14 ஜன., 2010

பாலைவன பரிதவிப்பு!

பாலைவன பனியில் நனைந்துகொண்டே நடந்துபோது
பொங்கிவந்த மனகுமுறலை பொறுத்திடமுடியாமல்
வெளிறிக்கிடந்த வானத்தையே வெறித்துபார்த்து
வெதும்பிகரைந்தது கண்ணீர்

பத்துக்கு பதிமூன்றை நம்பி
இருந்தெல்லாம் விற்று போதாகுறைக்கு
பத்துக்கு பதினைந்தாக வட்டிக்கும் வாங்கி
வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தால்
இன்று போகுமோ வேலை நாளை போகுமோ
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு
அடுத்ததுநானோ அடுத்ததுநானோ என

காலையில் வேலைக்குபோகும் மனம் கலங்கியபடி
ஒவ்வொருநாளும் பொழுதுபோக்கும் அவஸ்தை
அனலில் புளுவாய் துடித்தபடி
குடும்பச்சுமை கடன்சுமை இதற்கு
நடுவே வேலைகள் பறிபோகும் நிலை
என்னசெய்வது என்னசெய்வது என்றெண்ணியபடியே
இருதலைக் கொள்ளியாய் தவித்திடும் மனது

சொட்டச்சொட்ட பனியில் நனைந்தபோதும்
நெஞ்சுக்குள் மட்டும் பற்றி எறிகிறது நெருப்பு
சோறுபோட்ட நாடு சுகம் பெறுமா -இல்லை
சுமைகளின் பாரம் கூடிப்போகுமா?

எல்லாம் வல்ல இறைவன் இருள்நீக்கி
அருள்புரியவேண்டும்
இன்னல்களை போக்கி
மகிழ்ச்சியை தந்திடவேண்டும்..

மலிக்கா
source:நீரோடை

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாலைவன பரிதவிப்பு!"

கருத்துரையிடுக