8 ஜன., 2011

தனித் தெலுங்கானா மாநிலம் உருவாவதை முஸ்லிம்கள் எதிர்க்கின்றார்கள் - ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை

புதுடெல்லி,ஜன.8:தனித் தெலுங்கானா மாநிலம் உருவாவதை முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆந்திரபிரதேசம் என்ற பெரிய மாநிலத்தில் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக 41 சதவீத நகரங்களில் வாழும் முஸ்லிம்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதர சமுதாயங்கள் தெலுங்கான மாநிலம் உருவாவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

தெலுங்கானா மாநிலம் உருவானால் தாங்கள் மட்டுமே அம்மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களாக கருதப்படுவோம் எனவும், இதனால் கூடுதல் கல்வி மற்று வேலைவாய்ப்புகளில் பாதிப்பு உருவாகும் என அவர்கள் கருதுகின்றார்கள்.

அதிகமான இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை தெலுங்கானா மாநில கோரிக்கை எழுவதற்கு அடிப்படைக் காரணமாகும் என ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தனித் தெலுங்கானா மாநிலம் உருவாவதை முஸ்லிம்கள் எதிர்க்கின்றார்கள் - ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை"

கருத்துரையிடுக