15 மார்., 2011

எகிப்து:ஜனநாயகம் மலருமா? 19-ஆம் தேதி விருப்பவாக்கெடுப்பு

கெய்ரோ,மார்ச்.15:அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தை தடைவிதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை நீக்குவதற்கு எகிப்தின் ராணுவ அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

அரசியல் சட்ட சீர்திருத்தம் குறித்து நடக்கவிருக்கும் மக்கள் விருப்ப வாக்கெடுப்பைத் தொடர்ந்து இதுத்தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும்.

அரசியல் எதிரிகளை 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த முபாரக்கிற்கு உதவிய சட்டமாகும் இது. இந்த தீர்மானம் பாராளுமன்ற, அதிபர் தேர்தல்கள நேர்மையாக நடக்க உதவும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முன்பு புதிய அரசியல் கட்சியை உருவாக்கினால் முபாரக் கட்சியினர் அதிகமாக அங்கம் வகுக்கும் குழு அங்கீகாரம் வழங்கவேண்டும். இனி இது தேவையில்லை. எகிப்தில் ஜனநாயக புதுவசந்தம் வீச வாய்ப்பு ஏற்படுத்தும் எனக் கருதப்படும் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு வருகிற மார்ச் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தல், எதிர்கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்தல், சுயேட்சைகளின் போட்டியிடும் உரிமையை உறுதிச் செய்தல் போன்ற காரியங்களில் மக்கள் தங்கள் விருப்பத்தை பதிவுச் செய்வர்.

எதிர்கால அதிபர்களின் பதவி காலம் இரண்டு தடவை மட்டுமே என்பதுக் குறித்த விஷயத்திலும் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவுச்செய்வர். ஆனால், அரசியல் சட்டத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான பிரிவுகளை மாற்றுவதற்கு போதுமானதல்ல இந்த நெறிமுறைகள் என சிலர் விமர்சித்துள்ளனர்.

புதிய நெறிமுறைகளுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என எகிப்தின் மிகப்பெரிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, 1981-ஆம் ஆண்டு எகிப்துல் அதிபர் அன்வர் சதாத்தை கொலைச் செய்ததில் பங்குண்டு எனக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பேரை ராணுவ கவுன்சில் விடுதலைச் செய்துள்ளது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:ஜனநாயகம் மலருமா? 19-ஆம் தேதி விருப்பவாக்கெடுப்பு"

கருத்துரையிடுக