8 ஜூலை, 2010

டாக்டர் முஹம்மது ஹனீஃப் ஆஸ்திரேலிய அரசுக்கெதிராக வழக்கு

எந்த குற்றமும் செய்யாத அப்பாவி டாக்டர் முஹம்மது ஹனீஃபை பயங்கரவாத வழக்கில் கைது செய்து அலைக்கழித்தது ஆஸ்திரேலிய அரசு. இது நடந்தது ஜூலை 2007ல். மூன்று வாரங்கள் அவரைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஆஸ்திரேலிய அரசு, அதன் பின் அவரை விடுதலை செய்தது.

பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் முஹம்மது ஹனீஃப் ஆஸ்திரேலியாவில் மருத்துவப் பணிகள் செய்து வந்தார்.

ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ விமான நிலையத்தில் கார் குண்டு வெடிப்புக்கு திட்டம் போட்ட 'தீவிரவாதிகளுக்கு' இவர் மொபைல் சிம் கார்ட் கொடுத்து உதவினார் என்பது தான் இவர் மீதுள்ள 'பயங்கரவாத' குற்றச்சாட்டு.

இப்பொழுது டாக்டர் முஹம்மது ஹனீஃப் அமீரகத்தில் உம்முல் குவைனில் மருத்துவ சேவையாற்றி வருகிறார்.

தன்னை சட்ட விரோதமாகக் கைது செய்து சிறையிலடைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி, தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திய முன்னால் ஆஸ்திரேலியாவின் குடிபெயர்தல் (immigiration) அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது பிரிஸ்பேனில் உள்ள ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றத்தில் டாக்டர் ஹனீஃப் வழக்கு தொடுத்துள்ளார்.

முஸ்லிம்கள் மேல் இந்த ஆண்ட்ரூஸ் எந்த அளவுக்கு வெறிபிடித்திருந்தார் என்றால் ஹனீஃபுக்கு ஒரு மாஜிஸ்திரேட்டு பிணை கொடுத்து ஒரு சில மணி நேரங்களில் இவர் ஹனீஃபின் விசாவை ரத்து செய்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டாக்டர் முஹம்மது ஹனீஃப் ஆஸ்திரேலிய அரசுக்கெதிராக வழக்கு"

கருத்துரையிடுக