14 மார்., 2011

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஃதனியை சந்திக்க மனைவிக்கு அனுமதி

திருவனந்தபுரம்.மார்ச்.14:பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மஃதனியை சந்திக்க அவருடைய மனைவி சூஃபியா மஃதனிக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டில் எர்ணாகுளத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட தமிழக அரசு பேரூந்து எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சூஃபியா மஃதனி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கில் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சூஃபியா மஃதனி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வாரத்துக்கு ஒருமுறை எர்ணாகுளத்தில் போலீஸ் முன் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும். எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லகூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை சூஃபியா மஃதனிக்கு மத்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் விதித்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக போலீசால் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் மஃதனியை சந்திக்க அனுமதி கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் சூஃபியா மஃதனி மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார்.

மஃதனியை சந்திக்க பெங்களூர் செல்ல சூஃபியா மஃதனிக்கு மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவி்ட்டார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஃதனியை சந்திக்க மனைவிக்கு அனுமதி"

கருத்துரையிடுக