15 மார்., 2011

அணுசக்தி பாதுகாப்பானதல்ல - சுற்றுச்சூழல் ஆர்வலர்

டோக்கியோ,மார்ச்.15:அணுசக்தி ஒருபோதும் பாதுகாப்பானதல்ல என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் ஸ்டீவ் கேம்பல் தெரிவித்துள்ளார்.

பேரழிவு ஏற்பட்ட ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும், அணுசக்தி நிலையங்களின் வெடிப்பும் உலக அளவில் புதிய விவாதத்திற்கு களம் ஏற்படுத்தியதாக கேம்பல் கூறுகிறார்.

ஹைடெக் தொழில்நுட்ப கட்டமைப்பைக் கொண்ட ஜப்பானில் அணுசக்தி நிலையங்கள் வெடித்துள்ளதால் அணுசக்தி பாதுகாப்பானதல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.

அதிகமான எரிசக்திக்காக அணுசக்தி நிலையங்களை நிறுவும் பொழுது அதன் பாதுகாப்பு மனிதன் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கேம்பல் கூறுகிறார்.

உலகில் எங்கும் எப்பொழுதும் இத்தகைய துயரங்கள் ஏற்படலாம். இது அணுசக்தி நிலையங்களைக் குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது என கேம்பல் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணுசக்தி பாதுகாப்பானதல்ல - சுற்றுச்சூழல் ஆர்வலர்"

கருத்துரையிடுக