வாஷிங்டன்:மேற்குலக நாடுகளும் அவற்றின் பல ஊடகங்களும் உமிழ்ந்து வரும் இஸ்லாமிய வெறுப்புணர்வினையும், விரோத போக்கினையும் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக துடைத்தெறிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லீம் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.ஐ.நா சபையின் மனித உரிமைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான், எகிப்து உட்பட பல்வேறு முஸ்லீம் நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கு பெற்றனர்.
"அரபு வம்சாவழியினர் புதிய இன வேற்றுமை, இன ஒதுக்கல், கலாசார பாகுபாடு, மற்றும் இது தொடர்பான தொல்லைகளையும் எதிர் கொண்டு வருகின்றனர். மேலும் தனிமைப்படுத்துதல் மற்றும் ஒதுக்கப்படுதலுக்கும் உள்ளாகி வருகின்றனர்" என எகிப்து பிரதிநிதி கூட்டத்தில் குறிப்பிட்டார்.
மேலும் பல்வேறு நாடுகளின் கலாச்சார வேற்றுமையையும், மத பாகுபாட்டை போக்கி ஓர் சகிப்பு தன்மையுள்ள சூழலினை உருவாக்ககூடியதாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். OICயும், ரஷ்யா, சீனா, கியூபா உட்பட அதன் 47 கூட்டணி நாடுகளும் முஸ்லீம்களை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்துவதையும், இஸ்லாமிய விரோத போக்கினையும் கடுமையாக கூட்டத்தில் சாடியுள்ளனர்.
OIC உட்பட பல்வேறு நாடுகள் ஏற்கனவே இதற்கான முயற்சியில் இணைந்து செயல்பட துவங்கியுள்ளன. பெரும்பாலான நாடுகள், வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் போன்றவை இதில் இணைந்துள்ளன.மேற்கொண்டு ஈரான், இலங்கை உட்பட பிற நாடுகளை இதில் இணைய செய்வது மிக அவசியம்.
செவ்வாய் கிழமை நடந்த கூட்டத்தில் நார்வே ஈரானின் அணு உலை செறிவாக்க நடவடிக்கையை ஐ.நாவின் பிரிவு 56 கீழ் கண்டித்தது. இருந்த பொழுதும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் எலின் சம்பர்லின் ஈரானுக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானத்தை குறை கூறினர்.
மேலும் ஐ.நா வால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை இயக்கங்கள் ஐ.நா வின் ஈரானுக்கு எதிரான தீர்மானம் "அமெரிக்காவின் திட்ட அறிக்கை" என கடிந்துள்ளன.
ஐ.நாவில் உள்ள பல ஓட்டைகள் மேற்குலகால் பயன்படுத்தப்பட்டது. இனி அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் 2006 இல் தொடங்கப்பட்ட மனித உரிமை முயற்சி இப்பொழுது பயனளிக்க தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்: on "இஸ்லாமியோ போபியா:மேற்குலகிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை, முஸ்லீம் நாடுகள் ஐ.நா கூட்டத்தில் வலியுறுத்தல்"
கருத்துரையிடுக