8 பிப்., 2011

அமெரிக்க போர்க் கப்பல்கள் செங்கடலில்

வாஷிங்டன்,பிப்.8:மக்கள் எழுச்சிப் போராட்டம் நடந்துவரும் எகிப்திற்கு அமெரிக்க போர் கப்பல்களையும், ராணுவ உபகரணங்களையும் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு அமெரிக்க கப்பல்கள் செங்கடலுக்கு வந்துள்ளதாகவும், அதில் ஒன்றில் 800 ராணுவத்தினர் இருப்பதாகவும் அமெரிக்க பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

எகிப்தில் அமெரிக்கர்களை மீட்பதற்காக அமெரிக்க தயாராகி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், எகிப்தில் ராணுவ தலையீட்டிற்கு அமெரிக்கா முயல்வதாக எழுந்துள்ள ஊகங்களை அந்த அதிகாரி மறுத்துள்ளார்.

அமெரிக்க குடிமகன்களை நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்காகத்தான் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க போர்க் கப்பல்கள் செங்கடலில்"

கருத்துரையிடுக