14 மார்., 2011

லிபியா:ப்ரீகாவில் கடும் மோதல்

திரிபோலி,மார்ச்.14:லிபியாவின் கிழக்கு எண்ணெய் நகரமான பிரீகாவில் கத்தாஃபி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்குமிடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

கத்தாஃபிக்கு ஆதரவான ராணுவம் எதிர்ப்பாளர்களிடமிருந்து நகரத்தை மீட்டதாக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் தெரிவிக்கிறது.

உகாயலாவின் கட்டுப்பாட்டை தன் வசப்படுத்திய ராணுவம் பிரீகாவை மீட்பதற்கு கடுமையான தாக்குதல்களை நடத்திவருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். பிரீகாவை கைப்பற்றியதாக நேற்று முன் தினம் அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

பிரீகாவிற்கு அடுத்துள்ள பிஷரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கத்தாஃபியின் மகன் கமீஸின் ராணுவப் படையில் 32 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அதேவேளையில், லிபியாவை விமானம் பறப்பதற்கு தடைச் செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டுமென அரபு லீக் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவிலியன்களை கொலைச் செய்வதை முடிவுக்குக் கொண்டுவர இது முக்கியத்துவம் வாய்ந்தது என அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக விவாதிப்பதற்காக கூடிய அரபு லீக்கின் கூட்டத்திற்கு பிறகு தெரிவித்தார் அவர்.

கடந்த சனிக்கிழமை மாலை கத்தாஃபி ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட அல்ஜஸீராவின் கேமராமேன் அலி ஹஸன் அல் ஜாபிரின் பிரிவுக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. அல்ஜாபிரும் அவரது சக ஊழியர்களும் தாக்கப்பட்ட பெங்காசியில் உயிர்தியாகிகள் மைதானத்தில் பெரும் மக்கள் திரள் பங்கேற்ற ஜனாஸா தொழுகையும், அனுதாப நிகழ்ச்சியும் நடந்தன. அல்ஜாபிரின் உடல் அடக்கம் செய்வத்ற்கு சிறப்பு விமானத்தில் கத்தருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து லிபியாவின் மிஸ்ரத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லிபியா:ப்ரீகாவில் கடும் மோதல்"

கருத்துரையிடுக