26 செப்., 2010

ஒரிஸ்ஸா:கந்தமால் கலவர வழக்கு: 8 பேருக்கு சிறை

புல்பானி,செப்.26:கந்தமால் கலவர சம்பவம் தொடர்பான வழக்கில் 8 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரிஸ்ஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் 2008-ல் சிறுபான்மையினருக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது மெகுபாலி கிராமத்தில் சிறுபான்மையினர் வீடுகளை எரித்தது தொடர்பான வழக்கு புல்பாணி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எஸ்.கே.தாஸ் விசாரித்து, 8 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். அவர்கள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 24 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதில் போதிய ஆதாரம் இல்லாததால் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒரிஸ்ஸா:கந்தமால் கலவர வழக்கு: 8 பேருக்கு சிறை"

கருத்துரையிடுக