழுக்கம் சீரழிந்து, வரம்புகள் மீறப்படும் பொழுதுதான் பல்வேறு அவலநிலைகளை பெண் சமூகம் சந்திக்கும் சூழல் உருவாகிறது.<br /><br />இறைவனின் பூமியில் ஆண்களும், பெண்களும் சமமான அந்தஸ்தை உடையவர்களே! சர்வ அதிகாரமும் படைத்த இறைவனின் எவ்வித அதிகாரங்களுமில்லாத படைப்புகள்தாம் ஆண்களும், பெண்களும் என புரிந்து கொள்பவர்களால் பெண்கள் அவமானத்திற்கு அநீதத்திற்கும் ஆளாக்கப்படமாட்டார்கள்.<br /><br />விபச்சாரம் செய்ய அனுமதிக் கேட்ட கிராமப்புறத்து அரபி ஒருவரிடம் நபி(ஸல்...) இவ்வாறு கேள்வி எழுப்பினார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்‘ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவரை அழைத்து, 'உன்னுடைய தாயுடனோ அல்லது சகோதரியுடனோ யாரும் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'நான் விரும்பமாட்டேன்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் 'நீர் யாருடன் விபச்சாரம் செய்ய விரும்புவீரோ, அவளுடைய சகோதரனும் உறவினரும் இதை விரும்பமாட்டார்கள்' என்று கூறினார்கள்.<br /><br />50 சதவீத இடஒதுக்கீட்டை உள்ளாட்சி அதிகாரங்களில் வழங்குவதன் மூலமாகவோ அல்லது 33 சதவீத இடஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் அளிப்பதன் மூலமாகவோ பெண்களின் பாதுகாப்பையோ முன்னேற்றத்தையோ உறுதிச் செய்யவியலாது.<br /><br />குடும்பம் முதல் சமூக வரை பரவியுள்ள பெண்ணைக் குறித்த சிந்தனைகள் மாற்றப்பட வேண்டும். முறையான சுதந்திரமும், பாதுகாப்பும், கண்ணியமும் வழங்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை புரிந்துக்கொண்டு அதனை சரியான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெண்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பெண்கள் சுயமாக பலம்பெற்று அதற்கு தேவையான பின்புலமாக ஆண்கள் மாறி ஒரு கூட்டான முயற்சியின் வாயிலாகத்தான் பெண்களின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் உறுதிச்செய்ய இயலும்.</div><div align="justify"><span style="color:#ff0000;">ASA</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-22637521963328840602011-02-14T08:26:00.002+04:002011-02-14T08:27:08.766+04:00காதலர் தினம் எப்படி வந்தது?<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLVe8TOewGjCglID0kjM8UWYvPd2SQwqXbtD7nE7cI2MNWf5YLeMg0pEozs7hguqK3bZTsOPwKiU5ZSrR4GLT8zGCnoLBg4GzOAHecm1gqmbTwSRIxeLayq8CvQ7kx3imPzRp5LK0gnVQ/s1600/no_valentines.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 226px; FLOAT: left; HEIGHT: 218px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5573396899390804674" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLVe8TOewGjCglID0kjM8UWYvPd2SQwqXbtD7nE7cI2MNWf5YLeMg0pEozs7hguqK3bZTsOPwKiU5ZSrR4GLT8zGCnoLBg4GzOAHecm1gqmbTwSRIxeLayq8CvQ7kx3imPzRp5LK0gnVQ/s400/no_valentines.jpg" /></a>இஸ்லாத்திற்கு ஒவ்வாத, அந்நியக் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் பலவற்றை முஸ்லிம்கள் தற்காலத்தில் அதிகமாகச் செய்கிறார்கள். அந்தச் செயல்களில் ஈடுபடுகின்ற பலருக்கு தாங்கள் செய்வது சரியா, தவறா என்பது தெரியாது.<br /><br />ஆம்! அவர்கள் ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் அடையாளங்கள் அவிசுவாசத்தின் அடையாளங்கள். அவர்கள் கடன் வாங்கும் கருத்துகள், சிந்தனைகள் யாவும் மூடநம்பிக்கையிலிருந்து பிரவாகமெடுத்தது. இவைகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு நேரெதிரானவை.<br /><br />"வேலன்டைன்ஸ் டே" என்ற காதலர் தினத்தை (பிப்ரவரி'14) எடுத்துக் கொள்ளுங்கள். ஐரோப்பிய நாடுகளில் செத்துவிட்ட இந்தத் தினம், அமெரிக்கா, பிரிட்டனில் மட்டுமே தற்பொழுது உயிரோடிருக்கும் இந்தத் தினம், திடீரென்று இப்பொழுது முஸ்லிம் நாடுகளில் முளைத்திருக்கிறது. யார் இந்த வேலன்டைன்? ஏன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது?<br /><br /><strong>காதலர் தினத்திற்கென்று கதைகள் ஏராளம் உண்டு</strong>.<br /><br />நான்காவது நூற்றாண்டில் ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மதச் சடங்குதான் இந்த வேலன்டைன் கொண்டாட்டம். ஆட்டு மந்தைகள் மற்றும் பொருள் வளத்திற்கான கடவுளான லூப்பர்கஸ் என்ற கடவுளை கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இது.<br /><br />இந்தத் தினக் கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய விஷயம் உண்டு. இந்தத் தினத்தில் ஒரு குலுக்கல் நடைபெறும். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அல்ல இது. இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காகவும், பொழுது போக்கிற்காகவும் தாரை வார்த்துத் தர நடக்கும் குலுக்கல் இது. எந்த இளம் பெண் எந்த ஆணுக்கு என்பதைக் குலுக்கலில் எடுக்கப்படும் துண்டுச் சீட்டு தீர்மானிக்கும்.<br /><br />அடுத்த வருடம் இதே தினத்தில் புதிய குலுக்கல் நடைபெறும் வரை இந்த இளம் பெண்கள் அவரவருக்குரிய ஆண்களுடனேயே காலம் தள்ள வேண்டும். அந்த ஆண்களுக்கு இவர்கள் இன்பம் தந்து கொண்டிருக்க வேண்டும். இந்தத் தினத்தில் இன்னொரு இழிவான காரியமும் அரங்கேற்றப்படும். இரண்டு இளம் ஆண்கள் ஓர் இளம் பெண்ணை தோல் வாரினால் அடிப்பார்கள். இந்த ஈன இரக்கமற்ற செயலைச் செய்யும் அந்த இரண்டு ஆண்களும் ஒரு சிறிய ஆட்டுத் தோலைத்தான் ஆடையாக உடுத்தியிருப்பர். அந்தச் சிறிய ஆடையும் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் மற்றும் நாய்களின் ரத்தங்களைக் கொண்டு கறை படுத்தப்பட்டிருக்கும்.<br /><br />இந்தச் சாட்டையடியை 'புனிதமானதாக' அவர்கள் கருதினார்கள். அந்த இளம் ஆண்கள் 'புனிதப் புருஷர்களாக' மதிக்கப்பட்டார்கள். இப்படி சாட்டையடித்தால் அந்தப் பெண்கள் நல்ல முறையில் தங்கள் குழந்தைகளை வளர்ப்பார்களாம். இப்படியொரு நம்பிக்கை. இதற்கொரு கொண்டாட்டம்.<br /><br />இந்த மடத்தனமான லூப்பர்காலியா என்றழைக்கப்படும் கொண்டாட்டத்தை நிறுத்துவதற்காக கிறிஸ்தவ மதம் கடும் முயற்சி எடுத்தது. வழக்கம் போல் தோல்வி கண்டது.<br /><br />ஆதலால் குறைந்தபட்ச நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தது. குலுக்கல் சீட்டுகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக புனித துறவிகளின் பெயர்களை வைத்தது.<br /><br />இப்பொழுது குலுக்கலில் எந்த ஆண் எந்தத் துறவியின் சீட்டை எடுக்கிறானோ அவன் அடுத்த ஆண்டு இந்தத் தினம் வரை அந்தத் துறவியைப் பின்பற்றி, அவரை மாதிரியே வாழ வேண்டும். இந்தச் சிறு மாற்றத்தைக் கிறிஸ்தவ மதம் கொண்டு வந்தது.<br /><br />இது சிறிது காலத்தில் "துறவி வேலன்டைன்" தினம் என்று மாற்றப்பட்டது.<br /><br />கி.பி.496-ல் போப் கிளாசியஸ் என்பவரால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. துறவி வேலன்டைன் என்பவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார்.<br /><br />இருப்பினும் கிறிஸ்தவக் கதைகளில் விதவிதமாக 50 வேலன்டைன்கள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு வேலன்டைன்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை, பண்புகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன.<br /><br />ஒர கதைப்படி, துறவி வேலன்டைன் என்பவர் ஒரு 'காதல் துறவி'யாக இருந்துள்ளார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிறைக்காவலரின் மகளை அவர் காதலித்தாராம்.<br /><br />இந்தக் காதலர் தினத்தில் நடைபெறும் குலுக்கல்களால் குழப்பங்களும், தகராறுகளும் தலைதூக்க ஆரம்பித்தன. இந்தக் குழப்பங்களையும் தகராறுகளையும் சமாளிக்க முடியாத பிரெஞ்சு அரசு, கி.பி.1776-ல் இந்தச் சடங்கைத் தடை செய்தது.<br /><br />அந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது ஒழிந்தது.<br /><br />இங்கிலாந்தில் 'புரித்தான்கள்' என்ற இனத்தார் பலமாக இருந்தபொழுது இது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார்.<br /><br />இங்கிலாந்திலிருந்து இந்தச் சடங்கு புதிய உலகிற்கு அறிமுகமாகியது. வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர்.<br /><br />கி.பி.1840-ல் எஸ்தர் ஏ.ஹவ்லண்ட் என்பவர் முதன்முதலாக அமெரிக்க காதலர்தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது.<br /><br />இதன் பிறகு 'வேலன்டைன் தொழிற்சாலை' என்னும் பணம் பண்ணும் தொழிற்சாலை அமோக வளர்ச்சிப் பெற்றது.<br /><br />இன்று ஜாஹிலிய்யாவின் பலம் எங்கும் வியாபித்திருக்கிறது. கலாச்சாரத்தில், அன்றாட மனித வாழ்வில் அது தனது பிடியை இறுக்கியுள்ளது. மீடியாவும் அதன் பிடிக்குள்ளேதான் இருக்கிறது.<br /><br />இதனால்தான் முஸ்லிம்கள் வேலன்டைன்களையும் வரவேற்று, அரவணைத்துக் கொள்கின்றனர்.<br /><br />முஸ்லிம்களாகிய நாம் இவற்றின் பிடியிலிருந்து வெளியில் வரவேண்டும். நமது வாழ்வில் அந்நிய, அறியாமைக்கால சிறு கறை கூடப் படியாமல் பாதுகாக்க வேண்டும்.<br /><br />மூலம் : <span style="color:#ff0000;">இம்பாக்ட் இண்டர்நேஷனல், லண்டன்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-2270516351206395382011-02-13T08:18:00.001+04:002011-02-13T08:19:44.402+04:00இஃவான்கள் இலக்கை அடைவார்களா?<div align="justify">எகிப்தில் இஃவானுல் முஸ்லிமீன் என்ற லட்சிய இயக்கத்தை தோற்றுவித்த இமாம் ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்கள் , 12 பிப்ரவரி 1949, சனிக்கிழமை இரவு 8.00, அன்று ஷஹீதாக்கப்பட்டு நேற்றுடன் 63-வது வருடம் நிறைவுறுகிறது.<br /><br />எகிப்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் இஃவான்களின் பங்கு முக்கியத்துவமானதாகும். இந்நிலையில் இஃவான்களைக் குறித்து மீள்பார்வை இதழில் வெளியான கட்டுரையை பாலைவனத் தூதில் வெளியிடுகிறோம்.<br /><br />நபியவர்கள் கூறினார்கள்; "<span style="color:#ff0000;">அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்</span>"(அபூதாவூத்)<br /><br />புனர் நிர்மாணம் என்றால் என்ன? என்பதற்கு ஆரம்பகால அறிஞர்கள் விளக்கம் தருகின்றபோது, மார்க்கத்தில் புதிதாக நுழைந்த நூதனங்கள் அகற்றப்படுதல், மார்ர்க்கத்தில் மறக்கப்பட்ட அல்லது இல்லாது செய்யப்பட்டவற்றை மீண்டும் கொண்டுவருதல் போன்ற விளக்கங்களை அளித்துள்ளனர்.(பத்ஹுல் பாரி). அது போன்றே நவீன கால அறிஞர்கள் இதர்கு விளக்கம் அளிக்கின்றபோது, மார்க்கத்தை குறித்து காலத்தின் பண்புகளுக்கு ஏற்ப விளங்கி நடைமுறைப்படுத்தல் என்றனர்.<br /><br />இந்த இரண்டு விளக்கங்களும் ஒன்றையொன்று முழுமைப்படுத்துவதாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் புனர்நிர்மாணம் என்பது இஸ்லாம் பற்றிய புரிதல் அதன் மூலமாக அல்குர் ஆன் சுன்னாவிற்கு மீளல். அதாவது எந்தக் கலப்புமின்றி குர் ஆன் சுன்னாவிலிருந்து தூயவடிவில் இஸ்லாத்தை விளங்கி அதனை நாம் வாழ்கின்ற காலத்தின் பாஷையில், வடிவத்தில், இயல்பில் நடைமுறைப்படுத்தல் எனப் பொருள்படும்.<br /><br />அந்த வகையில் புனர்நிர்மாணம் என்பது நபியவர்களது தாஃவா இந்த உலகில் எதை சாதிக்க நினைத்ததுவோ அல்லது சாதித்ததுவோ அதனை மீண்டும் இந்த உலகில் சாதித்துக்காட்டுவதுதான் புனர்நிர்மாணமாகும்.<br /><br />நபியவர்களது தாஃவா, இஸ்லாத்திற்கான முதல் நிர்மாணம் அதனை புனர்நிர்மாணம் செய்வதென்பது அதே பணியை மீண்டும் மேற்க்கொண்டு அதே இலக்கை அடைதல் என்பதாகும். நபியவர்களது தாஃவாவின் இலக்கு என்ன? முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுதல், அவர்களுக்கு தலைமையை வழங்குதல், இந்த முழு உலகமும் இஸ்லாத்தின் வழிக்காட்டுதலில் இயங்கவேண்டும் என்பதே. இதுதான் நபியவர்களது பணி.<br /><br />இதைத்தான் அல்குர் ஆன் இவ்வாறுக் குறிப்பிடுகிறது<br />"<span style="color:#ff0000;">இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்;. பாதுகாவலர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன், மிகச் சிறந்த உதவியாளன்</span>."( அல்குர் ஆன்22:78)<br /><br />நபியவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைமை. முஸ்லிம்கள் மனித சமூகத்தின் தலைமை. அதற்காகத்தான் அல்லாஹ் முஸ்லிம்களைத் தேர்வுச் செய்தான் என்கிறது இந்த அல்குர் ஆன் வசனம்.<br /><br />உலகிற்கு வழிகாட்டி தலைமையை வழங்கும் இந்தப் பணிக்காகத்தான் கிலாபத் அவசியப்பட்டது. தலைமையை வழங்கும் அதிகார மிக்க இடம்தான் கிலாபத். நபியவர்களின் முதல் நிர்மாணம் இந்த இலக்கை அடைந்தது. பின்னர் நீண்ட காலம் உலகிற்கு வழிக்காட்டித் தலைமையை வழங்கியது. ஆனால் 1924ம் ஆண்டுடன் அது சரிந்து வீழ்ந்தது.<br /><br />இப்பொழுது புனர்நிர்மாணம் ஒன்று அவசியப்படுகிறது. அதன் இலக்கு என்ன? நபியவர்களது அதே இலக்குதான் அதனுடைய இலக்காகவும் இருக்கும். அதிகாரத்துடன் தலைமையை வழங்க இங்கும் ஒரு கிலாபத் அவசியப்படுகிறது.<br /><br />1928ம் ஆண்டு மார்ச் மாதம், நபியவர்களது அதே இலக்குடன் அதே வழிமுறையுடன்; காலத்திற்குரிய இயல்புடனும் பாஷையுடனும் ஒரு புனர்நிர்மாணப் பணி ஆரம்பிக்கின்றது. நபியவர்கள் தனது முதல் பணியை ஆரம்பித்தபோது, எவ்வாறு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் அதுவும் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் ஆரம்பித்தார்களோ அதேபோன்று, சில மனிதர்களுடன் பெரிய சமூக அந்தஸ்தற்ற மனிதர்களுடன் அந்தப்புனர் நிர்மாணப்பணி ஆரம்பிக்கின்றது. அதுதான் இன்று பரந்து விரிந்து உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கமாகும்.<br /><br />இந்த இயக்கம் ஸூஹைபுர்ரூமி போன்ற பிலால் போன்ற சமூக அந்தஸ்தற்ற ஆறு நபர்களுடன்தான் ஆரம்பித்திருக்கிறது. இமாம் ஹஸனுல் பன்னாவின் உரைகளினால் கவரப்பெற்ற இவர்கள் இமாமவர்களின் வீட்டுக்கு வந்து நீங்கள் குறிப்பிடுவதுப் போன்று பலப் பிரச்சனைகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீர என்ன வழி? நாங்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் என்னச் செய்வது என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு வழிக்காட்டுகிறீர்களா?என்றுக் கேட்டார்கள். அவர்களது உணர்வுகளால் கவரப்பட்ட இமாமவர்கள் அவர்களுக்கு வழிக்காட்டும் பணியை ஆரம்பித்தார்கள். அன்றே அவர்கள் தமக்கு வைத்துக்கொண்ட பெயர்தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் என்பது.<br /><br />இந்த நிகழ்வு 1928ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வுகள் நடந்து முடிந்து 79 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று சுமார் 90 நாடுகளில் இந்த தாஃவக் காணப்படுகிறது. இன்னும் 21 வருடங்களில் 2028 ஆகின்றபோது இந்த புனர்நிர்மாணப் பணி அதன் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். அதாவது முழு மனித சமுதாயத்திற்கும் வழிக்காட்டுகின்ற, அதற்குத் தலைமையை வழங்குகின்ற இடத்திற்கு இஸ்லாம் வந்து சேர்ந்திருக்கும்.<br /><br />இன்னும் 21 வருடங்களில் இது சாத்தியப்படுமா? இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சாத்தியப்படப் போகிறது. அல்லாஹ்த்தாஅலா அல்குர் ஆனில் கூறுவதைக் கேளுங்கள்: "<span style="color:#ff0000;">அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்</span>."( அல்குர் ஆன்2:261)<br /><br />இஸ்லாமிய தாஃவா என்பது, அதனது ஒரு முயற்சி எழு நூறு மடங்கு பரகத் பொருந்தியது. எழு நூறு மடங்கு விளைவைத் தரக்கூடியது. இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள். சுமார் 90 நாடுகளில் பரவியுள்ள இந்த தஃவாவின் மொத்த அங்கத்தவர்களை எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தால் எத்தனை பேர் இருப்பார்கள்? அவர்கள் ஒவ்வொருவரும் இந்த தாவாவுக்காக செலவுச் செய்யும் நாணயங்களை எழு நூறு மடங்கால் அதிகரித்துப் பார்த்தால் எவ்வளவு தொகை காணப்படப்போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை.<br /><br />எவ்வளவு தொகை காணப்படப் போகிறது? அவர்கள் ஒவ்வொருவரும் செலவுச் செய்யும் நேரங்கள், மேற்க்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் எழு நூறு மடங்காக அதிகரித்துப் பார்த்தோம் எனின், இஸ்லாமிய கிலாபத் தோன்றுவதும் உலகிற்கு தலைமையை வழங்கும் சக்தியாக மாறுவதும் அசாத்தியமான ஒன்றாகத் தோன்றவில்லை. எனவே இன்னும் இருபத்தியொரு வருடங்களில் 2028ம் ஆண்டில் உலகிற்கு வழிகாட்டும் சக்தியாக,தலைமையை வழங்கும் சக்தியாக இஸ்லாம் தான் இருக்கப்போகிறது. அதற்கான பணி பலமாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்படுகிறது. அன்றைய நாள் அந்த அதிசயத்தை கண்களால் காணும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கும் தரவேண்டும் என பிரார்த்திப்போம்.<br /><br />நன்றி:<span style="color:#ff0000;">மீள்ப்பார்வை ஏப்ரல் 2007</span>.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-64631226895743361402011-02-09T10:14:00.006+04:002011-02-09T11:44:11.588+04:00பாலைவனத் தூது நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை - 'நமக்கென்று ஒரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்'<div align="justify"><span style="font-size:130%;color:#330099;"><strong> நமக்கென்று ஒரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்</strong></span></div><div align="justify"><span style="color:#009900;"> </div></span><strong><span style="color:#ff0000;"></span></strong><div align="justify"><strong><span style="color:#ff0000;">அறிமுகம்</span></strong><br />ஊடகம் என்பதை தரவுகள், தகவல்கள், செய்திகள் என்பவற்றைச் சேகரித்து வைத்துப் பரவலாக வழங்கும் மிகச் சக்தி வாய்ந்த தொடர்பாடல் சாதனம் என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.<br /><br />இது அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் என்று வகைப்படுத்தப்படுகின்றது. இவற்றுள் சாசனம், புத்தகம், பத்திரிகை, சஞ்சிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான அனைத்தும் உள்ளடங்குகின்றன. இன்றைய அறிவியல் யுகத்திலே ஊடகமொன்று இல்லாத சமுதாயம் உயிரில்லாத உடம்புக்கு ஒப்பானதாகும். காரணம், ஒரு சமுதாயத்தின் இருப்பையும் (<span style="color:#006600;">existence</span>) உயிர்ப்பையும் (<span style="color:#006600;">dynamism</span>) நிர்ணயிப்பதில் ஊடகத்தின் பங்கு மகத்தானதாகும். எந்த ஒரு சமுதாயமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன்னுடைய தனித்துவ அடையாளங்களைப் (<span style="color:#009900;">identity</span>) பேணிக்கொள்ளவும் மட்டுமின்றி, தனக்கெதிராகக் கட்டமைக்கப்படும் போலிப் புனைவுகளையும் திட்டமிட்ட நச்சுப் பிரசாரங்களையும் எதிர்கொண்டு அவற்றை முறியடிக்கவும் ஊடகமே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகப் பயன்பட முடியும். எனவேதான், இன்றைய உலகில் பலம் வாய்ந்த அதிகாரச் சக்திகளுக்கு இடையிலான அல்லது வேறுபட்ட சித்தாந்தங்கள், மதங்களுக்கிடையிலான போர், "ஊடகப் போர்" (media war) என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.<br /><br />இஸ்லாம், முஸ்லிம் என்ற இரண்டு சொல்லாடல்கள் (<span style="color:#009900;">discourse</span>) குறித்த பல்வேறு புனைவுகள், சர்ச்சைகள், ஐயங்கள் காலங்காலமாக வெளிவந்தவண்ணமே இருந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகனும் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து இந்நிலைமை உக்கிரமடைந்ததை நாமறிவோம். அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் உண்மையான அடையாளம் திட்டமிட்ட அடிப்படையில் உருக்குலைக்கப்பட்டும், இஸ்லாமும் அதன் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் அவமானப்படுத்தப்பட்டும் வருவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். இத்தகைய இழி செயலில் மேலைத்தேய ஊடகங்களும் கீழைத்தேய ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. ஸியோனிஸ, கிறிஸ்தவ, ஹிந்துத்துவ சக்திகள் தமது இஸ்லாமிய எதிர்ப்பை, முஸ்லிம் எதிர்ப்பை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதற்கு ஊடகத்தையே பெரிதும் பயன்படுத்தி வருகின்றன.<br /><br />மேலைத்தேய உலகைப் பொறுத்தவரையில் முதலாவது செய்திப் பத்திரிகை 1605ம் ஆண்டிலும், முதலாவது வானொலிச் சேவை 1920ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டதாக விக்கிபீடியா பதிவு செய்துள்ளது. எனின், முஸ்லிம் உலகின் நிலையென்ன? உலகின் எந்த மூலையில் எந்த ஒரு முஸ்லிம் நாட்டுக்கோ முஸ்லிம்களுக்கோ எத்தகைய கொடூரமான அநியாயங்கள் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க நமக்கென்று ஓர் ஊடகம் இருக்கவில்லை. <a href="http://www.bbc.com/">பி.பி.சி. (B.B.C.)</a>, <a href="http://edition.cnn.com/">சி.என்.என். (C.N.N.)</a>, <a href="http://www.ap.org/">ஏ.பி. (A.P.)</a>, <a href="http://www.reuters.com/">ராய்ட்டர்ஸ் (Reuters)</a> முதலான பக்கச் சார்பு ஊடகங்களினால் கட்டமைக்கப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகளே உலகமெங்கும் பரவலாகச் சென்றடைந்தன. உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கெதிராக சொல்லொணாத வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலும் கேட்பார் பார்ப்பாரற்ற அனாதைச் சமூகமாக, அகதிச் சமூகமாக நம்முடைய சமுதாயம் நாதியற்றுத் தவிக்கும் நிலையே காணப்பட்டது.<br /><br />இந்நிலையில், பல்வேறுபட்ட சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் <a href="http://www.aljazeera.net/portal">Al Jazeera (அல்ஜஸீரா</a>) அரபுத் தொலைக்காட்சிச் சேவை 1996ம் ஆண்டிலும் <a href="http://english.aljazeera.net/">ஆங்கில சேவை</a> 2006ம் ஆண்டிலும், <a href="http://www.presstv.com/">பிரஸ் தொலைக்காட்சி (Press TV)</a> சேவை 2007ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டு இன்று விதந்துரைக்கத்தக்க முஸ்லிம் ஊடகங்களாகத் திகழ்கின்றன.<br /><br />இத்தகைய ஒரு பின்புலத்தில் தமிழ்நாட்டில் 13.7 சதவீதமும், இலங்கையில் 7.6 சதவீதமும் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கென்று தனியான முழுநேர செய்தி ஊடகமொன்றின் தேவை பரவலாக உணரப்பட்டு வருவதையும் அதற்கான முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் அறிவோம். என்றபோதிலும் ஒருங்கிணைக்கப்பட்டதும், பரவலாக மக்களைச் சென்றடையக்கூடிய சக்திவாய்ந்ததுமான தமிழ் முஸ்லிம் ஊடகமொன்றை உருவாக்கி வளர்க்கும் நம்முடைய நெடுங்காலக் கனவு இன்னும் முழுமை பெறவில்லை என்றே கூற வேண்டும். அந்தக் கனவை நனவாக்கும் முதற்கட்ட முயற்சியென்ற வகையில் "<strong><span style="color:#ff0000;">நமக்கென்று ஒரு நாளிதழ்</span></strong>" குறித்து சிந்திப்பதும் திட்டமிட்டு செயற்படுவதும் அதனை நோக்கி இடையறாது பாடுபடுவதும் தமிழ் பேசும் முஸ்லிம்களாகிய நமது இன்றியமையாத சமூகப் பணியாகும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.<br /><br />ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் ஜிஹாதுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த நற்கூலிகள் உள்ளன. அந்த அடிப்படையில், உலகளாவிய ரீதியில் இஸ்லாத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சதித்திட்டங்களை முறியடிப்பதற்குரிய மிகப் பிரதான ஆயுதமான ஊடகமொன்றைக் கட்டமைத்து அதனை ஸ்திரமடையச் செய்வதும் ஜிஹாதின் ஒரு பகுதியே என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் நாம் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில்,<br /><br /><span style="color:#ff0000;">"அவர்(நிராகரிப்பாளர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்). அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்கான நற்கூலி) உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது."</span> <span style="color:#000066;">(8:60)<br /><br /></span>என்ற அல்குர்ஆன் வசனத்தின் மூலம், இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்கொள்ளத்தக்க எல்லா வகையான போர் சாதனங்களையும் சித்தப்படுத்தி தயாராக வைக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்தத் திருமறை வசனம் இன்றைய ஊடகப் போருக்கும் பொருந்தி வரும் என்பதில் ஐயமில்லை. இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கு மலையாளத்தில் <a href="http://www.thejasnews.com/">தேஜஸ்</a>, <a href="http://www.madhyamam.com/">மாத்யமம்</a> எனும் நாளிதழ்களும் தமிழில் மணிச்சுடர் எனும் நாளிதழும் முக்கியமானவை. அவ்வாறே இலங்கையைப் பொறுத்தவரையில், நவமணி வாரமிருமுறை இதழாக வெளிவந்து அண்மைக்காலமாக வாரமொருமுறை மட்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவை தவிர மறுமலர்ச்சி வாரப் பத்திரிகை, எங்கள் தேசம் மாதமிருமுறைப் பத்திரிகை என்பனவும் குறிப்பிடத்தக்கவையே.<br /><br /><strong><span style="color:#ff0000;">1. பிரச்சினைகளும் சவால்களும்</span><br /></strong>எந்தவொரு முயற்சியிலும் வெற்றி காண வேண்டுமானால், அது தொடர்பான பிரச்சினைகள், சவால்களை இனங்காண்பதோடு, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கண்டறிவதும், தக்க அணுகுமுறைகளைக் கையாண்டு செயற்படுத்துவதும் முக்கியமானதாகும். அந்த வகையில், நமக்கான ஊடக உருவாக்கத்தில் உள்ள பிரச்சினைகள், சவால்கள் குறித்து நோக்குவது பொருத்தமானதே!<br /><br /><strong><span style="color:#000000;">1.1</span></strong> நமக்கான ஊடகம் எனும் எண்ணக்கருவின் தத்துவார்த்தப் பின்புலத்தை (<span style="color:#006600;">The Background of Conceptual Criteria</span>) வரையறுப்பதிலுள்ள சிக்கல்கள்<br /><br />நம்மவர் மத்தியில் நமக்கான ஓர் ஊடகம் இருக்கவேண்டியதன் இன்றியமையாமை குறித்த விழிப்புணர்வு தோன்றியிருப்பது ஓர் ஆரோக்கியமான அம்சமே. எனினும், அதனைச் சாத்தியமாக்குவதற்கான முயற்சிகள் காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அவை இடையிலேயே நின்று போயின. இன்னொரு வகையில் சொல்வதானால், ஒருங்கிணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த செய்தி ஊடகம் என்றளவில் முன்னோடி முயற்சியாக ஒரு நாளிதழை உருவாக்கும் முயற்சி இன்னும் முழுமையடையாமல் இருக்கின்றது. இதற்கான மிகப் பிரதானமான காரணங்களாக நாம் பல்வேறு அம்சங்களை அடையாளப்படுத்தலாம். என்றபோதிலும், இவ்விடயம் தொடர்பாக நாம் மிக முக்கியமானதோர் அம்சம் குறித்து நமது கவனத்தைத் திருப்புவது இன்றியமையாததாகின்றது. அதாவது, நமக்கான ஊடகம் ஒன்றை வரையறுப்பது குறித்து சில அடிப்படையான கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. அவை வருமாறு:<br /><br />அ) நமக்கான ஓர் ஊடகம் என்பதன் உட்கருத்து என்ன?<br /><br />ஆ) அந்த ஊடகத்தின் பேசுபொருள் வெறுமனே முஸ்லிம்களின் சமுதாயப் பிரச்சினைகளை மட்டும் குவிமையப் (focus)படுத்தியதா?<br /><br />இ) அதன் இலக்கு வாசகர்கள் யாவர்?<br /><br />நமக்கான ஊடகம் எனும்போது அது, நம்முடைய பிரச்சினைகளை நாம் பேசுவதற்கானதா அல்லது நம்மிடமிருந்து மனிதகுல மேம்பாடு கருதி நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்தக் கூடியதும், பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் குரல் கொடுப்பதாகவும், நம்முடைய சமுதாயம் பற்றிய விசாலமான பார்வையை சகோதர சமுதாயத்தவரிடம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமையத்தக்க ஒரு பொது ஊடகமா என்பதை வரையறுப்பதில் முதலாவது கேள்வி முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், இதற்கான விடையை வரையறுக்கும் போது ஏனைய இரண்டு கேள்விகளுக்கும் இயல்பாகவே பதில் கிடைத்து விடுகின்றது.<br /><br />ஏனெனில், முதலாவது வகைமையைப் (<span style="color:#006600;">category</span>) பொறுத்தவரையில், இன்று நம்மிடையே உள்ள அனேகமான மாத, வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் இவ்வகையைச் சேர்ந்தவையே. இவை முஸ்லிம் உலகின் பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதோடு, சன்மார்க்கப் போதனைகள், உள்ளக சமூக-கலாசார சீராக்கம் (<span style="color:#009900;">inter socio-cultural reform</span>) பற்றிய விழிப்புணர்வு ஊட்டுவதாகவுமே அமைந்துள்ளன. எனவே, தவிர்க்க முடியாதவாறு முஸ்லிம்களே இவற்றின் இலக்கு வாசகர்களாக உள்ளனர்.<br /><br />இந்நிலையில், நம்முடைய பிரச்சினைகளை நமக்குள் நாம் பேசிக்கொள்வது, விசனப்படுவது என்ற நிலையிலிருந்து மாறி, அடுத்தகட்ட நகர்வாக, நம்முடைய பிரச்சினைகளை மற்றவர்கள் மத்தியிலும் கொண்டு சென்று, பொதுஜன அபிப்பிராயத்தை நம் பக்கம் வெற்றிகரமாகத் திருப்புவது, தாக்குதிறன் கூடியதாக (<span style="color:#009900;">effectively</span>) நம்முடைய நியாயமான கோரிக்கைகளை, போராட்டங்களை முன்னெடுப்பது, சமூக-தேசிய மேம்பாடு தொடர்பான நம்முடைய காத்திரமான பங்களிப்பை வழங்குவது முதலான அம்சங்களை உள்வாங்கியதாக நம்முடைய ஊடகம் அமைவதே மிகப் பொருத்தமானது. எனவே, நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்காகவும், நமக்கெதிரான சவால்களை முறியடிப்பதற்காகவும் மட்டுமின்றி, நீதியை நிலைநிறுத்த வேண்டிய நடுநிலைச் சமுதாயத்துக்குரிய (உம்மத்தன் வஸத்) பணியைத் திறம்படச் செய்வதற்காகவும் அத்தகைய ஒரு பொது ஊடகத்தை நோக்கி நகர்வது காலத்தின் தேவையாக உள்ளது.<br /><br /><span style="color:#ff0000;"><strong>2. ஏனைய சவால்கள்<br /></strong><br /></span><strong>2.1</strong> <strong>நிதிப் பிரச்சினை</strong> (<strong><span style="color:#009900;">Financial Problem</span></strong>)<br />ஒருசில தன்னார்வமுள்ளோரால் அல்லது துடிப்புமிக்கதோர் இளைஞர் குழுவினரால் சமுதாயத்துக்காகப் பணியாற்றும் தீராத தாகத்தோடு ஆரம்பிக்கப்படும் இதழியல் முயற்சிகளைப் பொறுத்தளவில் அவை பாரியளவு முதலீடுகளுடன் ஆரம்பிக்கப்படுவதில்லை. பத்திரிகையின் விற்பனை சூடு பிடிக்கும் வரையும் பிரசுரத்துக்காகச் செலவிட்ட பணத்தை விற்பனை வருமானம் மூலம் மீளப் பெற முடியாத நிலையிலும் தளராது நட்டத்துடனேனும் தொடர்ச்சியாகப் பத்திரிகையை வெளியிடுமளவுக்குத் தேவையான நிதி இன்மை அனேகமான பத்திரிகைகள் இடையிலேயே நின்று போவதற்கான பிரதான காரணமாக உள்ளது. புதிதாக அறிமுகமான பத்திரிகை என்ற நிலையில் போதிய விளம்பரங்கள் கிடைக்காமை, விற்பனை முகவர்களிடமிருந்து முறையாகப் பணம் வசூலிப்பதிலுள்ள இடர்பாடுகள், நம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் காசு கொடுத்துப் பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கம் இன்மையால் விற்பனை வருமானத்தை மட்டும் நம்பியிருக்க முடியாத நிலைமை என்பன இந்த நிதிப் பிரச்சினையை பூதாகரமாக வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகின்றன என்றால் மிகையில்லை. இத்தனையையும் தாண்டி குறித்த பத்திரிகையை நடப்பு நட்டத்தைத் தாங்கிக்கொண்டே தொடர்ச்சியாக வெளியிடக்கூடிய நிலை வெகு அரிதானதாகும்.<br /><br /><strong>2.2 வளப் பற்றாக்குறை</strong> (<span style="color:#009900;">Resource Constraint</span>)<br />இது பன்முகப்பட்டதாகும். அதாவது, வளம் எனும்போது அதற்குள் தொழிநுட்பம் மற்றும் உடைமைகள் சார்ந்தவை, மனித அறிவு மற்றும் உழைப்பு சார்ந்தவை என்று பல வகைப்பட்ட வளங்களிலுள்ள பற்றாக்குறை நிலைமைகளும் உள்ளடங்குகின்றன. அந்த வகையில் தேர்ச்சி பெற்ற செய்தியாளர்கள், பத்திரிகையின் வடிவமைப்பு முதலான தொழினுட்பம் சார்ந்த துறைசார் நிபுணர்கள், அச்சக வசதி, போதிய ஊழியர் படை, பரவலான விநியோகத்துக்குத் தேவையான வாகன வசதி, நாடெங்கிலும் நேர்மையான முகவர்கள் அல்லது விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள் என்று பல்வேறுபட்ட அடிப்படை அம்சங்கள் இந்த வளப் பற்றாக்குறை என்பதோடு தொடர்பு படுகின்றன. இவை அனைத்தும் சரிவர அமைதல் என்பது மிகச் சிக்கலான ஒன்றாகும் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.<br /><br /><strong>2.3 நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள்</strong> (<span style="color:#009900;">Administrative Issues</span>)<br />நாம் மேலே குறிப்பிட்டுள்ள முதலிரண்டு பிரச்சினைகளுக்கு சற்றும் முக்கியத்துவம் குறையாத ஓர் அம்சமாக முகாமைத்துவம் சார்ந்த பிரச்சினைகள் திகழ்கின்றன. ஏனைய துறைகளைப் போலவே ஒரு பத்திரிகையைப் பொறுத்தவரையிலும் ஆரம்பத்திலேயே சரியானதும் நுணுக்கமானதுமான திட்டமிடல் இன்றியமையாததாகும். அந்த வகையில் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதெனில், பத்திரிகையின் பிரதான கொள்கையை வரையறுத்தல், இலக்கு வாசகர் வட்டத்தை நிர்ணயித்து அதற்கேற்ப பத்திரிகையை வடிவமைத்தல், பத்திரிகையை இலாபத்தை எதிர்பார்க்காமலும் நட்டத்தை எதிர்கொண்டவாறும் தொடர்ந்து வெளிக்கொண்டு வருவதற்கு எந்தளவு மூலதனம் தேவை, ஊழியர் படை மற்றும் தொழிநுட்பம் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைப்பது எப்படி முதலான தீர்மானங்கள் மிகத் துல்லியமாக அமைதல் இன்றியமையாததாகும். இதற்குக் கருத்தொருமித்த நிர்வாகக் குழுவொன்று இருப்பது கட்டாயமானதாகும். அதாவது, மிகச் சிறப்பானதொரு நிர்வாகக் குழு இல்லாத பட்சத்தில் வெற்றிகரமானதொரு பத்திரிகையை வடிவமைத்தல், இருக்கின்ற நிதியை முறையாகக் கையாளுதல், போதியளவு நிதியைப் பெருக்கிக் கொள்ளுதல், விற்பனை சார்ந்த பிரச்சினைகளைத் திறம்படக் கையாளுதல் முதலான இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் உரிய தீர்மானங்களை எடுத்துச் செயற்படுத்துவது சாத்தியமற்றதாகும். எனவே, ஒரு பத்திரிகையின் வெற்றி என்பது சிறந்த நிர்வாகத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.<br /><br /><strong>2.4 முஸ்லிம் மக்களிடம் போதிய வாசிப்புப் பழக்கமின்மை<br /></strong>இந்திய - இலங்கைவாழ் தமிழ் முஸ்லிம்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ளதென்பது கசப்பான உண்மையாகும். அதிலும், எத்தனையோ வீண் ஆடம்பரங்களுக்காகப் பணத்தை அள்ளியிறைக்கும் நம்மவர்கள் ஒரு சிறு தொகைப் பணத்தை புத்தகமொன்றை, பத்திரிகையொன்றை வாங்குவதற்காகச் செலவழிப்பதை பெரும் சுமையாகக் கருதும் மனப்பாங்கே மேலோங்கியுள்ளது எனலாம். தொலைக்காட்சி, இணையம் என்று இலத்திரனியல் ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்ட சூழ்நிலையில் நாளாந்த, வாராந்த பத்திரிகைகளைப் படிக்கும் பழக்கம் நம்மவர் மத்தியில் மிக அரிதாகி வருகின்றது. இந்நிலையில், நம்முடைய இலக்கு வாசகர்கள் யார் என்று தீர்மானித்து அதற்கேற்ப பத்திரிகையின் உள்ளடக்கத்தை வடிவமைக்க வேண்டியுள்ளது. </div><div align="justify"></div><div align="justify">இந்நிலையில் ஜனரஞ்சகமான பத்திரிகைக்குரிய அம்சங்களை இணைத்து சகல தரப்பினரையும் உள்வாங்குவதானது வெற்றி வாய்ந்த ஒரு நாளிதழுக்குரிய அடிப்படையாகத் திகழ்ந்தாலும், மிக இறுக்கமான மனப்போக்குடைய நம்முடைய உலமா பெருமக்களுக்கிடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகள், சர்ச்சைகள், மார்க்கம் சார்ந்த விடயங்களை ஒற்றைத் தன்மையோடு அணுகும் போக்கு என்பன மிகப் பெரும் தடைக்கற்களாக அமைந்துள்ளன எனலாம். உதாரணமாக, ஒரு பக்கக் கட்டுரை மூலம் விளக்கக்கூடிய ஓர் ஆழமான அரசியல் செய்தியை ஒரேயொரு அரசியல் கார்ட்டூன் மூலம் வெளிக்கொண்டு வந்துவிடலாம் என்ற நிலையில், உருவம் வரைவது கூடுமா கூடாதா என்ற சர்ச்சைக்குள்ளேயே தசாப்த காலமாய் அமிழ்ந்து கிடக்கும் அவல நிலை இன்னும் முற்றாக அகன்று விடவில்லை என்பதைக் குறிப்பிடலாம்.<br /><br /><strong><span style="color:#ff0000;">3. சில தீர்வு முன்மொழிவுகள்<br /></div></span></strong><div align="justify">நாம் தொடர்ந்து பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்றோம். அன்றாடம் எதிர்கொண்டு வருகின்ற சவால்களைப் பற்றி மணிக்கணக்காய் கலந்துரையாடுகின்றோம். நம்முடைய நிலைமை என்ன என்பதைத் தெளிவாக அறிவதற்கு அதெல்லாம் மிக அவசியம்தான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாதுதான். என்றாலும், நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு, அதாவது நாம் இதுவரை இனங்கண்டுள்ள பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டவாறு முழு முனைப்போடு நம்முடைய ஊடக இலக்கினை அடைவதற்கு என்னென்ன தயாரிப்புகளை செய்து வைத்துள்ளோம் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். எனவே இனி நாம் வெற்றிகரமான ஒரு செயற்திட்டத்தை (<span style="color:#009900;">Project</span>) முன்னெடுப்பதற்கான தீர்வு வழிவகைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்வது பொருத்தமானதே!<br /><br /><strong>3.1 நிதியீட்டலும், நிதியைப் பெருக்குதலும்<br /></strong>ஆழமறிந்து காலை வைத்தால் மூழ்கிச் சாகாமல் பிழைத்துக் கொள்ள முடியும் என்பது போல, அதிக மூலதனமொன்று தேவைப்படும் இந்த முயற்சியில் இறங்கும் நாம், அவசரப்பட்டு காரியமாற்றாது போதிய நிதியினைச் சேகரித்துக்கொள்வது மிக இன்றியமையாததாகும். இதற்கான முயற்சியில் ஒருசில வருடகாலமேனும் செலவிட்டு உரியளவு நிதியைச் சேகரிப்பதோடு, அதில் கணிசமானதொரு பகுதியை இலாபகரமான தொழிற்துறைகளில் முதலீடு செய்யவோ அல்லது நிரந்தர வருமானம் தரத்தக்க சொத்துக்களாக மாற்றவோ முனையலாம். இதனூடாகக் கையிருப்பில் போதிய நிதிவளத்துடன் நாளிதழ் முயற்சியில் இறங்கலாம். அது மட்டுமன்றி, பல்வேறு தொழிற்துறைகளில் முன்னணியிலுள்ள நம்முடைய வர்த்தகப் பெருமக்களை அணுகி, நம்முடைய பொதுநல நோக்கை விவரிப்பதன் மூலம் முன்கூட்டியே தொடர் விளம்பரங்களைப் பெறுவதற்கான கள வேலைகளில் ஈடுபடலாம். அவ்வாறே, சமூக நோக்குடைய இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் முதலானோரின் உதவியோடு நாட்டின் அனேக பகுதிகளில் தேவையான விற்பனை முகவர்களை ஏற்பாடு செய்துகொள்வதன் மூலமும், உரிய விளம்பரங்கள் பள்ளிவாசல் ஊடான பிரச்சாரம் என்பனவற்றின் மூலமும் தொய்வற்ற முறையில் பத்திரிகை விற்பனை நடைபெறுவதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ளும் முன்முயற்சிகளில் இறங்கலாம்.<br /><br /><strong>3.2 வளவாளர்கள் (<span style="color:#009900;">Resource Persons</span>) உருவாக்கம்<br /></strong>இந்தியாவின் தமிழ் பேசும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இன்று நம்மிடம் மணிச்சுடர் என்றொரு நாளிதழ் வெளிவந்துகொண்டு இருப்பது சற்றே ஆறுதல் தரும் விடயமே. எனின், இதனை இன்னும் சற்று ஜனரஞ்சகப்படுத்தி, ஒரு சக்தி வாய்ந்த செய்தி ஊடகமாக மெருகேற்றுவதற்கேற்ற முறையில் உரியவர்களிடம் கலந்தாலோசித்து உரிய பல நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் முனையலாம். அவ்வாறே, நமக்கான ஓர் அச்சுக்கூடமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் படிப்படியாக ஈடுபடலாம். ஊடக யுத்தத்தை எதிர்கொண்டு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நடுநிலைச் சமுதாயம் அல்லாஹ்வின் பெயரால் இந்த உலகில் நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் ஆனந்தத்தையும் நிலைநிறுத்தும் மகத்தான இப்பணியை நிறைவேற்றுமுகமாக ஸகாத் பணத்தில் ஃபீஸபீலில்லாஹ் என்ற அல்லாஹ்வின் பாதையில் முயற்சிப்போருக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ளலாம்.<br /><br />அது மட்டுமன்றி, நாளைய தலைமுறையினரில் நாம் கனவு காணும் ஒருங்கிணைந்ததும் சக்திவாய்ந்ததுமான தமிழ்-முஸ்லிம் நாளிதழுக்கான வளவாளர்களை உருவாக்கும் திட்டவரைபொன்றை ஏற்படுத்தலாம். இதை நிறைவேற்றுவது எப்படி?<br /><br />நமக்கென்று ஒரு நாளிதழை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நம்முடைய நிர்வாகக் குழுவினர் தாம் திரட்டுகின்ற நிதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பின்வரும் நடவடிக்கைகளின் பொருட்டும் ஒதுக்கலாம்:<br /><br /><strong>அ) இதழியல் பயிற்சிப் பாசறைகள், கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல்<br /></strong>இதழியல் (<span style="color:#009900;">Journalism</span>) துறையில் தமிழ் முஸ்லிம்கள் தேர்ச்சி பெறுதல் இன்றியமையாததாகும். எனவே, இதன் பொருட்டு இத்துறை சார்ந்த நிபுணர்களை உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ தருவித்து ஆர்வமும் திறமையும் உள்ள நம் இளைஞர் யுவதியருக்கான பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தலாம். இம்முயற்சியில் சமீப காலமாக '<span style="color:#ff0000;">மனிதநீதிப் பாசறை'யினர்</span> ஈடுபட்டு வருவதாக அறியக் கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய இம்முயற்சியின்போது தகுதி வாய்ந்த பிற சமயம் சார்ந்தவர்களின் உதவியையும் அறிவுத் திறனையும் மூலவளமாகப் (<span style="color:#009900;">resource</span>) பயன்படுத்திக் கொள்ளவும் நாம் தயங்கக் கூடாது. உதாரணமாக, ஹிந்து சமயத்தவரான ஒரு பேராசிரியர் மாஸ் மீடியா துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்று இனம் கண்டால், அவரை அழைத்து வந்து, அவருக்குரிய வசதிகளைச் செய்து கொடுத்து நம்முடைய கருத்தரங்கில் உரையாற்றவோ பயிற்சியளிக்கவோ சந்தர்ப்பம் வழங்கத் தயங்கவே தேவையில்லை. யார் இடித்தாலும் நெல் அரிசியானால் சரிதான் என்ற நாட்டார் பழமொழிக்கேற்ப, எங்கே வளம் இருந்தாலும் நம்முடைய தூய நோக்கத்துக்காக அதனை உரிய முறையில் பெற்றுப் பயன்படுத்தத் தவறக் கூடாது.<br /><br /><strong>ஆ</strong>).<strong>இதழியல்,வெப்டிசைனிங் முதலான துறைகளில் உயர்கல்விக்கு மாணவர்களை ஊக்குவித்தலும் பயிற்றுவித்தலும்</strong><br /><br />முதலில் இதழியல் முதலான துறைகளில் உயர்கல்வி வாய்ப்புள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்தல் இன்றியமையாததாகும். இதில், குறித்த பல்கலைக்கழகத்தின் தரம், பாடநெறிக்கான கால எல்லை, செலவு விபரம் முதலான அனைத்தும் அடங்கும்.<br /><br />அவ்வாறே, ப்ளஸ் டூ படிப்பில் மிகத் திறமையான பெறுபேறுகளைப் பெற்ற நமது மாணவர்களில் மேற்படி துறைகளில் உயர்கல்வியைத் தொடர ஆர்வமுள்ளவர்களை கேள்விக்கொத்து, நேர்முகப் பரீட்சை என்பன மூலம் 20-100 பேர் வரை தெரிவு செய்து, அவர்களின் உயர்கல்விக்கான புலமைப் பரிசில் (<span style="color:#009900;">scholarship</span>) வழங்கும் திட்டமொன்றை அமுல் நடாத்தலாம். இதற்கு முன், குறித்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் தனித் தனியே சந்தித்து முழுமையான விளக்கமளிப்பதோடு, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் 2-4 வருட காலத்துக்கு குறித்த சம்பளத்தில் நம்முடைய பத்திரிகைக்காகப் பணியாற்றுவது கட்டாயமானது, தவறும் பட்சத்தில் புலமைப் பரிசிலாகப் பெற்ற மொத்தத் தொகையோடு கால விரயத்துக்கான நட்ட ஈட்டுத்தொகையையும் சேர்த்து திருப்பிச் செலுத்துதல் வேண்டும் என்ற சட்ட ரீதியான ஒப்பந்தத்துக்கு அவர்களை உடன்படச் செய்தல் வேண்டும். நமது பத்திரிகைக்காக அவர்கள் பணியாற்றும் காலத்திலேயே ஒருவரின் கீழ் பத்து தன்னார்வத் தொண்டர்களைக் குறித்த துறையில் பயிற்றுவிக்கும் பொறுப்பும் வழங்கப்படுதல் வேண்டும். இந்தச் சங்கிலித் தொடர் மூலம் நாம் நம்முடைய நாளிதழுக்கான தகுதியும் நிபுணத்துவமும் வாய்ந்த வளவாளர்களை உருவாக்கவும், இன்று இருப்பதை விட நாளை நம்முடைய நாளிதழ் மேலும் சக்தி வாய்ந்ததாக, மெருகு கூடியதாக, பரவலானதாக வளரவும் வழியமைக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. அவ்வாறே, இன்றைய நாளிதழை நடத்தும் நாம் நாளை கண் மூடிவிட்டால் நாம் தொடக்கி வைத்த அந்த முயற்சி மண் மூடிப் போகாமல் முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பரம்பரையையும் உருவாக்கியவர்களாவோம். இதன் மூலம் அல்லாஹ்விடத்தில் நிரந்தர நன்மைக்குப் பாத்தியதை பெற்றவர்களாகவும் நாம் மாறிவிடுகின்றோம் அல்லவா?<br /><br /><strong>இ) முஸ்லிம் ஊடகவியலாளரை ஒருங்கிணைத்தல்<br /></strong>ஊடகத்துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பின் கீழ் இயங்கச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இலங்கையில் உள்ள "<strong>முஸ்லிம் மீடியா ஃபோரம்</strong>" (<span style="color:#009900;">Muslim Media Forum</span>) இத்தகைய முயற்சியின் விளைவால் தோற்றுவிக்கப்பட்டதே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்பினூடே ஊடகவியலாளரின் நலன்கள், உரிமைகள் பேணப்படுவது, அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது என்பன தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பரஸ்பரம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.<br /></div><div align="justify"><strong><span style="color:#ff0000;">முடிவுரை<br /></span></strong>அற்பமான விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இடைவிடாத சர்ச்சைகளுக்குள்ளேயே அமிழ்ந்து போய் நூற்றாண்டு கால பின்னடைவுக்குள் சிக்கித் தவிக்கும் பரிதாபகரமான நிலையில் ஆழ்ந்திருக்கும், தனக்குரிய சுய அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கும் நம்முடைய சமுதாயம் வீறு கொண்டு எழுந்து மாண்டு போன சரித்திரக் கீர்த்தியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு முதற்படியாக நமக்கென்று ஒரு சக்தி வாய்ந்த நாளிதழ் என்று தொடங்கி, வானொலி, தொலைக்காட்சி என்று படிப்படியாக முன்னேற வேண்டியுள்ளது.<br /><br />செயற்கைக் கோள் எனும் செட்டலைட் வரை விண்ணோக்கி உயர்ந்து நம்முடைய முஸ்லிம் நாடுகளை அங்குலம் அங்குலமாக உளவு பார்க்கும் நவீன தொழினுட்பத்தின் உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள், இஸ்லாத்தின் எதிரிகள். ஆனால், உலகுக்கே வாழும் வழிமுறை வகுத்துக் கொடுத்த ஓர் ஒப்பற்ற மார்க்கத்துக்குச் சொந்தக்காரர்களாகிய நாமோ இன்னும் கார்ட்டூன் வரைவது கூடுமா, கூடாதா என்றும், புகைப்படம் எடுப்பது ஹலாலா, ஹராமா என்றும் வாத விவாதங்களில் மூழ்கிக் கிடக்கின்றோம். இத்தகைய கடும் இறுக்கமான ஒற்றைத் தன்மையோடு மட்டுமே சிந்திக்கத் தெரிந்த நம்முடைய இந்தத் தலைமுறை உலமா பெருமக்களை வெறுமனே பதிலுக்கு விமர்சித்துக் கொண்டிருப்பதைக் கைவிட்டு, புதுயுகம் படைக்கும் உத்வேகத்தோடும், அல்லாஹ்வின் மார்க்கத்தை அகிலத்தில் மேலோங்கச் செய்வதற்குரிய எல்லா வியூகங்களையும் அமைத்துப் போராடத்தக்க தணியாத தாகத்தோடும் விவேகமும் தியாக சிந்தையும் கடும் உழைப்பும் தளராத மனோதிடமும் கொண்ட நவயுக முஸ்லிம் இளைஞர் அணியொன்று முன்வரவேண்டும்.<br /><br />அவர்கள் இன்று செய்கின்ற, செய்யப் போகின்ற இடையறாத இப்பணியின் பயனாய் நாளைய நம் சமுதாயமாவது புதிய விடியல் காணட்டும்! காண வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நிறைவு செய்கின்றேன். அருளாளன் அல்லாஹ் நம் அனைவரின் எண்ணங்களையும் பணிகளையும் பொருந்திக்கொள்வானாக!<br /><br /><strong><span style="color:#ff0000;">உசாத்துணைகள்</span></strong>:<br />Hugh Miles, (2005) Al-Jezeera: How Arab TV news Challenged the World, Brettenham House: London.<br /><a href="http://en.wikipedia.org/wiki/Mass_media">http://en.wikipedia.org/wiki/Mass_media</a><br /><a href="http://en.wikipedia.org/wiki/Mass_media">http://en.wikipedia.org/wiki/Mass_media</a><br /><a href="http://dharulathar.com/">http://dharulathar.com/</a><br /><a href="http://tamilnirubar.org/">http://tamilnirubar.org/</a><br /><a href="http://www.tamililquran.com/filesearch.asp?R1=V1&search_term=Fjpiu&B2=NjLf">http://www.tamililquran.com/filesearch.asp?R1=V1&search_term=Fjpiu&B2=NjLf</a><br /><br /><strong><span style="color:#ff0000;">அன்புடன்,<br /></span></strong>இஸ்லாமிய சகோதரி, </div><div align="justify"><br /><span style="color:#009900;"><strong>லறீனா அப்துல் ஹக்</strong></span>.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-34550572268474667672011-02-01T22:37:00.002+04:002011-02-02T08:53:11.053+04:00எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாகட்டும்<div align="justify">எகிப்து ஒரு மக்கள் புரட்சியின் அருகாமையில் உள்ளது. 30 ஆண்டுகளாக தொடரும் அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டுள்ளனர். <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 526px; DISPLAY: block; HEIGHT: 286px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5568792660928385426" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs1fxj091DDWlJI9a90oWxakWtSm_HC4iFfIht1kPMLgfqsaFlxKEkgVMHfG6i79fS61yNXJpKJRTjCGypDyxmuikkNUc7NuzFMA17TAwoipJsc2Dam9wvlDJdScFM9YsQT2-QmWUA62s/s400/fazaeli-fatemeh20110201072203327.jpg" />தலைநகரான கெய்ரோவில் மட்டுமின்றி எகிப்தின் பல நகரங்களிலும் முபாரக்கின் ராஜினாமாவைக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கிவிட்டனர்.<br /><br />ராணுவத்தை களமிறக்கிய போதும் அவர்கள் மக்களுடன் இணைகின்றார்கள் என செய்திகள் வெளிவருகின்றன. ஊரடங்கு உத்தரவு பலனற்று போனது. ஆளுங்கட்சியின் தலைமையகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.<br /><br />போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த அல்பராதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இணையதளம் முடக்கப்பட்டது. அல்ஜஸீராவுக்கு தடை விதித்த பொழுதும் தொடர்ந்து செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.<br /><br />பல செப்படி வித்தைகளும் பயனற்று போனதால் நகைச்சுவையான நடவடிக்கையொன்றை மேற்கொண்டார் முபாரக். அது வேறொன்றுமில்லை, ரகசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரும், இஸ்ரேலுடனான கடத்தல் தொழிலுக்கு இடைத் தரகராகவும் செயல்பட்டுவந்த வயது முதிர்ந்த உமர் சுலைமானை துணை அதிபராக நியமித்ததுதான்.<br /><br />இரண்டு மாதங்களுக்கு முன்பு முறைகேடுகள் நிறைந்த தேர்தலை நடத்தி மீண்டும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அதிபராக எழுந்தருளினார் முபாரக். அவருடைய 'மக்கள் ஆதரவை!' உலகம் தற்பொழுது கண்டுக்கொண்டிருக்கிறது.<br /><br />கெய்ரோவின் கட்டுப்பாடு முபாரக்கின் கைகளிலிருந்து நழுவிவிட்டது.<br /><br />1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியுடன் தற்போதைய எகிப்திய மக்கள் திரள் போராட்டத்தை அரசியல் நோக்கர்கள் ஒப்பிடுகின்றனர்.<br /><br />1989-இல் ருமேனிய புரட்சியின் ஒரு பகுதியாக ரெவலூஷன் சதுக்கத்தில் திரண்ட மக்கள் கூட்டத்திற்கு உதாரணமாக கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம் காட்டப்படுகிறது.<br /><br />வரலாறு மீண்டும் ஒருமுறை சர்வாதிகாரத்தை பழிவாங்க துவங்கிவிட்டது. 1981 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது ஹுஸ்னி செய்யத் முபாரக் அதி விரைவாக மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்றுவிட்டார். இதர சர்வாதிகாரிகளைப் போலவே முபாரக், மக்களின் விருப்பங்களை அடக்கி ஒடுக்கி, தேர்தல்களில் முறைகேடுகளை நடத்தி, ஊழலை வழக்கமாக்கி எகிப்தை சுரண்டி சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருந்தார்.<br /><br />ஏகாதிபாத்திய நாடுகளுடனும், சர்வாதிகார அரசுகளுடனும் இணைந்துகொண்டு பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டார்.<br /><br />ஈரானின் ஷா, ருமேனியாவின் செஷஸ்க்யுவாவைப்போல் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சியில் தொடரலாம் என கருதிய முபாரக்கின் ஆட்சிக்கு மக்கள் புரட்சியின் வடிவில் உருவான ஆபத்து அவரை ஆதரித்த அந்நிய சக்திகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு மத்தியில் அரபு நாடுகளிலேயே இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற பதவியை ஹுஸ்னி முபாரக்கின் எகிப்திய அரசு தக்கவைத்துக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் 130 கோடி டாலரை அமெரிக்கா எகிப்திற்கு உதவித் தொகையாக வழங்கிவருகிறது.<br /><br />இஸ்ரேலுக்கு அடுத்து அமெரிக்கா வழங்கும் அதிக உதவித் தொகையைப் பெறுவது எகிப்தாகும். ஆனால், இந்த உதவித் தொகைகள் அனைத்தும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது என்பது மற்றொரு உண்மையாகும்.<br /><br />அடக்குமுறையையும், மக்கள் விரோதத்தையும் வழக்கமாகக் கொண்ட முபாரக் சில தினங்களுக்கு முன்பாக எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் உருவாகும் வரை அமெரிக்காவின் உற்றத் தோழனாகவே இருந்தார். கடுமையான மனித உரிமை மீறல்கள், கொடிய சித்திரவதைகள், அடக்குமுறைகள் இவையெல்லாம் நிகழும்பொழுது முபாரக்கை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஆதரித்தே வந்தனர்.<br /><br />எகிப்தில் நடைபெற்றுவரும் மக்கள் திரள் போராட்டத்தின் முன்னணியிலிருப்பது இளைஞர்களாவர். எகிப்தின் எதிர்காலம் அவர்களின் கைகளில் செல்லும் வேளையில் அங்கு மக்கள் விரும்பும் அரசியல் வெற்றியை சந்திக்கும்.<br /><br />முபாரக்கினால் தடைச் செய்யப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் இந்த மக்கள் திரள் போராட்டத்திற்கு பின்னணியிலிருந்து ஆதரவை தெரிவித்து வருகிறது என செய்திகள் கூறுகின்றன.<br /><br />முபாரக்கினால் சிறையிலடைக்கப்பட்டுள்ள இஃவான்களின் தலைவர்களும், உறுப்பினர்களும் இந்த மக்கள் திரள் போராட்டத்தினால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அல்பராதியின் தலைமையில் புதிய அரசு உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், அல்பராதி அமெரிக்க ஆதரவாளராக மாறிவிடுவாரோ என்றதொரு சந்தேகமும் எழுந்துள்ளது.<br /><br />எகிப்து நாட்டு மக்கள் சர்வாதிகாரத்திற்கெதிராக தங்களை அர்ப்பணித்து நடத்தும் போராட்டம் வீணாகிவிடாமல் கவனமாக இருப்பார்கள் என நம்புவோம். இனி முபாரக்கிற்கு எகிப்தில் இடமிருக்காது. கேவலமடைந்த குற்றவாளியாக முத்திரைக் குத்தப்பட்டு முபாரக் களத்தை விட்டு வெளியேறும் வேளையில் உலகில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக் கொண்டு ஆட்டம்போடும் சர்வாதிகாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையவேண்டும்.<br /><br />ஜனநாயக நாடுகள் என்ற முகவரியில் இன்று உலகில் அறியப்படும் பெரும்பாலான நாடுகளுக்கு எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாக அமையவேண்டும். எந்த தேசம் ஊழல்களிலும், முறைகேடுகளிலும் திளைக்கின்றதோ அந்த தேசம் மனித உரிமைகளையும், மக்களின் குடியுரிமைகளையும் அடக்கி ஒடுக்கி பின்னர் குற்றவாளி தேசமாக பரிணமிக்கும்.<br /><br />இன்று உலகின் பல ஜனநாயக முகமூடியை அணிந்துள்ள நாடுகளின் நிலைமையும் இதுதான். மக்களின் விருப்பங்களை விட ஏகாதிபத்திய சக்திகளுக்கும், கார்ப்பரேட் சக்திகளுக்கும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தியவர் முபாரக். ஏராளமான மக்கள் நல ஆர்வலர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கினார். விசாரணையில்லாமலேயே பல ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர் பலர். நிரபராதிகளான மக்களை விசாரணை இல்லாமலேயே பல ஆண்டுகள் சிறையிலடைத்தவர். கறுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து தனக்கு பிடிக்காதவர்களை ஒழித்துவிட அவர் நினைத்தார்.இவையெல்லாம் சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆளும் நாடுகளில் மட்டுமல்ல, ஜனநாயக முகமூடியை அணிந்துக்கொண்டு ஆட்சி நடைபெறும் நாடுகளிலும் நாம் காண இயலும்.<br /><br />இது சற்று குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கலாம். எகிப்து மக்கள் புரட்சியை கவனத்தில்கொண்டு இந்நாடுகள் தங்களின் செயல்பாடுகளை மீளாய்வுச் செய்யவேண்டும். இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்கூட மனித உரிமை மீறல்களும், அப்பாவிகளை அநியாயமாக சிறையில் அடைப்பதும், ஏகாதிபத்திய அழிவு சக்திகள், கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும் நடந்துவருகிறதா? என்பதை பரிசோதனைக்கு உட்படுத்த ஆட்சியாளர்கள் தயாராகவேண்டும்.<br /><br />உதாரணமாக கூறவேண்டுமெனில், சமீபத்தில் ட்ரான்ஸ்ப்ரன்சி இண்டர்நேசனல் வெளியிட்ட பரிசுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்தது 3.3 மதிப்பெண்கள். எகிப்திற்கு கிடைத்த மதிப்பெண் 3.1 ஆகும்.இதனை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.<br /><br />மக்களை அந்நியர்களாக மாற்றிவிட்டு ஆட்சியில் நீண்டகாலம் தொடரலாம் என எவரும் கனவு காணவேண்டாம் என்பதைத்தான் எகிப்தின் மக்கள் புரட்சி நமக்கு உணர்த்துகிறது.<br /><br />சுய பரிசோதனைக்கு உட்படுத்தி தவறுகளை திருத்துவதற்கு ஆட்சியாளர்கள் தயாராகுவார்களா? </div><br /><div align="right">A.S.A </div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-4729775558764243812010-10-05T22:44:00.003+04:002010-10-05T22:49:13.054+04:00வரலாற்றை நிராகரிக்கும் தீர்ப்பு<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP7JQ9B2RUvd1kRtX7VErzem1xlTxz8cp9avopGMbYaKVmEZB_4kNlTkbe3DqTgmlu0MOChTcD5EHBKVbRRHr0lIA3ZI7Vm5teJX7T8XQfJD6jblI-7lh0EB4NLaiDktQpzNy2DUMV8E8A/s1600/RomilaThaparjune2.jpg"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 230px; FLOAT: left; HEIGHT: 246px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5524635550466547298" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP7JQ9B2RUvd1kRtX7VErzem1xlTxz8cp9avopGMbYaKVmEZB_4kNlTkbe3DqTgmlu0MOChTcD5EHBKVbRRHr0lIA3ZI7Vm5teJX7T8XQfJD6jblI-7lh0EB4NLaiDktQpzNy2DUMV8E8A/s400/RomilaThaparjune2.jpg" /></a><strong><u>கட்டுரையாளர்:பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்</u></strong><br />அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.<br /><br />நிலத்தின் உரிமை யாருக்கு? என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன்.<br /><br />சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.<br /><br />ஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.<br /><br />நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.<br /><br />ஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியா?<br /><br />அதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.<br /><br />நீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.<br /><br />இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.<br /><br />இவ்விஷயங்கள் அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.<br /><br />இன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.<br /><br />கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.<br /><br />ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.<br /><br />பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் என தோன்றுகிறது.<br /><br />நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும். தமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.<br /><br />இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்?<br /><br />வழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.<br /><br />வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.<br /><br />இன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.<br /><br />ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.<br /><br />நன்றி:<span style="color:#ff0000;">தி ஹிந்து, தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-70357115589319325262010-08-06T16:58:00.003+04:002010-08-06T17:05:37.268+04:00சிவப்பு மதமும், சில அரசியல் புலம்பல்களும்<div align="justify">(மனித உரிமை ஆர்வலரான டாக்டர் எம்.எஸ்.ஜெயப்பிரகாஷ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcAiVF_6h-tiLnlgTxkOX-pDo3LMTdWvNiUoqslBBDWTGStWtgrUA2OTpeW01JzM7UjlddVo-h1gKi8nQi2fUXzSe6rOmqm7uY-lWVDFJ8XfpLKQka-1unfPu_PTbWVmqSzUieH5Ak-CSQ/s1600/Communism.png"><img id="BLOGGER_PHOTO_ID_5502282112690946514" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 222px; CURSOR: hand; HEIGHT: 174px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcAiVF_6h-tiLnlgTxkOX-pDo3LMTdWvNiUoqslBBDWTGStWtgrUA2OTpeW01JzM7UjlddVo-h1gKi8nQi2fUXzSe6rOmqm7uY-lWVDFJ8XfpLKQka-1unfPu_PTbWVmqSzUieH5Ak-CSQ/s400/Communism.png" border="0" /></a>கம்யூனிசத்தை சிவப்பு மதம் என்ற புத்தகத்தை எழுதி மார்க்சிஸம் ஒரு கொள்கையல்ல என்பதை காலம் கடந்தாலும் கூட அதனை புரிந்து கொண்டுள்ளார், கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் பிரிவான சி.ஐ.டி.யு வில் 33 ஆண்டுகாலம் பணியாற்றிய பி.கேசவன் நாயர் என்பவர்.<br /></div><p align="justify">Beyond Red என்ற புத்தகத்தில் கம்யூனிஸ்ட் மதம் மனிதனை மயக்கி அழிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது காரல் மார்க்ஸ் வாழ்ந்திருந்த காலத்திலேயே கண்டறிந்த ஒன்றாகும். என்னவெனினும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு இதனை காணாமல்போனது இப்புத்தகம் மற்றும் அதனை எழுதியவருக்கும் அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.<br /><br />கம்யூனிஸ மதத்தை ஸ்தாபித்து இந்தியாவை கம்யூனிச நாடாக்க முயல்பவரகளல்லவா? இங்குள்ள கம்யூனிஸ்ட்கள். கடந்த அறுபது வருட காலம் அதற்காக முயன்றும் அவர்களால் அதற்கு இயலவில்லை. மூன்று மாநிலங்களில் மட்டுமே உள்ள கம்யூனிஸ்ட்களின் மதச்சபையிலிருந்து அதன் பக்தர்கள் பலரும் வெளியேறிக் கொண்டுள்ளார்கள்.<br /><br />சிவப்பு மதத்தை கை கழுகக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காலக்கட்டத்தில்தான் 20 வருடங்களில் கேரள மாநிலத்தை முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் முயல்வதாக கேரள கம்யூனிச முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அறிக்கை வெளியிடுகிறார்.<br /><br />கம்யூனிஸ்ட் மதம் தோல்வியடைந்துவிட்டது, மனிதனை மயக்கும் மதம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார் வி.எஸ்.அச்சுதானந்தன். மதம் அடக்கி ஒடுக்கப்படுபவனின் பெருமூச்சாகும் என்றுக்கூறிய மார்க்ஸை அச்சுதானந்தனுக்கு தெரியாது போலும். இவர்கள்தான் இப்பொழுது ஹிந்துராஷ்ட்ர வாதத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் மத சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறியை கிளறிவிடுகிறார்கள்.<br /><br />இன்றைய பாகிஸ்தானும், பங்க்ளாதேஷும் இந்தியாவின் ஒரு பகுதியாக அல்லவா இருந்தது. அவைகள் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்தபொழுதுதானே அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இத்தகையதொரு மக்கள் கூட்டத்தை இஸ்லாத்தின் பால் ஈர்த்த காரணிகள் என்ன? கம்யூனிச மேலங்கி அணிந்து புரட்சி நாடகத்துடன் வந்த மேல்ஜாதி-தல்லார்-அதிகார வர்க்கத்தின் பரம்பரையில் வந்தவர்கள் தான் அடிமைத்தனத்தில் ஊறிப்போன ஒரு சமூகத்தை ‘நீங்கள் எங்களை முஸ்லிமாக்கினீர்கள்’ என்று கூறவைத்தார்கள்.<br /><br />டாக்டர்.அம்பேத்கர் கூறும் உண்மையும் இதுதான். "கம்யூனிஸ்ட் கட்சி டாங்கேயை போன்ற சில பிராமண இளைஞர்களின் கைகளில் உள்ளது. மராட்டியர்களையும், அட்டவணைப்படுத்த ஜாதியினரையும் வசப்படுத்த அவர்கள் முயல்கிறார்கள். ஆனால் அவர்களால், மஹாராஷ்ட்ராவில் முன்னேற இயலவில்லை. ஏனெனில் அவர்கள் பிராமண இளைஞர்களாவர். அவர்களின் கரங்களில் கம்யூனிசத்தை ஒப்படைத்த ரஷ்யக்காரர்கள் ஒரு மாபெரும் தவறை செய்துள்ளார்கள்." (அம்பேத்கரின் எழுத்துக்கள், வால்யூம் 17, பாகம் 1, பக்கம் 423-424)<br /><br />இந்தியாவின் மேற்கு பாகத்தை துண்டாடியவர்கள், கிழக்கு பாகத்தை வெட்டியெறிந்தது ஏன்? இந்த இரண்டு நாடுகளிலும் வாழும் குடிமக்களைக் கொண்ட இந்தியா பிளவுபடாமலிருந்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வலு இந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கும். அதனால்தான், முஸ்லிம்களுக்கு அதிகாரத்தில் பங்கு கேட்ட ஜின்னாவை தேசத்துரோகிகள் என்றார்கள், இந்தியாவை துண்டாடினார்கள். (தற்பொழுது ஜின்னா மீண்டும் தேசப்பற்றாளராக மாறியிருக்கிறார்).<br /><br />பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் வாழ்ந்து வருபவர்கள்தான் இங்குள்ள முஸ்லிம்கள். அவர்கள் பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களை ஒடுக்கிவிட்டு இஸ்லாமிய தேசத்தை நிறுவுவார்கள் என்பது வரலாற்றில் அறிவுள்ளவர்களுக்கு நம்ப இயலாத ஒன்றாகும். இந்தியாவை மீண்டும் துண்டாடி அவர்களை ஒதுக்கித்தள்ளிவிடலாம் என்ற கனவு பலிக்காது.<br /><br />இந்தியா புத்த நாடாகயிருந்தது. உலகத்தில் முதன்முதலில் கட்டமைப்புடன் கூடிய மதமாகவும் புத்தமதம் மாறியது. ஆசியாவுக்கு மட்டுமல்ல, புத்தர் உலகத்திற்கே வெளிச்சமாகயிருந்தார். பின்னர் வந்த கிறிஸ்தவமும், இஸ்லாமும் உலக முழுமைக்கும் ஒளியையும், விடுதலையையும் பெற்றுத்தந்த மதங்களாக மாறின.<br /><br />இந்தியாவில் புத்தமதத்தை தகர்த்தவர்கள் இன்றைய வர்ணாசிரம சக்திகளின் மூதாதையர்களாவர். அவர்கள் இன்றும் பாசிசம் என்ற நஞ்சை ஊட்டி வருகின்றார்கள். ராமாயாணத்தில் அவர்கள் புத்தரை திருடன் என்று அழைக்கின்றார்கள். இத்தகைய புத்தர் அவமதிப்பின் தொடர்ச்சியாகத்தான் இறைத்தூதரை அவமதிப்பதும் தொடர்கிறது.<br /><br />டாக்டர்.அம்பேத்கர் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டார். அத்தகையதொரு புத்தமத நாடாக இந்தியா மாறவேண்டும் என்பது புத்த மதத்தவர்களின் விருப்பமாகும். புத்தமதத்தை தகர்த்து அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு விடுதலையை சாத்தியமாக்கியது இஸ்லாமும், கிறிஸ்தவமும். அதனால்தான் இந்த மதங்கள் இந்தியாவில் பாசிஸ்டுகளின் மிரட்டலை சந்திக்கின்றன.<br /><br />எந்த மதத்தையும் நம்பிக்கைக்கொள்ளவும், எந்த மதத்தையும் பிரச்சாரம் செய்யவும் அரசியல் சட்டம் சுதந்திரம் வழங்குகிறது. அந்த அர்த்தத்தில் இந்தியா இஸ்லாமிய நாடும், கிறிஸ்தவ நாடும், புத்தநாடுமாகும். இதுதான் இந்தியாவை மதசார்பற்ற நாடாக மாற்றுகிறது.<br /><br />மதமாற்றத் தடைச்சட்டம் யாருடைய கோரிக்கை? சிவப்பு மத அரசியல்(கம்யூனிஸ்ட்) தடைக்கு முயன்றவர்கள் யார்? தோழர்களை சுட்டுக்கொன்று சிவப்பு மதத்தை பார்சல் செய்ய உத்தரவிட்டது யார்?அவர்கள் தான் இந்தியாவில் மத சிறுபான்மையினரை, இந்நாட்டின் குடிமகன்களை வேட்டையாடி வருகின்றனர்.<br /><br />ஜமாஅத்தே இஸ்லாமிக்கெதிராக குற்றச்சாட்டு எழுந்தபொழுதும், பி.டி.பிக்கெதிராக வாள் உயர்த்தப்படும் பொழுதும், தற்பொழுது பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக செயல்படும் பொழுதும் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான். இவர்களில் ஒருவர் மற்றவரை மதத் தீவிரவாதிகளாக்கி தங்களை மதசார்பற்றவர்களா காட்டிக்கொள்ள முயல்வது அபத்தமாகும். கண்டனத்திற்குரியதாகும். வரலாறு தரும் பாடங்களுக்கு எதிரானதாகும்.<br /><br />கம்யூனிசம் என்ற சிவப்பு மதம் இந்தியாவில் இடமில்லை என்ற உண்மையை சாட்டர்ஜிகள் வெளிப்படையாகவே கூறிவிட்டார்கள். கம்யூனிஸம் இந்தியாவிற்கு 'irrelevant'(பொருத்தமற்றது) என்று 40 ஆண்டுகாலம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேவைப்புரிந்த சோம்நாத் சாட்டர்ஜி கூறுகிறார். சாட்டர்ஜிக்கு கட்சி ‘irrelevant' ஆனபொழுது கேரளாவில் கட்சிக்கு வி.எஸ்.அச்சுதானந்தன் 'irrelevant' ஆக மாறியுள்ளார்.<br /><br />1930 களில் ஒத்துழையாமை இயக்கம் நடந்துக்கொண்டிருந்த வேளையில் உருவான கிறிஸ்தவ-முஸ்லிம்-ஈழவர்(தாழ்த்தப்பட்டவர்கள்) ஐக்கிய முன்னணியை தகர்ப்பதற்கு கோயில் பிரவேசம் என்ற ஆயுதத்தை உபயோகித்தார்கள். அதே ஆயுதத்தை இன்று கம்யூனிஸ்டுகள் உபயோகிப்பது கண்டனத்திற்குரியதாகும்.<br /><br />ஒத்துழையாமை இயக்கத்தின் நாயகனாக கருதப்பட்ட சி.கேசவனை(எஸ்.என்.டி.பி என்ற அமைப்பின் பொதுச்செயலாளர்) சிறையிலடைத்த சித்திரைத் திருநாள் என்ற ஆட்சியாளர் அவரை தேசத்துரோகி என்ற முத்திரையை குத்தினர். ஈழவர் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மதமாற்றத்திற்கு தயாரானார்கள்.<br /><br />சி.வி.குஞ்சுராமன் என்பவர் மாராமன் என்ற இடத்தில் நடந்த கன்வென்சனில் பங்கேற்று திருவிதாங்கூரில் எட்டுலட்சம் ஈழவர் என்றழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவப்போவதாக பிரகனம் செய்தார். திருவிதாங்கூர் கிறிஸ்தவ நாடாகப்போகிறது என்றா அந்த பிரகடனத்தின் பொருள்? இன்றைய வி.எஸ்.அச்சுதானந்தனின் மதவெறியை கிளப்பிவிடும் அறிக்கையின் அன்றைய நகல்களை வாசிப்பது தோழர்களுக்கு நன்று.<br /><br />அன்று கிறிஸ்தவர்களை பயந்தவர்கள் இன்று, முஸ்லிம்களை பார்த்து பயப்படுவது சுவராசியமான காட்சியாகும். இன்னொரு பிரிவு ஈழவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகம் எழுதி இஸ்லாத்தின் மகத்துவத்தை புகழ்ந்தனர். பத்திரிகை அதிபர் கெ.சுகுமாரன்,எ.கெ.பாஸ்கர், கெ.பி.தய்யல், சகோதரன் அய்யப்பன், பி.கே.குஞ்சுராமன் ஆகியோர் இஸ்லாத்தை மெச்சினர். புத்தமதத்தையும், சீக்கிய மதத்தையும் ஈழவர்கள் பரிசீலித்தனர்.<br /><br />சீக்கிய அகாலிகள் பேட்டை என்ற ஊரில் வைத்து ஈழவத் தலைவர்களை சந்தித்தனர். பழமைவாதிகள் நடுங்கிப்போயினர். இப்பொழுது அந்த நடுக்கம் சி.பி.எம்மில் காணலாம்.<br /><br />இந்தப் பிரச்சனையை அதாவது மதமாற்றத்தை புறந்தள்ள 1936 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி கோயில் பிரவேசனத்தை விளம்பரம் செய்தனர். ஐக்கிய முன்னணியில் அங்கங்களாகவிருந்த முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சொந்தத் தலைவரான சி.கேசவனையும் புறக்கணித்துவிட்டு ஈழவர்கள் ஓடிச்சென்று கோயிலில் நுழைந்தனர். ஈழவ-கிறிஸ்தவ-முஸ்லிம் ஐக்கியமும் தகர்ந்தது, அத்துடன் ஒத்துழையாமை போராட்டமும் ஸ்தம்பித்தது. இத்தகைய வர்ணாசிரம தந்திரத்தைத்தான் இப்பொழுது சி.பி.எம் தலைமை கையாள்கிறது. அச்சுதானந்தன் அதன் கருவியாக மாறியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் டெல்லி சுல்தான்கள் கூறியதை வாயால் மொழிந்துள்ளார் அச்சுதானந்தன். பதிலடி வாங்க வி.எஸ்.அச்சுதானந்தனும், மதவெறியின் மணத்தை நுகர இதரத் தலைவர்களும், இதுதான் இன்று நாம் காணும் காட்சி.<br /><br />20 வருடத்தில் கேரளாவை இஸ்லாமிய நாடாக மாற்று முயல்வதாக அல்லவா வி.எஸ்.அச்சுதானந்தனின் வர்க சித்தாந்தம் கூறுகிறது. அவ்வாறெனில், 750 வருடங்கள் டெல்லியை ஆண்டது முஸ்லிம்களான சுல்தான்களும், முகலாயர்களுமல்லவா?. அவர்கள் ஒருமாதத்திற்கு ஓராயிரம் 'லவ் ஜிஹாதை' நடத்தியிருந்தால் இந்தியாவை 750 ஆண்டுகளில் பரிபூரண இஸ்லாமிய நாடாக மாற்றியிருக்கலாமே? அன்று அவ்வாறு நடைபெறாததால்தான் இன்று கம்யூனிச தோழர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டெல்லி சென்று இத்தகையதொரு மதவெறி அறிக்கையை வெளியிட முடிந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.<br /><br />நன்றி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></p>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-91655978277267889362010-06-26T10:40:00.007+04:002010-06-26T12:13:32.671+04:00சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்<div align="justify"><img id="BLOGGER_PHOTO_ID_5486972984510669282" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 237px; CURSOR: hand; HEIGHT: 270px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYJwphLFjrmk9AdgKpceDVN1CWGrqlsOhn2dRgQ_3-m6a-u-nghSvS76vjqjZR8L0KjTYSnoiL4wpSvpBI-YNhb690fZnhc779ZdiBhS-HIDh-kfplt_KYAtDa_1mRBdKSfmft9Tzrh79g/s400/stock-vector-june-international-day-in-support-of-victims-of-torture-33801103.jpg" border="0" /> கடையநல்லூர் மசூத் முதல் குவாண்டனாமோ யாஸர் அல் ஸஹ்ரானி வரை சித்திரவதைகளின் கொடூரங்கள். </div><div align="justify"><br />விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்திலும் அதி உச்சத்திலிருக்கும் காலக்கட்டத்தில் நாம் வசித்து வருகிறோம். மனித உரிமைகள் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் மிக அதிகமாகவே பேசி வருகிறோம். ஆனால் நாகரீகமடைந்த சில மனித மனங்கள் மிருகங்களை விட மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது என்பதற்கு நாம் வாழும் உலகிலேயே பல நிதர்சனங்களை சந்தித்து வருகிறோம்.</div><div align="justify"><br /></div><div align="justify">ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகவும், தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகவும் கிளம்பியவர்கள் மனித குலத்திற்கு எதிரியாக திகழ்ந்துவரும் அவல நிலையும் தொடர்கிறது. </div><div align="justify"><br /></div><div align="justify">மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பது சில சமூகவியலாளர்களின் கருத்து. ஆனால் தனது இனத்தைச் சார்ந்தவர்களையே காட்டுமிராண்டித்தனமாக கொடுமைப்படுத்தி அல்லலுக்கு ஆளாக்கும் விநோதம் மனிதர்களிடையே மட்டுமே நாம் காண இயலும்.</div><div align="justify"><br /></div><div align="justify">நாகரீகமும், விஞ்ஞானமும் வளர வளர மனிதர்களை வதைச்செய்யும் உத்திகளும் நவீனமடைந்து வரும் அவலநிலையும் தொடர்கிறது. </div><div align="justify"><br /></div><div align="justify">சித்திரவதைகளின் கொடூர முகம் அடிக்கடி வெளிப்பட்டாலும் கூட பெரும்பான்மையான மனித சமூகம் இதனை மெளனமாக அங்கீகரித்து வருவதுதான் மிக துரதிர்ஷ்டவசமான நிலையாகும்.</div><div align="justify"><br /></div><div align="justify">இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் நாள் உலகெங்கிலும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோர்களுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் International Day in Support of Torture Victims அதாவது சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.</div><div align="justify"><br /></div><div align="justify">1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இதன் மூலம் உலகில் விடுதலை, நீதி மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.</div><div align="justify"><br /></div><div align="justify">ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் 200க்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டோருக்காக செயல்பட்டு வருகின்றன.</div><div align="justify"></div><div align="justify">ஆண்டுதோறும் சித்திரவதை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இதற்கெதிராக போராட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடத்தி வந்தாலும் கூட சித்திரவதையின் கொடூரங்கள் குறைந்தபாடில்லை.</div><div align="justify"><br /></div><div align="justify">நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வாய்ந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அரசுகள் கூட இத்தகைய மனித இனத்திற்கெதிரான கொடூரச் செயல்களை மேற்கொண்டு வருவது வெட்ககேடானதாகும்.</div><div align="justify"> </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியாவில் கூட மனிதர்களை சித்தரவதைக்கு ஆளாக்கும் ரகசிய சித்திரவதைக் கூடங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுவதாக கடந்த ஆண்டு ‘தி வீக்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJNdV94dW47TtluOboNQexRYSm_2YrZq814dZ5uNeq00W-6FrlmRdM6Uyd0qY7aeHEKZJl8EnyQDVYcyXFb87jcipqYORV4aQS8YZlHrD1_8bz3AQVWWUCrGYmqBc3nOfF7cTSkhntHxCX/s1600/TortureAbu-Ghraib.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5486979485665212354" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 334px; CURSOR: hand; HEIGHT: 275px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJNdV94dW47TtluOboNQexRYSm_2YrZq814dZ5uNeq00W-6FrlmRdM6Uyd0qY7aeHEKZJl8EnyQDVYcyXFb87jcipqYORV4aQS8YZlHrD1_8bz3AQVWWUCrGYmqBc3nOfF7cTSkhntHxCX/s400/TortureAbu-Ghraib.jpg" border="0" /></a></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">குவாண்டனாமோ, அபுகரீப், பக்ராம் ஆகிய சித்திரவதைக் கூடங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முஸ்லிம் விரோதத்தையும், மனித இனத்திற்கெதிரான கொடூரங்களை யெல்லாம் பறைசாற்றுபவைகளாகும்.</div><div align="justify"><br /></div><div align="justify">சி.ஐ.ஏவின் தண்ணீரில் மூழ்கடித்து சித்திரவதைச் செய்தல் போன்ற கொடூர உத்திகள் உலக முழுவதும் பிரபலமானவையாகும்.</div><div align="justify"><br /></div><div align="justify"><span style="color:#ff0000;">சித்திரவதை என்றால் என்ன?</span></div><div align="justify"><br /></div><div align="justify">ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கெதிரான தீர்மானத்தில் சித்திரவதைக் குறித்து கீழ்க்கண்டவாறு வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளது:<br />”உடலால், உள்ளத்தால் நோவினையும், வேதனையும் திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது” என்பதாகும்.</div><div align="justify"> </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">உலக வரலாற்றின் இருண்ட காலக்கட்டங்களிலும், மத்தியகால அடிமை முறையின் கீழும் சில மதங்களின் ஆதிக்கக் காலக்கட்டத்திலும் சித்திரவதைகள் நிகழ்ந்துள்ளதாக வரலாறு பதிவுச் செய்கிறது.</div><div align="justify"><br /></div><div align="justify">ரோமர்களின் சித்திரவதையின் கொடூரமுகம் அவர்களின் வரலாற்றை பயில்வோரை பீதிவயப்படுத்துவதாகும். அமெரிக்காவை வெள்ளையர்கள் ஆக்கிரமித்த பொழுது அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களை கொடூரமாக சித்திரவதைச் செய்து படுகொலைச் செய்த வரலாறு அமெரிக்காவின் இரத்தம் தொய்ந்த முகத்தை நம் முன்னால் கொண்டுவருகிறது.</div><div align="justify"><br /></div><div align="justify">சித்திரவதைகள் சாதாரண குடும்ப உறவுகளில் துவங்கி அரசாங்கம் வரை தொடரும் அவலத்தை நாம் கண்டுவருகிறோம். </div><div align="justify"><br /></div><div align="justify">நவீன காலத்தில் சித்திரவதையின் நோக்கங்களாக செய்த குற்றத்தை அல்லது செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்தல், தேவைப்படும் தகவல் ஒன்றைப் பெறுதல் அல்லது தமக்கு சாதகமான தகவலையறிய தூண்டுதல். கைது செய்யப்பட்டவரைப் பழிவாங்குதல், தேடப்படுகின்ற ஒருவரின் குடும்பத்தினரை அல்லது நண்பர்களைத் துன்புறுத்துவதற் கூடாகத் தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல் அல்லது சரணடைய வைத்தல், தனது கொள்கைகளை முன்வைத்தல்,ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை காழ்ப்புணர்வின் காரணமாகவும், மதவெறியின் காரணமாகவும் துன்புறுத்தி இன்னலுக்குள்ளாக்குவது எனப் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களைக் கொண்டதாக உள்ளன. எனவே நோக்கங்களை வகைப்படுத்துவதென்பது இங்கு கடினமானதாகும்.</div><div align="justify"><br /></div><div align="justify">ஒரு குற்றம் தொடர்பாக கைதுச் செய்யப்படும் நபரிடம் தகவல்களை பெறுவதற்கு மாற்றுவழிகள் உள்ள பொழுதும் கூட மனிதர்களை உள, உடல்ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கும் முறைகளை கையாள்வது மனிதர்களின் கொடூர மனோநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.</div><div align="justify"><br /></div><div align="justify">சாட்சி ஒருவரை சித்திரவதைக்குள்ளாக்கி அவர் உண்மையை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக அவரது உள்ளத்தையும், உடலையை அழித்துவிட சில அரசு அதிகாரவர்க்கம் முயலும் அநாகரீகமும் தொடரத்தான் செய்கிறது.</div><div align="justify"><br /></div><div align="justify">அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் இவர்களுக்கெதிராக சித்திரவதைகளை மேற்கொண்டு அவர்களை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலவீனப்படுத்தப்படுத்த அரசு, அதிகார வர்க்கங்கள் முயல்கின்றன.</div><div align="justify"> </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி உலகின் ஆறில் ஐந்து பங்கு நாடுகளில் அரசு ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்று வருகின்றன என்கிறது. </div><div align="justify"> </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">உலகம்முழுவதும் அகதிகளாகி உள்ளவர்களில் 10 இல் இருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. </div><div align="justify"><br /></div><div align="justify">சித்திரவதையானது இராணுவம், போலீஸ், உளவுத்துறை, அதிகாரவர்க்கம் மற்றும் முதலாளித்துவவாதிகளின் அடியாட்கள் மூலம் நிகழ்த்தப்பட்டு வருகிறது.</div><div align="justify"><br /></div><div align="justify">இந்நிலையில் நமது நாட்டின் உச்சநீதிமன்றம் உண்மை வெளிக்கொணரும் சோதனை என்றபெயரில் நடத்தப்படும் நார்கோடிக் அனாலிசிஸ், ப்ரெயின் மேப்பிங் முறைகளை தடைச்செய்துள்ளது பாராட்டிற்குரியது.</div><div align="justify"><br /></div><div align="justify">சித்திரவதை என்பது பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. அவை:</div><div align="justify">1.தாறுமாறான தாக்குதல்</div><div align="justify">2.திட்டமிட்ட தாக்குதல்</div><div align="justify">3.மின்சாரச் சித்திரவதை</div><div align="justify">4.மூச்சுத் திணறவைத்தல்</div><div align="justify">5.எரிகாயங்களை ஏற்படுத்துதல்</div><div align="justify">6.கட்டித் தொங்கவிடுதல்</div><div align="justify">7.உடற்பாகங்களை பிடுங்குதல்</div><div align="justify">8.பாலியல் ரீதியான சித்திரவதைகள்</div><div align="justify">9.உளவியல் ரீதியான சித்திரவதைகள்<br />10.அதீதமான பயமுறுத்தல்கள்</div><div align="justify">11.மத சின்னங்களையும், கலாச்சாரங்களையும் அவமானப்படுத்துதல்<br />என ஏராளமான முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. </div><div align="justify"><br />Frederic Forsythe என்பவர் 'Fist of God' என்ற நூலில் பல்வேறு வகையான சித்திரவதை முறைகளை விவரிக்கிறார்.</div><div align="justify"><br /></div><div align="justify">இவ்வாறு சித்திரவதைகளை அனுபவிப்போர் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை வெளிக்கொணர்ந்தால் தங்களது தூய பிம்பம் (image) பாதிப்பிற்குள்ளாகும் எனக்கருதி பல அரசுகளும் அதிகார வர்க்கங்களும் சித்திரவதைக்குள்ளானோரை பயமுறுத்தி, தாங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லை என வாக்குமூலம் அளித்து அவர்களின் கையொப்பமிட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்குகின்றன. </div><div align="justify"><br />சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவளிக்கும் நாள் என்ற அடிப்படையில் சித்திரவதைக் கொடூரத்திற்கு ஆளானோரின், சித்திரவதையின் கொடூரத்தால் உயிர் துறந்தவர்களுடைய் குடும்பத்தினரின் அவல நிலைக்குறித்து நமது பார்வையை செலுத்துவது அவசியமானதாகும். </div><div align="justify"><br /> </div><div align="justify">சித்திரவதைகளின் விளைவுகள் உடனடியாகவோ அல்லது நீண்ட காலத்திற்கு பிறகோ வெளிப்படுபவையாகவோ இருக்கலாம்.சில நிரந்தர விளைவுகளாகவும் மாறும். உடல் உறுப்புகள் சேதம், இனப்பெருக்க ஆற்றல் அழிவு போன்றவை நிரந்தர விளைவுகளாகும். இதய நோய், சுவாசகோளாறு, சிறுநீரக பாதிப்பு, எலும்பு முறிவுகள், மூட்டு நோய், வயிற்றுத் தொடர்பான நோய்கள் இவைகளும் சித்திரவதைக்கு ஆளானோரை பாதிப்பிற்குள்ளாக்குகின்றன.</div><div align="justify"><br /></div><div align="justify">நினைவாற்றல் பாதிப்பு, தூக்கமின்மை, தலைவலி போன்றவை பொதுவான நோய்களாக இவர்களை தாக்குகின்றன. மனோரீதியான பாதிப்புக்குள்ளாகும் இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை பிறரிடம் வெளிப்படுத்துவதற்குகூட இயலாதவர்களாக மாறும் பரிதாபகர சூழல்.</div><div align="justify"> </div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உஸாமாவை பிடிக்கப் போகிறோம் என்று கூறி அநியாயமாக போர்தொடுத்த பொழுது அந்த நிகழ்வுகளை சேகரிக்கச் சென்ற அல்ஜஸீரா தொலைக்காட்சியின் நிருபரை அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் கைது செய்து குவாண்டனாமோ சிறைக்கொட்டகையில் அடைத்தது. </div><div align="justify"><br />தான் நிரபராதி என்றும், தன்னை விடுதலைச் செய்யுமாறும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பின்னர் விடுதலைச் செய்யப்படுகிறார்.<br />திடகாத்திரமாக செய்தி சேகரிக்கச் சென்ற சூடான் நாட்டைச் சார்ந்த அந்த செய்தியாளர் விடுதலையாகும் பொழுது வயதான தோற்றம் கொண்டவராக பல்வேறு நோய்களை பரிசாகப் பெற்று தனது வீடு திரும்பும் அவலநிலையை ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் மூலம் நாம் அறிந்திருப்போம். </div><div align="justify"><br />டாக்டர் ஆஃபியா சித்தீகி, பாகிஸ்தான் கராச்சியில் பிறந்தவர். வயது 37. வேலை நியூரோ சயிண்டிஸ்ட். குர்ஆன் முழுமையாக மனப்பாடம் செய்தவர். இஸ்லாமிய மார்க்க அறிஞர். 2003 மார்ச் மாதம் கராச்சியிலிருந்து குழந்தைகளுடன் அமெரிக்க ராணுவம் கடத்திச் சென்றது. </div><div align="justify"><br />அமெரிக்க ராணுவ வீரனை கொல்ல முயன்றதாகவும், தாக்குதலுக்கு முன்னரே திட்டமிட்டதாகவும்,இதர குற்றங்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.<br /></div><div align="justify">அல்காயிதாவுடன் தொடர் எனக் குற்றஞ்சாட்டி பாகிஸ்தான் அரசின் துணையுடன் கைது செய்யப்பட்டார்.ஆண்களுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் மனோநிலை பாதித்த நிலை. மூத்த மகன் அஹ்மத் ஆப்கானிஸ்தானில் சிறையிலுள்ளார் என தகவல். இதர பிள்ளைகளைக் குறித்து எந்த தகவலுமில்லை. இவ்வாறு பெண்கள் கூட இத்தகைய அரச பயங்கரவாதிகளால் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். </div><div align="justify"><br />கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி அமெரிக்காவின் கொடூரத்தின் சின்னமாக திகழும் குவாண்டனாமோ சிறையில் வைத்து யெமன் நாட்டைச் சார்ந்த ஸலாஹ் அஹ்மத் அல் ஸலமி(வயது 37), சவூதி அரேபியாவைச் சார்ந்த மனி ஷமான் அல் உதைபி(வயது 30), யாஸர் தலால் அல் ஸஹ்ரானி (வயது 17) ஆகியோர் தற்கொலைச் செய்துக் கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். </div><div align="justify"><br />ஆனால் இவர்களின் சக கைதியாக இருந்து விடுதலையான பிரிட்டனைச் சார்ந்த தாரிக் டெர்கோல் தெரிவிக்கையில், அவர்களிருவரும் அழகான சகோதரர்கள் என்றும்,குர்ஆனை அழகான இனிமையான குரலில் ஓதுபவர்கள், ஈமானில் உறுதியானவர்கள் அவர்கள் நிச்சயமாக தற்கொலைச் செய்ய வாய்ப்பே இல்லை. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக அவர்கள் ஒத்துழையாமை மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டதன் தண்டனைதான் இந்த மரணம். என்கிறார். </div><div align="justify"><br />உமர் திகய்யிஸ், லிபியாவைச் சார்ந்த இவர் ஆப்கானிஸ்தானில் வைத்து அமெரிக்காவால் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டவர். பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட திகய்யிஸ் தனது சிறையில் நடந்த சித்திரவதை அனுபவத்தை விவரிக்கும் பொழுது குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைப் பாருங்கள்: </div><div align="justify"> </div><div align="justify">"சிறையில் எங்களை வெறும் அரைக்கால் ட்ரவுஸருடன் தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்ட பொழுது அதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இதனால் கோபமடைந்த சிறை அதிகாரிகள் போராட்டத்திற்கு தலைமைத் தாங்கினேன் எனக்கூறி என்னை சிறை அறையில் கைகளை பின்னுக்கு கட்டிவிட்டு முழங்காலிட வைத்தனர்.<br /></div><div align="justify">இந்நிலையில் ஒரு அதிகாரி என்னருகில் வந்தார். நான் அவரை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென அவரது இரண்டு விரல்களை எனது இரு கண்களிலும் செலுத்தினார். எனக்கு இரு கண்களிலும் அதீத குளிர்பாய்ந்த உணர்வு. இரத்தம் இரு கண்களிலும் பீறிட்டது. கடும் வேதனைக்குள்ளானேன். அருகிலிருந்த மேலதிகாரி எனது கண்களை குத்திய அதிகாரியிடம் இன்னும் ஆழமாக குத்தியிருக்கலாமே என கண்டிப்புடன் கூறினார்.<br /></div><div align="justify"></div><div align="justify"> </div><div align="justify">எனது வேதனையைக் கண்டு அவர்கள் சந்தோஷமடையக் கூடாது என்பதற்காக நான் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டேன். எனது இரு கண்களில் ஒரு கண் மட்டுமே சிகிட்சையின் மூலம் சரியானது. ஒரு கண்ணின் பார்வை பறிபோனது."<br /></div><div align="justify">மேலே கூறப்பட்டவையெல்லாம் சித்திரவதைகளின் ஒரு சிறிய பகுதிகளே. இன்னும் வெளிவந்த வெளியே வராத எத்தனையோ சம்பவங்களும் கொடூரங்களும் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கு வர்ணிக்க இயலாது.<br /></div><div align="justify"></div><div align="justify"> </div><div align="justify">இந்தியாவில் வெடிக்குண்டு வழக்குகளில் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களும், மாவோயிஸ்டுகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களும் சிறையில் படும் அவஸ்தைகள் ஏராளம்.<br /></div><div align="justify">அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் எனத் தெளிவான பின்னரும் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் அலைக்கழிக்கப் படுகின்றனர் முஸ்லிம் இளைஞர்கள்.<br /></div><div align="justify"></div><div align="justify"> </div><div align="justify">கஷ்மீரில் தீவிரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆளும் வர்க்கத்தினரால சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளம். காணமல் போன கஷ்மீரிகள் ஆயிரக்கணக்கில். அவர்களின் குடும்பங்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.<br /></div><div align="justify">தமிழகத்தின் தென்மாவட்டமான திருநெல்வேலியில் கடையநல்லூரைச் சார்ந்தவர் மசூத் அலி. கடந்த 2005 ஆம் ஆண்டு இவர்களது நண்பர் ஒருவருக்கு சுமோ கார் ஒன்றை பயணத்திற்கு ஏற்பாடு செய்துக் கொடுக்கிறார்.மறுநாள் இவரது நண்பர் சுமோ காரை திருடிச் சென்றுவிட்டதாகவும்,தொழிலதிபர் ஒருவரின் பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்ததாகவும், அதற்கு மசூதும் உடந்தை எனக்கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆரால்வாய்மொழி நிலைய போலீஸ் மசூதை கைதுச் செய்கிறது. அவரது மனைவி அசனம்மாளையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுதலைச் செய்கின்றனர்.<br /></div><div align="justify"> </div><div align="justify">கைதுச் செய்யப்பட்ட மசூதை கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டுசென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூறி தலைக்கீழாக தொங்கவிட்டு கடுமையாக சித்திரவதைச் செய்துள்ளனர். சித்திரவதை அதிகரித்த பொழுது ஒருக்கட்டத்தில் மசூதின் உயிர் பிரிகிறது. பின்னர் இவரது கொலையை மறைத்த போலீசார், மசூதின் நண்பர்களாக கருதப்படும் கல்யாணியையும், கிருஷ்ண மூர்த்தியையும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மசூத் தப்பிவிட்டதாக பொய் கூறியுள்ளனர்.<br />போலீசாரின் இந்த பொய்யை நம்பாத மசூதின் மனைவி அசனம்மாள் தமிழக முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் புகார் அனுப்பியதுடன், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் (ஆள்க்கொணர் மனு) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.<br /></div><div align="justify">மசூது காணாமல் போய்விட்டார் எனக்கூறி முதல் தகவல் அறிக்கையை பதிவை நீதிமன்றத்தில் கடையல்நல்லூர் இன்ஸ்பெக்டர் பி.கே.ரவி தாக்கல் செய்யவே உயர்நீதிமன்ற விசாரணை அத்துடன் முடிவடைந்தது.<br /></div><div align="justify"></div><div align="justify"> </div><div align="justify">ஆனால் தலைமைச் செயலாளர் அசனம்மாள் அனுப்பிய புகாரின் அடிப்படையில் மசூத் என்ன ஆனார்? என விளக்கம் கேட்டு கடையல்நல்லூர் இன்ஸ்பெக்டருக்கு கடிதம் அனுப்ப அவர் இன்னொரு முதல் தகவல் அறிக்கையை தென்காசி ஆர்.டி.ஓக்கு அனுப்பி விட்டு அதனை தலைமைச் செயலாளருக்கு தெரியப்படுத்துகிறார்.<br /></div><div align="justify">இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு முதல் தகவல் அறிக்கையின் குற்ற எண்களும் ஒன்றாகும். (குற்ற எண் 391/2006).<br /></div><div align="justify"></div><div align="justify"> </div><div align="justify">இவ்வழக்குத் தொடர்பாக அசனம்மாள் NCHRO என்ற மனித உரிமை அமைப்பை அணுகினார். NCHRO அமைப்பும் இவ்வழக்கை கையிலெடுத்து கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகின்றது. NCHRO வின் கடும் முயற்சியின் காரணமாக மசூதின் காவல்நிலைய மரணம் தொடர்பாக 10 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 12 போலீஸ் அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் தென்காசி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.<br /></div><div align="justify">ஆனால் குற்றப்பத்திரிகை குற்றவாளிகளுக்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டதாக கூறி இதனடிப்படையில் வழக்கை நடத்தினால் குற்றவாளிகள் தப்பிவிடலாம் எனக்கூறி அசனம்மாள் NCHRO மூலமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததையடுத்து நீதிமன்றமும் குற்றப்பத்திரிகைக்கு தடை விதித்துள்ளது. </div><div align="justify"><br />இதில் பரிதாபகரம் என்னவெனில் மசூத் கொல்லப்பட்டு 5 வருடங்கள் ஆகியும் இதுவரை அவரது சடலம் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதுதான். NCHRO தனது நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.<br /></div><div align="justify"> </div><div align="justify">இவ்வாறு ஆளும் வர்க்கம், அதிகாரவர்க்கம், ஏகாதிபத்தியம் போன்றவர்களால் மனித இனம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இன்னல்களை சந்தித்து வரும் வேளைகளில் ஆண்டிற்கொருமுறை மட்டும் இத்தினத்தை நினைவுக் கூறுவதுடன் நிறுத்திவிடாமல் சித்திரவதைக்குள்ளானோர் குறித்து தினந்தோறும் நாம் சிந்தித்து அவர்களது விடுதலைக்காகவும், மறு வாழ்வுக்காகவும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அத்தோடு சித்திரவதைக்கெதிரான நீதியை வேண்டிய போராட்டம் தொடரவேண்டும். </div><div align="justify"><br />இங்கு நமக்கு பிரபஞ்சத்தின் இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் கூறிய ஒருக்கூற்றை இங்கு நினைவுக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ”அநீதத்திற்குள்ளானவனின் பிரார்த்தனையை பயந்து கொள்! ஏனெனில் அதற்கும், அல்லாஹ்விற்கும் இடையில் யாதொரு திரையும் இல்லை” <span style="color:#ff0000;">(நூல்:புஹாரி, முஸ்லிம்).</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-6820358623518232142010-06-10T14:26:00.005+04:002010-06-10T18:10:31.419+04:00தினமணியின் கோணல் கொண்ட பார்வை!!<div align="justify">இஸ்லாத்தின் மீதான வெறுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு, முஸ்லிம்களை கருவறுப்பதைத் தன் பிரதான லட்சியமாக கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ ஃபாஸிஸத்துக்கு அரசியல், அதிகார, பொருளாதார, சட்ட, சமூக பின்புலம் உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இன்று நாட்டில் அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகியுள்ள விஷயமே.<br /><br />எந்த ஒரு மதத்தையோ,இனத்தையோ சாராமல் மதச்சார்பற்ற கொள்கையில் தனித்துவத்துடன் இயங்கும் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு சீர் குலைந்து விடாமல் தாங்கி நிற்பதில் ஆறாவது தூணாக ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த ஊடகத்துறையையும் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகள் விட்டு வைக்காமல், அதனுள் மிக ஆழமாக ஊடுருவியுள்ளனர் என்பதும் நாட்டு மக்கள் அறிந்த விஷயம் தான்.<br /><br />அரசியல், சமூகம், பொருளாதாரம், அதிகாரம், கல்வி என அனைத்து விஷயங்களிலும் மிக மோசமான அளவில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகம், இன்றைய உலகின் அதிக சக்தி வாய்ந்த ஆயுதமான ஊடகத்துறையில் ஒரு சாண் அளவுக்குக் கூட அடி எடுத்து வைக்காதது பரிதாபமான விஷயமே!<br /><br />முஸ்லிம்களை அடியோடு அழிப்பதற்காக அனைத்து வகைகளிலும் சூழ்ச்சி செய்து இயங்கி வரும் இந்துத்துவ பாசிசத்திற்கு, பார்ப்பனீய அடித்தளம் கொண்டப் பல ஊடகங்கள் கருத்தாக்க அடிப்படையில் மிக பலமான உதவியினைச் செய்து வருகின்றன. அதில், தமிழகத்தில் தினமலர் நாளிதழ் முதலிடம் வகிக்கிறது. ஆனால், தினமலர் நாளிதழின் வஞ்சக எழுத்தைப் புரிந்து கொண்டுள்ள அளவுக்கு, நடுநிலை வேடம் போட்டுத் திரியும் மற்று சில ஊடகங்களை முஸ்லிம்கள் இதுவரை சரிவர புரிந்து கொள்ளாதது ஆச்சரியகரமானது!<br /><br />நேரடியான எதிரியை விட,நடுநிலை வேடம் அணிந்து உள்ளேயே சுதந்திரமாக உலாவரும் துரோகி தான் அதிக அபாயம் நிறைந்தவன் என்பதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மிகச் சரியாக முதுகில் குத்தி எழுந்திருக்கவே விடமால் முதுகெலும்பையே முறித்து விடும் அளவுக்கு மோசமானவன் என்பதையும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />குஜராத்,கோவை போன்ற இடங்களில் இரத்தவெறி பிடித்தவர்கள் நடத்திய இன அழிப்பு கலவரங்களின் போது, சமையலறை வரை சகஜமாக புழங்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்த பக்கத்து வீட்டு இந்து பாசிச வெறியர்கள் முஸ்லிம் சமூக பெண்களைக் கடித்துக் குதறிய சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்துக்குச் சரியான பாடத்தை ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும்.<br /><br />அந்த வகையில்,தரமான, நடுநிலை ஊடகம் என்ற பெயரை முஸ்லிம்கள் மத்தியிலேயே பெற்றுள்ள, பார்ப்பனீய அடித்தளம் கொண்ட தினமணியின் வஞ்சகத்தையும் அதன் பயங்கரவாத எழுத்துக்களையும் முஸ்லிம்கள் கவனமாக ஆராய வேண்டிய காலம் கனிந்து விட்டது.<br /><br />இன்று தமிழகத்தில் மற்றெல்லா சமூகங்களை விட, முஸ்லிம் சமூகத்திலேயே சமூக மேம்பாட்டுக்காக உழைப்பதற்காக பல அமைப்புகள் உருவாகியுள்ளன. ஆனால், அத்தகைய அமைப்புகளில் கூட, ஒரு பக்க பேட்டி, ரம்ஜான் மலர் போன்ற தினமணியின் குள்ளநரித்தனத்துக்கு மயங்கி நிற்கும் நிலையே மிகைத்து காணப்படுகிறது.<br /><br />பார்ப்பனீயத்தின் குடுமியை எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும் அதனை இனம் கண்டு கொள்வதில் இன்று பகுத்தறிவுவாதிகளே முன்னிலையில் உள்ளனர்.<br /><br />இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முசுலிம்கள் ஆழமாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்; "எல்லா பார்ப்பனீயர்களும் பயங்கரவாதிகள் அல்ல; ஆனால், எல்லா பயங்கரவாதிகளும் பார்ப்பனீயத்தால் நீரூற்றி, உரமிட்டு வளர்க்கப்படுபவர்களே!".<br /><br />இனி விஷயத்துக்கு வருவோம்.<br /><br />முஸ்லிம்களை அழித்தொழிக்க நீண்டகால திட்டத்துடன் செயல்படும் இந்துத்துவ பாசிசத்தின் சதித் திட்டங்களில், 'தீவிரவாதி' என்று கேட்டாலே அது முஸ்லிம்கள் தான் என்றொரு கருத்தாக்கம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட வேண்டும்" என்பது முக்கியமான ஒன்று.<br /><br />இந்தச் சதி திட்டத்தின் பல்வேறு முகங்கள் தான், 'மாலேகோன், தென்காசி, ஹைதராபாத், அஜ்மீர், கோவா' போன்ற, இன்று உண்மை வெளியாகியுள்ள, ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களும் இன்னும் உண்மைகள் வெளிவராத எண்ணற்ற பல பயங்கரவாத செயல்களும் ஆகும்.<br /><br />நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்பு பயங்கரவாதங்களின் பின்னணியில், நிழலுலகில் இயங்கி வரும் 'இந்துத்துவ ஃபாஸிஸ பயங்கரவாத அரசாங்கம்' தான் செயல்படுகிறது என்பது இன்று கிட்டத்தட்ட வெட்ட வெளிச்சமாகி விட்ட சூழலிலும் கூட, நடுநிலை ஊடக வேடமிட்டு திரியும் தினமணி, தன் ஊடக பயங்கரவாதத்தை இந்த நிழலுலக இந்துத்துவ பயங்கரவாத கூட்டத்துக்குச் சாதகமாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பயன்படுத்தி வருவதிலிருந்து, தினமணியிடம் வேரூன்றி போயுள்ள பார்ப்பனீய பயங்கரவாத முஸ்லிம் எதிர்ப்பு வெறியின் அளவினைப் புரிந்து கொள்ள இயலும்.<br /><br />வரலாற்று நினைவுச் சின்னமான பாபரி மஸ்ஜித், இந்துத்துவ பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னர், கடந்த 20 ஆண்டு காலத்தில் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியினையும் அதில் ஈடுபட்ட சக்திகளையும் ஆராய்ந்து பார்த்தால்,இந்துத்துவ பாசிசத்தின் அதிகார, இரத்தவெறி அவற்றினுள் அடங்கியிருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.<br /><br />பாசிச பயங்கரவாதத்துக்குப் பலி கொடுக்கப்பட்ட கர்கரே என்ற வீரர் ஒருவர் இல்லாமல் போயிருந்தால், இன்று கூட ஒருவேளை இந்துத்துவ பாசிசத்தின் பயங்கரவாத முகம் மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கும். ஆனால் நாட்டில் இன்று நிலைமை அப்படியல்ல. குண்டுவெடிப்பு பயங்கரவாதங்களின் பின்னணியிலும் திட்டமிட்ட கலவரங்களின் பின்னணியிலும் இந்துத்துவ பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்கள் பரவியிருப்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.<br /><br />இருப்பினும்,இந்துத்துவ வெறிக்குத் தூபம் போடும் வகையில் அதன் சித்தாந்தத்தையும் முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் இந்துத்துவ ஊதுகுழலாக மாறி அவ்வபோது தினமணி வெளிப்படுத்தி வருகிறது.<br /><br />அதன் சமீபத்திய உதாரணங்களில் ஒன்றைப் பார்ப்போம்:<br /><br /><a href="http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=246651&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=துபையில்%20இருந்து%20மங்களூர்%20வந்த%20தீவிரவாதி%20கைது">"துபையில் இருந்து மங்களூர் வந்த தீவிரவாதி கைது"<img id="BLOGGER_PHOTO_ID_5481103659054910178" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 282px; CURSOR: hand; HEIGHT: 290px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQmPQvtS0ZI9UA8qKiR7Tv546vcM7AiIElYl3NKf1h9GYrci4Ov5yMeZaZfXhc9OK1REheyj6nfCbergedKCSBchrqwmaWxCr8P1cX5fz_Ws3pq_KE6e9yg_EvU8pPo1di_PgPvKz5V1TY/s400/New+Picture+(1).png" border="0" /></a><br />இது கடந்த மே மாதம் 25 ஆம் தேதி தினமணியில் வந்த ஒரு செய்தியின் தலைப்பு.<br /><br />தலைப்பை பார்த்த உடன், "அரபு நாடான துபையிலிருந்து மங்களூருக்கு வந்த ஒரு தீவிரவாதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்" என்று தினமணி கூற வருவதாக புரிந்து கொள்ள முடியும்.<br /><br />செய்தியின் உள்ளடக்கம், "புனேயிலுள்ள ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில், தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என காவல்துறை சந்தேகிக்கும் அப்துல் சமத் பத்கல் என்பவரை, அவர் துபையிலிருந்து மங்களூர் வந்த போது விமானநிலையத்தில் கைது செய்தனர்" என்பது தான்.<br /><br />இதில் என்ன தவறு உள்ளது? குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி என காவல்துறை சந்தேப்படுபவர்களைத் தீவிரவாதி என்று கூறாமல் அப்பாவி என்றா கூறுவது? என கேள்வி எழுப்புபவர்கள், சற்று பொறுமையுடன் தொடர்ந்து படியுங்கள்.<br /><br />கடந்த 20 ஆண்டு காலமாக நாட்டில் அதிகமாக குண்டுகள் வெடிப்பதும் குண்டுவெடிப்பு சப்தம் அடங்குவதற்குள்ளேயே அது ஏதாவது ஒரு முஸ்லிம் பெயர் கொண்ட அமைப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு, "முசுலிம் தீவிரவாதிகளின் பயங்கரவாதம்" என ஊடகங்களில் தலைப்பு செய்தியாவதும் சர்வசாதாரணமாக நடந்து வரும் சம்பவம் தான். ஆனால், அவற்றின் பின்னால் இந்துத்துவத்தின் பயங்கரவாத முகம் இருந்துள்ள உண்மை வெளியான பின், முன்பு அவ்வழக்குகளில் ஜோடிக்கப்பட்டு தீவிரவாதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவி முசுலிம்களின் பரிதாபகரமான நிலையினைக் குறித்து ஒரு வரி கூட அந்த ஊடகங்கள் எழுதாததும் கவனிக்க வேண்டும்.<br /><br />நாட்டில் நடக்கும் பயங்கரவாதங்களின் பின்னணியில் காவல்துறை யாரையாவது கைது செய்யும் போது, அவர் மீதான குற்றம் தெளிவிக்கப்படும் வரை அவரைக் குற்றவாளியாக கருத முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டமே அவ்வாறு கூறும் போது, குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்படும் முஸ்லிம்களை மட்டும் அடுத்த நொடியே "தீவிரவாதியாக" பத்திரிக்கைகள் தீர்ப்பு எழுதி விடுவது எவ்வகையான பயங்கரவாதம் என்பதை சட்டம் தான் சொல்லித் தர வேண்டும்.<br /><br />அஜ்மீர் குண்டுவெடிப்பு முதல், மாலேகான் குண்டுவெடிப்பு வரை அவை நடந்து முடிந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் அவற்றில் தொடர்புபடுத்தப்பட்டு,அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தனர்.<br /><br />ஆனால் அவற்றின் பின்னணியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் தான் செயல்பட்டிருந்தனர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி விட்ட நிலையில், முன்னர் தீவிரவாதியாக்கப்பட்டிருந்த அந்த அப்பாவி முஸ்லிம்களின் கதியினைக் குறித்து யாராவது சிந்தித்ததுண்டா?<br /><br />அதே போன்ற சூழல்,இன்று ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள இந்த அப்துஸ்ஸமத் பத்கலுக்கும் ஏற்படலாம். நாளையே இவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டால், இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் குறித்து தீய கருத்தாக்கத்தை உருவாக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள பாசிச தினமணி, என்ன பரிகாரம் செய்யும்?<br /><br />ஊடக தர்மத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் கேலி செய்யும் வகையில் இவ்வகையில் செய்தி வெளியிட்டுள்ள இந்தத் தினமணி, அதே சமயம் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள மற்ற சில குண்டுவெடிப்பு செய்திகளை எவ்வாறு வெளியிட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டாமா? கீழே படியுங்கள்!<br /><br /><a href="http://www.dinamani.com/edition/rtistory.aspx?SectionName=Latest%20News&artid=141358&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">கோவா குண்டுவெடிப்பு: இருவர் கைது</a><br /><a href="http://www.dinamani.com/edition/rtistory.aspx?SectionName=Latest%20News&artid=141358&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81"><img id="BLOGGER_PHOTO_ID_5481116225933084402" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 270px; CURSOR: hand; HEIGHT: 224px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg76si1AeN9bQZaNHO87VWrV58qA0OhK-Op3zNoEqfTowrfyv4PcUSH2G1eXgn1goeTvDfr83_e5njsaP4uatmX9-9QUErwM7lqEjI0i-UuzXQKqWJqTzFG3yvMby759acHm-kwUmv55_I-/s400/New+Picture+(2).png" border="0" /></a>2009 அக்டோபர் 16 அன்று கோவாவில் இருவர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தினமணி வெளியிட்டுள்ள செய்தி தலைப்பு இது. செய்தியின் உள்ளடக்கத்தில், "சனாதன் சவுன்ஸ்தா என்னும் அமைப்பைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்" என்று தினமணி கூறுகிறது.<br /><br />"சனாதன் சன்ஸ்தா" என்ற இந்துத்துவ அமைப்பினைச் சேர்ந்தவர்களைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்தால்,அது தினமணிக்குச் சாதாரணமான "இருவர் கைது" விஷயமாகிறது.<br />இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, கடந்த மே 9 அன்று தினமணி கீழ்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.<br /><br /><a href="http://www.dinamani.com/edition/edustory.aspx?&SectionName=India&artid=239598&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%2017-%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">கோவா குண்டுவெடிப்பு: 17-ல் குற்றப்பத்திரிகை தாக்கல்</a> <a href="http://www.dinamani.com/edition/edustory.aspx?&SectionName=India&artid=239598&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%2017-%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D"><img id="BLOGGER_PHOTO_ID_5481103654952659122" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 239px; CURSOR: hand; HEIGHT: 268px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqnz6mHAjAL_4wCrE1O3SRmir_CdSH_q238AYI1FiaKkB_O8dcQQJ2WNCyAp43MKgovlZL-2-jNNDNoXDYrHdWTfn83NPCAaVubUt1YUCS_GVmm2hYA_xy1Z7gIQexN-fAX8z3aCYybWpl/s400/New+Picture+(3).png" border="0" /></a><br />இதன் உள்ளடக்கத்தில், "இந்த வழக்கு தொடர்பாக தனஞ்செய் அஷ்டேக்கர், திலீப் மங்கோனர், வினாயக் பாட்டீல், வினய் தலேக்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 180 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் வினாயக் பாட்டீல், வினய் தலேக்கர் ஆகியோருக்கு வாஸ்கோவிலுள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது" என்று கூறுகிறது.<br /><br />அத்துடன்,"இந்த வழக்கில் சனதான் சன்ஸ்தா என்ற அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்" என்றும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இவ்வழக்கில் "குற்றம் சாட்டப்பட்டவர்கள்" என்று, தெளிவாக அவர்கள் மீது அப்பாவி தோற்றத்தை ஏற்படுத்தி இந்துத்துவ பயங்கரவாதிகளுக்குச் சார்பாக ஊதுகிறது.<br /><br />அதே போன்று, அஜ்மீர் தர்காவில் 2007 ஆம் ஆண்டு இந்துத்துவ பயங்கராவதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் அவர்களின் சதி திட்டத்தின் படி, எப்போதும் போல் முஸ்லிம்களே தீவிரவாதிகள் என கைது செய்யப்பட்டனர்.<br /><br />மூன்று ஆண்டுகளாக, தீவிரவாதத்தின் முள் முனையில் முஸ்லிம் சமூகம் நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால், அஜ்மீர் குண்டுவெடிப்பும் அது முசுலிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டதும் இந்துத்துவ பாசிசத்தின் சதி திட்டப்படி தான் என்பது இவ்வாண்டு வெளியானது.<br /><br />அஜ்மீர் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் முசுலிம்களல்ல; இந்துத்துவ பயங்கரவாதிகள் தான் என்பது வெளியானதோடு, அஜ்மீர் தர்காவில் குண்டுவைத்து விட்டு முஸ்லிம்கள் மீது திருப்பி விட்டவர்கள் என்று காவல்துறை சில இந்துத்துவ பயங்கரவாதிகளை கைது செய்தது.<br /><br />அதனைக் குறித்து இந்த இந்துத்துவ ஃபாஸிஸத்தின் ஊதுகுழல் தினமணி வெளியிட்ட செய்திகளைக் கவனியுங்கள்:<br />மே மாதம் 2 ஆம் தேதி வெளியான ஒரு செய்தி:<br /><br /><a href="http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&artid=236097&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest">அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த அனுமதி கோருகிறது காவல்துறை</a> <a href="http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&artid=236097&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest"><img id="BLOGGER_PHOTO_ID_5481116215080704338" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 285px; CURSOR: hand; HEIGHT: 277px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU9MaBupEvtx-yOGZEapXvD3O7SmS-juZm96YAhOVluMa1kQ8lJBfeRWhobKS7Jl0rPeLlERFJxKoz7wBMXvfTKnP1yECqfor9XU-A3Lg786qsjfSqIf_J35d4SOyuZC8pDZyHzTJzfnTw/s400/New+Picture+(4).png" border="0" /></a><br />3 ஆண்டுகாலமாக தாங்கள் செய்த பயங்கரவாத செயல்களை முஸ்லிம்கள் மீது சுமத்தி விட்டு, உல்லாசமாக சுற்றித் திரிந்த இந்தப் பயங்கரவாதிகள், “நேர்கொண்ட பார்வை” என தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் பாசிச தினமணிக்கு, இந்து "தீவிரவாதிகள்" இல்லையாம்; வெறும் "குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களாம்"!. இது தான் பாசிச தினமணியின் “நேர்கொண்ட பார்வை” போலும்!<br /><br />செய்தியின் உள்ளடக்கத்தில் ஃபாஸிஸ தினமணி இவ்வாறு கூறுகிறது:<br />"அஜ்மீர் குண்டுவெடிப்பில் அஜ்மீரில் உள்ள பிகார்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர குப்தா, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர், விஷ்ணு பதிதார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குப்தா, சந்திரசேகர் ஆகியோர் போலீஸ் காவலில் உள்ளனர். இருவரிடம் பயங்கரவாத எதிர்ப்புபோலீஸ் பிரிவு விசாரணை நடத்திவருகிறது.<br /><br />சனிக்கிழமை கைதான பதிதாரும் விசாரணைக்காக அஜ்மீருக்கு அழைத்து வரப்படுகிறார்.<br /><br />மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்புடன் குப்தா தொடர்புடையவர் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெண் துறவி பிராக்யா சிங் தாக்குருடன் குப்தா தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு மெய்யானதா என்பதை போலீஸார் விசாரிக்கின்றனர்".<br /><br />குண்டுவெடிப்புகளில் காவல்துறையால் சந்தேகத்தில் கைது செய்யப்படுபவர் முசுலிமாக இருந்தால், "தீவிரவாதியாகவும்", "அவன், இவன்" என ஏக வசனத்திலும் எழுதும் தினமணியின் எழுத்து தீவிரவாதம், அதுவே இந்துத்துவ பயங்கரவாதிகளாக இருந்தால் "அவர், இவர்" என்றும் "குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்" என்றும் மாறி விடுவதன் ரகசியம் பார்ப்பனீய குடுமி மூளைகளுக்கே வெளிச்சம்!<br /><br />மே மாதம் 3 ஆம் தேதி வெளியான அதே செய்தியின் தொடர்ச்சி:<br /><a href="http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88&artid=236559&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest">தர்காவில் குண்டு வெடித்த சம்பவம்:தேவேந்திர குப்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை</a> <a href="http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88&artid=236559&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest"><img id="BLOGGER_PHOTO_ID_5481103647565683906" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 245px; CURSOR: hand; HEIGHT: 274px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihxbQq_4Zh4ClV9ucZtY0A75Z5YXsiIvi4wbnOIQlJ_6iVifjv8Eb5oU97sjRWzQnm3VE9bIqxsJZ8b7KvoJf27ozjBCyb2IPYQDFPXBXZ2bIep-WK3baTeL2zIx0rSiHu7tlNJ8zE6vhe/s400/New+Picture+(5).png" border="0" /></a><br />இதன் உள்ளடக்கத்தில், "அஜ்மீரில் 2007-ம் ஆண்டு தர்கா ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தேவேந்திரா குப்தாவை நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்படுத்த அஜ்மீர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.<br /><br />ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள தர்கா ஒன்றில் 2007-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் தேவேந்திர குப்தா என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார்" என தினமணி தேவேந்திர குப்தா என்ற பயங்கரவாதியை "வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்" என எழுதுகிறது.<br /><br />இதன் தொடர்ச்சியாக மே மாதம் 5 ஆம் தேதி தினமணி வெளியிட்ட செய்தி: <br /><a href="http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=237626&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81">உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:உண்மை கண்டறியும் சோதனை சட்டவிரோதமானது <img id="BLOGGER_PHOTO_ID_5481116207929691154" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 316px; CURSOR: hand; HEIGHT: 271px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg08urMUdis51uWJ06BLIuOU_F6jYyc8ZtNR5aEccrigq3jJ2EV1d_e__9nEwiGkyurNTbYbMAOVkwdrK-xps0x_i09Bek30Rt4YscNDxmI2_xOgRTfadqi1ZQ_EAgX49E46Ma4qCjJb-Rz/s400/New+Picture+(6).png" border="0" /></a><br /><br />"நார்கோ அனாலிஸிஸ் சோதனை முடிவை ஆதாரமாக ஏற்க முடியாது" என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு செய்தியின் கீழே பாசிசதிற்குத் துணைபோகும் தினமணி இறுதி சேர்க்கையாக இணைத்துள்ள ஒரு விஷம வரி:<br />"அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளியான தேவேந்திர குப்தாவிடம் நார்கோ அனாலசிஸ் சோதனை செய்ய கடந்த 3-ம் தேதி ராஜஸ்தான் நீதிமன்றம் அனுமதி அளித்தது."<br /><br />"அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளியாம்". அது என்ன? குண்டுவெடிப்பில் தொடர்புடையாக கைது செய்யப்படுபவர் முஸ்லிம் பெயரிலுள்ளவர் எனில், அவர் "தீவிரவாதி",அதுவே இந்துத்துவ பயங்கரவாதியாக இருந்தால் மட்டும் அவர்,"சந்தேகிக்கப்படுபவர்", "குற்றவாளி", "தொடர்புடையவர்" போன்ற பதங்கள்? பார்ப்பனீய பயங்கரவாத மூளையின் அயோக்கியத்தனத்தை எதனால் அடிக்க வேண்டும்?!<br /><br />குண்டுவெடிப்புகளில் தாமதமாகவேனும் கைது செய்யப்படும் இந்துத்துவ பயங்கரவாதிகளை ஒரு இடத்தில் மறந்து கூட "தீவிரவாதி" என்றோ "பயங்கரவாதி" என்றோ கூறிவிடாத பாசிச ஊதுகுழல் தினமணி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அப்துஸ்ஸமத் பத்கல்" குறித்த தொடர் செய்தி ஒன்றைக் கடந்த மே 27 ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு இப்படி:<br /><br />மங்களூரில் கைதான தீவிரவாதிக்கு பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்பா?<a href="http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=247589&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=மங்களூரில்%20கைதான%20தீவிரவாதிக்கு%20பெங்களூர்%20குண்டுவெடிப்பில்%20தொடர்பா?"><img id="BLOGGER_PHOTO_ID_5481103637419167426" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 304px; CURSOR: hand; HEIGHT: 359px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDuvC0Ctzf8SGchq3JZAT2FuIod4NXXsOT1ED0v7Myb3O7JEsXqELyNWqiWVBSR45euceKSVqQAJzsQWmh9GwXJfFV1HlYkczERGBexL7nA-vbTVXpC4E0JLZs37NsivIdBEqUc4K9r8-c/s400/New+Picture+(7).png" border="0" /></a><br />தலைப்பிலேயே மீண்டும் "தீவிரவாதி" எனக்கூறும் பாசிச தினமணி, செய்தியின் உள்ளடக்கத்தில் கூறுவதைக் கவனியுங்கள்:<br />"மங்களூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அப்துஸ்ஸமத் பத்கலுக்கு பெங்களூர் கிரிக்கெட் மைதான குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்படுவதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்தார்.<br /><br />ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜை புதன்கிழமை காலை சந்தித்துப் பேசிவிட்டு வெளியே வந்த ஆச்சார்யா, தீவிரவாதி குறித்து நிருபர்களிடம் கூறியது:"<br /><br />தினமணியின் எழுத்துத் தீவிரவாதம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் பத்திரிக்கை தர்மத்துக்கும் எதிராக அமைந்துள்ளதை இன்னும் பல உதாரணங்கள் மூலம் விளக்க முடியும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று, தினமணியின் ஃபாஸிஸ முசுலிம் எதிர்ப்பு வெறியினைச் சுட்ட, ஒரேவிதமான குண்டுவெடிப்பு சம்பவங்களில் இருவேறு விதமாக வார்த்தைகளைக் கையாளும் மேற்கண்ட சில உதாரணம் மட்டுமே போதுமானது.<br /><br />இந்துத்துவ பாசிசத்தின் கொலைவெறி சித்தாந்தங்கள்,நாட்டின் முதுகெலும்புகளில் ஒன்றாக ஊடகத்துறையிலும் ஊறிப் போய் விட்டதையே இவை காட்டுகின்றன.<br /><br />சமூகம்,கல்வி,பொருளாதாரம்,அரசியல், அதிகாரங்களில் எம் தலித் சமூகம் முன்னேற வேண்டியது எந்த அளவுக்குக் கட்டாயமோ அதே அளவுக்கு முஸ்லிம் சமூகமும் முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.<br /><br />அதேவேளை,சிந்தப்படும் ஒவ்வொரு சொட்டு மையும் கூரிய வாள்களாக மக்கள் மனதில் தைத்து இறங்கி விடும் சக்தி வாய்ந்த இந்த ஊடகத்துறையில் முஸ்லிம்கள் கவனம் செலுத்துவதும் அதில் புரையோடிப் போயுள்ள, முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் இந்துத்துவ பாசிச இரத்த வெறியையும் களையெடுக்க வேண்டியதும் அதை விட அதிக கவனம் செலுத்தி கவனிக்கப்பட வேண்டியதாகும். ஒருமுறை தோழர் அ.மார்க்ஸும் இதையே தான் முன்மொழிந்திருந்தார்.<br /><br />நடுநிலை வேடமிட்டு,புனிதமான இந்தப் பத்திரிக்கை துறையையே கேவலப்படுத்தும் வகையில் செயல்படும் தினமணியின் பாசிச வெறி தோலுரிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் இறங்க வேண்டும்.<br /><br />பத்திரிக்கைத் துறை கவுன்ஸிலுக்கும் இந்திய பிரதமர், ஜனாதிபதிக்கும் தினமணி போன்ற பத்திரிக்கை துஷ்பிரயோகத்தை எடுத்துச் சென்று அப்பத்திரிக்கைகளுக்கு பூட்டுபோட வேண்டிய பணியினையும் அதற்கு மாற்றாக ஊடகத்துறையில் கால்பதிக்கும் முயற்சியையும் முஸ்லிம் சமூகம் முன்னெடுக்கட்டுமாக.<br /><br />மனித குலத்துக்கு எதிரான இந்துத்துவ பாசிசமும் அதற்கு துணை போகும் அனைத்து ஊதுகுழல்களும் தடை செய்யப்பட வேண்டும்.<br /><br />இந்திய கட்டுக் கோப்புக்கும் ஒற்றுமைக்கும் எதிராக செயல்படும் எத்தகைய சக்தியையும் எதிர்த்து போராட இந்த தேசத்தில் நீதியை விரும்பும் அனைவரும் ஒன்றுபடுவோம். பார்ப்பனிய பாசிச பயங்கரவாதத்தை இம்மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்.<br /><br /><span style="color:#ff0000;">ஆக்கம்:இளைய வைகை</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-45185051220167991512010-05-31T08:02:00.003+04:002010-05-31T09:01:03.037+04:00இன்று புகையிலை எதிர்ப்பு தினம்<div align="justify">'தன் வினையே தன்னைச் சுடும்' என்ற பழமொழிக்கு மிகப் பொருத்தமானவர்கள் யாரென்று கேட்டால் அனைவருமே சுலபமாக சொல்லிவிடலாம் புகைப்பிடிப்பவர்கள் என்று. <img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 423px; DISPLAY: block; HEIGHT: 172px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5477285218584918034" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw986I9Q1ZDfLcZblUg_4i_VdtW89WGFIGZdk2DtwY-9nk-9SPIHOnKWawmT9L7H3HQDI8TzIrcPQgovgt-u6zHpJYT8jX4BXNg69rqOm30cNcHkrGpLs5hJLzRuT-1qNB4zbZiQvfBZZ2/s400/anti-tobacco12345.gif" />விரல்களுக்கிடையே மரணத்தை சுமந்துக் கொண்டு சிந்தனையை சிறைவைத்த மனிதர்கள்தான் புகைப்பிடிப்பவர்கள் எனில் அது மிகையன்று. ஊதித்தள்ளும் புகை தலைக்கு மேலே வட்டமிடும் பொழுது தனது வாழ்க்கையும் கட்டம் கட்டப்படுகிறது என்பதை புரிந்தே வைத்துள்ளார்கள் புகை பழக்கமுடையோர்.<br /><br />ஆண்டுதோறும் மே மாதம் 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து 1987 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடித்த பொழுதிலும் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. புகையிலை தயாரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.<br /><br />இந்த ஆண்டு புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி WHO என்றழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி ஒவ்வொரு எட்டு வினாடிகளுக்கு ஒருவர் இவ்வுலகில் புகைத்தல் மூலம் உயிரைத் துறக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் 5.4 மில்லியன் மனிதர்கள் புகைத்தல் மூலம் தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். கடந்த ஆண்டு உலகில் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சிகரெட்டுகள் விற்பனையாகியுள்ளன.<br /><br />இன்னொரு அதிர்ச்சியான தகவல் என்னவெனில் புகையின் உபயோகம் மூலம் உலகில் ஆண்டிற்கு 15 லட்சம் பெண்கள் மரணமடைகின்றார்கள் என்பதுதான்.<br /><br />151 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் புகையிலையை உபயோகிக்கும் ஆண் மற்றும் பெண் இளைய வயதுடையோரின் எண்ணிக்கை சமமாக உள்ளது. புகையினால் மரணமடையும் ஆறு லட்சம் பேரில் மூன்றில் இரண்டு பாகமும் பெண்களாவர். புகைப்பிடிப்பது மட்டுமல்ல புகைப்பிடிப் பொருளுடனான பழக்க வழக்கமும் மரணத்திற்கு காரணமாக அமைகிறது. இதனை ஈரானில் ஐ.நா வின் தகவல் மையம் தெரிவிக்கிறது.<br /><br />வளர்ந்துவரும் நாடுகளில் பெண்கள் புகையிலையை உபயோகிப்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் இதற்கெதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவிக்கிறார்.<br /><br />வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் இதர நாடுகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.<br /><br />நமது இந்திய நாட்டிலும் பெண்கள் மத்தியில் புகைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. மும்பையில் புகை பிடிக்கும் பெண்களில் 50 சதவீதம் பேர் கடும் பணிச் சுமை காரணமாகவே அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.<br /><br />உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மும்பையில் நடத்தப்பட்ட இரு சர்வேக்களில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.<br /><br />பிபிஓ, கால்சென்டர்களில் பணியாற்றும் பெண்கள் பணிச் சுமை, போட்டி, அதிகமான ஊதியத்தால் கிடைத்துள்ள சுதந்திரத்தால் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி வருகி்ன்றனர்.<br /><br />ஆங்கில தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் உள்ளிட்ட மீடியாக்கள், பொழுதுபோக்கு தொலைககாட்சி சேனல்களி்ல் பணியாற்றும் பெண்களில் 5 முதல் 35 சதவீதம் வரை நாளொன்றுக்கு 4 முதல் 10 சிகெரெட்களை புகைக்கி்ன்றனர். இதில் சிலர் செயின் ஸ்மோக்கர்கள் ஆவர்.<br /><br />திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஹாஸ்டல்களி்ல் தனியே தங்கியிருப்போர், பேயிங் கெஸ்ட் ஆகிவற்றில் தங்கியிருக்கும் பெண்களில் 15 முதல் 20 பேர் பசியைப் போக்கவோ அல்லது டயட்டிங் காரணமாகவோ புகை பிடிக்கின்றனர். இவர்கள் காசநோய்க்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்.<br /><br />பி.பி.ஓ. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர் 'ஹூக்கா' பார்களுக்கு சென்று புகைப்பதன் மூலம் பணிச் சுமையிலிருந்து தப்புவதாகவும் தெரிவித்துள்ளனராம்.<br /><br />உலகில் காணப்படும் நச்சுத்தன்மைமிக்க தாவர வகைகளில் புகையிலையும் ஒன்றாகும். இதன் தண்டுப்பகுதியை விட இலைப்பகுதியில் தான் அதிக இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவை மருத்துவ,விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.<br /><br />இன்றைய காலக்கட்டம் வரை நடத்தி முடிக்கப்பட்ட ஆய்வுகளில் புகையிலையில் சுமார் 4 ஆயிரம் இராசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதிற்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன்மோனக்சைட்,தார்(இது புற்றுநோயை உருவாக்கக்கூடியது),நிகோடின்,நைட்ரிக் ஆக்ஸைட்,மெர்குரி(பாதரசம்) போன்றவையாகும்.<br /><br />புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத் தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர்.<br /><br />மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் அதிக விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.<br /><br />இன்றைய காலகட்டத்தில் மனிதன் புகையிலையை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துகிறான். அதாவது இந்த நச்சுத் தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறார்கள். தூள் புகையிலையை பொடியாக மூக்கில் போட்டுக் கொள்கிறார்கள். மற்றும் குழாய்களை பயன்படுத்தி புகையை உறிஞ்சுதல், பீடி, சிகரட், சுருட்டு, பைப் என்று பல்வகையாக புகையிலையை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.<br /><br />உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.‘புகையிலை மதுவைவிட ஏன் ஹெரயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக் கூடியது.<br /><br />அடிமையானவர்களில் 60%–90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர் என்று அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வில்லியம் பொலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.<br /><br />வளைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப் பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்திருந்தது. வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.<br /><br />மருத்துவர் அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் பெண்கள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளநாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.<br /><br />புகையிலை பயன்பாட்டால் பலவிதமான நோய்களுக்கு உள்ளாக நேரிடும். அவற்றில் கண்களில் வெள்ளை படருதல், நியூமோனியா, வயிற்று புற்றுநோய், சதைப்புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கழுத்து புற்றுநோய் மூத்திரப்பையில் கட்டி, நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக் குழாயில் புற்றுநோய், குரல் வளையின் மேற்பகுதியில் பாதிப்பு, வாய் புற்றுநோய், வாயிலும், தொண்டையிலும், பாதிப்பு, இருமல், சளி பாரிசவாதம், இருதய அழுத்தம், இதய நோய்கள் போன்றன குறிப்பிடத்தக்கவை.<br /><br />புகையினால் ஏற்படும் பாதிப்பு இத்துடன் முடியவில்லை இன்னும் பாருங்கள், பணப்பயிரான புகையிலையை பயிரிடுவதால் 1 கோடி முதல் 2 கோடி மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர் பயிரிடும் நிலம் அபகரிக்கப்படுகிறது.<br /><br />1960களில் போதை ஏற்படுத்தும் புகையிலையை மக்களிடையே பழக்கப்படுத்துவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள்- உலக முதலாளிகள் மேற்கொண்ட தந்திரங்கள் முக்கியமானவை. உலக மக்கள்தொகையை ஒரு பொருளுக்கு அடிமையாக்குவதன் மூலம், எப்படி தங்கள் வருமானத்தை தொடர்ச்சியாகப் பெருக்குவது என்ற தந்திரத்தை அவர்கள் அப்போது கற்றுக் கொண்டார்கள். புகையிலை பரவலாகி பழக்கமாகும் வரை, புகையிலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பொய் என்பது போன்ற ஒரு தோற்றத்தை, தங்களுக்குச் சார்பான விஞ்ஞானிகள் குழு மூலம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து உருவாக்கினர்.<br /><br />இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. என்ற இந்தியன் டுபாகோ கம்பெனி அடிப்படையில் ஒரு புகையிலை நிறுவனமே.<br /><br />உலக புகையிலை உற்பத்தியில் சீனா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. புகையிலையை பயன்படுத்துவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் புகையிலை பயிரிடுவதற்காக இரண்டு லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதில் இந்தியாவில் 42 ஆயிரம் எக்டேர் பரப்பில் புகையிலை பயிரிடப்படுகிறது.<br /><br />புகையிலை பயிரிடுதல், எரிபொருள், புதிய வகை பயிர்கள் பயிரிடுதல், "பேக்" செய்வது ஆகிய காரணங்களுக்காக புகையிலை சார்ந்த காடழிப்பு நடைபெறுகிறது. இதற்காக பெரும்பாலான வளரும் நாடுகளில் காடுகள் அழிக்கப்படுவதால், உலக அளவில் 1.7 சதவீத காடுகளின் பரப்பு இதற்கு மட்டுமே அழிந்து வருகிறது. மொத்த காடுகளின் பரப்பளவில் 4.6 சதவீதம் புகையிலை பயிரிடப்படும் நாடுகளில் மட்டும் அழிக்கப்படுகிறது.<br /><br />சிகரெட், பீடி, மெல்லும் புகையிலை போன்றவற்றை தயாரிப்பதற்கு புகையிலை பயன்படுத்தப்படுகிறது. உலக பீடி உற்பத்தில் 85 சதவீதம், அதாவது 19 கோடி கிலோ பீடி இந்தியாவில் உற்பத்தியாகிறது. உலக புகையிலை பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம் (ஏழை பீடி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், குழந்தை உழைப்பு போன்ற வேறு சமூகப் பிரச்சினைகளும் இதில் அடங்கியுள்ளன).<br /><br />புகையிலை பண்ணைகளில் 20 ஆயிரம் குழந்தைகளும், பீடி-சிகரெட் பாக்கெட் தயாரிப்பு பணியில் 27 ஆயிரம் குழந்தைகளும் ஈடுபட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலகப் பேரணி தெரிவிக்கிறது.<br /><br />தமிழகத்தில் மெல்லும் வகை புகையிலை தென்மாவட்டங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. தவிர, தஞ்சாவூரிலும் கடற்பாங்கான மண் உள்ள பகுதிகளிலும் இவை பயிரிடப்படுகின்றன. மதுரையின் சில இடங்களில் குறைவான எரியும் தன்மை கொண்ட சுருட்டு தயாரிக்கப் பயன்படும் புகையிலை பயிரிடப்படுகிறது.<br /><br />புகையிலையை பயிரிடுவதனால் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனால் பல்லுயிரினம் பாதிக்கப்படுகிறது. 12 பூஞ்சை வைரஸ் நோய்கள், 29 பூச்சிகள் தாக்குதல்கள் போன்றவை புகையிலை பயிரிடப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. புகையிலையை பயிரிடுவதற்கு பயன்படுத்தும் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மையை அடைந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. புகையிலையினால் காடுவளம் பாதிக்கப்படுகிறது.<br /><br />ஒரு டன் புகையிலையை பதப்படுத்துவதற்கு ஒரு எக்டேர் மரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோ புகையிலையை பதப்படுத்துவதற்கு 7.8 கிலோ மரக்கட்டை எரிக்கப்படுகிறது.<br /><br />உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு ஏக்கர் புகையிலை பயிரிடுவது 150 மரங்களை அழிப்பதற்குச் சமமாகும். 600 கிலோ புகையிலையை பதப்படுத்த உதவும் எரிபொருளைக் கொண்டு 20 வீடுகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யலாம்.<br /><br />போபாலில் உள்ள இந்திய காட்டு மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 1962 முதல் 2002 வரையிலான 40 ஆண்டு காலத்தில் புகையிலை பதப்படுத்துதல், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்புக்காக 680 சதுர கிலோ மீட்டர் காடுகள் அல்லது 86.8 கோடி டன் மரக்கட்டைகள் அல்லது 22 கோடி டன் கட்டுமானத் தரம் வாய்ந்த மரக்கட்டைகள் அல்லது 66.8 கோடி டன் எரிபொருள் சுரண்டப்பட்டுள்ளது.<br /><br />இவ்வாறு அழிக்கப்பட்ட எரிபொருளின் அளவைக் கணக்கிட்டால் அதைக் கொண்டு அணல் மின்நிலையம் ஒன்றை இயக்கி, தலைநகர் தில்லி, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஓர் ஆண்டுக்குத் தேவையான மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்திருக்கலாம்.<br /><br />இப்பொழுது கூறுங்கள் புகை நமக்கு பகைதானே? வெறும் பகையல்ல கொடும்பகை என்பதை மறந்துவிடவேண்டாம்.<br /><br />பிரபஞ்சத்தை படைத்து பாதுகாத்து வரும் வல்ல இறைவன் தனது திருக்குர்ஆனில் மனிதப் படைப்பை பற்றிக் குறிப்பிடும் பொழுது இவ்வாறு குறிப்பிடுகிறான்: <span style="color:#ff0000;">"திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்"</span>(அல்குர்ஆன் 95:4).<br /><br />அத்தகையதொரு அழகான படைப்பான மனிதன் தனது உடல் நலத்தை சீரழித்து வாழ்வை சூன்யமாக்கும் புகைக்கு அடிமைப்படுதன் மூலம் பாரதூரமான அநீதத்தை தனக்கு இழைக்கிறான்.<br /><br />"<span style="color:#ff0000;">உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்</span>"(அந்நிஸா: 25).<br /><br />மனிதனுக்கு தனது உயிரை அழித்துக் கொள்ள எவ்வுரிமையும் இல்லை என்கின்ற பொழுது இறைவனால் வழங்கப்பட்ட தனது வாழ்வை அழிக்கும் இந்த கொடுமையிலிருந்து விடுபட்டால்தான் அவன் இவ்வுலகிலும் மரணத்திற்கு பின்னால் உள்ள வாழ்விலும் நிம்மதியாக வாழ முடியும்.<br /><br />விஷத்தன்மை மிக்க வேதிப்பொருட்கள் அடங்கிய புகையிலையை தெரிந்தே பயன்படுத்தி அதன் மூலம் தனது இன்னுயிரை இழக்கும் செயல் தற்கொலைக்கு சமம்தானே!<br /><br />தற்கொலைக்கு என்ன தண்டனை என்பதை அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்...)கூறுவதைப் பாருங்கள்:"<span style="color:#ff0000;">எவர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரோ அவர் நரகத்தில் எப்பொழுதும் உயரமான இடத்திலிருந்து விழுந்து கொண்டே இருப்பார், எவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதோ அவரது கையில் விஷம் இருக்கும் அதை நரகத்தில் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பார், எவர் இரும்பு ஆயுதத்தை கொண்டு தற்கொலை செய்து கொண்டாரோ அவர் கையில் அந்த இரும்பு ஆயுதம் இருக்கும் அதைக் கொண்டு எப்போதும் நரகில் தன் வயிற்றை கிழித்துக் கொண்டே இருப்பார்</span>" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூற்கள்: அஹமது, அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.<br /><br />ஒரு முஸ்லிமைப்பொறுத்தவரை அவர் தன்னால் பிறருக்கு துன்பம் ஏற்படாமலிருக்க மிக்க கவனத்துடன் இருக்கவேண்டும். நபிகளார் கூறினார்கள்: ‘தனது கை,நாவினால் பிறருக்கு துன்பம் இழைக்காதவனே முஸ்லிம்’ என்று(நூல்:புஹாரி). ஆகவே ஒரு முஸ்லிம் தன்னால் சுற்றுப்புறச் சூழலுக்கோ, மனிதர்களுக்கோ தீங்கு ஏற்படாமல் கவனமாக இருப்பார்.<br /><br />ஆகவே பொருள் இழப்பு, சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு, தனது ஆன்மாவுக்கும், உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு தன்னை சார்ந்தோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய கேடுகெட்ட பழக்கத்தை விட்டொழிப்போம்.புகை நமக்கு என்றுமே கொடும் பகையாக இருக்கட்டும்.இதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-20137005939383498142010-05-09T10:20:00.006+04:002010-05-09T11:11:45.198+04:00அன்னையர் தினம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9bZ5mJ8oFONNRRM4FCWuMyyA6_h8lYVy6etUJ4rBenZ79CAOSlEpJ4ZHyw9KJKmmm0QFIV9uHnYkH518mYPZnZhZd7vm0BHDF-PNjJdPpqZkBfG5chwbpiwlNTmehCbDcRPIj0CS_xXjy/s1600/mothers.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5469162593451084338" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 265px; CURSOR: hand; HEIGHT: 348px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9bZ5mJ8oFONNRRM4FCWuMyyA6_h8lYVy6etUJ4rBenZ79CAOSlEpJ4ZHyw9KJKmmm0QFIV9uHnYkH518mYPZnZhZd7vm0BHDF-PNjJdPpqZkBfG5chwbpiwlNTmehCbDcRPIj0CS_xXjy/s400/mothers.bmp" border="0" /></a>அன்னை, இறைவன் இவ்வுலகில் மனிதனுக்கு அளித்த அற்புதமான உறவாகும். அம்மா, மம்மி, மதர், உம்மா, மா என்று பல்வேறு மொழிகளில் தாய்க்கான சொற்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கிடையே ஒரு இனம் புரியாத தொடர்பிருப்பதை உணரமுடியும்.<br /></div><div align="justify"><br />அம்மா என்றழைக்காத உயிரில்லையே! தாயின் சிறந்ததோர் கோயிலுமில்லை! என தாய்மையின் பெருமையை உணர்த்துவதற்கு இவ்வுலகில் பல்வேறு வகையான சொல்லாடல்கள் எடுத்தாளப்படுகின்றன.</div><div align="justify"><br /></div><div align="justify">பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல. இவ்வுலகில் பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு பரிணாமங்களை வாழ்க்கையில் சந்திக்கிறாள். அவற்றில் உன்னத அந்தஸ்தை தருவது 'தாய்' என்ற ஸ்தானமாகும். </div><div align="justify"><br /></div><div align="justify">தாய்மையை போற்றக்கூடிய வகையில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை 'அன்னையர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை ஏனைய சர்வதேச தினங்களைப் போல் உலக முழுவதும் ஒரேநாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று உலகின் பெரும்பாலான நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடினாலும், சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்னரோ கொண்டாடுகின்றன. அன்னையர் தினக் கொண்டாட்டத்தின் பின்னணியாக சில புராணக் கதைகள் கூறப்பட்டாலும், நவீனக் காலத்தில் அன்னையர் தினம் உருவான வரலாறு இவ்வாறே அமைந்தது.</div><div align="justify"><br /></div><div align="justify">அமெரிக்காவில் ஜார்விஸ் என்ற பெண்மணி ஒரு போரின்போது பலியான அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்வுக்காகவும், சமாதானத்திற்காகவும் பாடுபட்டு தனது இறுதிக் காலக்கட்டம் வரை சமூக சேவகியாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய மகளான அன்னா ஜார்விஸ் முதன் முதலாக தனது அன்னையின் நினைவாக 1908 ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரிலிலுள்ள சர்ச்சில் மே மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினாராம். அன்று முதல் உலகில் முதன் முதலில் அன்னையர் தினத்தை கொண்டாடிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார் அன்னா ஜார்விஸ்.</div><div align="justify"><br /></div><div align="justify">சமூக நலனில் அக்கறை கொண்ட அன்னா ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். இவரது கோரிக்கையை ஏற்று பென்சில்வேனியா மாநில அரசு 1913 ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்தது. </div><div align="justify"><br /></div><div align="justify">இத்தோடு அன்னா திருப்தியடையவில்லை. அவர் பல தன்னார்வ குழுக்களுக்கும், வியாபார அமைப்புகளுக்கும் அன்னையர் தினம் கொண்டாடுவதைப் பற்றி கடிதம் எழுதினார். அமெரிக்க அதிபருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இவரின் வேண்டுகோளையும், நியாயத் தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.</div><div align="justify"><br /></div><div align="justify">பின்னர் கனடா உள்ளிட்ட 46 நாடுகள் அன்னையர் தினத்தை ஏற்றுக்கொண்டன. இறுதியாக தனது 84 ஆம் வயதில் அன்னா தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தின் பொழுது தனியார் மருத்துவமனையில் வைத்தும் அன்னையர் தினம் தாயைப் போற்றும் விதமாக உலகமுழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்ற ஆசையை தன்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம் வெளிப்படுத்தினார். </div><div align="justify"><br /></div><div align="justify">அன்னையர் தினம் உருவாக காரணமான அன்னா ஜார்விஸ் திருமணம் முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. </div><div align="justify"><br /></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;"><strong><u>வணிகமயமாக்கப்பட்ட அன்னையர்தினம்</u></strong></span></div><div align="justify">பல்வேறு சர்வதேச தினங்களைப் போன்றே அன்னையர் தினமும் வணிகமயாக்கப்பட்டது. அதுவும் அன்னையர் தினம் துவக்கப்பட்டு 9 ஆண்டுகள் கழித்து. யார் அன்னையர் தினத்தை துவக்கி வைத்தாரோ அவரே அதன் எதிர்ப்பாளாராகவும் மாறினார். ஆம், அன்னா ஜார்விஸ் அன்னையர் தினத்தை வணிகமயமாக்கியதற்கு எதிராக போராட ஆரம்பித்தார். </div><div align="justify"><br /></div><div align="justify">1948 ஆம் ஆண்டில் அன்னையர் தினம் வணிகமயாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதால் அமைதியை சீர்குலைத்தார் எனக்கூறி கைதுச் செய்யப்பட்டார் அவர். </div><div align="justify"><br /></div><div align="justify"></div><div align="justify">அன்னா ஜார்விஸ் கடைசியாக கூறியது என்னவெனில், "இதுபோல் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் நான் இந்த நாளை துவங்கியிருக்க மாட்டேன். ஏனெனில் அது கட்டுப்பாடின்றி சென்றுவிட்டது." என்று. </div><div align="justify"><br /></div><div align="justify"></div><div align="justify">வர்த்தக ரீதியாக வெற்றிப் பெற்ற அமெரிக்க நிகழ்ச்சிகளில் ஒன்றாக அன்னையர் தினம் மாறிவிட்டது. தேசிய விடுதிக் கூட்டமைப்பின் கணிப்பின்படி அன்னையர் தினமானது இப்பொழுது அமெரிக்காவின் உணவு விடுதிகளில் இரவு விருந்துக்கு ஆண்டின் பிரபல நாளாக மாறிவிட்டது. </div><div align="justify"><br /></div><div align="justify"></div><div align="justify">IBIS World என்ற வணிக ஆராய்ச்சி வெளியீட்டு நிறுவனத்தின் கணிப்பின்படி அமெரிக்கர்கள் மலர்களுக்கு 2.6 பில்லியன் டாலர்களும், விரும்பிய பரிசுப் பொருட்களுக்கு 1.53 பில்லியன் டாலர்களும், வாழ்த்து அட்டைகளுக்கு 68 மில்லியன் டாலர்களும் செலவு செய்கின்றனர். </div><div align="justify"><br /></div><div align="justify"></div><div align="justify">2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அன்னையர் தினத்தில் அன்னையர்களுக்கான மோதிரங்களின் விற்பனை அமெரிக்காவின் நகைத் தொழில் துறையின் ஆண்டு வருமானத்தில் 7.8 சதவீதத்தை பெற்றுக் கொடுத்தது. </div><div align="justify"><br /></div><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#ff0000;"><u>கார்ப்பரேட் தாய்மார்கள்</u></span></strong></div><div align="justify">அன்னையர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் தாய்மையின் புனிதத்தைக் கெடுக்கும் தாய்மார்களின் அவலத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். வாடகைத் தாய் என்ற பெயரில் அன்னிய ஆண்களின் குழந்தைகளை சுமந்து தனது புனிதமான கருவறையை கார்ப்பரேட் அறைகளாக மாற்றி வருகின்றனர் சில பெண்மணிகள். </div><div align="justify"><br /></div><div align="justify">இவர்கள் தாய்மையையும் பெண்மையையும் காசுக்காக சீரழிக்கும் வெட்கங்கெட்ட பெண்மணிகளாவர். </div><div align="justify"><br /></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;"><strong><u>கருவறையை கழிப்பிடமாக மாற்றுபவர்கள்</u></strong></span> </div><div align="justify">முறைகேடான உறவுகள் மூலம் தந்தை யார் என்று தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கிய பெருமை கருவறைகளை கழிப்பிடமாக மாற்றிய பெண்மணிகளை சாரும். </div><div align="justify"><br /></div><div align="justify">தவறான உறவில் பிறந்தக் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசும் கல்நெஞ்சம் படைத்தவர்களை நாம் எவ்வாறு அன்னையர் இனத்தில் சேர்க்க இயலும். </div><div align="justify"><br /></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;"><strong><u>கருவறையை பிணவறையாக மாற்றுபவர்கள்</u></strong></span></div><div align="justify">குழந்தை என்பது இறைவனின் அருட்கொடையாகும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் தான் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை அல்லது தான் கருவறையில் சுமக்கும் குழந்தைகளை அது பெண்ணாக இருக்கும் காரணத்தினால கருவிலேயே அழிக்க நினைக்கும் பாவிகளை நினைத்தால் மனம் பதறிப் போகிறது. இவர்கள்தான் கருவறையை பிணவறையாக மாற்றுபவர்கள். இவர்கள் குழந்தையின் அழுகுரலுக்கு பதிலாக மரண ஓலத்தை கேட்க விரும்புகிறார்கள்.</div><div align="justify"><br /></div><div align="justify"><u><strong><span style="color:#ff0000;">பாசிசமும் தாய்மையும்</span></strong></u></div><div align="justify">தாயை தெய்வமாக மதிக்கிறோம் என்று கூறிவிட்டு தாய்மையை காலில் போட்டு மிதிக்கும் கயமைத் தன்மைக் கொண்ட பாசிஸ்டுகளின் இரட்டை வேடத்தை இந்த அன்னையர் தினத்தில் அடையாளம் காட்டுவது அவசியமாகும். </div><div align="justify"><br /></div><div align="justify">பாரத மாதா, கோ மாதா என எதற்கெடுத்தாலும் மாதா கோஷம் எழுப்பும் இந்தக் கயவர்கள் இந்தியாவில் நடந்த பல கலவரங்களிலும் சிறுபான்மையின தாய்மார்களின் தாய்மையை சூறையாடியவர்கள். அதன் உச்சக்கட்டம் தான் குஜராத்தில் நாம் கண்ட கோர நிகழ்வு. கெளஸர் பானு என்ற தாயின் வயிற்றைக் கிழித்து கருவறையிலிருந்த சிசுவைத் தூக்கி தீயில் போட்டு பொசுக்கிய இந்த அரக்கர்கள் ஒரு தாய்க்குத்தான் பிறந்தார்களா? என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.</div><div align="justify"><br /></div><div align="justify">நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டுப் போன தாய்மை நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்திய பாதிப்பால் பெற்ற குழந்தையைக்கூட கவனிக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி இன்று நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. இது நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்திய பாதிப்பாகும். கண்டதையெல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டும். அதற்குப் பணம் தேவை. அதற்காக நேரம் காலம் தெரியாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.</div><div align="justify"><br /></div><div align="justify">குழந்தையைப் பெற்று சில வாரங்கள் கழிந்தவுடனேயே வேலைக்குச் செல்லும் யுவதிகள் அதிகரித்து வருகின்றனர். குழந்தைக் காப்பகத்தில் அல்லது வேலைக்காரியிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வதால் குழந்தைக்கு தாய்ப்பாசம் எவ்வாறு கிடைக்கும். அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் குடும்பவாழ்வு சீரழிந்ததன் காரணமாகவும், நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டதன் விளைவாகவும் குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு பல காலமாகிவிட்டது. </div><div align="justify"><br /></div><div align="justify">இதனால் குற்ற சிந்தனைக் கொண்ட ஒரு சமூகம் அங்கு உருவாகியுள்ளது. அடிக்கடி துப்பாக்கிச் சத்தம் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் ஒலிப்பதை நாம் அறியத்தான் செய்கிறோம்.</div><div align="justify"><br /></div><div align="justify"><strong><u><span style="color:#ff0000;">அதிகரித்து வரும் முதியோர் இல்லங்கள்</span></u></strong></div><div align="justify">பத்துமாதம் சுமந்து பெற்று சீராட்டி தாலாட்டி வளர்த்த அன்னையை வயோதிக வயதில் பரிதவிக்கவிடும் பாதகர்களும் மனித போர்வையில் நடமாடுகிறார்கள். முதியோர் இல்லங்களில் அகதிகளாக்கப்படும் அன்னையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதனால்தான் ஒரு கவிஞர் இவ்வாறு கூறுகிறார்:</div><div align="justify"><br /></div><div align="justify">'அன்னையர்க்கு தினம் ஒன்று வேண்டாம்- அன்றாடம் </div><div align="justify">அன்பு செய்யும் மனம் தான் வேண்டும்’ என. </div><div align="justify">மனித நேயம் மக்கிப்போன காலக்கட்டமாக மாறி வருகிறது இன்றைய நவீன உலகம்.</div><div align="justify"><br /></div><div align="justify">அன்னையர் தினம் என்ற பெயரால் வருடத்தில் ஒரு நாளை சிறப்பித்து கொண்டாடுவதினாலோ அல்லது வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வதினாலோ நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிய அந்த 'தாய்' என்ற உறவுக்கு நாம் பிரதி உபகாரம் செய்திட இயலாது.</div><div align="justify"><br /></div><div align="justify">'தாய்' உறவு முறை என்பது வெறும் சடங்கோ சம்பிரதாயமோ அன்று. உணர்வுப் பூர்வமாக நாம் அணுகவேண்டிய உன்னதமான உறவு முறையாகும். ஒரு குழந்தையின் கரு உருவான காலக்கட்டத்திலிருந்து அதன் தாய் படும் கஷ்டங்களும், சிரமங்களும் கொஞ்சநஞ்சமல்ல. குழந்தையை பெற்ற பின்னரும் அவள் படும் சிரமமும், அர்ப்பணிப்பும் ஏராளம். குழந்தையின் கழிவுகளை இன்முகத்தோடு சுத்தம் செய்யும் பாங்கும், அக்குழந்தைக்காக உணவையும், உறக்கத்தையும் தியாகம் செய்யும் தன்னலமற்றத் தன்மையும் தாயைத் தவிர வேறு எந்த உறவினால் ஆற்ற இயலும்?</div><div align="justify"><br /></div><div align="justify">தாய்மைக்கு உயர்வளித்த ஒப்பற்றக் கொள்கைதாயை தெய்வமாக மதிக்கிறோம் எனக்கூறி என போலிவேடம் போடுவதை இறை மார்க்கமான இஸ்லாம் ஏற்கவில்லை. அகிலங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு நிகராக எவரும் எப்பொருளும் இல்லை என்பதுதான் இஸ்லாம் கூறும் இறைக்கொள்கை.</div><div align="justify"><br /></div><div align="justify">அதே வேளையில் அன்னயருக்கு இஸ்லாம் மனித உறவுகளில் உன்னத இடத்தை அளித்து கெளரவிக்கிறது.</div><div align="justify"><br /></div><div align="justify">தாய் காலடியில்தான் சுவனம் இருக்கிறது என்ற நபிகளாரின் வாக்கு அன்னைக்கு பணிவிடைச் செய்வதன் மூலமே மரணத்திற்கு பின்னர் வரும் வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியும் என்ற உயரிய தத்துவத்தை போதிக்கிறது.</div><div align="justify"><br /></div><div align="justify">மிகப்பெரிய பாவங்களில் ஒன்று பெற்றோரை துன்புறுத்துவது எனக்கூறி அன்னையரை அபலைகளாக்குவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறது இஸ்லாம்.<br />உறவுகளில் உன்னத அந்தஸ்தை கொடுக்க வேண்டியது அன்னைக்குதான் என்று நபித்தோழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நபி(ஸல்...) அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினார்கள்.</div><div align="justify"><br /></div><div align="justify">அன்னையானவள் இஸ்லாத்தை தழுவாவிட்டாலும் கூட அவருக்கு இவ்வுலகில் நீ மதிப்பளிதேயாக வேண்டும் என்ற தத்துவத்தை போதித்த மார்க்கம் தான் இஸ்லாம்.</div><div align="justify"><br /></div><div align="justify">பெற்றோருக்கு கடமையாற்ற வேண்டிய முக்கிய காலக்கட்டம்தான் அவர்களுடைய வயோதிக காலம். அவ்வேளைகளில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டுமென்பதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்: </div><div align="justify"><br /></div><div align="justify">"நபியே! உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியாகவும் கட்டளையிட்டிருக்கின்றான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை(நிந்தனையாகச்) ’சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம்(எதைக் கூறிய பொழுதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாகவும் அன்பாகவுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றியும் ’என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக!’ என்று நீரும் பிரார்த்திப்பீராக." (<span style="color:#ff0000;">அல்குர்ஆன் 17:23,24</span>).</div><div align="justify"><br /></div><div align="justify">இத்தகையதொரு இஸ்லாமிய சமூக சூழலில் முதியோர் இல்லங்களுக்கு ஏது இடம்? அதனால்தான் முஸ்லிம் சமூகத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் நிலை குறைவாகவே உள்ளது. </div><div align="justify"><br /></div><div align="justify">பெற்றோர் இறந்தாலும் கூட அவருக்காக நீ ஆற்றும் நற்பணிகள் அவரைச் சென்றடையும் எனக்கூறும் இஸ்லாம் அவர்களின் நேசத்திற்குரியவர்களுக்கு அவர்கள் இறந்த பின்னரும் மதிப்பளியுங்கள் என்ற உபதேசத்தை போதிக்கிறது. </div><div align="justify"><br /></div><div align="justify">இஸ்லாமிய குடும்பங்களைப் பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறையல்ல மாறாக வருடம் முழுவதுமே அன்னையர் தினம் தான். அங்கு போலியான பாசாங்கான நடவடிக்கைகளுக்கு சாத்தியமே இல்லை. </div><div align="justify"><br /></div><div align="justify">இத்தகையதொரு இறைமார்க்கமான இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையால்தான் அன்னையர் என்ற உன்னத உறவுக்கு உயர்வை அளிக்க இயலும். அந்த மார்க்கத்தின் வழி நின்று அன்னையரை போற்றுவோம்!</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-31039694116421467522010-05-04T08:09:00.003+04:002010-05-04T11:05:19.388+04:00மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி<div align="justify"><span style="color:#009900;">இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள். அதனையொட்டி அவரது தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக இந்தக்கட்டுரை வெளியிடப்படுகிறது.</span></div><div align="justify"> </div><div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDeAvH_rAJpd9wf01vTUKKtASb1kH9loN6RY7YmAKvdAJiOG09F46Rw0EFrSDL2ftt-d55CTvbCNzIpqNVqj_61ImBth3XGhKRAtxNXw7f78aaNeeInzr1lhqXL0CvG6DLuMGtx3MKTAiz/s1600/thippu.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5467268686863839842" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 99px; CURSOR: hand; HEIGHT: 124px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDeAvH_rAJpd9wf01vTUKKtASb1kH9loN6RY7YmAKvdAJiOG09F46Rw0EFrSDL2ftt-d55CTvbCNzIpqNVqj_61ImBth3XGhKRAtxNXw7f78aaNeeInzr1lhqXL0CvG6DLuMGtx3MKTAiz/s400/thippu.jpg" border="0" /></a>1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.<br /><br />'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: 'இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.<br /><br />அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.<br /><br />இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்" எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).<br /><br />1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.<br /><br />1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.<br /><br />திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.<br /><br />1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.<br /><br />ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.<br /><br />கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.<br /><br />இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.<br /><br />ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், '30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது'. என்று குறிப்பிட்டான்.<br /><br />போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.<br /><br />திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், 'இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்' என்று.<br /><br />ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.<br /><br />எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். "அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! "ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.<br /><br />எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.<br /><br /><span style="color:#ff0000;"><strong>திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி</strong></span><br />ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது 'அக்னி சிறகுகள்' என்ற நூலில் தான் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.<br /><br />இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, 'இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.<br /><br />அத்துடன், 'ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.<br /><br /><span style="color:#ff0000;">வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை</span><br />திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.<br /><br />இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.<br /><br /><span style="color:#ff0000;"><strong>நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்</strong></span><br />அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: "மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?" என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.<br /><br /><span style="color:#ff0000;"><strong>அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு</strong></span><br />'எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.<br /><br />வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.<br /><br />சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.<br /><br />இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.<br /><br />"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்."<br /><br />மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!<br /><br />கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.<br /><br /><span style="color:#ff0000;"><strong>திப்புவின் மத நல்லிணக்கம்</strong></span><br />திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.<br /><br />திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.<br /><br />இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது 'திப்புவின் சமயக் கொள்கை' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் 'திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்' என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.<br /><br /><span style="color:#ff0000;"><strong>திப்புவின் விவசாயக்கொள்கை</strong></span><br />"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.<br /><br />சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.<br /><br />1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.<br /><br />1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.<br /><br />1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.<br /><br />திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.<br /><br /><strong><span style="color:#ff0000;">போர்களத்தில் நேர்மை</span></strong><br />"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”<br /><br /><strong><span style="color:#ff0000;">மக்கள் சக்தியை திரட்டியவர்</span></strong><br />ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. "அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்".என்பதே அந்த ஆணை.<br /><br />தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.<br /><br /><strong><span style="color:#ff0000;">திப்புவை மாவீரனாக மாற்றியது எது?</span></strong><br />இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம். </div><div align="justify"><br />உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.<br /></div><div align="justify"></div><div align="justify"><br /></div><div align="justify">திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது. ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது. </div><div align="justify"> </div><div align="justify">கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.<br /><br />விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. </div><div align="justify"> </div><div align="justify">சஞ்சய்கான் ’the sword of tippu' என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ’கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.<br /><br />புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனை கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.<br /><br />சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.<br /><br />அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன. </div><div align="justify"> </div><div align="justify">அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும். அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-23647952732986872572010-05-01T08:26:00.004+04:002010-05-01T08:33:49.192+04:00மே 1 தொழிலாளர் தினம்<div align="justify"><img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 278px; FLOAT: left; HEIGHT: 371px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5466154906627318514" border="0" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVxOITKL7MSnDQ9hK0rR41b7eHtICJNoT9dPFlYRlU24UZgygRR0DVTp7uWL1TEtuyMqtx2MqyRW1LmwM4xLHrzCk7IqKkpOe4VKF_mRoFvudSSZrPupD0qUFvcvjynyCpeQQcoQWdvRcg/s400/maydaycartoon-lg.jpg" />வேலை நேரத்தை குறைக்கவும், தொழிலாளிகளை மனிதர்களாக அங்கீகரிப்பதற்காகவும் உலகின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் கிளர்ந்தெழ ஆரம்பித்தன.<br /><br />'எட்டு மணிநேரம் வேலை, எட்டு மணிநேரம் ஓய்வு, எட்டு மணிநேரம் பொழுது போக்கு’ என்ற கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவின் தொழில் நகரமான சிகாகோவில் 1886-ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி உலக வரலாற்றின் போக்கை மாற்றி அமைத்த போராட்டங்கள் நடந்தேறின.<br /><br />சிகாகோவில் போராட்டக்களத்தில் குதித்த தொழிலாளர்களை முதலாளித்துவ வாதிகள் துப்பாக்கிக் குண்டுகளால் எதிர்க்கொண்டனர். ஆனால் குண்டடிபட்டு வீழ்ந்த தொழிலாளிகளின் குருதியின் ஊடே ஒரு பெரிய தொழிலாளர்கள் விடுதலை அமைப்பு உருவானது. இவ்வாறு உலக முழுவதும் விடுதலையை விரும்பிய தொழிலாளர்கள் மே 1 ஆம் தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க துவங்கினர்.<br /><br />பிற்காலத்தில் தொழிலாளர் அமைப்புகளின் தலைமைப் பதவியிலிருந்தவர்கள் பலரும் அரசியல் அதிகாரத்தின் முக்கிய பதவிகளில் இடம் பிடித்தனர். அமைப்புச் சார்ந்த தொழிலாளர் வர்க்கத்தை புறக்கணித்துவிட்டு ஒரு அரசாங்கத்தாலும் செயல்பட முடியாது என்ற நிலை பொதுவாகவே உருவாகியுள்ளது. தொழிலாளர் அமைப்புகளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதனடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எந்த அரசும் தயாராக சூழல்தான் இன்று உள்ளது.<br /><br />மே 1 தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வேளையில் உலக முழுவதும் தொழிலாளர்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை என்பது மறைக்கவியலாத உண்மையாகும். 18-ஆம் நூற்றாண்டிலும், 19-ஆம் நூற்றாண்டிலும் தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படாத மாற்றங்கள் 21-ஆம் நூற்றாண்டில் ஓரளவு ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் இந்த மாற்றங்கள் உலக முழுவதும் ஒரேபோல ஏற்படவில்லை. சம்பள உயர்வும், சலுகைகளையும் போராடி பெற்றதில் அமைப்புசார்ந்த தொழிலாளர் வர்க்கத்திற்கு நீண்ட தூரம் செல்ல இயன்றுள்ளது. ஆனால் தொழிலாளர்களில் பெரும்பான்மை எண்ணிக்கையிலான அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. வேலை வாய்ப்பு இல்லாததும், கதவடைப்புகளும், வேலையை விட்டு நீக்குதலும் இப்பொழுதும் சர்வசாதாரணமாக நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.<br /><br />உலகமயமாக்கலாலும், அதனால் ஏற்பட்ட எதிர்விளைவான பொருளாதார நெருக்கடியாலும் அதிகம் பாதிக்கப்படுவது தொழிலாளர் வர்க்கமாகும். இவ்வாறான பிரச்சனைகளிருந்தாலும் ஐரோப்பாவிலிலுள்ள தொழிலாளர் அமைப்புகளால் போதிய சம்பளத்தையும், தேவையான சலுகைகளையும் போராடி பெற முடிந்துள்ளது. பல்வேறு நாடுகளில் தொழிலாளர் அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தொழில் துறையில் ஏற்படுத்தவிருக்கும் கொள்கை மாற்றங்களுக்காக பல நாடுகளின் அரசுகளும் தொழிலாளர் அமைப்புகளை கலந்தாலோசிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.<br /><br />உலகில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் வந்த மாற்றங்கள் தொழிலாளர் அமைப்புகளிலும் ஏற்பட்டுள்ளன. வெறும் அரசியல் லட்சியங்களை மட்டும் இலக்காக வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களை இடதுசாரி அமைப்புகளும் கைவிட்டுவிட்டன. தொழிலாளர் அமைப்புகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தவும், தொழிலாளர் அமைப்புகளை வைத்து ஆதாயம் தேடவும் முற்படும் முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கத்தை பெரும்பாலான தொழிலாளர் அமைப்புகள் புரிந்துக்கொண்டன. தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக செயல்படவேண்டும் என்ற கோரிக்கை பல தொழிலாளர் அமைப்புகளிடமிருந்தும் எழுந்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தொழிலாளர் அமைப்பு போதும் என்ற மனோநிலைக்கு தொழிலாளர் அமைப்புகள் வந்துவிட்டன எனக்கூறலாம்.<br /><br />நமது அயல் நாடான பாகிஸ்தானில் பல தொழிலாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக மாறியுள்ளது. தொழில் துறையில் மிக முன்னேற்றம் அடைந்துள்ள ஜப்பானில் அனைத்து தொழிலாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக மாறியுள்ளது.<br /><br />உலகில் அதிக தொழிலாளர்களைக்கொண்ட நாடுதான் நமது இந்தியா. நமது நாட்டில் சிறிய தொகையிலான தொழிலாளர்கள்தான் அமைப்பு ரீதியாக செயல்படுகின்றனர். பெரும்பான்மையான தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாவர். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு போதிய கூலி கிடைப்பதில்லை. பெரும்பாலோருக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சம்பளம் கிடைப்பதில்லை.<br /><br />வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏராளமான தொழிலாளர்கள் நமது நாட்டில் உள்ளனர். இந்தியாவில் செயல்படும் தொழிலாளர் அமைப்புகளுக்கு இவர்களைப்பற்றி எந்த கவலையுமில்லை. கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படாமல் போதுமான சம்பளம் கிடைக்கும் ‘வைட் காலர்'(white colour) தொழிலாளர்களைப் பற்றித்தான் இவர்களது கவலையெல்லாம். தொழிலாளர்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி அவர்களை மதவெறிக்கொண்டவர்களாக மாற்றும் முயற்சியில் பாசிச சக்திகளும் தொழிலாளர் அமைப்பை நடத்திவருகிறது. இவ்வமைப்புக்கு தொழிலாளர்களைப்பற்றிய எக்கவலையுமில்லை. மாறாக இவர்களிடம் மதவெறிதான் மேலோங்கியுள்ளது. இவர்களின் சதிவலைகளைப் புரிந்துக் கொள்ளாமல் ஒரு பிரிவினர் இவர்களிடம் சிக்கியுள்ளனர்.<br /><br />’உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பது மே தினத்தின் முழக்கமாக யிருந்தாலும் இது சாத்தியமற்ற சூழலில்தான் உள்ளது. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னால்தான் தொழிலாளர்களின் விடுதலைக்காக போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. இன்றும் போதிய உரிமைகளை பெறாத சூழலில்தான் தொழிலாளர்கள் உள்ளனர். அவ்வப்போது சிற்சில போராட்டங்களின் மூலமாகத்தான் தங்களது அடிப்படைத் தேவைகளை பெற முடிகிறது உலகின் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு.<br /><br />இந்நிலையில் உலகின் ஒரு கொள்கை மட்டுமே எந்தவொரு போராட்டமும் இல்லாமலும், எத்தகைய தொழிலாளர் அமைப்புகளில்லாமலும் கேட்காமலேயே சலுகைகளை அள்ளி வழங்கி அவர்களின் வாழ்வில் வசந்தத்தை வீசச் செய்தது. அதுதான் இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி.<br /><br /><span style="color:#ff0000;">"நிச்சயமாக உங்கள் 'உம்மத்து' - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.”</span> (அல்குர்ஆன் 21:92)<br /><br />என்ற வசனத்தின் மூலம் பிரபஞ்சத்தின் இறைவனான அல்லாஹ் உலகில் ஏழை,பணக்காரன், தொழிலாளி, முதலாளி என்று பாகுபாடு இல்லை எல்லோரும் ஓரினம்தான் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறான்.<br /><br />இஸ்லாத்தின் புரட்சிகரமான உள்ளீடுகளை புரிந்துக் கொள்ளாதவர்கள் இஸ்லாத்தை சில சடங்குகள் சார்ந்த மதமாக தவறாக புரிந்து வைத்துள்ளனர். இதில் சில முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.<br /><br />இஸ்லாத்தை நபி(ஸல்...) அவர்கள் பிரச்சாரம் செய்ய துவங்கும் காலக்கட்டத்தில் வர்த்தகம் சார்ந்த பெரும் பணக்காரர்கள் சிறுவர்த்தகர்களை ஏமாற்றுதல் மிக இயல்பாக இருந்தது. செல்வத்தை சேமித்தல் என்கின்ற பேராசை எல்லாவிதமான நீதிமீறல்களுக்கும் வழி வகுத்திருந்தது.<br /></div><div align="justify"></div><div align="justify"><br /></div><div align="justify">"<span style="color:#ff0000;">நீங்கள் மிக்க அளவு கடந்து பொருள்களை நேசிக்கிறீர்கள்"</span> (89:20) <span style="color:#ff0000;">"நீங்கள் கப்ருகளை சந்திக்கும் வரையிலும் (பொருளை) அதிக வசப்படுத்திக் கொள்ளும் பேராசை அல்லாஹ்வை விட்டும் பாராக்காக்கிவிட்டது"</span> (102:1,2) என்றெல்லாம் திருக்குர்ஆன் இது குறித்து எச்சத்தது. மக்காவையும் அதனைச் சுற்றியும் இருந்த சிறுவணிகர்கள் இதனால் மிகுந்த பாதிப்படைந்தனர்.<br /><br />இந்திய பார்ப்பண கொள்கையும் இஸ்லாமிய கொள்கையும் ஒன்றுக்கொன்று நேர் முரனாவையாகும். கடவுளின் முகத்தில் தோன்றியவர்கள், முதலில் வந்தவர்கள், உயர்வானவர்கள் என்று மனுதர்மம் அறிமுகப்படுத்தும். பார்ப்பனர்களை வேதத்திற்கு உடமையாளர்களாகவும், வேதம் ஓதவும், ஓதுவிக்கவும் உரிமை படைத்தவர்களாகவும் கூறுகிறது பார்ப்பண மரபு.<br /><br />இஸ்லாமிய கொள்கையோ மேய்ப்பவர்கள், வேளாண்மையாளர்கள், நெசவாளர்கள், வர்த்தகர்கள், தச்சர்கள் இவர்களை வேதம் கொடுக்கப்பட்டவர்களாகவும், தூதர்களாகவும் காட்டுகிறது. இது போன்ற தொழில் செய்பவர்களை பார்ப்பண கொள்கை புறசாதிகளாக வர்ணத்திற்கு வெளியே நிறுத்துகிறது.<br /><br />வர்ணாசிரமக் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட இந்திய அமைப்பை உடைத்துப் போட்டு நவீன இந்திய அமைப்புக்கு அடித்தளமிட்ட மார்க்கம் இஸ்லாம் ஆகும்.<br /><br />வருவாய்; நீதி, நிர்வாகம், தத்துவம், இலக்கியம், மொழி, கட்டடம், வழிபாடு, உணவு, உடை என எல்லாத் துறைகளிலும் தனது பங்களிப்பை முழுமையாக செய்த மார்க்கம்; இன்று உலக அரங்கில் ஏகாதிபத்தியத்தின் முன்னும், இந்தியாவில் உயர்சாதி ஏகாதிபத்தியத்தின் முன்னும் சவலாக விளங்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.<br /><br />கி.பி.ஆறாம் நூற்றாண்டிலேயே தொழிலாளர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்றிவைத்த உன்னத மார்க்கம் இஸ்லாம்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify"><span style="color:#ff0000;">'உழைப்பாளியின் வியர்வை உலருமுன் கூலியைக் கொடுங்கள்’</span> <span style="color:#ff0000;">என்று சொன்னதும், உழைப்பாளியின் காய்த்துத் தழும்பேறிய கரங்களைப் பிடித்து முத்தமிட்டார்கள்</span> என்பதும் நபி(ஸல்...)அவர்களின் வாழ்விலிருந்து நமக்கு கிடைக்கும் செய்திகளாகும்.<br /><br />இன்று உழைப்பவர்கள் மாட்டுக் கொட்டகைப் போன்ற இடங்களில் வாழ்வதும், அவர்களின் மேலதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து அதிகாரம் செய்வதும் நடந்துவரும் காட்சியை நாம் காணத்தான் செய்கிறோம். ஆனால் இஸ்லாத்தின் நடைமுறையை இங்கே சற்று பாருங்கள்.<br /><br /><span style="color:#ff0000;">'உங்களில் ஒருவரின் பணியாள் சமைத்து, அந்த உணவைச்சமைப்பதற்காக வெப்பம், புகை ஆகிய சிரமங்களை சகித்துக்கொண்டு, அந்த உணவை அவரிடம் கொண்டு வருகிறான் எனில், எஜமான் அவனைத்தன்னுடன் உட்கார வைத்துக்கொண்டு (இருவரும் சேர்ந்து) உண்ணட்டும்! உணவு குறைவாக இருந்தால், அதிலிருந்து ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் அவனுடைய கையில் கொடுக்கட்டும்!</span>’(நூல்: முஸ்லிம்).<br /><br />எவ்வளவு உரிமைகளை தொழிலாளர்களுக்கு இஸ்லாம் அளித்தது என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் தேவை?<br /><br />இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுமுன்பு முந்தியகாலக்கட்டத்தில் நடைமுறையிலிருந்ததுதான் அடிமைமுறை. இஸ்லாம் எப்பொழுது அந்த அராபியத் தீபகற்பத்தில் ஒளிவீச ஆரம்பித்ததோ அன்றிலிருந்து அடிமைகளின் வாழ்வை சீர்திருத்தியது. மட்டுமல்லாமல் படிப்படியாக் அவர்களை அந்த அடிமைத்தளையிலிருந்து விடுவித்தது. அடிமைகளின் நிலை தொழிலாளர்களின் நிலையை விட மோசமாகும். ஆனால் இன்று உலகில் பல தொழிலாளர்களும் கொத்தடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர். இதோ அடிமைகள் விவகாரத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டுதலை பாருங்கள்:<br /><br />"<span style="color:#ff0000;">அடிமைப்பெண்ணும், அடிமை ஆணும் உங்கள் உடன்பிறப்புகள் ஆவர். அவர்களை இறைவன் உங்கள் ஆதிக்கத்தில் தந்திருக்கிறான். உங்களில் ஒருவருடைய ஆதிக்கத்தில் இறைவன் ஒரு சகோதரனைத் தந்தால் அவர், தான் உண்பதையே அவனுக்கு ஊட்டட்டும், தான் அணியும் ஆடையையே அவனுக்கு அணிவிக்கட்டும். அவனுடைய சக்திக்கு மிஞ்சிய வேலைப்பழுவை அவன் மீது சுமத்த வேண்டாம். அவனுடைய சக்திக்கு மிஞ்சிய வேலைச்சுமையை அவனுக்குதந்தால்(அவன் அதைச்செய்ய முடியாமல் போனால்) அந்த வேலையில் அவர் அவனுக்கு துணை புரியட்டும்." </span><span style="color:#000000;">(</span>நூல்:புஹாரி, முஸ்லிம்).<br /><br />தொழிலாளர்களின் உழைப்பில் உண்டுவாழும் முதலாளித்துவ வர்க்கம் தங்களது வியாபார வெற்றிக்காக நடத்தப்படும் விருந்துகளில் கூட ஏன் எந்த சலுகைகளை கூட அளிக்கப்படாத நிலையும் மேலும் தொழிலாளர்களை தீண்டத்தகாதவர்களாக காணும் நிலையைத்தான் நாம் இன்று கண்டுவருகிறோம்.<br /><br />ஆனால் இஸ்லாமோ விருந்துகளிலேயே மோசமானது பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து என நமக்கு கற்பித்து தருகிறது.<br /><br />உலகின் முதலாளித்துவ சக்திகள் தொழிலாளிகள் எப்பொழுதும் தொழிலாளிகளாகவே இருக்கவேண்டும் என்று விரும்புகின்றன. ஆனால் இஸ்லாமிய சமூக சூழலில் தொழிலாளர்கள் முதலாளிகளாகவும் மாறியுள்ளதைக் காணலாம்.<br /><br />அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி (ரலி) அறிவித்தார். <span style="color:#ff0000;">"நபி) ஸல்...)தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி ஒரு 'முத்து' கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!"</span> [நூல்;புஹாரி எண் 2273 ]<br /><br />இன்று உழைப்பது கேவலமாக கருதும் சூழல் நிலவுவதைக் காண்கிறோம். உண்ணவேண்டும், உறங்கவேண்டும் எளிதான வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற மனோநிலையில் தான் வளரும் தலைமுறையினர் உள்ளனர்.<br /><br />இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; <span style="color:#ff0000;">"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்."</span> [நூல்;புஹாரி,எண் 2072 ]<br /><br />இஸ்லாம் உருவாக்கிய சமூக அமைப்பைப் பொறுத்தவரை அங்கு தொழிலாளர், முதலாளி என்ற வர்க்கபேதமில்லை.மாறாக அவர்கள் ஒருவர் மற்றவரின் கண்ணாடியைப் போன்ற, ஒரு கட்டத்தை வலுப்படுத்தும் செங்கல்களைப் போன்ற, ஒரு உடலின் உறுப்புகளைப் போன்ற சகோதரர்களாவார்கள். அவர்களிடையே ஏமாற்றும், மோசடியும், அபகரிப்பும், பிரிவினை வாதமும் ஏற்படுவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவேயில்லை. அத்தகையதொரு சமூக கட்டமைப்பைத்தான் நபிகளார் அந்த அய்யாமுல் ஜாஹிலிய்யா என்று அழைக்கப்பட்ட அரபு சமூகத்தில் மத்தியில் உருவாக்கி காட்டினார்கள்.<br /><br />இதன் பாதிப்பு உலக முழுவதையும் ஆக்கிரமித்தது. அத்தகையதொரு சமூக கட்டமைப்பு இன்றும் நம்மிடையே தேவைப்படுகிறது. அதனை உருவாக்கவேண்டுமானால் எந்தக்கொள்கை அந்த சமூக சூழலை உருவாக்கிக்காட்டியதோ அந்தக்கொள்கை நம்மிடம் வேண்டும்.<br /><br />ஆகவே அந்த உன்னத கொள்கையை நாம் ஏற்றுக்கொள்வதன் மூலமே தொழிலாளி, முதலாளி என்ற பாரபட்சமில்லாத சமூகம் உருவாக சாத்தியமாகும். இதுவே இந்த மே 1 தொழிலாளர் தினத்தில் நாம் விடுக்கும் உலக சமூகத்திற்கு நாம் விடுக்கும் அழைப்பாகும்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-79557697741460446312010-04-22T23:35:00.003+04:002010-05-01T16:29:35.513+04:00இன்று சர்வதேச புத்தக தினம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0R1qaCL9l2y-_rcXyrRvPn1Bc8K6WxKHtxOUHCh2bToM6CYrTEMqKuMVi17vYmpJN3tFtQfZAnvwn4TmL00zOerWSr5eYFVGFDlh_jySrV-cVY80cVjrNzipTPbmw-vc8RypVYO_kE6HU/s1600/WBD%2520logo%252010%2520WWW_RGB.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5463051266948108034" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 256px; CURSOR: hand; HEIGHT: 253px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0R1qaCL9l2y-_rcXyrRvPn1Bc8K6WxKHtxOUHCh2bToM6CYrTEMqKuMVi17vYmpJN3tFtQfZAnvwn4TmL00zOerWSr5eYFVGFDlh_jySrV-cVY80cVjrNzipTPbmw-vc8RypVYO_kE6HU/s400/WBD%2520logo%252010%2520WWW_RGB.jpg" border="0" /></a>சர்வதேச புத்தக தினம்: இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் குழந்தைகளுக்குப் புத்தகங்களைப் பரிசளிப்பது வழக்கம். பல ஆண்டுகளாக மார்ச் 5 அன்று உலகப் புத்தக நாள் அந்நாடுகளில் கொண்டாடப்பட்டது.<br /><br />1923ல் ஸ்பெயின் நாட்டில், 'கேடலோனியா' நகர புத்தக விற்பனையாளர்கள் 'மிகையில் டே செர்வாண்டிஸ்' என்ற எழுத்தாளர் மறைந்த ஏப்ரல் 23ம் தேதி புத்தக தினமாகப் பரிந்துரைத்தனர். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் என்பதற்காக ஏப்ரல் 23ம் தேதி சர்வதேச புத்தக தினமாக 1995ல் யுனெஸ்கோ அறிவித்தது.<br /><br />புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது: புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள். புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான்! ஆனால், இது இங்கல்ல... அமெரிக்காவில்! சமீபத்திய ஆய்வில் தான் இவ்விஷயம் தெரிய வந்துள்ளது.<br /><br />இந்தியா நிலை என்ன? நம் இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்ல; படிக்கின்றனர். இணையம், இ-புக், இ-ரீடர் என்று நவீன தொழில்நுட்பம் பெருகியுள்ள இக்காலத்தில், இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகளிடம், புத்தகத்தின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது என்பது, சிலரின் கருத்தாக, ஆதங்கமாக, வேதனையாகக் கூட இருக்கிறது. உண்மை அதுதானா என்பது தீர ஆராயப்பட வேண்டியதுதான்.</div><div align="justify"></div><div align="justify"></div><p align="justify">அண்மையில் நேஷனல் புக் டிரஸ்ட், புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி, இந்திய இளைஞர்களிடையே ஓர் ஆய்வு நடத்தியது. அதில், செய்திகள் மற்றும் தகவல்கள் அறிவதற்காக, 63 சதவீத இளைஞர்கள், நாளிதழ்களையும், 17 சதவீதம் பேர், வார, மாத பத்திரிகைகளையும் நாடுகின்றனர் என்றும், செய்திகளுக்காக இணையத்தை நாடுவோர், வெறும் 7 சதவீதம் தான் என்பதும், தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு, இந்திய இளைஞர்களிடையே, படிக்கும் பழக்கம் இன்னும் குறைந்து விடவில்லை என்பதை காட்டுகிறது. </p><p align="justify"></p><p align="justify">ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில், 2,000 பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந் துரை செய்கிறது. ஆனால் நம்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக, 32 பக்கங்கள் மட்டுமே படிக்கின்றனர் என, யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.<br /><br /><strong><span style="color:#ff0000;">புத்தகக் காலம்</span></strong>: ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை புத்தகச் சந்தைகளின் காலமாகக் கருதப்படுகிறது. சென்னை, டில்லி, கோல்கட்டா ஆகிய இந்திய நகரங்களில் புத்தகச் சந்தை முடிந்துவிட்டது. சர்வதேச அளவில் பொலோக்னா, பீனஸ் ஏர்ஸ், கெய்ரோ, ஜெருசலம், லண்டன், பாரீஸ், செயின்ட் பீட்டர் ஸ்பர்க், தாய்பே ஆகிய நகரங்களில் முன்பின்னாக புத்தகச் சந்தைகள் தொடங்கிவிட்டன. விரைவில் அவை முடிவடைய இருக்கின்றன. பல இணையதள நூலகங்கள் இணைந்து உலக இணையதளப் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. இதில் 25 லட்சம் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள முகவரி : <a href="http://www.eworldbookfair.com/">http://www.eworldbookfair.com/</a> </p>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-3104191801033888532010-03-22T16:29:00.005+04:002010-03-23T08:24:23.053+04:00உலக தண்ணீர் தினம்<div align="justify">உலகம் முழுவதும் தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டிற்கான தண்ணீர் தின முழக்கமாக "ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர்" என அறிவித்துள்ளது.<img id="BLOGGER_PHOTO_ID_5451434790055663922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 429px; CURSOR: hand; HEIGHT: 135px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPaHe5ABmt1-X9qr4c3j8Pr72eupl97NMBwXt876kKB01mV93Nt2kTrEXrfUUYDdv7yjDH5tQ9Ea6xA2E7dQXX-cLUQmKLrpZ8HLnpo6LmZncrAu3h3S78tnujYlVSTkyS7Vml_faCYrPr/s400/wwd2010.jpg" border="0" />ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கடைப்பிடிக்கத் துவங்கி பல்வேறு தலைப்புகளில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த முழக்கங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு தண்ணீரைக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.<br /><div align="justify"><br />இன்றைய தினம் தன்னார்வலர்களும் ஐ.நாவின் துணை அமைப்புகளின் பணியாளர்களும் உலக முழுவதும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். ஆண்டுக்கொரு முறை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மட்டும் ஈடுபடுவதிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கடைபிடிப்பதிலோ எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஏனெனில் ஆண்டுதோறும் தண்ணீர் தேவையின் அதிகரிப்பு ஒரு புறம் அதிகரிக்கும் சூழலில் தூய்மையான தண்ணீரின் தட்டுப்பாடும் அதிகரிக்கவேச் செய்கின்றது. </div><br /><div align="justify">பூமி பரப்பில் நீரின் இருப்பு 97 விழுக்காடாக அமைந்திருந்தாலும், பயன்படத்தக்க நீரின் அளவு 0.26 விழுக்காடு என்ற மிக சொற்ப அளவாகவே உள்ளது. தண்ணீரின் பயன்பாடு மற்றும் தூய்மையை பாதுகாத்தல் போன்றவற்றில் நாடுகளை ஆளும் அரசுகளும், பொதுமக்களும் அதி முக்கியத்துவம் அளித்தாலன்றி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவியலாது என்பதுதான் உண்மை. மனித சமூகம் ஏற்படுத்தும் கெடுதிகளால் இன்று தண்ணீரின் தன்மை மாசுபட்டு மனித சமூகம் பெரும் அபாயத்தை நோக்கி நிற்கிறது. </div><br /><div align="justify">நீர் நிலைகளையும், குளங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம் நம் உள்ளத்தில் ஏற்பட்ட உவகை இன்று எங்கே போனது? கரை புரண்டு தண்ணீர் ஓடும் நதிகளை பார்ப்பது அரிதாக மாறிவருகிறது. காய்ந்து போன நதிப் படுகைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. வருங்காலம் தண்ணீருக்காக மனித இனம் போராட போகும் காலம். போராட்டத்தின் சிறு பகுதியை கொஞ்ச காலமாகவே தமிழகம் காவிரி மற்றும் முல்லைப் பெரியார் பங்கீட்டில் அனுபவித்து வருகிறது. எவ்வளவு பொருள், உயிர் இழப்பு, பரஸ்பரம் வெறுப்பு, வேலை நிறுத்தம், நீதிமன்றம், சட்டம் என மனித உழைப்பு வீணாவது என்று கணக்கிட்டால் ரூபாய் மதிப்பில் பல கோடிகளைத் தாண்டும். </div><br /><div align="justify">தண்ணீருக்காக சமூகத்தின் ஒரு பகுதியினர் அல்லலுறும் பொழுது இன்னொரு பகுதி தண்ணீரை விரையம் செய்வதிலும், மாசுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் கொடுமை நிகழ்ந்தேறுகிறது. பணக்கார நாடுகள் எந்தவொரு பொறுப்புணர்ச்சியின்றி கழிவுகளை ஆப்பிரிக்க கடல் பகுதிகளில் கொட்டி அதன்மூலம் ஏற்பட்ட பாதிப்பினால் கொதிப்படைந்த ஒருபிரிவினர் இன்று சோமாலியா கொள்ளையர்களாக மாறிவிட்டனர். </div><br /><div align="justify">கடல்,ஆறு,குளம்,குட்டை,கிணறு என எல்லாவிதத் தண்ணீர் நிலைகளும் மாசுபடுத்தப்பட்டே வருகின்றன. தண்ணீர் மனிதனைப் படைத்த வல்ல இறைவனின் அருட்கொடைகளில் மகத்தானது. இறைவன் கூறுகிறான்: </div><br /><div align="justify"><span style="color:#ff0000;">"உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11), </span></div><div align="justify"><span style="color:#ff0000;">(மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம்."(அல்ஃபுர்கான், 25:48)</span> </div><div align="justify"></div><div align="justify">இறைவனின் பரிசுத்தமாக இறக்கிவைத்த தண்ணீரை மாசுபடுத்தி சீரழிக்கும் மனித சமூகத்தினை என்னவென்று கூறுவது? இன்று எந்தத் தண்ணீர் இறைவனது அருட்கொடையோ அதனை இன்று மனித வாழ்வை சீரழிக்கும் சாராய மதுபான வகைகளுக்கு பயன்பத்தும் இழிநிலைக்கு மனித சமூகம் சென்றுவிட்டது. தண்ணி பார்ட்டி, தண்ணி போட்டிருக்கான் என்ற வார்த்தைகளை சர்வசாதாரணமாக பயன்படுத்தும் அவல நிலையை நாம் காணத்தான் செய்கிறோம். </div><br /><div align="justify">நமது இந்திய தேசம் உலகின் இரண்டாவது, மக்கள் தொகை அதிகமான நாடு. ஆனால் இங்கே 200 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. இது அமெரிக்க மக்கள் தொகையை விட 2 1/2 மடங்கு அதிகம். இந்தியாவில் பரவும் தொற்றுநோய்களில் 21% தண்ணீர் மூலம் பரவுபவை. ஆண்டுதோறும் டயோரியா நோயால் மட்டும் 7,00,000 இந்தியர்கள் இறக்கின்றனர். ஆய்வுகள் கூறும் உண்மைகள் இவை.நம் நீர்நிலைகளும், நிலத்தடிநீரும் மாசுபட்டு கொண்டிருக்கும் அவலங்கள் நமக்கே தெரியும். இந்த 50 வருடங்களில் பெருகிவிட்ட தொழிற்சாலைகள், இவற்றின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்க படாமல் , நேரிடையாக கலப்பதால், நீர்நிலைகளும், வயல்களுக்கு இடப்படும் இராசயன உரங்கள், பூச்சிகொல்லிகள் இவற்றால் நிலத்தடி நீரும் பெருமளவு மாசுபட்டு போகின்றன. </div><br /><div align="justify">இந்தியா அழகான பல நதிகள் நிறைந்த நாடு. நதிகளை தாயாய் தெய்வமாய் போற்றுவதாக ஒரு மதத்தவர் கூறுகின்றனர். ஆனால் மதத்தின் பெயரால் தண்ணீரை மாசுபடுத்தி அழுக்கு நீராக்கும் பணியைத்தான் அவர்களில் ஒருசாரார் செய்து வருகின்றனர். இந்தியாவின் அதிமுக்கிய நதியான கங்கையின் இன்றைய நிலை என்ன? உலகின் மிக அழுக்கான நதிகளில் ஒன்றாக மாறிவிட்டது. கங்கா ஜலம் என்றால் புனிதம் என்றார்கள் ஆனால் புனிதம் என்பது போய், குளித்தால் தோல் நோய்கள் வரும் அளவுக்கு தகுதியற்றது ஆகிவிட்டது. இரசாயன கழிவுகள், ப்ளாஸ்டிக் குப்பைகள், அதிக அளவு சுற்றுலா பயணிகள் உபயோகித்தல், இவை போதாதென்று, இறந்தவர்களின் சடலங்களை `ஜலசமாதி’ செய்யும் மூடநம்பிக்கைகள், இவை அனைத்தும் சேர்ந்து ஒரு அழகான நதியை அழுக்காக்கி விட்டது. யமுனை உள்ளிட்ட பல நதிகளுக்கும் இதே கதிதான். </div><br /><div align="justify">விநாயகர் சிலை விஜர்சனம் என்ற பெயரில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்ற உலோக கலவையால் செய்யப்பட்ட சிலைகளை கடலில் கரைத்து அதன்மூலம் கடலில் வாழும் மீன்களுக்கும் அதனை பயன்படுத்தும் மனிதர்களுக்கும் நாசத்தை விளைவிக்கின்றனர் ஒரு சாரார். ஆனால் அரசோ இதனையெல்லாம் கண்டும் காணாமல் உள்ளது. ஒரு புறம் மதவாதிகளால் என்றால் இன்னொருபுறம் மத்தியில் ஆளும் அரசுகளின் உலகமயமாக்கல் போன்ற இறையாண்மைக்கு உலைவைக்கும் கொள்கைகளால் தண்ணீரின் தன்மை மாசுபடுத்தப்பட்டு வருகிறது. </div><br /><div align="justify"><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUkvGuP3L3FdJNnUImQYVH5RxhqO1_zYyYnySg88KjvQgTCTscFssECEW5YWBOsjEuHSexf8aagGdFyu2lkGARdH19yzmKY2OijNia4rw-Fp9IQRdkFhIhMuOBC2i4R75Sj0oBEqg9aQeT/s1600-h/cokesucks.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5451450888313780178" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 256px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUkvGuP3L3FdJNnUImQYVH5RxhqO1_zYyYnySg88KjvQgTCTscFssECEW5YWBOsjEuHSexf8aagGdFyu2lkGARdH19yzmKY2OijNia4rw-Fp9IQRdkFhIhMuOBC2i4R75Sj0oBEqg9aQeT/s400/cokesucks.gif" border="0" /></a>நமது முக்கியமான நீராதாரம் நிலத்தடி நீராகும். விவசாயம், நமது அன்றாட தேவைகளுக்கு நிலத்தடி நீரையே உறிஞ்சுகிறோம். அதிக பயன்பாடு, போதிய மழையின்மை, இவற்றோடு` கோகோ கோலா போன்ற ஏகாதிபத்திய அந்நிய நாட்டு கம்பெனிகளும் நிலத்தடி நீர்வறட்சிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கம்பெனிக்கு இந்தியா முழுமையும், 52 பாட்டிலிங் மையங்கள் உள்ளன. </div><br /><div align="justify"></div><div align="justify">கேரளாவில் இதன் காரணமாகவே,`பிளாச்சிமேடு’என்னும் கிராமம் நிலத்தடி நீரையிழந்து விட்டதும், அங்கு டிரக்குகள் மூலம் குடிநீர் விநியோகிக்க படும் அவலமும் தெரிய வந்துள்ளது. `கோக் குடிப்பது ஒரு இந்திய விவசாயியின் இரத்தத்தை குடிப்பதற்கு ஒப்பானது’ என்றெல்லாம் கூறப்பட்டாலும், விற்பனை அமோகமாக தான் உள்ளது. </div><br /><div align="justify">இந்தியாவின் சுற்றுசூழல் மற்றும் அறிவியல் மையம், கோக், பெப்சி முதலான மென் பானங்களை பரிசோதித்த பின் வெளியிட்ட தகவல்,'இவை மூன்று அல்லது ஐந்து வகை பூச்சிகொல்லிகள் கலந்த காக்டெய்ல்' என்பது தான். அவ்வப்போது கரப்பான், பல்லி இவற்றின் உடல்களை பாதுகாக்கும் ஃபார்மலின் திரவமாகவும் செயல் படுகிறது. பத்து நாட்கள் சர்ச்சைகள், அடங்கியபின், மறுபடி விற்பனை முன்னைப் போலவே... </div><br /><div align="justify">கேடு பயக்கும் என தெரிந்தும், இதன் கவர்ச்சி விளம்பரங்களில் மயங்கி நாமும் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு இணையான, நம் நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த நாம் தயங்குவதால் உள்நாட்டு குளிர்பானக் கம்பெனிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்படுகின்ற அவல நிலையும் நிகழ்கிறது. </div><br /><div align="justify">எனவே இதுத்தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும். தண்ணீரை வீண்விரயம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நமது சுற்றுப்புற சூழலை மாசுப்படாமல் பாதுகாக்க வேண்டும். </div><br /><div align="justify"></div><div align="justify">அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராகவும், அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு நமது தண்ணீரை தாரைவார்த்துக் கொடுப்பதற்கு எதிராகவும் போராட முன்வரவேண்டும். நமது தேவை போக மீதமான தண்ணீரை பிறருக்கு கொடுக்கும் மனோநிலையும் நமக்கு வரவேண்டும். இத்தகையதொரு மாற்றம் வராமல் தண்ணீருக்காக கண்ணீர் சிந்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. </div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#ff0000;">"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் (இறைவன்) நேசிப்பதில்லை."</span> (அல்குர்ஆன்7:31)</div></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-54512663461100791542010-03-22T11:36:00.002+04:002010-03-22T11:56:02.917+04:00ஷேக் அஹ்மத் யாஸீன்:இரத்த சாட்சியத்தின் 6-வது ஆண்டு<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxqfoeeadyuYzgLXVqERYKGJBfihzfijmvyQbldrXM3KFpyRTRBnVNdHSH68frDsNO1iOw-BqmAAaF_deR9QpHmDzzTptXwi-5iRKCpDjUWjnVeyeBhQleHYDXEQKgZfom2irgaeJPTTih/s1600-h/yasin001.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5451363490331647154" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 223px; CURSOR: hand; HEIGHT: 216px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxqfoeeadyuYzgLXVqERYKGJBfihzfijmvyQbldrXM3KFpyRTRBnVNdHSH68frDsNO1iOw-BqmAAaF_deR9QpHmDzzTptXwi-5iRKCpDjUWjnVeyeBhQleHYDXEQKgZfom2irgaeJPTTih/s400/yasin001.jpg" border="0" /></a>மார்க்க அறிஞரும், வயோதிக வயதிலும் உடல் ஊனமுற்றாலும் உள்ளம் தளராமல் சக்கர நாற்காலியில் சஞ்சரித்த ஃபலஸ்தீன் போராளிகளின் உற்றத் தலைவரும், உலக முஸ்லிம்களின் நேசத்திற்குரியவருமான ஷேக் அஹ்மத் யாஸீன் இரத்த சாட்சியம் வகித்து இன்று 6 ஆண்டுகள் நிறைவுறுகிறது.<br /></div><div align="justify"><br />2004 ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி ஃபஜ்ர் தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு மஸ்ஜிதிலிருந்து வெளிவரும் வேளையில் இஸ்ரேலின் ஹெலிகாப்டர் ஏவுகணைத் தாக்குதலில் இரத்தசாட்சியானார் ஷேக் அஹ்மத் யாஸீன்.</div><div align="justify"><br /></div><div align="justify">ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளுக்கு நள்ளிரவில் பிறந்த கள்ளக் குழந்தையான இஸ்ரேல் உருவாகிய துவக்க நாள் முதல் சியோனிஷ்டுகளின் தோட்டாக்களுக்கும், தடைகளுக்குமிடையே சிக்கித் தவித்த ஃபலஸ்தீன மக்களின் விடுதலைக்காக வேண்டி போராடியதுதான் ஷேக் அஹ்மத் யாஸீன் என்ற வீரமிகு போராளியைக் கொல்ல இஸ்ரேலை தூண்டியது.</div><div align="justify"><br /></div><div align="justify">தெற்கு ஃபலஸ்தீனில் அல்ஜுரா என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் ஷேக் அஹ்மத் யாஸீன் அவர்கள் 1936 ஆம் ஆண்டு பிறந்தார். சிறிய வயதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டது. 1964 இல் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் சேரும் வரை ஆசிரியராக பணியாற்றினார். </div><div align="justify"><br /></div><div align="justify">எகிப்திற்கு சென்ற ஷேக் யாஸீன் இமாம் ஹஸனுல் பன்னாவால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பொருளாதார பிரச்சனையால் தனது படிப்பை தொடர முடியாமல் ஃபலஸ்தீனிற்கு திரும்பி வந்த ஷேக் யாஸீன் ஆசிரிய பணியை தொடரவே அல் முஜம்மா அல் இஸ்லாமி என்ற இயக்கத்தை துவக்கினார். இறுதிநாள் வரை ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் பூமி என்றும் அதனை மறுக்க எந்தவொரு ஆட்சியாளாராலும் இயலாது என்று ஷேக் யாஸீன் உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தார்.</div><div align="justify"><br /></div><div align="justify">இஸ்ரேலுக்கெதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற ஃபலஸ்தீன் மக்களின் மனோநிலையை புரிந்துக் கொண்ட ஷேக் யாஸீன் 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற தற்காப்பு இயக்கத்தினை உருவாக்கினார். </div><div align="justify"><br /></div><div align="justify">1989 ஆம் ஆண்டு இஸ்ரேலிய அரசு ஷேக் யாஸீன் மீது கொலைக்குற்றம் சுமத்தி சிறையிலடைத்தது. 1997 ஆம் ஆண்டு அவர் சிறையிலிருந்து விடுதலையானார். இஸ்ரேல் முன்வைக்கும் ஒவ்வொரு தந்திரங்களையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்திய ஷேக் யாஸீனைக் கொல்ல இஸ்ரேல் பல முறை முயற்சித்த பிறகும் அவை அனைத்தும் தோல்வியை சந்தித்தன. கடைசியில் தனது ஆயுள் முழுக்க ஃபலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட அந்த வீரமிகுப் போராளி இரத்த சாட்சியானார். </div><div align="justify"><br /></div><div align="justify">ஃபலஸ்தீனத் தலைவர்களையும், பிஞ்சுக் குழந்தைகளையும் கிஞ்சிற்றும் மனசாட்சியில்லாமல் கூட்டுப் படுகொலைச் செய்து கொண்டாடியபிறகும் இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராக ஃபலஸ்தீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் சிறிதளவு கூட பலவீனமடையாததற்கு காரணம் ஷேக் அஹ்மத் யாஸீன் அவர்கள் ஏற்றிவைத்த எதிர்ப்புப் போராட்டத்தின் தீபமாகும். </div><div align="justify"><br /></div><div align="justify">உடலை பலகீனப்படுத்தும் நோய்களையும்,யூத வெஞ்சிறையில் கொடிய சித்திரவதைகளையும் பொருட்படுத்தாமல் பிறந்த மண்ணிற்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் உயிர் நாடியாக திகழ்ந்த ஷேக் அஹ்மத் யாஸீன் அவர்கள், "நாங்கள் நெஞ்சுறுதியின் உடன்பிறப்புகள். போராட்டத்தின் தீப்பிழம்புகள் .சிதறும் தலைமுறையின் உற்ற நண்பர்கள். தன்மானத்தின் பாதுகாப்பிற்காகத்தான் போர்செய்யும் உறுதி பூண்டிருக்கிறோம்".என்ற இந்த வார்த்தைகள் எதிரிகளின் நெஞ்சங்களில் பேரிடியையும், உலக முஸ்லிம்களுக்கு உத்வேகத்தையும் அளிக்கக் கூடியதாகும்.</div><div align="justify">source:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5616628369929281472010-03-22T07:45:00.000+04:002010-03-22T07:55:50.105+04:00ஹெட்லியும் பின்லேடனும்<div align="justify">'அவன் ஒரு தகப்பனுக்கு பிறக்காதவன்! ஆனால் அந்த தகப்பனுக்கு பிறக்காதவன் நம்ம ஆளு!' என்ற அமெரிக்காவில் உபயோகிக்கப்படும் இச்சொல்லில் தந்தை என்பதற்கு பதிலாக தீவிரவாதி என்ற வார்த்தையை இணைத்துவிட்டால் டேவிட் கோல்மான் ஹெட்லியுடன் அந்த நாடு காண்பிக்கும் மென்மையான அணுகுமுறையின் உள்ளடக்கத்தை புரிந்துக் கொள்ள இயலும். இதுதான் அமெரிக்கா. </div><div align="justify"><br /><strong><span style="color:#ff0000;">அமெரிக்கா எதுவும் செய்யலாம்.</span></strong><br />உஸாமா பின் லேடனை விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக்கமாட்டோம் என்று ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளர்கள் கூறவில்லை, மாறாக அந்நிய தேசத்திற்கு விட்டுக் கொடுக்கமாட்டோம் என்பதே அவர்களுடைய நிலைப்பாடாகும். அதற்கெதிராக அமெரிக்கா செய்தது என்ன? ஆப்கானிஸ்தான் என்ற ஒரு சுதந்திர தேசத்தை ஆக்கிரமித்து குண்டுவீசி தகர்த்து அப்பாவிகளின் குருதியை குடித்து போர்க்களமாக்கி ஒரு அமைதியற்ற தேசமாக மாற்றியது. </div><div align="justify"><br />மும்பை தாஜ் ஹோட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் உள்பட இந்தியாவில் நடந்த ஒரு டஜன் குண்டுவெடிப்புகளில் பங்கெடுத்துள்ளதாக டேவிட் ஹெட்லி அமெரிக்க நீதிமன்றத்திடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.<br />தாஜ் ஹோட்டல் தாக்குதலில் மட்டும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 க்கும் அதிகமாகும். பாரபட்சமற்ற விசாரணைதான் தேவை. ஆனால் தற்ப்பொழுது அவ்வாறு ஒன்றும் நிகழப்போவதுமில்லை. காரணம், டேவிட் ஹெட்லியின் கைவசமுள்ளது அமெரிக்க பாஸ்போர்ட். </div><div align="justify"><br />உலகின் எப்பகுதிக்கும் சென்று குண்டுவெடிப்பு நடத்தவும், கொலைகள் செய்யவும் பயன்படும் லைசன்ஸ். விசாரணையில்லாமல் எவரையும் குவாண்டனாமோ சிறைக் கொட்டகையில் அடைக்க அமெரிக்காவுக்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை.ஆனால் அமெரிக்கா சொந்த நாட்டுக் குடிமகனை எவருக்கும் விட்டுக் கொடுக்காது. அதுதான் அமெரிக்காவின் சட்டம். பிற நாடுகளும் இந்தச்சட்டத்தை பின்பற்றினால்? கேள்விக்கு பதில் கிடையாது! </div><div align="justify"><br />டேவிட் ஹெட்லிக்கு ஒரு வினாத்தாள் வழங்கி பதில் எழுதி வாங்குவதற்கான அமெரிக்காவிடமிருந்து அனுமதிக் கிடைத்த துணிச்சலில் உள்ளார் நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைத்தாலும் ஒப்படைக்கா விட்டாலும் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்க உரிய துணிச்சல் நமது சிதம்பரம் செட்டியாருக்கு இல்லை. </div><div align="justify"><br />அமெரிக்க நீதிமன்ற அதிகாரியொருவர் எழுதிக் கொடுக்கும் கேள்விகளுக்குத்தான் ஹெட்லி பதில் கூறவேண்டும் என்பதையும் அறிந்தால் சிதம்பரத்துக்கு இன்னும் சந்தோஷம் அதிகரிக்கும். </div><div align="justify"><br />இஸ்ரேல் என்ற பயங்கரவாதத்தை உற்பத்திச் செய்யும் தேசத்தின் உளவுப்பிரிவு அமெரிக்காவின் உதவியுடன் இந்தியாவிலுள்ள வலதுசாரி பயங்கரவாதிகளுடன் கூட்டணி அமைத்து இந்நாட்டின் பல பகுதிகளிலும் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றி வருகின்றார்கள் என்பது ரகசியமன்று. </div><div align="justify"><br />மலேகான் குண்டுவெடிப்பின் குற்றவாளிகளான சந்நியாசினி பிரக்யா சிங் தாக்கூர், ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோரை முறையாக விசாரித்திருந்தால் இந்த உண்மைகளெல்லாம் வெளிவந்திருக்கும். டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்காத சூழலில் நஷ்டமடைவது இத்தகையதொரு வாய்ப்பாகும். அவ்வாறு விசாரித்தால்தான் குண்டுவெடிப்பு நடந்த உடனேயே ஏற்கனவே தயாராக்கி வைத்திருக்கும் சில அமைப்புகளின் பெயரையும், சில நபர்களின் பெயரையும் வெளியிடுவதும், சிலரைக் கைதுச் செய்து தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதும் முடிவுக்கு வரும்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-39497882827629173022010-03-20T22:02:00.002+04:002010-03-20T22:21:16.967+04:00பிரேசிலின் துணிச்சல்: அழிவுப்பாதையில் அமெரிக்க ஏகாதிபத்தியம்?<div align="justify">அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதகுலத்திற்கெதிரான நாசவேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்பதனை பல்வேறு நிகழ்வுகள் நமக்கு எடுத்தியம்புகின்றன.<br /><br />கடந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற மாநாட்டில் WTO வின் வியாபார ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக ஜெனிவாவில் ஒரு நாடகம் நடந்தேறியது. பிரேசில் பருத்திக்கு மானியம் வழங்கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்திற்கு WTO தீர்ப்பு வழங்கியது. இது அமெரிக்காவிற்கு பெருத்த அடியாகும்.<br /><br />மானியம் வழங்குதல் எப்பொழுதும் தவறல்ல. அது சிறு சிறு அளவில் உற்பத்தி செய்யும் ஏழை விவசாயிகளுக்கு கொடுத்தால் அவர்களது வாழ்க்கை சிறப்புறும். மாறாக,அமெரிக்கா தனது விவசாயத்திற்கு கொடுக்கும் மானியத்தில் மூன்றில் இருபகுதி பருத்திக்கு வழங்கியது. அதுவும் பெரும் பண முதலைகளால் நடத்தப்படும் வியாபார நிறுவனங்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.<br /><br />இதனால் என்ன பிரச்சனை? அமெரிக்கா அவர்களுடைய மக்களுக்கு தானே வழங்குகிறது? இதில் என்ன கவலை வேண்டி கிடக்கிறது என்றால் அங்கு தான் நாம் கவலைப்பட வேண்டி உள்ளது. வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளின் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் இதன் மூலம் பலமடங்கு தாக்குதலுக்கு உள்ளாகிறது. பொருளாதாரத்தில் வளமான நாடுகளை ஆயுதத்தாலும் மற்ற ஏழை நாடுகளை பொருளாதாரத்தாலும் தாக்குவது அமெரிக்காவின் வாடிக்கை. அதில் வேடிக்கை என்னவெனில், இக்கொடுமைகளை செய்துகொண்டு ஏழை ஆஃப்ரிக்கா நாடுகளுக்கு பண உதவி செய்வதாக முதலைக் கண்ணீர் வடிப்பதுதான்.<br /><br />அமெரிக்காவின் இந்த பகுதி மானியம் எண்ணிக்கைகளை ஒட்டு மொத்தமாக நோக்கினால், 2001 ல் வழங்கிய மானியம் பர்கினா ஃபாசோ என்ற நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP-Gross domestict product)யை விட அதிகமாகும். (பர்கினாஃபசோ என்ற நாடு மேற்கு ஆஃப்ரிக்காவின் 6 நாடுகள் சூழ இருக்கும் நாடு இங்கு வாழும் மக்களின் 60% மேலாக முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள்(20,00,000 நபர்கள்) பருத்தி விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். 50%மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.<br />அமெரிக்கா வழங்கிய மானியமானது ஆஃப்ரிக்கா நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை விட மூன்று மடங்கு கூடுதலாகும். குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போலாகும். அமெரிக்கா வழங்கும் இந்த மானியத்தால் பெறும் பணக்கார முதலைகள் தங்களது பருத்தி ஏற்றுமதிக்கான விலையை உலகளாவிய சந்தைவிலையை விட குறைவாக கொடுக்க முன்வருவதால் இந்த ஏழைநாடுகளும் அடிமாட்டு விலைக்கும் குறைவாக கொடுத்து தங்களது உற்பத்தி செய்யும் விலைக்கே விற்க வேண்டிய சூழ்நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.<br /><br />ஆனால்,இந்த ஏழை நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக எதுவும் செய்ய இயலாத சூழல். இவ்வழக்கை நடத்துவதற்கு பெருமளவில் பணம் தேவைப்படும். பின்னர் அப்படியே வழக்கு படுத்துவிடும் WTO எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா கட்டுப்படுமா என்பது சந்தேகம். எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா அந்த நாடுகளுக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்திவிடும். இதற்கெல்லாம் பயந்து அந்த ஏழை நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக எதுவும் செய்ய இயலாமல் வாய்மூடி அமைதி காத்து வருகின்றனர்.<br /><br />ஆனால்,பிரேசில் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் W.T.O வில் தனது வழக்கை 2004 ல் தொடங்கியது. சந்தோசமான விஷயம் என்னவென்றால் வளர்ந்து வரும் நாடாகிய இந்தியாவும் பிரேசிலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது தான். பிரேசில், வெனிசுலா, கியூபா,போன்ற நாடுகள் தங்களால் இயன்றவரை அமெரிக்காவின் பொருளாதார ஏகாதியபத்திற்கு எதிராக போராடிவருகின்றன.<br /><br />இதனால் என்ன இலாபம் நமக்கு, ஏழை நாடுகளுக்கு கொஞ்சம் தைரியம் கிடைத்துள்ளது. சிறிய W.T.O உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.<br /><br />தற்ப்பொழுது பிரேசில் அமெரிக்கப் பொருட்களுக்கு பல மடங்கு வரி விதித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கப் பொருட்களை கொள்ளை விலைக் கொடுத்து வாங்க யார் முன்வருவார்கள் .இது ஒரு மறைமுக பொருளாதாரத் தடையாகும். இனி அமெரிக்கா வைத்துள்ள காப்புரிமை பெற்ற மருந்துகளை தானாக பிரேசில் தயாரிக்கலாம். அமெரிக்கா எதுவும் செய்ய இயலாது. இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு புதிய வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளது.<br /><br />எல்லாவற்றையும் விட இது அமெரிக்காவின் தோல்வி என்றே கருத வேண்டும். கடந்த ஆண்டு.சீனாவின் இரப்பர் டயர்களுக்கு அமெரிக்கா விதித்த வரிக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளின் மீதான சலுகைகளை சீனா ரத்து செய்தது. எல்லா முனைகளிலும் அமெரிக்காவிற்கு இது போன்ற தோல்விகள் ஏற்படும் பொழுது, அதாவது ஆஃப்கான்,ஈராக் போன்ற முஸ்லிம் நாடுகளில் போராளிகளுக்கெதிராக அமெரிக்கா தீட்டிய திட்டங்கள் முற்றிலும் நிறைவேறாமல் தோல்விகள் தொடர்கின்றன.<br /><br />மனிதகுலத்திற்கு எதிரான திட்டங்களை ஒன்று அமெரிக்கா விட வேண்டும். இல்லையேல் எல்லா கொடுங்கோல் வல்லரசுகளுக்கும் ஏற்பட்ட முடிவே அமெரிக்காவுக்கும் ஏற்படும். பொறுத்திருந்து பார்ப்போம்!</div><div align="justify"></div>இன்ஷா அல்லாஹ்!பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-34105081977220896322010-03-09T07:53:00.000+04:002010-03-09T07:59:14.639+04:00பசு நேசர்களின் கோஷமும் துவேஷமும்<div align="justify">கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு பசுவதை தடைச்சட்ட மசோதாவை நிறைவேற்றி விட்டு திடீரென அதனை வாபஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் பசுவதை தடைச்சட்டம் மீண்டும் சர்சைக்குரிய விஷயமாக மாறிவிட்டது.</div><div align="justify"><br />பா.ஜ.க அரசு நிறைவேற்றிய பசுவதைத் தடைச் சட்டம் விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தும் என ஜனதா தளம் தலைவர் தேவகெளடா எச்சரிக்கை விடுத்திருந்தார். பயனற்ற கால்நடைகளை விவசாயிகள் என்னச் செய்ய வேண்டுமென்பது கெளடாவின் முக்கிய கேள்வியாகும். </div><div align="justify"><br />எந்த பயனுமற்ற கால்நடைகளை பாதுகாக்க இயலாமல் அவிழ்த்து விடும் பொழுது அவை சாலைகளில் அலைந்து திரிவதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதோடு, பசியால் வாடி சாலைகளில் செத்து விழும் காட்சிகள் பசுவதைத் தடைச்சட்டம் அமுலில் இருக்கும் வடநாடுகளில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. </div><div align="justify"><br />பசுக்களை பாதுகாக்க கோ சாலைகள் நிறுவவேண்டுமென்பது ஒரு கோரிக்கை. எந்த பயனுமற்ற பசுக்களை பாதுகாக்க வேண்டுமானால் நாடு முழுவதும் கோ சாலைகள் நிர்மாணிக்க வேண்டி வரும். பசுக்களை கொல்வதற்கு பதிலாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொலைச் செய்யும் சாலைகளாக மாறும் வாய்ப்புள்ளது என முக்கிய பத்திரிகை ஒன்று தமது தலையங்கத்தில் கவலையை தெரிவித்திருந்தது. </div><div align="justify"><br />பிரபலமான குருவாயூர் கோயிலுக்கு சொந்தமான கோ சாலையில் பசுக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பின் பயங்கர காட்சிகளை காண்பவர்களுக்கு வேறு ஏதேனும் கூற இயலுமா? பசுவதையைத் தடைச் செய்ய கர்நாடகா பா.ஜ.க அரசு முயற்சி மேற்க்கொண்டு வரும் பொழுது கர்நாடகாவின் பிரசித்திப் பெற்ற கோயிலான கொப்பால் கிருஷ்டகி துர்கா தேவி கோவிலில் ஒரே இரவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பசுக்களை பலிக் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. </div><div align="justify"><br />இன்று பசுவின் புனிதம் பற்றி வாய் கிழியப் பேசும் பார்ப்பனர்கள் முன்னொரு காலத்தில் பசு வேட்டையாடி அவற்றை யாகத்தில் வெட்டி பலி கொடுத்ததோடு மட்டுமல்லாது அவற்றின் இறைச்சியையும் உண்டுக் கொழுத்தவர்கள் என்றும், ஆரியர்களால் போற்றப்படும் வேத விற்பன்னர்களான பிரஜாபதி, யாக்ஞவல்கியர், தேவகுரு பிரகஸ்பதி போன்றவர்களும் மனு சாத்திரம், மகாபாரதம், போன்ற ஆரிய நூல்களும் பசு இறைச்சி உண்பதை நியாயப் படுத்துகின்றன.</div><div align="justify"><br />உயிர்ப்பிராணிகள் வதை தடுப்பு இயக்கத்தினரின் எதிர்ப்பையும் புறக்கணித்துதான் இந்த பசு இனப்படுகொலை நடத்தப்பட்டது. இதற்கெதிராக ப்ராணிதயா சங்க் என்ற இயக்கம் களமிறங்கிய பொழுதும் காவல்துறை மற்றும் ரெவின்யூ அதிகாரிகளின் துணையோடு இந்த கூட்டுப்பலி நடக்கத்தான் செய்தது. </div><div align="justify"><br />பசுக்களை அறுத்து விற்பவர்களின் கைகளை வெட்டுவோம் என கூச்சலிட்ட பஜ்ரங்தள்-ஸ்ரீராம சேனா தலைவர்கள் இந்த மகா பசு பலிக்கெதிராக மெளனம் சாதித்தனர்.</div><div align="justify"><br />பசுவதைக்கு எதிராக குரல் எழுப்பியவர்களின் நோக்கம் சுத்தமான அரசியலேயன்றி வேறென்ன. இந்தியாவில் மிகப்பெரிய கசாப்புச் சாலையாக திகழும் ஹைதராபாத் அல்கபீருக்கெதிராக ஹிந்து முன்னணியினர் போராட்டக் களத்தில் இறங்கி கலாட்டாச் செய்தது நினைவிருக்கலாம். முஸ்லிம் பெயர்க் கொண்ட இந்த மாட்டு இறைச்சித் தொழிற்சாலை ஒரு உயர்ஜாதி ஹிந்துவுடையது என்பதை அறிந்தவுடன் தங்களது போராட்டத்தை மூட்டைக் கட்டிவிட்டு அடங்கிவிட்டனர். </div><div align="justify"><br />பசுக்களை நேசிக்கிறோம் வணங்குகிறோம் என்று கூறுவோர் தான் பெரும்பாலான மாட்டு இறைச்சித் தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களாகவும், நிர்வாகிகளாகவும் உள்ளனர். </div><div align="justify"><br />பசு நேசர்களின் போலி நாடகத்தின் முகமூடியை கிழித்தெறிவது அத்தியாவசியமான ஒன்றாகும். பசுவை பாதுக்காப்போம் என்று கோஷம் எழுப்புவோர் தான் குஜராத் உள்ளிட்ட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு இனப் படுகொலைகளில் சிறுபான்மை முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்தனர். இவர்களுக்கு பசுவின் மீது நேசமும் இல்லை பாசமும் இல்லை. முஸ்லிம்கள் மீதான துவேஷத்தால் போடும் வேஷமாகும்.<br />செய்தி:<span style="color:#ff0000;">தேஜஸ் மலையாள நாளிதழ்</span></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-30523733496245830932010-03-08T19:16:00.002+04:002010-03-08T19:37:12.939+04:00மகளிர் தினத்திற்கு நூறு ஆண்டு: உள்ளத்தைச் சுடும் உண்மைகள்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheRDRLtNtmKK3_7pOselnAWzDr1ZfyKpsxTKRXwBvi9HTCcNX2iCffdptxmQmRtg2POap_s3XWKO_yfdsklVIh7KJkvIACEiaTckUxmxj9xYzLr3VO1iTY4_hB2TT1LgmRlQxTDAr_Pf04/s1600-h/2010_iwd_logo_rgb_3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5446287241751708338" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 317px; CURSOR: hand; HEIGHT: 195px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheRDRLtNtmKK3_7pOselnAWzDr1ZfyKpsxTKRXwBvi9HTCcNX2iCffdptxmQmRtg2POap_s3XWKO_yfdsklVIh7KJkvIACEiaTckUxmxj9xYzLr3VO1iTY4_hB2TT1LgmRlQxTDAr_Pf04/s400/2010_iwd_logo_rgb_3.jpg" border="0" /></a>மார்ச் 8ஆம் தேதி வழக்கம் போல் மீண்டும் ஒரு மகளிர் தினம் நம்மைக் கடந்து சென்றாலும் இம்முறை அந்த தினத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. சர்வதேச அளவில் மகளிர் தினம் கடைபிடிக்கத் துவங்கி 100 வருடங்கள் பூர்த்தியாகின்றன.<br /></div><div align="justify"><br />1910 ஆம் ஆண்டு கோபன்ஹெகனில் வைத்து நடைபெற்ற முதல் சர்வதேச மகளிர் தின மாநாடுதான் மார்ச் 8-ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது. இந்த தினத்திற்கு மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பும் உண்டு.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">1911 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 140 பெண் தொழிலாளர்கள் இறந்துபோயினர். பெண்கள் பணிபுரியும் இடங்களில் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த காலக்கட்டத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்தது. பெண்களின் தலைமையில் நியூயார்க்கை உலுக்கிய போராட்டம் நடந்ததற்கு இச்சம்பவம் முக்கிய காரணமானது. பெண்கள் மாநாட்டில் எடுத்த முடிவை விட மகளிர் தினத்தில் பெண் தொழிலாளர்கள் இச்சம்பவத்தை தான் நினைவுக்கூற அதிகம் விரும்பினர்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">19 ஆம் நூற்றாண்டின் கடைசியிலும், 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் சோசியலிச அதாவது மார்க்சீய பெண்ணீயத்தின் காலக்கட்டமாக இருந்தது. பெண் விடுதலை அரசியலுக்கு அஸ்திவாரமிட்ட ஃபெடரிக் ஏங்கல்ஸின் காலக்கட்டத்திலிருந்து சோசியலிச பெண்ணீய கொள்கையின் அடிப்படையில் பெண்ணீய இயக்கத்தை வழி நடத்திச் சென்றது ஜெர்மன் சோசியலிஸ்டான க்ளாரா ஸெத்கினும் வேறு சிலருமாகும். ரஷ்ய புரட்சியின் காலக்கட்டத்தில் போல்ஷெவிக்(Bolshevik)ஸ்டான அலக்ஸாண்ட்ரா கொல்லண்டாவின் தலைமையில் சோசியலிஸ்டு பெண்ணீயவாதிகள் தொடர்ந்து செயல்பட்டுவந்தாலும் ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்தபொழுது பெண்விடுதலை அரசியலை எவரும் கண்டுக்கொள்ளவில்லை மட்டுமல்ல மார்ச் 8 மறக்கடிக்கவும்பட்டது.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த சோசியலிச பெண்ணீயவாதமும், 1960 களில் உருவான தீவிர பெண்ணீயவாதமும் கொள்கைரீதியாக மாறுபட்டாலும் மத்திய தர நிலைபாடுகள் தான் அவற்றில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன என்பது இவ்வியக்கங்களின் பிற்கால சூழல் எடுத்தியம்புகிறது.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">ஜாதிரீதியாகவும், குல ரீதியாகவும் சாதாரணமக்கள் அனுபவித்து வரும் சுதந்திரமின்மை, சுரண்டல் போன்ற பிரச்சனைகளைப் போல் தான் பெண்களும் அனுபவிக்கின்றார்கள் என்பது சோசியலிச பெண்ணீயவாதிகளின் கருத்து என்றால் தீவிர பெண்ணீயவாதிகளின்(radical feminist) கருத்து முற்றிலும் மாற்றமான ஒன்றாகும். பெண்கள் எந்த பிரிவைச்சார்ந்திருந்தாலும் பெண்கள் என்ற நிலையில் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்குத்தான் முன்னுரிமை என்றும் பால் ரீதியான வேறுபாடுதான் அடிமைத்தனத்திற்கு காரணம் என்பது அவர்களுடைய வாதம்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">சோசியலிஸ பெண்ணீயவாதத்தின் காலக்கட்டத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்குப்பிறகுதான் தீவிர பெண்ணீயவாதம் உருவெடுத்தது. இந்த பெண்ணீயவாத முன்னேற்றமடைந்த காலக்கட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத்தின் சோசியலிஸ பாசிஸம் ஆகியவற்றின் காலக்கட்டம் என்று சிறப்பித்துக் கூறுவதுண்டு.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">20 ஆம் நூற்றாண்டில் உலகின் பெரும்பாலான மக்கள் அனுபவித்த இரண்டு வகையிலான அதிகார பீடங்கள் இவை. தீவிர பெண்ணீயம் மேற்க்கொண்ட துணிச்சலான எதிர்ப்புப் போராட்டத்திற்கு இந்த சூழல் பெரிதும் உதவியது எனக்கூறலாம்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">1960 களில் தீவிர பெண்ணீயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கடும் சவாலை ஏற்படுத்தியது. எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்பதில் இவ்வமைப்பினர் உறுதியாக இருந்தனர். தொழிலாளி வர்க பெண்களும், கறுப்பு இனப்பெண்களும் அவர்கள் அனுபவித்து வரும் பிரச்சனைகளின் அடிப்படையில் தீவிர பெண்ணீயவாதிகளுக்கு உறுதுணையாக இருந்தனர். குடியுரிமை பணியாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பெண்ணீயவாதிகளுடன் இணைந்து நின்றனர். அதேவேளையில் பெண்ணீயவாதிகளின் தலைமை தொடர்ந்து மத்திய தர வர்க்கத்திடமே இருந்து வந்தது. சமூக வாழ்விலும், பணிபுரியும் இடங்களிலும் பால் ரீதியான பாகுபாட்டை ஓரளவு இல்லாமலாக்கவோ அல்லது குறித்து புனர் பரிசோதனைச் செய்யவோ தீவிர பெண்ணீயவாதத்தால் முடிந்துள்ளது என்பது மறுக்கவியலாது. ஆனால் தீவிர பெண்ணீய வாத இயக்கத்திற்கு ஏற்படப்போகும் அரசியல் சூழல் ஆரம்ப முதலே காணத் துவங்கியது.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">அமெரிக்க தீவிர பெண்ணீயவாதத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி இதர நாடுகளில் உருவான தீவிர பெண்ணீயவாத இயக்கங்களுக்கு இதே சூழல்தான் சம்பவித்தது.பணிபுரியும் இடங்களில் ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதியளவே பெண்களுக்கு கிடைத்தது. இதன் காரணமாக சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்கள் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டனர். கணவனும், மனைவியும், குழந்தைகளும் இன்புற்றிருந்த குடும்ப வாழ்வில் தீவிர பெண்ணீயவாதத்தால் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற போட்டியும், பொறாமையும் கணவன் மனைவிக்கிடையே உருவாகி குடும்பவாழ்வு கலகம் நிறைந்ததாக மாறிப்போனது. குழந்தைகள் கவனிப்பாரற்று தனித்துவிடப்பட்டனர்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">1970 களின் கடைசியிலும், 80 களின் ஆரம்பத்திலும் பரவலான அளவில் அதிகமான விவகாரத்துகள் அமெரிக்காவில் நடந்தேறியது. அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நடத்தவேண்டிய போராட்டங்களெல்லாம் தனிநபர்களுக்கு மத்தியில் நடத்தப்படும் போராட்டமாக சுருங்கிப் போனது. பெண்ணீயவாதிகளுக்கெதிராக அமெரிக்க வலதுசாரிகள் கொண்டிருந்த எதிர்ப்புணர்விற்கு வலுவூட்டுவதாக இருந்தது பெண்ணீயவாதிகள் சுயமாக உருவாக்கிய இத்தகைய சூழல்கள். குடியுரிமை ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கறுப்பு இனத்தவரும் பெண்ணீயவாதிகளிடமிருந்து மெதுவாக கழன்றுக் கொண்டனர்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">1970களிலும், 80 களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு மையமாக செயல்பட்டது கல்லூரி வளாகங்களாகும்(campus). ஆனால் அக்காலக்கட்டத்தைவிட பன்மடங்கு பெண்கள் கல்லூரி வளாகங்களிலும், அலுவலகங்களிலும், இதர சமூக தளங்களிலும் பங்காற்றியபிறகும் பெண்ணீயவாத இயக்கம் ஏன் தகர்ந்து போனது?<br /></div><div align="justify"><br /></div><div align="justify">1960 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில் சிறிதளவு ஆதாயம் பெண்ணீயவாத இயக்கத்தால் பெண்களுக்கு கிடைத்த போதிலும் இன்றளவும் துன்பத்தையும், துயரத்தையும் உலகின் பல்வேறு இடங்களிலும் அனுபவித்து வரும் சிறுபான்மையின பெண்களும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்ணீயவாத இயக்கங்கள் என்ன செய்தன. செர்பிய வெறியர்களின் வன்புணர்வுக்கு இலக்காகி வாழ்க்கையை துயரத்துடன் கழித்துவரும் போஸ்னிய முஸ்லிம் சகோதரிகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பொய்வழக்கு சுமத்தி சிறையிலடைக்கப்பட்டுள்ள டாக்டர் ஆஃபியா சித்தீகி, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு படையினரின் தாக்குதலால் வாழ்விழந்த ஈராக், ஆப்கான் பெண்கள், சியோனிஷ தாக்குதலுக்கு இரையாகும் ஃபலஸ்தீன பெண்கள், குழந்தைகள் என சர்வதேச ரீதியாகவும் இந்தியாவில் கஷ்மீரில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அரசுப் படைகளின் பயங்கரவாதத்தின் உச்சகட்டம்தான் ஷோபியானில் இரண்டும் முஸ்லிம்பெண்கள் வன்புணர்ச்சிச் செய்து கொல்லப்பட்ட நிகழ்வு.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">குஜராத் மாநிலத்தில் சங்க்பரிவார ஹிந்துத்துவா பாசிஸ்டுகளால் கொடும் வன்புணர்வுக்கு ஆளாகி உயிரிழந்தோரும், உயிர் இருந்தும் நடைபிணங்களாக வாழும் பெண்கள் தான் எத்தனை பேர்?. கேரளாவில் தூசிப்படிந்துப்போன வழக்கை தட்டியடுத்து பெண் என்றும் பாராமல் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சூஃபியா மஃதனி, பெண்கள் தாங்கள் விரும்பியவரை மணக்க விரும்பியதை லவ் ஜிஹாத் என்று அவதூறு கூறி அவர்களின் சுயவிருப்பங்களுக்கு தடைச்செய்த கேரள உயர்நீதிமன்றம், கேரளாவில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டிற்கு பெண் மனித உரிமை ஆர்வலர் யுவானி ரிட்லிக்கு விசா தர அரசு மறுத்தது இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், நீதி மறுப்புக்கும் பெண்ணீய அமைப்புகள் ஏன் மெளனம் சாதிக்கின்றன? என்பது மிகப்பெரும் கேள்வியாகும்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">இந்நிலையில் பெண்களுக்கு பாராளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினால் பெண்களின் வாழ்வு வளமாகும் எனக்கூறுவது நகைப்பிற்கிடமானது. பெண்களின் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரும் கட்சிகளின் தீர்மானம் எடுக்கும் சபைகளில் உரிய முக்கியத்துவம் வழங்காதவர்கள் தான் இடஒதுக்கீட்டைக் குறித்து பேசுகிறார்கள். அவ்வாறு இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கும் பொழுது ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட, அட்டவணைப் படுத்தப்பட்ட ஜாதிப் பெண்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரும்பொழுது அரசியல் கட்சிகள் ஏன் மெளனம் சாதிக்கின்றன.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் நோக்கம் அவர்களை முன்னேற்றுவதல்ல அதிகாரபீடத்தில் உயர்ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாகும்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">பெண்களை தெய்வமாக மதிக்கிறோம் என்று கூறும் ஒரு மதத்தில்தான் பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள் அதிகம் நடைபெறுகிறது. பால் மணம் மாறாத குழந்தைகளுக்கு பால்யவிவாகம் என்ற குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்து வைத்து பரிதவிக்க விடுவதும், கணவனை இழந்த கைம்பெண்களை மொட்டையடித்து மூளியாக்கி மூலையில் உட்கார வைப்பதும், ஒருக்காலக்கட்டத்தில் கணவனின் சிதையிலேயே பெண்ணையும் பலாத்காரமாக பிடித்துத்தள்ளி பிணமாக்கும் பயங்கரமும் நடந்தேறியது.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">ஆனால் இவற்றிற்கெதிரான போராட்டங்கள் எல்லாம் நாளடைவில் சுருதி இறங்கிப் போயின என்பதுதான் உண்மை. பெண் குழந்தை பிறந்தவுடனேயே கள்ளிப்பால் கொடுத்து கொல்வது கிராமப்புறங்களில் நிகழ்ந்தது என்றால் கருவிலேயே பெண்சிசுவை கருவறுக்கும் கொடூரம் நகர்ப்புறங்களிலும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">வரதட்சிணை என்ற பெயரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதி அதிகரிக்கத்தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கல்வி பயிலும், வேலைக்குச்செல்லும் மகளிர் அனுபவிக்கும் தொந்தரவுகள் சொல்லி மாளாது. பஸ்ஸிலும், பணிபுரியும் இடங்களிலும், செல்லும் வழிகளிலும் ஆண் காமுகர்களின் சில்மிஷங்களாலும், பாலியல் தொந்தரவுகளாலும் பாதிக்கப்படுவோர் எத்தனையோ பேர். கலவரங்களிலும், வன்முறைகளிலும் பாதிக்கப்படுவதில் பெண்களும் அதிகம் இடம்பெறுகின்றனர். அரச பயங்கரவாதத்தின் இரைகளாகவும் பெண்கள் இலக்காகி வருகின்றனர்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">இவ்வாறு மகளிர் உரிமை கோஷம் எழுப்பட்டு நூறு ஆண்டுகளைத் தாண்டிய பொழுதும் கொடுமைகள் குறைந்த பாடில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். மேற்கத்தியவாதிகளின் பெண்ணுரிமை என்பது பெண்களின் ஆடைகளை குறைப்பதில்தான் உள்ளது.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">மனித இனத்தையே சீரழிக்கும் இயற்கைக்கு முரணான ஓரினச்சேர்க்கை உறவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதிலும், நடன அரங்குகளிலும், இரவு விடுதிகளிலும் சுதந்திரமாக சுற்றித் திரிவதிலும்தான் பெண்ணுரிமை பேணப்படுவதாக அவர்கள் கற்பனைச் செய்கிறார்கள். இதனால் பெண்கள் கடைச் சரக்காகவும், பாலியலின் சின்னமாகவும் தான் மேற்கத்திய உலகில் கணிக்கப்பட்டு வருகின்றார்கள். ஆணுக்குச் சமமாக பெண்ணுக்கு உரிமை என்று பேசப்படும் இடங்களில் பாலியல் பலாத்காரங்களும், வன்புணர்ச்சிகளும் நிகழ்ந்தேறுகின்றன.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">இவ்வாறு பெண்களின் உரிமையை கேலிக் கூத்தாக்கும் இவர்கள் தான் இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லையென்றும், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது, அவர்களின் வளர்ச்சிக்கு இஸ்லாத்தின் ஆடைமுறை தடைப் போடுகிறது என்றெல்லாம் அவதூறான பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாத்திற்கெதிரான இப்பிரச்சாரத்தில் மேற்கத்தியவாதிகள் மட்டுமல்ல எவர்கள் பெண்களை மொட்டையடித்து மூளியாக்கி மூலையில் வைக்கின்றார்களோ அந்த மதத்தை பாதுகாக்கிறோம் என்று கூறும் இந்திய பாசிஸ்டுகளும், மார்க்சிய சிந்தனையுடையவர்களும் தான் ஈடுபட்டு வருகின்றார்கள்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">19 ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு ஆன்மா உண்டா என்று ஆராய்ச்சிச் செய்தவர்கள் தான் இன்று இஸ்லாத்தின் மீது காரி உமிழ்கிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். பெண்கள் பாவங்கள் உருவாகக் காரணமான ரோமநாட்டின் பண்டோர பாக்ஸாக கருதியவர்களின் வாரிசுகள்தான் இஸ்லாத்தில் பெண்ணுரிமையைக் குறித்து கேள்வியெழுப்புகிறார்கள்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">இவர்கள் எவ்வளவு அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும் கூட இன்றும் பெண்களுக்கு கேள்விக்குறியாயிருக்கும் உரிமைகள் கூட பெண் உரிமைக்கோஷம் எழுப்படுவதற்கு 12 நூற்றாண்டுகள் முன்னரே இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">1960களில் நேருவால்தான் இந்துக் கூட்டுக் குடும்ப சட்டங்களில் பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என்ற சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இதற்கான சட்டமியற்றி நடைமுறைப்படுத்தியும் காட்டியது இஸ்லாம் (பார்க்க அல்குர்ஆன் 4:7-12).<br />போரிலே பெண்கள், குழந்தைகளைக் கொல்லுவது தடைசெய்யப்பட்டது. பாலியல் ரீதியான கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் கற்பிற்கு களங்கப்படுத்தும் செயல் தண்டனைக்குரியது என்று இஸ்லாம் கூறுகிறது (24:4)<br /></div><div align="justify"><br /></div><div align="justify">மொத்தத்தில் இஸ்லாம் வழங்கிய பெண் உரிமைகள் என்பது 'ஆண்களால்' வழங்கப்பட்ட பிச்சையல்ல, மாறாக இறைவனால் வழங்கப்பட்டவை. இஸ்லாத்தை ஒரு மதமாக பார்க்காமல் மனதில் உள்ள காழ்ப்புணர்வுகளை அகற்றிவிட்டு அது கூறும் கொள்கைகளை திறந்த மனதோடு ஆய்வுச் செய்ய முன் வருவார்களானால் பெண் உரிமை மட்டுமல்ல இவ்வுலகில் மனிதர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வை காணமுடியும்.<br /></div><div align="justify"><br /></div><div align="justify">அதை விடுத்து இஸ்லாத்தை ஏறெடுத்தும் பார்க்காவிட்டால் இழப்பு இஸ்லாத்திற்கல்ல. இஸ்லாத்தை குறை கூறுபவர்களுக்குத் தான் என்பது மறுக்கவியலாத உண்மையாகும்.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-66833548696366042512010-03-04T07:31:00.004+04:002010-03-04T14:31:08.512+04:00திருந்த வேண்டியது மடங்களா? மனங்களா?<div align="justify"> நேற்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான நித்தியானந்தா சுவாமிகளின் நித்திய ஆனந்த லீலா வினோதங்களால் தமிழக கர்நாடகா பக்தகோடிகளெல்லாம் அல்லோல கல்லோலப்படுகின்றனர். <img id="BLOGGER_PHOTO_ID_5444723848426629106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 301px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFZxWH6hU1QO9CUke-SWanqxhTV7FgPJ5lVrhWwfANu0dceicYRoLLKia-Gh38k1w0uE2esvyaZ32Sx7YPzeaqLjY13tqpkYuC2emiJXUiYM4ZrEfclO-FFr8ZpD5KgPLoS0Gd6LIRODjr/s400/Untitled-1_copy.jpg" border="0" />32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியேமைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு, கொட்டும் பணம். எப்படி சம்பாதித்தார் இவற்றையெல்லாம்..<br /><div align="justify"><br /></div><div align="justify">லிங்கம் எடுத்தல் விபூதி எடுத்தல் என்ற சில்லறை சமாச்சாரத்திற்கு விடைக் கொடுத்துவிட்டு சாமியாரின் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்பட்ட வசீகரத்திற்கு வசியப்பட்டுப்போன பக்தகோடிகள் கோடிகளை கொட்ட சாமியாருக்கு ஜோடியும் தேவைப்பட்டது. </div><br /><div align="justify">குமுதத்தில் கதவைத் திற காற்று வரட்டும் கட்டுரையை எழுதியவரின் அந்தரங்க கதவை திறந்து பார்த்த யாரோ ஒருவர் அதனை படம் பிடித்து தொலைக்காட்சிக்கும் அனுப்பிவிட நித்திய அனுபவங்கள் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. </div><br /><div align="justify">பிரம்மச்சரியத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று எழுதியவர் உணர்ச்சிகளின் உந்து சக்தியால் சிற்றின்பத்தை தகாத முறையில் உய்த்து உணர்ந்தார். பாவம் பக்தகோடிகள் இவரின் கட்டுரையை படித்து பண்பட முயன்றவர்கள் திண்டாடிப் போயிருப்பார்க்ள்.</div><br /><div align="justify"></div><div align="justify">இதற்கிடையில் சாமியாரின் லீலையை தொடர்ந்து ஒளிபரப்பி பணத்தை சம்பாதித்துக் கொண்ட சன் டி.வி நிர்வாகம், அந்த கண்றாவியினால் மக்களின் அருவருப்பையும் சம்பாதித்துக்கொண்டது.</div><br /><div align="justify">காஞ்சிக் காமக்கோடியின் காமக்களியாட்டங்களும், கொலைக் குற்றமும் வெளிப்பட்ட பிறகும் வாழாவிருந்த சங்க்பரிவார்களுக்கு நித்யானந்தாவின் நிழலுக அனுபவங்களை கண்டவுடன் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. </div><br /><div align="justify">நித்யானந்தாவிற்கு ‘ரா’ வில் தொடங்கும் நடிகையென்றால் காஞ்சிக்கு ‘எம்’ ’எஸ்’ நடிகைகளின் சேவைகள். கூடவே ‘அனு’வில் துவங்கும் எழுத்தாளரின் கசப்பான அனுபவங்கள். காரணம் புரிகிறது அவர் 'அவாள்’ ஆனதாலோ! </div><br /><div align="justify">அடப்பாவிகளா? ஒழுக்கச் சீரழிவிலும் ஜாதி வெறியா?காஞ்சிக் காமக்கோடி முதல் கடைக்கோடி அர்ச்சகன் வரை ஒழுக்கச் சீரழிவின் உச்சத்திற்கே சென்ற செய்திகள் அடிக்கடி வெளியான பின்னரும் அறியாமையிலிருந்து விடுபடாத பக்தகோடிகள் புரோகித கசமாலங்களின் காலடியில் வீழ்ந்தே கிடக்கின்றனர். </div><br /><div align="justify">மனிதனை மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால் உச்சத்தில் தூக்கிவைத்து கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள் வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள்.</div><br /><div align="justify">இறைவன் யார்? மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்?அவனுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர்கள் தேவையா? தான் படைக்கப்பட்டது ஏன்? என்பதை பற்றி உணராததன் காரணமாக அறியாமை என்னும் அந்தகாரத்தில் மனிதர்களில் சிலர் மண்டியிட்டுக் கிடப்பதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில அல்ல பல புல்லுருவிகளும் புரோகித வேடம் பூண்டு பணம் சம்பாதிக்கவும், பாலியல் சுகத்தை அனுபவிக்கவும் தலைப்பட்டு விடுகின்றனர். இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொண்டு கடவுளை மறுக்கிறோம் எனக்கூறும் கூட்டம் ஒன்று ஒழிக்கப்பட வேண்டியவை எவை மடங்களா? மதங்களா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றது. </div><br /><div align="justify">கடவுளின் பெயரால் நடைபெறும் அநாகரீகங்களும், அநியாயங்களும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவது எதனால்? என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இத்தகைய ஒழுக்கச் சீரழிவுகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் தனது அறிவுக்கு சிறிது வேலையைக் கொடுக்க மனித சமூகம் தயாராகவேண்டும். </div><br /><div align="justify">இயற்கை புறம்பான நிலையில் பிரம்மாச்சரியத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற மோசடித் தனத்திலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையின் மூலமே மனிதன் முழுமனிதனாக முடியும் என்று கூறும் மனிதத் தன்மைக்கு ஏற்ற கொள்கையை ஏற்க மனிதர்கள் தயாராக வேண்டும். </div><br /><div align="justify">மனித உள்ளங்கள் இத்தகைய இருள்களிலிருந்து எப்பொழுது விடுதலையடைந்து தன்னைப் படைத்த உண்மையான இறைவனை உணரத் தலைப்படுகிறதோ அன்று இத்தகைய மடங்களெல்லாம் காணாமல் போய்விடும். ஆகவே திருந்த வேண்டியது மடங்களல்ல மக்களின் மனங்களேயாகும்..</div><div align="justify"> </div><div align="justify">ஆக்கம்:<span style="color:#ff0000;">தூதன்</span></div></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-81103247445287523602010-02-18T08:25:00.004+04:002010-02-18T09:03:04.799+04:00அந்த நாள் ஞாபகம் இருக்கிறதா?<strong><span style="color:#000099;">புதைக்கப்பட்ட உண்மைகள்</span><br /></strong><br /><div align="justify">அந்த நாள் நினைவிருக்கிறதா? 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தினத்தில் அஸ்ஸாம் மாநிலம் <span class=""><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs4y42NFeXBc-1Pmva5t_a_p2o4v9rU2HICptZvnwbUs4WZVzbvwcEPLWKu2wLLBxKlX5NIdHKFy_PDnVWgbdWUCFM-YaSwJe_K1UyCGCY-MFyog0oEDa9mPqMBefjmo8D_1JytVQ4EXjb/s1600-h/9994921.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5439443171507202322" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 264px; CURSOR: hand; HEIGHT: 393px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs4y42NFeXBc-1Pmva5t_a_p2o4v9rU2HICptZvnwbUs4WZVzbvwcEPLWKu2wLLBxKlX5NIdHKFy_PDnVWgbdWUCFM-YaSwJe_K1UyCGCY-MFyog0oEDa9mPqMBefjmo8D_1JytVQ4EXjb/s400/9994921.jpg" border="0" /></a>கவுஹாத்தியிலிருந்து</span> சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்றது. 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அந்த நினைவலைகள் தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஹர்ஷ் மந்தர்(குஜராத் இனப்படுகொலையை கண்டித்து பதவி விலகிய இவர் தற்ப்பொழுது சமூக சேவையாற்றி வருகிறார்) தி ஹிந்து நாளிதழில் கட்டுரையொன்றை இங்கு பிரசுரிக்கிறோம். </div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#000000;">ஹர்ஷ் </span><span class=""><span style="color:#000000;">மந்தர்</span> :</span> </div><br /><div align="justify"><span class="">"நவம்பர்</span> 26, 2008. அன்று தான் இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மும்பை மீது மூர்க்கத்தனமான அதி பயங்கர தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அன்றைய தினம் நான் வெகு தூரத்தில் அஸ்ஸாமிலுள்ள நெல்லியில் இருந்தேன். </div><br /><div align="justify"></div><div align="justify">1983இல் மறக்க முடியாத படுபயங்கர கூட்டுக் கொலைகள் நடைபெற்றதே அதே நெல்லியில் தான். 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கடைக்கோடியிலுள்ள இக்கிராமத்தில் 1983ல் வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக என்னை அழைத்திருந்தனர்.</div><br /><div align="justify">மிதமான வெயிலடிக்கும் முன்பனிக் கால நேரத்தில் வெட்ட வெளியில் நாங்கள் கூடியிருந்தோம். கிழக்கு வங்காள முஸ்லிம்கள் என எளிதில் அடையாளம் கூறக்கூடிய முதியவர்கள் கட்டம் போட்ட லுங்கி அணிந்து தாடியுடன் அங்கு குழுமினர். பெண்கள் மற்றும் இளவயது ஆண்கள் அஸ்ஸாமிய கிராமத் தவர்போல் ஆடையணிந்து காணப்பட்டனர். ஆரம்ப நல விசாரிப்பு, வரவேற்பிற்குப் பின் எங்களுக்கு சிவப்பு எம்ப் ராய்டரி செய்யப்பட்ட வெள்ளை சால்வைகளை தங்களின் பாரம்பரியப்படி பரிசளித்தனர். </div><br /><div align="justify">கடந்த கால வலி மிகுந்த வேதனைகளை மீண்டும் கிளறுவது, மக்கள் அவற்றை மறந்து சகஜமாகி விட்ட சூழ்நிலையில் அறிவுடமை ஆகாது என என்னுடன் பயணித்த உயர் அதிகாரிகள் நாசூக்காக எடுத்துரைத்தனர். அப்படியானால் எமது பயணம் எதற்காக? புதைக் கப்பட்ட நினைவுகளை மீண்டும் அசை போடத்தானா? இதே அறிவுரையை அதிகார வர்க்கத்தில் இல்லாத தன்னார்வ சுயமுன்னேற்ற குழுக்களைச் சார்ந்த நமது நண்பர்களும் கூட நம்மிடம் சுட்டிக்காட்டினர். மேலும், இப்பயணம் மறந்து விட்ட பல வேதனைகளை கிளறு வதாகக் கூட அமையும் என்றும் குறிப் பிட்டனர். ஆனால் என்னை அழைத்தவர்கள் அவர்கள் தரப்பு வாதம் கேட்கப்பட வேண்டும் என விரும்பியதால் என்னால் மறுக்க இயலவில்லை.<br /><span class=""></span></div><div align="justify">கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்றது. வங்காள தேசத்திலிருந்து வந்து குடியேறிய 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அதில் தப்பிப் பிழைத்தவர்கள் 25 வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள் என அதனைக் கேட்ட ஒவ்வொருவரும் அதிர்ச்சியடைந்தோம். வெட்கப்பட்டோம். மிக சமீப காலம் வரையிலும் கூட, மிஞ்சியிருந்த அவர்கள் அனுபவித்த பகிஷ்காரங்கள் பற்றியெல்லாம் எடுத்துரைத்தனர். முறையான கவனமில்லா மல் சிகிச்சையளிக்கப்பட்ட காயங்களினால் பலரின் தேகம் அடைந்த மாற்றங்களை காண முடிந்தது. சிலர் தங்களின் ஆடைகளை விலக்கி தலைமுறைகளுக்கு முன் ஏற்பட்ட காயங்களின் தழும்புகளை காண்பித்தனர். முகத்தில் படுகோரமான வெட்டுக்காய தழும்புடன் காணப்பட்ட ஹாஜர் காத்தூன் என்பவர், எங்களின் முன் சம்மணமிட்டு அமர்ந்து தனது மடியை சுட்டிக்காட்டி உடைந்த சன்னமான குரலில் கூறினார். "இங்கு தான் எனது குழந்தையை படுக்க வைத்திருந்தேன். பாவிகள் அவனை பிளந்து இரு கூறுகளாக்கி விட்டனர்".<br /><span class=""></span></div><div align="justify"><span class=""></span> </div><div align="justify">அலெக்ஜான் பீவி சற்று அமைதியாக காணப்பட்டார். அவரது தேகம் மாற்றமடைந்திருந்தது. அவர், உடற்கூறு சமநிலையை இழந்திருந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் அன்றய வன்முறையில் பலியாகி இருந்தனர். வன்முறையாளர்கள் எப்படி தனது குடும்ப உறுப்பினர்களை கொன்றார்கள். எவ்வாறு அவர்களிடமிருந்து தான் தப்பித்தார். எங்கு மறைந்திருந்தார் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் என ஒவ்வொன்றையும் எங்கள் முன் அபிநயத்துக் காட்டினார். "இவ்வுலகில் எனக்கென்று யாரும் இல்லை" அழுத்த மான அமைதியுடன் கூறி முடித்தார்.<br /></div><div align="justify">முப்பதுகளில் இருந்த முஹம்மது முனீருத்தீன் எங்கள் முன் வந்த போது கட்டுக்கடங்காத கண்ணீருடன் காணப்பட்டார். "என் கண் முன்னே எனது சகோதர சகோதரிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அப்பொழுது நான் 7 வயது சிறுவனாக இருந்தேன். என் பெற்றோர் வெட்டிக் கொலை செய்யப்படுவதை என் கண்ணால் கண்டேன். வேறொரு பெண்ணின் கையிலிருந்து குழந்தை பறிக்கப்பட்டு நெருப்பில் வீசி எறியப் படுவதையும், அத்தாய் கொடூரமாக கொல்லப்படுவதையும் கண்டேன். அன்றய தினம் முழுவதும் நான் பயத்தால் அழுதபடியே இருந்தேன். அன்று மாலை சுகுழு படையினரால் காப்பாற்றப்பட்டேன். பிறகு எங்களது வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டதை அறிந்தேன். எங்களது அரிசிக்கடை உள்ளிட்ட அனைத்து உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டன. நாகாவ் னிலிருந்த எனது மூத்த சகோதரன் என்னை எடுத்து வளர்த்தார். ஆனாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணருகிறேன்" - இதேபோல் மற்றும் பலரும் தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டதாக குறிப்பிட்டனர்.<br /><span class=""></span></div><div align="justify"><span class=""></span> </div><div align="justify">நூர் நஹார் பேகம் கலவரம் நடந்த அந்நாளில் பத்து வயதுடையவராக இருந்தார். தப்பி ஓட முற்பட்டு தாக்கப்பட்டு கடுமையான காயமடைந்தார். இரண்டு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரது தாயும், நான்கு பச்சிளம் பாலகர்களும் கொலை செய்யப்பட்டனர். "நாம் இன்று நிற்கும் இதே இடத்தில் தான் அவர்கள் கண்டதுண்டமாக வெட்டியெறிப்பட்டனர். கடந்த 25 வருடங்களாக எனக்கு மன அமைதி இல்லை. எனது மன உளைச்சலுக்கு தீர்வாக நீதி கிடைக்க வேண்டும். இது மிகப்பெரும் குற்றம் எனவே நீதி அவசியம் தேவை. நான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்கிறேன். எனது குடும்பத்தினரை நான் இழந்து விட்டேன்".<br /></div><div align="justify">பாபுல் அஹமது. ஒரு டெய்லரான இவர் தனது பெற்றோரை இழந்த அன்று வெறும் இரண்டே வயதான குழந்தை. தனது தாத்தா - பாட்டியினரால் வளர்க்கப் பட்டார். இவரது சகோதரிகள் ளுழுளு கிராமத்தில் வளர்கின்றனர். இதே போல் பலரின் சரிதங்கள். மடைதிறந்த வெள்ளம் போல் கரை புரண்டு வரும் கவலைகள். வெகுகால மாக புறக்கணிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அவர்களின் உரிமைகள். மறக்கப்பட்ட நெல்லியின் 1983 கலவரங்கள், இனப்படு கொலைகளுக்கான, ஒரு முன்னோட்ட மாகவே மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் மாநிலம் தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன. இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் 2002 குஜராத்.<br /><span class=""></span></div><br /><div align="justify">இதனைத் தொடர்ந்து, பல குழு மோதல்கள் தொடராக அஸ்ஸாமில் நிகழ்ந்தேறியது. ஒடுக்கப்பட்ட சமூகங்கள், மற்ற குழுக்களுடன் அடிக்கடி மோதத் துவங்கின. 1993 இல் போடோ போராளிகளுக்கும் அரசுக்குமிடையே இடைத்தரகர்களின் முயற்சியால் ஓர் ஒப்பந்தம் உருவானது. அதன்படி போடோ இன மக்கள் அதிகமாக உள்ள இடங் களில் சுயாட்சி உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் இனப்படுகொலைக்கு அரசே அடிகோலியது போல் ஆகியது. வங்க தேசத்திலிருந்து வந்து குடியேறி இருந்த முஸ்லிம்கள் துரத்தியடிக்கப் பட்டனர். 1993 முழுக்க இப்பயங்கரம் கொலைகளும், தாக்குதல்களும், தீவைப்பு களுமாக நீடித்தது. மேலும் 1996 இல் சன்ந்தல் மற்றும் முன்டா பழங்குடியினருக்காக (ஆதிவாசிகளுக்காக) மீண்டும் இப்பயங்கரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் 15 வருடங்களுக்கும் மேலாக தத்தமது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பீதியில் நிவாரண முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.<br /><span class=""></span></div><br /><div align="justify">நெருப்பு மூட்ட பயன்படும் சருகுகளைப் போல, அஸ்ஸாம் இன்றும் இன துவேஷத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது. அதனால் தான் சமீபத்திய பீகார் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் கவுகாத்தியில் ஜார்க்கண்ட் கிளர்ச்சியாளர்களுடன், வெடி வைப்புகள், பெங்காலி முஸ்லிம்கள் மீதான போடோக் களின் தாக்குதல் என்று இன்றுவரை இப்பட்டியல் நீளுகிறது. இதனால் அனேகர் இறந்தும், ஆயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் வாழ்வதுமாக நிலைமை நீடிக்கிறது.<br /><span class=""></span></div><br /><div align="justify">அரசு நெல்லியில் உயிரிழந்தோருக்கான நிவாரணத் தொகையாக ரூ 5,000 வீதம் வழங்கியது. அதே சமயம் இதற்கு ஒரு வருடத்திற்கு பிறகு நடைபெற்ற சீக்கியர் படுகொலைக்காக ரூ.7 இலட்சத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லி படுகொலைக்காக 688 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 310 வழக்குகளுக்கு குற்றப்பத் திரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 378 வழக்குகள், போதிய ஆதாரம் காவல் துறையினரால் சமர்ப்பிக்கப்படாததைத் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் குற்றப்பத்திரிக்கை வழங்கப் பட்ட 310 வழக்குகளும் கூட அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஸ்ஸாம் கன பரிஷத் அமைச்சரவையினால் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டன. இதன் மூலம் இப்பயங்கரவாத இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கூட சட்டத்தின் விசாரணையை எதிர் கொள்ளாமல் சுதந்திரப் பறவையாகி விட்ட கொடுமை அரங்கேறியுள்ளது.<br /></div><br /><div align="justify">2008 மும்பை கலவரம் புரிந்து கொள்ளக் கூடிய பொது மக்களால் அதீத கோபத்துடன் கவனிக்கப்படு கிறது. ஒரு பலவீன மான நிர்வாகத் தால் ஒவ்வொரு வரும் பாதுகாப் பற்ற நிலையை உணருகின்றனர். ஆனால் அரசு சாதாரண குடி மக்களை பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்ட வும் அனேக சந்தர்ப்பங் களில் தவறிவிடுகின்றது. மும்பை தாஜ் ஹோட்டலில் பலியான உயிர்கள் பெரு மதியானவை. அதேசமயம் நெல்லி போன்ற தொலை தூர குக்கிராமங்களில் வாழ்பவர்களும், டெல்லி, பாகல்பூர், குஜராத் மற்றும் மாலே காவ்ன்ஐ சேர்ந்தவர்களும் கூட அவ்வாறு தான். நம் முடைய கவனமும், பரிவும், கவலையும் அனைத்து துயரங்களையும் சமமாக பாவிக்கும் ஒரு நாள் வந்தே தீர வேண்டும்.நாம் ஒன்றிணைந்து பரிவுடன் ஒற்றுமையாக இருப்பதே நமது பாதுகாப் பிற்கு உகந்த <span class="">வழியாகும்"</span>.</div><br /><div align="justify">தமிழில் - <span style="color:#ff0000;">அபூஹாஜர்</span></div><div align="justify">நன்றி - <span style="color:#ff0000;">ஹிந்து <span class="">நாளிதழ்,</span></span><span style="color:#ff0000;">tmmk.in</span> </div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-20303569431343954172010-02-14T12:08:00.002+04:002010-02-14T12:56:44.436+04:00காதலர் தினமும் கலாச்சார கருவறுப்பும்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0kmNhiqr0TM0CE2OVz_fO4Ov0rP7fvbbNG02AOrsYPyoNuoyek2yWYeExkeq9kyiv0IUt_VvUDmOWT4CQ94NllVtRJydH-7oLbTbD_rmJPmDvuYl4uK7oNBmPvR03Fy7sZl4Lprlhnh-s/s1600-h/anti-valentine.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5438019292933025586" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 185px; CURSOR: hand; HEIGHT: 180px" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0kmNhiqr0TM0CE2OVz_fO4Ov0rP7fvbbNG02AOrsYPyoNuoyek2yWYeExkeq9kyiv0IUt_VvUDmOWT4CQ94NllVtRJydH-7oLbTbD_rmJPmDvuYl4uK7oNBmPvR03Fy7sZl4Lprlhnh-s/s400/anti-valentine.jpg" border="0" /></a>மேற்குலகம் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்த கலாச்சாரச் சீரழிவுதான் காதலர் தினமும், அதுத்தொடர்பான கொண்டாட்டங்களும். </div><div align="justify"><br />ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தினங்களில் சர்வதேச சமூகத்தின் அவல நிலையை எடுத்தியம்பும் முகமாக மனித உரிமைகள் தினம், சித்திரவதை எதிர்ப்பு தினம், பெண்கள் தினம், பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினம், குழந்தைகள் தினம் என பல்வேறு தினங்கள் நினைவுக் கூறப்படுகின்றன. இவற்றிற்கு ஒரு பின்னணி உண்டு, அதில் ஒரு பொருளும் உண்டு. ஆனால் காதலர் தினத்திற்கு பின்னணி வேலண்டைன் என்ற கிறிஸ்தவ மதப்போதகரின் வாழ்வியல் சம்பவம் நினைவுக் கூறப்படுகின்றதேயொழிய அதில் எத்தகைய சமூக பின்னணியும் இல்லை என்பதோடு காதலர் தினத்தின் முக்கிய நோக்கமே கலாச்சார சீரழிவும், வியாபார யுக்திகளும்தான் என்பது தெளிவாகவே புலப்படுகிறது. </div><div align="justify"><br />மேற்குலகம் மனித சமூகத்திற்கு அன்பளிப்பாக அளித்த கலாச்சாரசீரழிவுதான் காதலர் தினம். மேற்கத்திய உலகம் கலாச்சாரசீரழிவுடன் நோய்களையும் ஏற்றுமதிச்செய்கிறது.அந்த நோய்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் சில மருந்துகளை வெளியிட்டு பாதிக்கப்பட்டவனின் பொருளாதாரத்தை உறிஞ்சவும் செய்கிறது. சாமுல் ஹண்டிங்டனின் நாகரீக மோதலின் தியரி இங்கு மாறுபடவேச் செய்கிறது.. </div><div align="justify"><br />காதல் அன்பு நேசம் போன்ற மனித உணர்வுகள் எல்லாம் மேற்குலகின் உபாயத்தால் கடைச் சரக்காக்கப்பட்டுவிட்டது. இரு உள்ளங்களுக் கிடையேயான காதலைத்தான் இவர்கள் கடற்கரைகளிலும், இரவு விடுதிகளிலும், டிஸ்கோத்தேக் கிளப்புகளிலும், சீமைச்சாராய ஷாப்புகளிலும் கடை விரிக்கின்றார்கள். காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறது. </div><div align="justify"><br />ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவிக்கிறார். காதலர் தினத்தையொட்டி சில சலுகைகளையும் மிக்லானியின் நிறுவனம் அறிவித்துள்ளதாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆணுறைகளை வாங்கினால் இலவசமாம். மேலும் வேல்யூ ஆடட் பேக்கேஜ்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு ஆணுறை வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல.இந்தியாவில் பூ விற்பனையாளர்கள் காதலர் தினத்தில் 15 கோடி வரையிலான வியாபாரத்தை எதிர்பார்க்கிறார்களாம். </div><div align="justify"><br />அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர் விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு வியாபாரமயமாக்கப்பட்டு விட்டது காதல். </div><div align="justify"><br />இன்று கண்டதும் காதல், காணாத காதல் என்றெல்லாம் காதலை வகைப்படுத்துகிறார்கள்.இதில் வேறு அமிலக்காதல் என்கிறார்கள்(தான் விரும்பும் பெண் தன்னைவிரும்பாமல் வேறொருவரை திருமணம் செய்ய முற்படும்பொழுது அவள் முகத்தின் மீது ஆசிட்டை வீசுவது, இவ்வாறு பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன)இதற்கு சினிமா என்ற பெருந்திரள் ஊடகமும் முக்கிய பங்கை ஆற்றுகிறது. திரைப்படம் காட்டும் காதலில் காமமும், ஆணாதிக்கமுமே நிறைந்துக் காணப்படுகிறது. அதில் பெண் வெறும் போகப்பொருளே. இதனைத்தான் இன்றைய சமூகம் நிதர்சனத்திலும் செயல்படுத்த முயல்கின்றது. பெண் என்பவள் பொருளை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் use and throw போன்று ஆக்கப்படுகிறாள். இவையெல்லாம் காதல் ஆகுமா? நிச்சயம் இல்லை சதை மீதான உணர்ச்சி என்றே கூறலாம். </div><div align="justify"><br />கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் காவலர்களாக தங்களை காட்டிக் கொண்டு காதலர் தினக் கொண்டாட்டங்களை தடுக்க வன்முறையில் இறங்கும் இந்திய பாசிஸ்டுகளின் உண்மையான நோக்கம் பண்பாடும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. காதலர் தினத்தின் பின்னணியில் கிறிஸ்தவ பாதிரியார் வேலண்டைன் ஒளிந்திருக்கிறார் என்பதேயாகும். மேலும் ஆண்டின் 365 நாட்களிலும் இவர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் திருவிழாக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும்தான். கலாச்சாரத்தை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் தங்களின் வழிப்பாட்டுத் தலங்களில் பொறித்து வைக்கப்பட்டிருக்கும் ஆபாசத்தையும்,வக்கிரத்தையும் தூண்டும் சிலைகளையும், ஓவியங்களையும் அகற்ற முற்படாதது ஏன்? ஏன் இவர்களே பாலியல் பலாத்காரத்திலும், வன்புணர்ச்சியிலும் கைதேர்ந்த கொடூரர்கள் என்பது குஜராத் இனப்படுகொலை உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கெதிராக நடைபெற்ற கலவரங்களிலும் தெளிவான ஒன்று. இவர்கள் சார்ந்த மதம்தான் பெண்களின் உணர்ச்சிகளை ஊமையாக்கி வரையற்ற சுரண்டல்களை பெண்கள் மீது திணிக்கிறது. ஆகவே இவர்களுக்கு கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் என்றுக் கூறுவதற்கு அருகதை துளியும் கிடையாது. </div><div align="justify"><br />காதலைப் பொறுத்தவரை அது இயற்கையாகவே மனித உள்ளங்களில் எழும் ஒன்று. அது உடல் இச்சையை மட்டும் சார்ந்தது அன்று. காதல் என்பது இணைகளுக்கிடையே பரஸ்பர அன்பு, பாசம், அரவணைப்பு, ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளல், உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், இன்பத்திலும், துன்பத்திலும் உறுதுணையாகயிருத்தல், ஒருவருக்கொருவர் ஆறுதல்,பரஸ்பர நம்பிக்கை இவையெல்லாவற்றையும் இறுதிவரை பேணுவதே காதலின் உள்ளார்த்தமாகும். </div><div align="justify"><br />இந்த காதலுக்குதான் இஸ்லாம் திருமணம் என்ற உறுதியான ஒப்பந்தம் என்ற அந்தஸ்தை அளித்து கெளரவப்படுத்துகிறது. அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் அத்தியாயம் இவ்வாறு குறிப்பிடுகிறான். "<span style="color:#009900;">இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன</span>"(அல்குர்ஆன் 30:21). </div><div align="justify"><br />காதலுடன் வாழும் அந்த இணைகளை அல்லாஹ் இவ்வாறு உருவகப்படுத்துகிறான், "<span style="color:#009900;">அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்..."(</span>அல்குர்ஆன் 2:187) </div><div align="justify"><br />காதல் என்பது காண்பவற்றிலெல்லாம் மோகம் கொள்வதன்று. எந்த இணையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டோமோ அதில் திருப்திக் கொண்டு வாழ்வதாகும்.அதனால் வல்ல இறைவனான அல்லாஹ் இறைநம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான். </div><div align="justify"><br />ஆண்களானாலும் பெண்களானாலும் அவர்களுக்கு இவ்வுலகில் ஒரு உன்னத பணிகள் உண்டு அதனைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு எடுத்தியம்புகிறது. "<span style="color:#009900;">முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்</span>"(அல்குர்ஆன்.9:71) </div><div align="justify"><br />இஸ்லாம் என்ற உன்னத கொள்கையை பின்பற்றுபவர்கள் இத்தகய உணர்ச்சிகளின் சீர்கேட்டிற்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளமாட்டார்கள். இவ்வுலகில் இஸ்லாம் என்ற ஒப்பற்ற கொள்கையால்தான் ஒழுக்கத்தை நிலைநாட்ட இயலும். ஏனெனில் இறைவனின் இறுதித்தூதர் அவர்கள் தான் தூதராக அனுப்பப்பட்ட நோக்கத்தை இவ்வாறு தெரிவிக்கின்றார்கள், "<span style="color:#33cc00;">நல்லொழுக்கத்தை பரிபூரணப்படுத்தவே நான் தூதராக அனுப்பப்பட்டேன்</span>" என்று. ஆகவே இளம் தலைமுறையினரே! காதலின் பெயரால் கலாச்சாரத்தை கருவறுப்பதை விட்டொழித்துவிட்டு வாருங்கள் அந்த நல்லொழுக்கத்திற்கு வழிகாட்டும் நன்மையின் மார்க்கத்தை நோக்கி.</div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-21420253442895214472010-01-26T08:03:00.001+04:002010-01-26T08:12:58.628+04:00குடியரசு தின சிந்தனைகள்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ1UAzAhQVAgGtYggH1fasVtVE7YcdeuWBSYIfX-AW08Ng4JskTwstfo0MoYMgOwJVBRwaosNcj0gcVaYeYV880xECNDFzgG6WoNQC296yjtg2yPGbQBFQ9CPwaoQaJnpMvF-0vkTB1kfF/s1600-h/republic-day.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5430896488251529682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 297px; CURSOR: hand; HEIGHT: 359px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ1UAzAhQVAgGtYggH1fasVtVE7YcdeuWBSYIfX-AW08Ng4JskTwstfo0MoYMgOwJVBRwaosNcj0gcVaYeYV880xECNDFzgG6WoNQC296yjtg2yPGbQBFQ9CPwaoQaJnpMvF-0vkTB1kfF/s400/republic-day.jpg" border="0" /></a> ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலைப் பெற்ற இந்திய திருநாட்டிற்கு ஒரு அரசியல் சாசனம் தேவைப்பட்டது. இதற்காக டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக்குழு பல்வேறு நாடுகளின் சட்டங்களை ஆராய்ந்து ஒரு அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கியது. அந்த அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்தான் ஜனவரி 26, 1950. அந்த தினம்தான் இந்தியதேசம் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.<br /><div align="justify"><br />அதனை நினைவுக்கூறூம் விதமாகத்தான் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் நாளை குடியரசு தினமாக இந்திய நாட்டு குடிமக்கள் அனைவரும் வேறுபாடின்றி கொண்டாடி வருகிறோம். </div><br /><div align="justify">இந்தியாவின் அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை குடியரசு தினமாக பாகுபாடின்றி கொண்டாடும் நமது இந்திய குடிமக்கள் அந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையான சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற பாகுபாடற்ற தன்மையுடன் நடத்தப்படுகிறார்களா? என்றால் அதன் பதில் இல்லை என்று கூற எந்த தயக்கமும் இல்லை.</div><br /><div align="justify">இந்திய தேசத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் சோசியலிச ஜனநாயக மதசார்பற்ற நாடு. இந்திய தேசத்தின் அடிப்படைக் கொள்கையான ஜனநாயகத்துடன் நாற்பத்திரெண்டாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 1976 இன் மூலம், அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை திருத்தம் செய்யப்பட்டது. அத்திருத்தம்தான் இந்தியாவை ‘இறையாண்மை சோசலிச மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு' என்கிறது. </div><br /><div align="justify">சாதி, சமய, இன, மொழி, பாலின வேறுபாடுகளையெல்லாம் கடந்து, இந்திய குடிமக்கள் அனைவரையும் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக்கி, சமப்படுத்துகிறது அது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித கண்ணியம் போன்றவை குடிமக்கள் அனைவருக்கும் வாய்க்க உறுதியளிக்கிறது. மேற்கண்ட மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட இந்திய அரசமைப்பு, இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கும் வழிமுறைதான் மக்களாட்சியாகும். அத்தகைய மக்களாட்சி அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட்டுவருகிறதா? என்பதே நம் முன் எழும் கேள்வி!</div><br /><div align="justify">ஹிந்து பார்ப்பணர்களால் உருவாக்கப்பட்ட சாதீயத்தையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் மாற்றியமைக்கக் கூடியதாக மக்களாட்சி இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாக இருந்தாலும், அதன் அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னும் சரிந்து விடவில்லை என்பது நம்பிக்கையளிக்கும் ஒன்றாகும்.அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு 1975-77 ஆம் ஆண்டுக் காலக்கட்டங்களில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசிடமிருந்து தாக்குதல்கள் நிகழ்ந்தபோதும் அதன் அடிப்படைக்கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை. </div><br /><div align="justify">இந்திய தேசம் ஒரு சோசியலிச நாடாகும். சோசியலிசம் என்றால் வருமானத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் ஏற்றத்தாழ்வுகளை களைவதாகும். ஆனால் இன்றைய நிலைமை என்ன? இந்திய தேசத்தை அப்பட்டமான முதலாளித்துவ சார்புள்ள நாடாக ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டார்கள். மூலதனங்களும் பகிர்மானங்களும் மக்களின் வசமிருக்க வேண்டும் என்ற சோசியலிச நிலைப்பாட்டிற்கெதிராக இந்தியாவின் பூர்வீக குடிமக்களான மலைவாசி, ஆதிவாசிகளை விரட்டிவிட்டு அங்கிருக்கும் கனிம வளங்களை கைப்பற்றி முதலாளித்துவ சக்திகளுக்கு தாரை வார்க்கத்தான் இந்திய ஆட்சியாளர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். </div><br /><div align="justify">இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படை சித்தாந்தத்திற்கெதிராக பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதி என்று நீதி பங்கு வைக்கப்படுகிறது. நீதிக்காக குரல் கொடுப்பவர்களை நக்ஸல்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரைக் குத்தி வழக்கு பதிவுச் செய்யப்படுகிறது.</div><br /><div align="justify">நீதியை நிலைநாட்டும் நீதிமன்றங்கள் கூட அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கெதிரான நிலைப்பாட்டினை மேற்க்கொள்வதை காண்கிறோம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்போம் என்று சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் உட்காரும் அரசியல்வாதிகள் குடிமக்களை சுரண்டியே தனது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்கின்றனர்.</div><br /><div align="justify">தேர்தலில் ஜனநாயகத்திற்கு இனி அகராதியில் பணநாயகம் என்று மாற்றவேண்டுமோ என்ற அளவிற்கு பண தண்ணீராக வாரியிறைக்கப்படுகிறது. வாக்காளர்களும் பணம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். </div><br /><div align="justify">இந்திய அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமைக்கெதிராக பெரும்பான்மை பயங்கரவாதம் கட்டவிழ்த்துப்படுகிறது.பாப்ரி மஸ்ஜிது அதன் ஒரு உதாரணமே. சிறுபான்மை மக்களின் உயிர்களும், உடமைகளும் மலிவானப் பொருளாக மாற்றப்பட்டுள்ளன. கமிஷன்கள் போடப்பட்டு அவை பின்னர் கவனிப்பாரற்று குப்பைக் கூடையை எதிர் நோக்கியுள்ள சூழல். </div><br /><div align="justify">இறையாண்மை மிக்க தேசம் என்ற இந்திய சித்தாந்தம் காற்றில் பறக்கவிடப்பட்டு ஏகாதிபத்திய தேசங்களுக்கு அடிமை சேவகம் புரியும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்திய குடியரசு தினத்தை சடங்கிற்காக ஆண்டுதோறும் கொண்டாடும் மக்கள் இந்திய தேசத்தின் தற்போதைய சூழலையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் விழிப்புணர்வு பெறாவிட்டால் ஆட்சியாளர்கள் மீண்டும் நம்மை அந்நியனுக்கு அடகு வைத்துவிடுவார்கள் எச்சரிக்கை.<br /><span style="font-size:130%;color:#ff0000;"></span></div><div align="justify"><span style="font-size:130%;color:#ff0000;"><span style="color:#ffffff;">..........</span>அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்</span></div></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-43215286354686716602010-01-12T19:13:00.004+04:002010-01-12T20:44:13.575+04:00WHO KILLED KARKARE? கர்கரேயைக் கொன்றது யார்? தமிழாக்கம்<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLDup7LuZGPpdpvUOdNnP4pYMsmvbOUDQx5Q8lRFjRpihc9YivOwlIi5LlYrBCaf4JKkF07TwpnnpA52_ueuyfh18LJd-6ZBNUaKVvrFOj4eg4aFOCgLcI5rk7YsnC4G7UiAq9mi7Ogt-c/s1600-h/Mushrif.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5425885561299007314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 288px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLDup7LuZGPpdpvUOdNnP4pYMsmvbOUDQx5Q8lRFjRpihc9YivOwlIi5LlYrBCaf4JKkF07TwpnnpA52_ueuyfh18LJd-6ZBNUaKVvrFOj4eg4aFOCgLcI5rk7YsnC4G7UiAq9mi7Ogt-c/s400/Mushrif.jpg" border="0" /></a> முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்துவத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்.<br /><div align="justify"><br />பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.</div><br /><div align="justify">இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.- ஆசிரியர் கி.வீரமணி</div><div align="justify">source:<span style="color:#ff0000;">விடுதலை</span></div><br /><div align="justify"><strong>அன்பார்ந்த வாசகர்களே! இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தை படிக்க பாலைவனத் தூதின் </strong><a href="http://paalaivanathoothu.tk/"><strong>முகப்பிற்க்குச்</strong></a><strong> சென்று தளத்தின் வலப்புறம் உள்ள இணைப்புகளை க்ளிக் செய்து படிக்கவும்.</strong></div></div>பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0