
"உண்மையில் என்ன நிகழ்ந்தது" (அசலு எமி ஜரிகின்டன்டே?)என்று பெயரிடப்பட்ட தெலுங்கு மொழியிலான இப்புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில பதிப்பு விரைவில் வெளிவரும். ராமர்கோவில் கட்டுவதற்கான நரசிம்மராவின் விருப்பத்தைக்குறித்து இப்புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்களில் பிரசாத் எழுதியுள்ளார்.
1992 டிசம்பர் 6 க்குப்பிறகு இரண்டு வருடத்தில் தனது லட்சியத்தைப் பூர்த்திச் செய்வதற்கான முயற்சியை அவர் மேற்க்கொண்டார். அதற்காக அரசியல் சார்பற்ற ட்ரஸ்ட் ஒன்றையும் துவக்கினார். ஆனால் தேர்தலில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால் ராமர்கோவில் கட்ட இயலவில்லை. நரசிம்மராவ் மீண்டும் பிரதமராக பதவியேற்றிருந்தால் ராமர்கோவிலை கட்டியிருப்பார் என பிரசாத் இந்நூலில் கூறுகிறார்.
1993 ஆம் ஆண்டு நான்கு வட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற பொழுது நரசிம்மராவ் தன்னோடு உரையாடிய உரையாடலின் விபரங்களையும் பிரசாத் இந்நூலில் நினைவுக்கூறுகிறார். அந்த தேர்தலில் பா.ஜ.க வின் முக்கிய பிரச்சாரமே ராமர்கோவில் கட்டுவதைப்பற்றிதான். இந்நிலையில் ராவ் கூறினார், "ராமனின் காப்புரிமையை பா.ஜ.க எவ்வாறு உரிமைக் கொண்டாட இயலும்?" பா.ஜ.க வுடன் நாம் போட்டியிடலாம்.ஆனால் ராமனோடு எவ்வாறு போட்டியிட இயலும்? என்ற நரசிம்மராவின் வார்த்தைகளை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்து மடங்கள், பீடங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உட்படுத்தி அரசியல்வாதிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டுதான் ராவ் ராமாலயம் என்ற ட்ரஸ்டை உருவாக்கினார்.
காஞ்சி,துவாரகா,பத்ரிநாத், பூரி, சிருங்கேரி ஆகிய இடங்களிலிலுள்ள சங்கராச்சாரியார்கள், வடபகுதியிலுள்ள ஷ்ரீ வைஷ்ணவ சந்நியாசிகள், வல்லபாசாரியில் குருஜிக்கள் ஆகியவர்களை இக்கமிட்டியில் உட்படுத்தினார். ஆனால் மஸ்ஜித் தகர்க்கப்படுவது பற்றிய தகவல் முன்னரே ராவிற்கு தெரியும் என்பது பற்றிய விபரங்களை பிரசாத் இந்நூலில் குறிப்பிடவில்லை. "அவர் மிகவும் எச்சரிக்கையோடு இருந்தார். மனம் திறந்து பேசுவதைவிட பிறரின் வார்த்தைகளுக்குதான் முன்னுரிமை அளித்திருந்தார்." எனவும் பிரசாத் கூறுகிறார்.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நரசிம்மராவ் முயற்சித்தார்: ஆலோசகர் வெளியிடும் தகவல்"
கருத்துரையிடுக