8 மே, 2010

சிறார்களின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட ராணுவ அதிகாரி கைது

சிறார்களின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட ராணுவ லெப்டினென்ட் கர்னல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஜக்மோகன் பல்பீர் சிங். வயது 42. ஆபாசப் படங்களையும் இவரே தயாரித்து இன்டர்நெட்டில் வெளியிட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதுதவிர பல்வேறு தளங்களிலிருந்து குழந்தைகளின் ஆபாசப் படங்களை எடுத்து பல்வேறு ஆபாச இணையதளங்களுக்கு அப்லோடும் செய்துள்ளார் சிங்.

ஜெர்மனியிலிருந்து இன்டர்போலுக்கு சிங்கின் செயல் குறித்து சில மாதங்களுக்கு முன்பு புகார் போனது. இதையடுத்து இன்டர்போல் போலீஸார் இந்திய காவல்துறையை உஷார்படுத்தினர். இதையடுத்து போலீஸார் விசாரணையில்இறங்கினர்.
இதில் மும்பையில் உள்ள ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த படங்கள் அப்லோட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதையடுத்து மும்பை சைபர்கிரைமுக்கு வழக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், சிங் சிக்கினார்.

இதுகுறித்து மும்பை குற்றப் பிரிவு இணைபோலீஸ் ஆணையர் ஹின்சுராய் கூறுகையில், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரின் ஐபி முகவரியை வைத்து இந்தமுறைகேட்டில் ஈடுபட்டு வந்த பல்பீர் சிங்கை பிடித்தோம் என்றார்.

கிட்டத்தட்ட 3 வாரங்களாக சிங்கின் கம்ப்யூட்டரை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து வந்துள்ளனர். அவர் ஆபாசப் படங்களை அப்லோட் செய்ததை உறுதி செய்து கொண்டதைத் தொடர்ந்து சிங் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது சிறார்களின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டதை சிங் ஒத்துக்கொண்டார்.தனது சுய செக்ஸ் வெறியின் காரணமாகவே இவ்வாறு சிங் நடந்து கொண்டிருப்ப்தாகவும், இதில் வர்த்தக நோக்கம்எதுவும் இல்லைஎன்று தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அசிங்கமான வேலையில்அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிறார்களின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட ராணுவ அதிகாரி கைது"

கருத்துரையிடுக