19 நவ., 2009

இஸ்ரேலின் தடுப்பூசி பரிசோதனைக்கு இரையாக்கப்படும் ஃபலஸ்தீனர்கள்

கெய்ரோ: இஸ்ரேல் சிறைகளிலிலுள்ள ஃபலஸ்தீனர்களிடம் மருந்துகளை தடுப்பூசி மூலம் போட்டு பரிசோதனை நடத்தப்படுவதாக கெய்ரோ மனித உரிமை அமைப்பின் கீழ் செயல்படும் ஸவசியா ஹீயூமன் ரைட்ஸ் சென்டர் வெளிப்படுத்தியுள்ளது.

இப்பரிசோதனையின் விளைவாக ஃபலஸ்தீனர்களுக்கு உடல் முழுவதும் முடிக்கொட்டியுள்ளது. சர்வதேச மனித உரிமைகளை காற்றில் பறத்திவிட்டு ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் சிறையில் அடைத்துள்ளது.
தடுப்பூசி போடப்பட்டவர்களை பரிசோதிப்பதற்கு உலகிலிலுள்ள எல்லா மனித உரிமை அமைப்புகளும், சுகாதார நிறுவனங்களும் தங்களுடைய பிரநிதிகளை இஸ்ரேலுக்கு அனுப்பவேண்டும் என்றும் இவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஃபலஸ்தீன் அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி 1967 முதல் ஏழு லட்சம் பேரையும் 2000 ஆம் ஆண்டு முதல் ஐம்பது ஆயிரம் பேரையும் இஸ்ரேல் ராணுவம் கைதுச்செய்துள்ளது. ஃபலஸ்தீன் எல்லைகளிலிருந்து கைதுச்செய்யப்பட்டவர்கள் 9850 பேர் இஸ்ரேலிலுள்ள முப்பது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 105 பெண்களும், 359 குழந்தைகளும் அடங்குவர். ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளிடம் இஸ்ரேல் மேற்க்கொள்ளும் மோசமான நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் தடுப்பூசி பரிசோதனைக்கு இரையாக்கப்படும் ஃபலஸ்தீனர்கள்"

கருத்துரையிடுக