8 பிப்., 2011

மாஸ்கோ விமானநிலைய தாக்குதல்: செச்சன் போராளி தலைவர் பொறுப்பேற்பு

மாஸ்கோ,பிப்.8:ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டொமோடடோவா விமானநிலையத்தில் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கான பொறுப்பை செச்னியா போராளி இயக்கத் தலைவர் தோகா உமரோவ் ஏற்றுக்கொண்டார்.

காக்கஸஸ் மலைப் பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திவரும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செச்சன் போராளிகளுடன் தொடர்புடைய கவ்காஸ் செண்டர் இணையதளத்தில் நேற்று மாலை போஸ்ட் செய்த வீடியோவில் உமரோவ் தெரிவித்துள்ளார்.

காக்கஸஸ் மலைப்பகுதியில் ரஷ்ய ராணுவத்தினரின் அடக்கு முறைகள் தொடர்ந்தால் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என உமரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாஸ்கோ விமானநிலைய தாக்குதல்: செச்சன் போராளி தலைவர் பொறுப்பேற்பு"

கருத்துரையிடுக