13 மார்., 2011

சீனா:போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர் தேசத்துரோக வழக்கில் கைது

பீஜிங்,மார்ச்.13:மேற்காசியாவில் நடந்துவரும் மக்கள் எழுச்சியை முன்மாதிரியாகக் கொண்டு இணையதளத்தில் சீனாவில் போராட்டத்தி்ற்கு அழைப்பு விடுத்த இளைஞர் ஒருவரை சீன போலீஸ் கைது செய்துள்ளது.

ஜியோ வீடோங் என்ற தன்னார்வ தொண்டு இளைஞரை தேசத்துரோக குற்றஞ்சுமத்தி ஹய்னிங்கிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து கடந்த வியாழக்கிழமை போலீஸ் கைது செய்தது.

ஆட்சியை கவிழ்க்க முயன்றதால் வீடோங் கைது செய்யப்ப்பட்டதாக போலீஸ் பின்னர் அவருடைய மனைவிக்கு தெரிவித்தது. சீனாவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹாங்காங்கை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சீனா:போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர் தேசத்துரோக வழக்கில் கைது"

கருத்துரையிடுக