23 ஜன., 2011

ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஜும்ப்லாத் ஆதரவு

பெய்ரூத்,ஜன.23:லெபனானில் முக்கிய எதிர்கட்சிகளில் ஒன்றான ட்ரூஸ் கட்சியின் தலைவர் ஜும்ப்லாத் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனால் லெபனானின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் நிர்ணாயக சக்தியாக ஹிஸ்புல்லாஹ் விளங்கும். இம்முடிவு, லெபனானின் ஸ்திரத் தன்மைக்காக என ஜும்ப்லாத் தெரிவித்துள்ளார்.

11 உறுப்பினர்களின் ஆதரவு ஜும்ப்லாத்திற்கு உள்ளது. இடைக்கால பிரதமர் ஸஅத் ஹரீரியின் தலைமையில் புதிய அரசை உருவாக்கவோ அல்லது ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாய்ப்பு அளிக்கவோ ஜும்ப்லாத்தின் தீர்மானம் நிர்ணாயகமானதாகும்.

'எனது தலைமையில் புதிய அரசை உருவாக்க முயற்சி மேற்கொள்வேன் என கடந்த செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய ஸஅத் ஹரீரி தெரிவித்திருந்தார். ஹரீரி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை தாங்களும் விரும்புவதாக ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிக்கும் கிறிஸ்தவ கட்சியின் தலைவர் மைக்கேல் அவ்ன் தெரிவித்துள்ளார்.

முன்னர் இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த உமர் கராமாவை பிரதமராக ஹிஸ்புல்லாஹ் முன்மொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெபனானில் அதிகார பங்கேற்பு கட்டமைப்பின் படி பிரதமர் சுன்னி பிரிவைச் சார்ந்தவராகவும், அதிபர் கிறிஸ்தவராகவும், சபாநாயகர் ஷியா பிரிவைச் சார்ந்தவராகவும் இருக்கவேண்டும் என்பதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஜும்ப்லாத் ஆதரவு"

கருத்துரையிடுக