சுனந்தா புஷ்காருடனான சசி தரூரின் உறவும், தென்னாப்ப்ரிக்காவின் மாடல் அழகியான காப்ரியேலா டெமட்ரியாடசுடனான லலித் மோடியின் விரோதமும் பகிரங்கமான ஒன்றாகும்.
சுனந்தா புஷ்காருக்கு 70 கோடி மதிப்பிலான சலுகை பங்குகளை வாங்கிக் கொடுக்க சசி தரூர் காட்டிய அதீத ஆர்வம் அவருடைய அமைச்சர் பதவி பறிபோக காரணமாக அமைந்தது.
காப்ரியேலாவுக்கு விசாவை புதுப்பித்துத் தரக்கூடாது என லலித் மோடியின் கோரிக்கைக்கு தொடர்புடைய அமைச்சகத்தின் பொறுப்பிலிருந்த தரூர் செவி சாய்க்காததுதான் லலித் மோடி-சசி தரூர் பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது.
கடந்த ஐ.பி.எல் போட்டியில் மிஸ் ஐ.பி.எல் பாலிவுட்டில் போட்டியாளராக கலந்துக் கொண்ட தென்னாப்பிரிக்காவின் காப்ரியேலாவுடன் லலித் மோடிக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. பின்னர் இவ்வுறவில் விரிசல் ஏற்பட்டது.
ஐ.பி.எல்லின் அடிமட்டத்திலிருந்து இத்தகைய பெண் விவகார முறைகேடுகள் நிறைந்துக் காணப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் கோடீசுவரியாக வளர்ந்த ரோமா என்ற பெண்மணி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்படும் விருந்துகள் முதல் கேலரிகளில் வெண்மேனி காட்சிவரை நடத்துவதற்கு ஏராளமான மாடல் அழகிகளை களமிறக்கினார்.
இட வலப் புறங்களில் அரைநிர்வாண அழகிகள் புடைசூழத்தான் லலித் மோடி தோற்றமளிப்பார். ஐ.பி.எல் அணிகளின் கட்டுக்குள் வைத்திருக்கும் நிறுவனங்களில் சினிமா நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் முக்கிய பங்குதாரர்களாவர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதற்கு உதாரணமாகும். இக்கம்பெனியின் நான்கில் ஒரு பங்கு பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வசம் உள்ளது. ப்ரீத்தி ஜிந்தாவின் அன்பை பெற தற்ப்பொழுது ஆஸ்திரேலியா வீரர் ப்ரெட்லீக்கும் இந்தியாவின் யுவராஜ் சிங்கிற்கும் போட்டி வேறு நடைபெறுகிறதாம்.
ஐ.பி.எல்லின் பணமோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் வெளிவந்துக் கொண்டிருக்கும் சூழலில்தான் ஷில்பா ஷெட்டி லலித் மோடிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பணம் முதலீடுச் செய்துள்ளார் ஷில்பா. லலித் மோடி ராஜஸ்தானை மையமாக வைத்து கிரிக்கெட் அரங்கை அடக்கி ஆள்கிறார். ப்ரீத்தி ஜிந்தாவுக்கும், ஷில்பாவுக்கும் மோடியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
டெக்கான் சார்ஜர்ஸின் பங்குதாரர்களைக் குறித்து விசாரணை நடத்தினால் ஆந்திரபிரதேசத்தைச் சார்ந்த மிகப்பெரும் ரெயில்வே காண்ட்ராக்டர் டி.வெங்கடராமரெட்டியின் மகள் காயத்ரி ரெட்டிவரை சிக்குவார்.
மோடியை கிரிக்கெட் அரங்கில் கைத்தூக்கி விட்டவர் பா.ஜ.கவின் முன்னாள் முதல்வர் வசுந்தராஜே சிந்தியா. வசுந்தரா ராஜஸ்தானை ஆளும்பொழுது லலித் மோடிக்கு ‘மிஸ்டர் டென் ப்ரசன்’ என்ற பெயருண்டாம். ஏனெனில் எந்தவொரு காரியத்தை சாதிக்க வேண்டுமென்றாலும், வசுந்தராஜே சிந்தியாவிடம் காரியத்தை சாதிக்கவும் தொழிலதிபர்களும், மற்றும் சிலரும் மோடியைத்தான் நாடுவார்கள்.
ஐ.பி.எல்லின் நாயகனாக ஜொலிக்கும் லலித் மோடியை மிகவும் ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சரத்பவார் மற்றும் பிரஃபுல் பட்டேல் ஆகியோரின் மகள்களும் ஐ.பி.எல் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். மோடியுடன் இருவருக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. பவாரின் மகளும் பாராமதி எம்.பியுமான சுப்ரியா சுலை கொச்சி ஐ.பி.எல் அணியின் ஏலத்திலிருந்து வாபஸ் பெற டோங்திவூ கண்சோர்சியத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என தகவல்.
பிரஃபுல் பட்டேலின் மகளும், மாடலுமான பூர்ணா பட்டேல் ஐ.பி.எல் மார்கெட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார். ஐ.பி.எல் சர்ச்சையில் பெண் மக்களை உட்படுத்தாதீர்கள் என பிரஃபுல் பட்டேல் கோரிக்கை விடுக்கிறார்.
வருமான வரி அதிகரிகள் ரெய்டு நடத்தும் பொழுது ஐ.பி.எல் அலுவலகத்திலிருந்து ஆதாரங்களுடன் தப்பிய அழகியைக் குறித்து விவாதம் கிளம்பியிருந்தது. சாராய வியாபாரி விஜய் மல்லையாவின் வளர்ப்பு மகளும் மாடலுமான லைலாதான் அவர். பெங்களூரின் ரோயல் சேலஞ்சர்சுடன் விஜய்மல்லையாவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
0 கருத்துகள்: on "ஐ.பி.எல்லின் பின்னணியில் மகளிர் ராஜ்ஜியம்"
கருத்துரையிடுக