
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், திரிபோலிக்கு இன்று இரண்டு சிறப்பு விமானங்களை இயக்குகிறோம். ஒரு விமானம் டெல்லியிலிருந்தும் இன்னொரு விமானம் மும்பையிலிருந்தும் செல்லும். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு மீண்டும் மேற்கண்ட இரு நகரங்களுக்குத் திரும்பி வரும்.
இரு விமானங்களும் இன்று அதிகாலை 1.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. இவை மீட்பு விமானங்களாக செயல்படும். இவற்றுக்கான அனைத்துச் செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்றார்.
0 கருத்துகள்: on "லிபியா:இந்தியர்களை மீட்க 2 விமானங்கள் விரைகின்றன"
கருத்துரையிடுக