7 பிப்., 2011

ஈரானில் கைதுச் செய்யப்பட்ட அமெரிக்கரிகளின் மீதான விசாரணை துவங்கியது

டெஹ்ரான்,பிப்.7:அத்துமீறி ஈரானுக்குள் நுழைந்து உளவு வேலையில் ஈடுபட்டதாகக் கூறி கைதுச் செய்யப்பட்ட அமெரிக்கர்களின் மீதான விசாரணை ஈரான் நீதிமன்றத்தில் துவங்கியது.

ஷாரா ஷோர்ட், ஷேன் பார், ஜோஸ் ஃபட்டல் ஆகியோர் ஈரான்-ஈராக் எல்லையில் வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்டனர்.

ஈரானில் அமெரிக்காவின் பிரதிநிதியான லிவியா லியு அகோஸ்டி உட்பட எவரையும் நீதிமன்ற விசாரணை அறையில் அனுமதிக்கவில்லை. உடல்நல பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு ஷாரா ஷோர்ட் என்ற பெண்ணிற்கு கடந்த செப்டம்பரில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. அவர் தற்பொழுது அமெரிக்காவில் உள்ளார்.நவம்பரில் விசாரணை துவங்கும் என முன்னர் அறிவித்திருந்த பொழுதிலும் அப்பெண்மணி ஆஜராகவில்லை என்பதால் விசாரணை தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதர இரண்டு பேரை இன்று ஈரானின் புரட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர் எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரானில் கைதுச் செய்யப்பட்ட அமெரிக்கரிகளின் மீதான விசாரணை துவங்கியது"

கருத்துரையிடுக