13 ஜூலை, 2010

வெடிகுண்டு மிரட்டல்: ஏர் ஃபிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

ஏர் ஃபிரான்ஸுக்கு சொந்தமான பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பை அடுத்து வடகிழக்கு பிரேசிலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

405 பயணிகள், 18 ஊழியர்களுடன் ஏர் பிரான்ஸ் 443 என்ற விமானம் ரியோவில் இருந்து பாரீஸ் புறப்பட்டது. புறப்பட்ட 30 ‌நி‌மிட‌ம் கழித்து ரியோ விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு பெண் பேசினார் என்று பிரேசிலில் உள்ள ஏர் பிரான்ஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டு வடகிழக்கு பிரேசிலில் ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள்,ஊழியர்கள் அனைவரையும் பத்திரமாக இறக்கிவிட்டு விமானம் சோதிக்கப்பட்டது. 5 மணி நேர சோதனைக்குப் பின்னர் எந்தவிதமான வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை எ‌ன்று செய்தியாள‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதே விமான பாதையில் வடகிழக்கு பிரேசில் கடல் பகுதியில் கடந்த ஜூன் மாதம் ஏர் ஃபிரான்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பே‌ர் உயிரிழந்தனர். அ‌ந்த ‌விமான ‌வி‌ப‌த்து கு‌றி‌த்து இதுவரை ச‌ரியான காரண‌ம் க‌ண்ட‌றிய‌ப்பட‌வி‌ல்லை என்பது குறிபிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வெடிகுண்டு மிரட்டல்: ஏர் ஃபிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்"

கருத்துரையிடுக