2 ஆக., 2010

கஷ்மீரை சற்று கண்ணைத் திறந்து பாருங்கள்!

வானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும்கூட கவலைப்படாத ஐ.நா பொதுச்செயலாளர் பான்கிமூன் கூட கவலைப்படுமளவுக்கு கஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகள் காரணமாகியுள்ளன.

கஷ்மீரின் கட்டுப்பாடு ஆட்சியாளர்களின் கையிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது என்பதை அங்கிருந்துவரும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

கடந்த ஜூன் 11 ஆம் தேதி துவங்கிய மோதலும், இரத்தக்களரியும் ஆட்சியாளர்களின் செப்பிடி வித்தைகளால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் உள்ளன.

கடந்த ஆறுவாரங்களுக்கிடையே போலீஸின் துப்பாக்கிச்சூட்டில் மரணித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனாகும்.

முப்பதைத்தாண்டாத 18 வயதிற்கும் 19 வயதிற்குமிடைப்பட்ட இந்த தேசத்தின் குடிமகன்கள் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர்.

மோதல் மற்றும் போராட்டம் காரணமாக கஷ்மீரின் முக்கிய நகரங்களெல்லாம் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிக்கிடக்கின்றன. போராட்டக்காரர்களை நோக்கி உமர் அப்துல்லாஹ்வின் போலீஸ் நடத்தும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டால் நிலைமை மேலும் மோசமாகிவருகிறது.

தற்போதைய நிகழ்வுகளுக்கு என்னக்காரணம்? தினமணி போன்ற பத்திரிகை உலக பாசிஸ்டுகள் ஏ.சி அறையில் உட்கார்ந்துக் கொண்டு எழுதுவதுபோல் பாகிஸ்தானிலிருந்து வீசப்படும் கரன்சி நோட்டுகளா? நிச்சயமாக இல்லை எனலாம்.

கஷ்மீரின் இத்தகையதொரு சூழலுக்கு காரணமே எச்சில் துண்டுகளுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் மூன்று அப்பாவி இளைஞர்களை தயவுதாட்சணியமில்லாமல் சுட்டுக் கொன்றதாகும்.
அத்தோடு அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைக் குத்தி குழித்தோண்டி புதைக்கவும் செய்தனர். ஆனால் உண்மைகள் வெளியானபொழுது போலீசின் வாதங்கள் பொய்த்துப் போயின.

சில்லரைகளைக் கொடுத்தும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையை ஆசைக்காட்டியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம் என திட்டமிட்டவர்களின் எண்ணத்தில் மண் விழுந்தது.

நாள்தோறும் கூடுதலான இளைஞர்கள் அரசுக்கெதிராகவும், பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் போராட்டக்களத்தில் குதித்து வருகின்றனர்.

கஷ்மீரின் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவரத் தெரியாத முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கையாலாகத்தனத்தால் ராணுவத்தின் பொறுப்பில் கஷ்மீர் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கஷ்மீர் வந்தபொழுதும் நிலைமை சீராகவில்லை என்பதைத்தான் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய மோதல் சூழல் நமக்கு உணர்த்துகிறது.

கஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அழைத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கஷ்மீர் பள்ளதாக்கில் ஓரளவு செல்வாக்குள்ள அமைப்புகள் கூட கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற குரல் எழுப்பியது மீர்வாய்ஸ் ஃபாரூக்கோ அல்லது சையத் அலிஷா கிலானியோ அல்ல. மாறாக, கஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லாஹ்தான் அந்த நபர்.

உண்மையில் பிரிவினைவாதிகள்தான் கஷ்மீர் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதை சொல்லாமல் சொல்லுவதுதான் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கை வெளிப்படுத்தும் உண்மையாகும்.

டெல்லியில் இருந்துக் கொண்டு கஷ்மீரின் திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கும் பாதுகாப்பு வல்லுநர்கள் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

துப்பாக்கிக் குண்டுகளால் ஒரு சமூகத்தை அச்சுறுத்தி அடிபணியவைக்க முடியாது என்ற உண்மையை ஒரு ஜனநாயக அரசை புரியவைக்க வேண்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானதாகும்.

இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் காஸ்ஸாவை சற்று ஏறெடுத்துப் பாருங்கள் மேலே கூறியவற்றின் உண்மை புரியவரும்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீரை சற்று கண்ணைத் திறந்து பாருங்கள்!"

கருத்துரையிடுக