15 மார்., 2011

ஈராக்:ராணுவ தலைமையகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு - 10 ராணுவ வீரர்கள் பலி

பாக்தாத்,மார்ச்.15:ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்கு அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 14 ராணுவ வீரர்கள் உள்பட 29 பேருக்கு காயமேற்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பின் அதிர்ச்சியில் கட்டிடம் தகர்ந்து வீழ்ந்து ஏராளமான ராணுவத்தினர் உள்ளே சிக்கியுள்ளனர். இவர்களை வெளியேக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தியாலா மாகாணத்திற்கு அருகில் காரில் வந்த நபர் ராணுவ தலைமையகத்திற்கு அருகே வெடித்துச் சிதறினார். மேலும் ஒரு குண்டு கண்டிபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக்:ராணுவ தலைமையகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு - 10 ராணுவ வீரர்கள் பலி"

கருத்துரையிடுக