11 ஜன., 2010

குடியிருப்புகளை தடைச்செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என ஃபலஸ்தீன் உறுதி

மேற்குகரை:ஃபலஸ்தீன் பிரதேசங்களில் இஸ்ரேல் தொடரும் குடியேற்றங்களை நிறுத்தாதவரை சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என ஃபலஸ்தீன் உறுதியாக தெரிவித்துள்ளது.

சமாதான பேச்சுவார்த்தை தொடரவேண்டுமென்றால் ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் குடியிருப்புகளை உடனே பரிபூரணமாக நிறுத்தவேண்டும் என்று ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் சஈப் எரகாத் கூறுகிறார்.

எந்தவொரு நிபந்தனைகளுமில்லாமல் ஃபலஸ்தீன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டுமென்ற அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹிலாரிக்கிளிண்டன் கூறியதற்கு பதிலளிக்கும்பொழுது எரகாத் இவ்வாறு தெரிவித்தார்.

சமாதான திட்டத்தின் ஒரு பகுதியாக 2003 ஆம் ஆண்டில் தயாராக்கிய ரோட் மேப்பில் ஃபலஸ்தீன் நாட்டை உருவாக்குவதற்கு முன்பு கடைபிடிக்கவேண்டிய நடவடிக்கைகளில் குடியேற்றங்களை நிறுத்தவேண்டுமென்பதாகும். கடந்த நவம்பரில் இஸ்ரேல் குடியேற்றத்தின் வேகத்தை குறைப்பதாக இஸ்ரேல் பிரதமர் வாக்களித்திருந்தாலும் அது பேணப்படவில்லை.
அமெரிக்கா இதற்கு பல முறை முயற்சித்தபொழுதும் எந்த பலனும் இல்லை.இஸ்ரேல் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவர அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடை ஏற்படுத்தவேண்டுமென்று அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தூதர் ஜார்ஜ் மிச்சேல் வலியுறுத்தியிருந்தார்.ஆனால் இத்தகைய மிரட்டலைப்பற்றி தனக்குத்தெரியாது என்று கூறுகிறார் இஸ்ரேல் நிதித்துறை அமைச்சர்.
செய்தி:தேஜஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குடியிருப்புகளை தடைச்செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என ஃபலஸ்தீன் உறுதி"

கருத்துரையிடுக