10 பிப்., 2011

எகிப்து:நாளை முபாரக்கின் மாளிகையை நோக்கி பேரணி

கெய்ரோ,பிப்.10:பதினாறாவது நாளை கடந்துவிட்ட எகிப்தின் மக்கள் எழுச்சிப்போராட்டம் புதிய கட்டத்தை அடைந்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை மிகப் பிரம்மாண்ட பேரணி எகிப்தின் சர்வாதிகார அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் மாளிகையை நோக்கி நடத்தப்படும் என எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அறிவித்துள்ளனர்.

பிப்ரவரி 4-ஆம் நாளை முபாரக் 'விடைபெறும் நாளாகவும்', பிப்ரவரி 13-ஆம் நாளை 'உயிர்தியாகிகளின் தினமாகவும்' எகிப்து நாட்டு மக்கள் கடைபிடித்தனர். அந்நிகழ்ச்சிகளிலெல்லாம் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். நேற்று பெருமளவிலான மக்கள் மக்கள் எழுச்சியின் அதிகாரப்பூர்வ மையமாக விளங்கும் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருந்தனர்.

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் அஹ்மத் ஷஃபீக் அவரது அலுவலகத்தில் நுழைவதை தடுப்பதற்கு ஐம்பதினாயிரம் மக்கள் திரண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் பாராளுமன்றம் மற்றும் உள்துறை அமைச்சகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணிகள் நடைபெற்றன. மக்கள் வசிக்கும் தற்காலிக கூடாரங்களால் தஹ்ரீர் சதுக்கம் நிரம்பியுள்ளதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.

வெளிநாட்டில் வசிக்கும் எகிப்து நாட்டு மக்கள் புரட்சிப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக எகிப்து வருகைத் தருகின்றனர். இணையதளத்தில் இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் மக்கள் பெருமளவில் அணி திரண்டுள்ளனர். தொழிலாளர் அமைப்புகள் இன்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:நாளை முபாரக்கின் மாளிகையை நோக்கி பேரணி"

கருத்துரையிடுக