14 மார்., 2011

கதறல்கள் அடங்காத மியாகி கடலோரம்

டோக்கியோ,மார்ச்.14:எனது அருகிலேயே இருக்கவேண்டுமென்ற தாயின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டிருந்தால், இவ்வளவுதூரம் துயரத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. வீடும், குடும்பமும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நான் மட்டும் உயிரோடு வாழ்ந்து என்ன பயன்? ஜப்பானின் மியாகியில் ஷின்டோனா கிராமத்தில் ஹரூமிவதனாபெயின் வார்த்தைகள்தாம் இவை.

எச்சரிக்கை தகவல் கிடைத்த உடனேயே, பூகம்பம் ஏற்படுவதற்கு ஏறத்தாழ அரைமணி நேரம் முன்பே கடையை பூட்டிவிட்டு விரைவாக வீடு திரும்பினார் அவர். வீட்டு கதவை தகர்த்தெறிந்த பேரலை வயோதிகரான பெற்றோரை தூக்கி வீசிய காட்சிகளைத்தான் அவரால் பின்னர் காணமுடிந்தது.

பர்னிச்சர்களின் மேலே ஏறி தப்பிக்க முயன்ற அவரின் கழுத்துவரை தண்ணீர் திரண்டு நின்றது. வீட்டின் முகட்டை தண்ணீர் தொடுவதற்கு சில இன்ச்கள் இடைவெளி. மரணம் தன்னை விட்டுச்சென்ற அந்த கணத்தை மறக்க முடியவில்லை என கூறும்பொழுது வதனாபெயின் கண்களில் கண்ணீர் நிறைந்துக் காணப்படுகிறது.

ஜப்பானில் சுனாமி பேரலைகள் ஏற்படுத்திய பேரழிவில் பெருமளவு பாதிக்கப்பட்ட மியாகியில் அபூர்வமாக உயிர் தப்பிய ஒரு சிலரில் வதனாபெயும் ஒருவர்.

வாகனங்களையும், கட்டிடங்களையும் துடைத்தெறிந்த சுனாமி பேரலை மீதம் வைத்தது கதறல்கள்தாம்.

பூகம்பத்தைத் தொடர்ந்து வெடித்துச் சிதறிய புகஷிமா அணுமின் நிலையத்திற்கு அடுத்துள்ள கடலோரப் பகுதிதான் மியாகி. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இங்கு உயிர் நஷ்டமானது. பலரும் உறவினர்களை இழந்தனர். உணவு, தண்ணீரும் இவர்களுக்கு கிடைப்பது அரிதாக உள்ளது. பள்ளிக்கூடங்கள் தகர்ந்து போனதால் மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர இன்னும் நாட்கள் நீளும். திறக்காத கடைகள் முன்னால் ஆட்கள் நிற்கின்றனர். ரெயில் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. பெட்ரோல் பம்பிற்கு முன்னால் மூன்று கிலோமீட்டர் தூரம் க்யூவில் மக்கள் நிற்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கதறல்கள் அடங்காத மியாகி கடலோரம்"

கருத்துரையிடுக