12 ஜன., 2010

ஷொரஹ்ப்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலைவழக்கு: சி.பி.ஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி:போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஷொரஹ்ப்தீன் ஷேக் வழக்கை சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி ஷொரஹ்புதீன் ஷேக்கையும் அவருடைய மனைவியையும் குஜராத் காவல்துறையினர் போலி என்கவுண்டரில் அநியாயமாக சுட்டுக்கொன்றனர்.
ஏற்கனவே இவ்வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு (S.I.T) நரேந்திரமோடி அரசுக்கு ஆதரவாக அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை கேள்விக்கேட்டு ஷொரஹ்புதீன் ஷேக்கின் சகோதரர் அளித்த மனுவில் நீதிபதிகளான தருண் சாட்டர்ஜியும், அஃப்தாப் ஆலமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷொரஹ்ப்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலைவழக்கு: சி.பி.ஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு"

கருத்துரையிடுக