14 டிச., 2010

கர்காரேயுடன் நடந்த உரையாடலுக்கு ஆதாரம் இருக்கிறது: திக் விஜய்சிங்

குவஹாத்தி,டிச.14:மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவர் ஹேம்ந்த் கர்காரே தான் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு தீவிர ஹிந்துத்துவா சக்திகளால் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைக் குறித்து தன்னுடன் பேசிய தொலைபேசி உரையாடல்களுக்கு ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

மும்பைத் தாக்குதலுக்கு சற்று முன்பு கர்காரேயின் மொபைல் ஃபோனிலிருந்து திக் விஜய்சிங்கிற்கோ அல்லது திக் விஜய் சிங்கிடமிருந்து கர்காரேக்கோ எந்த அழைப்பும் வரவில்லை என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து பதிலளித்துள்ளார் திக்விஜய்சிங்.

"நான் கர்காரேயுடன் தொலைபேசியில் பேசவில்லை எனக் கூறுபவர்களுக்கு தவறு ஏற்பட்டுள்ளது நிரூபிக்கப்படும். என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. கர்காரே தனது அச்சத்தை என்னுடன் பகிர்ந்துக்கொண்டது சத்தியமாகும்." - என சிங் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்காரேயுடன் நடந்த உரையாடலுக்கு ஆதாரம் இருக்கிறது: திக் விஜய்சிங்"

கருத்துரையிடுக