9 ஜன., 2011

கேரள மாநில எஸ்.டி.பி.ஐ தலைவராக வழக்கறிஞர் முஹம்மது ஷெரீஃப் தேர்வு

திருவனந்தபுரம்,ஜன.9:சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் 2011-12 வருடத்திற்கான கேரள மாநில பொறுப்பாளர்களின் தேர்தல் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வைத்து நடைபெற்ற மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் வைத்து நடைபெற்றது.

தேர்தலில் புதிய கேரள மாநிலத் தலைவராக வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளர்களாக எம்.கே.மனோஜ்குமார் மற்றும் அப்துல் மஜீத் பைஸி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இத்தேர்தலில் இதர நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களும் தேர்வுச் செய்யப்பட்டனர். தேர்தலுக்கு எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் எ.சயீத் மற்றும் தேசிய செயலாளர் எம்.கே.பைஸி ஆகியோர் தலைமை வகித்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரள மாநில எஸ்.டி.பி.ஐ தலைவராக வழக்கறிஞர் முஹம்மது ஷெரீஃப் தேர்வு"

கருத்துரையிடுக