13 டிச., 2010

குர்ஆனை எரிப்பதற்கு அழைப்பு விடுத்த அமெரிக்க பாதிரியாருக்கு பிரிட்டனில் நுழைய தடைவிதிக்க கோரிக்கை

லண்டன்,டிச.13:புனித திருக்குர்ஆனை எரிப்பதற்கு அழைப்பு விடுத்த அமெரிக்க பாதிரியாருக்கு பிரிட்டனில் நுழைய அனுமதி வழங்கக்கூடாது என தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினத்தில் புனித திருக்குர்ஆனை எரிப்பதற்கு அழைப்புவிடுத்த அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தின் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் பிரிட்டனில் நடைபெறவிருக்கும் இங்கிலீஷ் டிஃபன்ஸ் லீக் பேரணியில் கலந்துக்கொள்ளவிருக்கிறார்.

இவ்விவகாரத்தில் தலையிட தீவிரவாத எதிர்ப்பு அமைப்பான ஹோப் நோட் வைட் பிரிட்டன் உள்துறை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வரலாற்றில் மிகப்பெரிய பேரணி பிப்ரவரி ஐந்தாம் தேதி பெட்ஃபோட்ஷெயரில் நடக்கவிருப்பதாக இனவெறி அமைப்பான இ.டி.எல் ஃபேஸ் புக்கில் அறிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் 'இஸ்லாத்தில் சாத்தானியத்தனம்' என்பதைக் குறித்து டெர்ரி ஜோன்ஸ் உரை நிகழ்த்துவார் எனவும் இ.டி.எல் அறிவித்துள்ளது.

தனக்கு பிரிட்டனில் குர்ஆனை எரிக்கும் திட்டம் இல்லை என பி.பி.சியிடம் டெர்ரி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். பக்கிங்காம் அரண்மனையை மஸ்ஜிதாக மாற்றவேண்டும் எனவும், பிரிட்டனின் ராணி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சிலர் கூறுவதாக டெர்ரி ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.

தீவிரவாதிகளுக்கு மட்டுமே டெர்ரி ஜோன்ஸின் வருகையினால் ஆதாயம் கிடைக்கும் என ஹோப் நோட் வைட்டின் இயக்குநர் நிக் லோல்ஸ் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குர்ஆனை எரிப்பதற்கு அழைப்பு விடுத்த அமெரிக்க பாதிரியாருக்கு பிரிட்டனில் நுழைய தடைவிதிக்க கோரிக்கை"

கருத்துரையிடுக