5 பிப்., 2011

தேசிய சிறுபான்மைக் கமிஷன் தலைவராக ஹபிபுல்லா பதவியேற்பு

புதுடெல்லி,பிப்.5:தேசிய சிறுபான்மை கமிஷன் புதிய தலைவராக முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா, வியாழக்கிழமை பதவியேற்றார்.

கமிஷனின் உறுப்பினராக பிரபல கவிஞர் கேகி என்.தாருவாலாவும் பதவியேற்றார். தாருவாலா, பார்ஸி சமுதாயத்தைச் சேர்ந்தவர். இந்த இருவரும் சேர்ந்ததையடுத்து, 7 பேர் அடங்கிய இந்த அமைப்பில் காலியிடம் ஏதும் இல்லை.

இந்த கமிஷனின் துணைத் தலைவராக எச்.டி.சாங்லியானா உள்ளார். பதவியேற்ற தினத்திலிருந்து 3 ஆண்டுகளுக்கு நீடிப்பார் ஹபிபுல்லா. ஹர்வேந்திர சிங் ஹன்ஸ்பால். ஸ்பால்சீஸ் அங்மோ, சையதா பில்கிராமி இமாம், விநோத் ஷர்மா ஆகியோர் கமிஷனின் இதர உறுப்பினர்கள் ஆவர்.
தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தேசிய சிறுபான்மைக் கமிஷன் தலைவராக ஹபிபுல்லா பதவியேற்பு"

கருத்துரையிடுக