15 மார்., 2011

மேற்குகரையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி

டெல்அவீவ்,மார்ச்.15:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் புதிய யூத குடியிருப்புகளை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.

நூற்றுக்கும் அதிகமான குடியிருப்பு யூனிட்டுகள் புதியதாக கட்டப்படும். அமைச்சரவை கமிட்டியின் அனுமதி நேற்று கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஃபலஸ்தீனுடனான சமாதான ஒப்பந்தம் அமுலிலிருக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் நபீல் அபூ தய்னா பிரச்சனைகளை உருவாக்க இஸ்ரேல் முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.

வருகிற நாட்களில் குடியிருப்புகளை கட்டும் பணி துவங்கும் என இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார். குடியிருப்புகளை கட்டும்பணி துவங்கியதைத் தொடர்ந்து ஃபலஸ்தீனுடனான அமைதி பேச்சுவார்த்தை முடங்கியது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்குகரையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி"

கருத்துரையிடுக