14 மார்., 2011

பாகிஸ்தான்:துப்பாக்கிச் சூட்டில் எட்டுபேர் மரணம்

இஸ்லாமாபாத்,மார்ச்.14:வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் வேன் ஒன்றின் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

ஹன்கு மாவட்டத்தில் மாம்மோகவாரிலிருந்து வஸீரிஸ்தானிற்கு சென்றுக் கொண்டிருந்த வேன் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலின் பொறுப்பை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே ஹன்கு மாவட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தான்:துப்பாக்கிச் சூட்டில் எட்டுபேர் மரணம்"

கருத்துரையிடுக