23 ஏப்., 2010

பதக்கத்தை திரும்ப ஒப்படைத்தார் முன்னாள் டிஜிபி ரத்தோர்

டென்னிஸ் வீராங்கனை ருச்சிகாவை மானபங்கப்படுத்திய வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹரியானா மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ரத்தோர் தனது பதக்கத்தை திரும்ப ஒப்படைத்தார்.

டென்னிஸ் வீராங்கனை ருச்சிகாவை மானபங்கப்படுத்திய வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம்,ரத்தோருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. மேலும் அவர் மீது ருச்சிகாவின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரை கொல்ல முயன்றாக 2 புதிய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ரத்தோர் ஏற்கனவே பெற்று இருந்த காவல்துறை பதக்கம் மற்றும் விருதுகளை திரும்ப ஒப்படைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி ரத்தோர் தனது பதக்கத்தை திருப்பி ஒப்படைத்து உள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பதக்கத்தை திரும்ப ஒப்படைத்தார் முன்னாள் டிஜிபி ரத்தோர்"

கருத்துரையிடுக