13 மார்., 2011

யெமன்:எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்

ஸன்ஆ,மார்ச்.13:அரசுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் எதிர்ப்பாளர்களின் தலைநகர் முகாமில் யெமன் போலீஸ் தாக்குதல் நடத்தியுள்ளது.

கண்ணீர் குண்டும், தண்ணீர் பீரங்கியும் உபயோகித்து தலைநகரிலிருந்து எதிர்ப்பாளர்களை வெளியேற்ற முயன்ற நடவடிக்கையில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்குமேற்பட்டோர் காயமடைந்தனர்.

எதிர்ப்பாளர்களின் முகாம்களில் போலீஸ் அத்துமீறி நுழைந்தது. குண்டடிப்பட்டு மக்கள் இறந்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முகாமிலிருந்து மருத்துவர்களை பிணைக் கைதிகளாக்கியது போலீஸ். வீதிகளில் மோதல் நீண்ட நேரம் நீடித்தது.

பாராளுமன்ற முறைக்கு மாறுவதற்கு உகந்த வகையில் அரசியல் சட்டம் திருத்தப்படும் என கடந்த வியாழக்கிழமை யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யெமன்:எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்"

கருத்துரையிடுக