10 பிப்., 2011

தூதரக அதிகாரியை விடுவிக்கா​விட்டால்..​. பாகிஸ்தானு​க்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்,பிப்.10:பாகிஸ்தான் சிறை பிடித்துள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரியை விடுதலை செய்யாவிட்டால், அந்நாட்டிற்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க எம்.பி.,க்கள் எச்சரித்துள்ளனர்.

பாகிஸ்தானில் மூன்று பேரைக் கொன்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அமெரிக்கத் தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிசை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று அமெரிக்க எம்.பி.,க்கள் சிலர் விடுத்துள்ள அறிக்கையில், "டேவிஸ் உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால், அமெரிக்க பார்லிமென்டில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவியை நிறுத்தும் தீர்மானங்களை அமெரிக்க எம்.பி.,க்கள் கொண்டு வரும் சூழல் ஏற்படும்" என்று எச்சரித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தூதரக அதிகாரியை விடுவிக்கா​விட்டால்..​. பாகிஸ்தானு​க்கு அமெரிக்கா எச்சரிக்கை"

கருத்துரையிடுக