6 மார்., 2011

அரசியல் - மாத்தியோசி!

இந்தியா உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக கட்டமைப்பைக் கொண்ட தேசம். மதசார்பற்ற, சோசியலிச விழுமியங்களைக் கொண்ட அரசியல் சட்டத்தை தன்னகத்தே கொண்ட நாடு.

ஆனால், இந்தியாவின் அதிகாரவர்க்கமும், ஆட்சியாளர்களும் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. சில வேளைகளில் இந்தியக் குடிமக்கள் கூட தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை சரியாக பயன்படுத்துவதில் தவறிழைக்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல், அதிகாரமெல்லாம் பெரும்பாலும் உயர்ஜாதி, மேல்தட்டு, பணக்கார ஆதிக்க சக்திகளின் கரங்களிலேயே தவழ்ந்து வருகிறது. ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை சமூகம் இத்துறைகளில் பலம் பெறுவது என்பது மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகும். சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளாக களமிறங்கியவர்கள் எல்லாம் ஆதிக்க சக்திகளின் வலைகளில் சிக்குண்டுள்ளதையோ அல்லது தங்களது வசதி, வாய்ப்புகளை மட்டுமே பெருக்குவதில் கவனம் செலுத்துவதையேத்தான் நம்மால் காண இயலுகிறது.

இந்தியாவின் அரசியல் மற்றும் அதிகாரத் துறைகளில் மதவாதம் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலைத்தான் நாம் காண்கிறோம். அரசியல், அதிகார வர்க்கங்கள் மதவாதத்திற்கு ஆட்பட்டோ அல்லது அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை கையாளும் நிலைமைக்கோ தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு புறம் லஞ்சம், ஊழல், மோசடி என அரசியல் அதிகார மையங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் அணிசேராக் கொள்கை இன்று காணாமல் போயுள்ளது. மேலை நாட்டு ஏகாதிபத்திய சக்திகளின் கைப்பொம்மைகளாக இந்திய ஆட்சியாளர்கள் மாறிவிட்டனர்.

இந்தியாவின் இறையாண்மையும், பொருளாதாரமும் அந்நிய ஆதிக்க சக்திகளால் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளன. சமூகரீதியிலான தீமைகள் மலிந்துவிட்டன. அதற்கு எதிராக குரல் கொடுக்கக்கூட எவரும் தயாராகாத பரிதாப நிலை.

இதில் வேதனைப்படக் கூடிய விஷயம் என்னவெனில் அத்தகைய சமூகரீதியிலான தீமைகளுக்கு சமூக அந்தஸ்தை அளிக்க இந்தியாவின் சட்டமியற்றும் சபைகளில் வலியுறுத்தப்படுகிறது.

நீதிபீடங்களின் தீர்ப்புகள் ஒரு குறிப்பிட்ட மதத்தவர்களின் மனசாட்சியை பிரதிபலிப்பதாக மாறிவிட்டன. இரட்டை நீதிமுறையை நோக்கி தேசம் சென்றுக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் மனிதநேய சமூக ஆர்வலர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

காவல்துறை உள்ளிட்ட இந்தியாவின் பாதுகாப்பு மையங்களில் நிலவும் தீவிரமதவாதமும், ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான நிலைப்பாடும் பல சூழல்களிலும் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அப்பாவிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதும் இந்தியாவைப் பொறுத்தவரை சர்வசாதாரணமாக மாறிவிட்ட காட்சிகளாகும்.

5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய மற்றும் மாநிலங்களவிலான தேர்தல்களில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவருவதற்கு பணம் பட்டுவாடா உள்பட கீழ்த்தரமான வழிமுறைகளை கையாளும் சூழலும் அனைவருக்கும் தெரிந்த சேதிதான்.

ஜனநாயகம் கோலோச்சுவதாக பெருமைப் பேசும் தேசத்தில் தேசிய கட்சி ஒன்று ஒரு குடும்பக் கட்சியாகவே மாறிவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை இரு திராவிடக் கட்சிகளிலும் உள்கட்சித் தேர்தல்கள் சடங்கிற்காகவே நடத்தப்படுகின்றன.

திராவிட கட்சிகளின் ஆட்சி என்றாலே ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரின் ஆட்சிதான் என்ற மாயை உருவாகிவிட்டது. இன்னொருபுறம் சமூக சீரழிவுகளுக்கு வித்திடும் திரைப்பட நடிகர்கள் சிலர் அரசியல் கட்சியை உருவாக்கி திரைப்பட மாயையில் உழலும் அப்பாவி மக்களை தங்களது வலையில் வீழ்த்துகின்றனர். ஒவ்வொரு ஜாதியினரும் தமக்கென ஒரு கட்சியை உருவாக்கி வாக்குவங்கிகளை காட்டி ஆதாயம் பெறும் முயற்சியில் ஈடுபடும் மோசமான சூழலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நிலவும் நிதர்சனமாகும்.

தேசபக்த வேடம் போடும் மதவாத கட்சி ஒன்று நாட்டை அடகு வைப்பதிலும், ஊழல்,மோசடியிலும் தாங்கள் எவருக்கும் சளைத்தவர்களல்லர் என்பதோடு நாட்டை பாதுகாக்கும் பணியில் இறந்த வீரர்களை அடக்குவதற்கு வாங்கிய சவப்பெட்டிகளில் கூட ஊழல் புரிந்து இந்திய அரசியலில் தாங்கள் மிக கேடுகெட்டவர்கள் என்பதை நிரூபித்தார்கள். அத்தோடு, நாட்டில் மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தி கலவரக்காடாக மாற்றுவதிலும் முன்னணியில் உள்ளார்கள் அக்கட்சியினர்.

ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் என்பது மதவாத, ஜாதீய, ஊழல், மோசடி, லஞ்சம், ஒழுக்கச் சீரழிவு, இறையாண்மையை அடகுவைப்பது, பொருளாதார சுரண்டல், நிர்வாக சீர்கேடு மிகுந்ததாக மாறிவிட்டது.

இந்நிலையில் நல்லவர்களும், சமூகத்திற்கு தம்மால் இயன்ற அளவு நன்மைச்செய்ய வேண்டுமென நாடுவோரும் அரசியலில் கால்பதிக்க தயங்குகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அரசியல் ஒரு சாக்கடை! இவ்வாறு அரசியலை தீண்டத்தகாத ஒன்றாக கருதி அதனை விட்டு ஒதுங்கி நின்றுக்கொண்டு அநியாயக்காரர்களும், குற்றவாளிகளும் அரசியலில் ஆட்டம் போடுவதை கண்டுகளிப்பதா இந்தியக் குடிமக்களான ந்மது கடமை?

-யோசிப்புத் தொடரும்...
ASA

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 கருத்துகள்: on "அரசியல் - மாத்தியோசி!"

Unknown சொன்னது…

சபாஷ்! சரியான தருணத்தில் சரியான தொடர்!

மாஷ் சொன்னது…

அருமையான தொடர். தொடரட்டும் யோசனைகள்.

பெயரில்லா சொன்னது…

sooper

பெயரில்லா சொன்னது…

continue

Jaffar Fujairah சொன்னது…

தேர்தல் நெருங்கிவிட்டது SDPI யின் நிலைப்பாடு என்ன? தகவல் எதிலும் வரவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

தேர்தல் நெருங்கிவிட்டது SDPI யின் நிலைப்பாடு என்ன? தகவல் எதிலும் வரவில்லை. தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது....

SSSS.. am also waiting for SDPI election Decision....

பெயரில்லா சொன்னது…

Masha Allah.. Expecting more and more

கருத்துரையிடுக