கொலை வெறியோடு
களை எடுப்பதாக எண்ணி
எங்களை நோக்கி ஒரு கூட்டம்!
உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்
பாதிக்க பட்டவரே பயங்கரவாதியாக !!
வெறிகொண்ட கூட்டத்தின் நடுவே
பறிக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அபலை சமுதாயம்!!
இல்லாமல் ஆக்க; இருக்க வேண்டிய முதல் அடையாளம்
இஸ்லாமியனாக இருப்பது!!
நம் பலம் படுத்தப் படுக்கையாகி விட்டதால்
வருபவனெல்லாம் கால் துடைத்து விட்டுச் செல்லும் மிதியடியாக!!
அமைப்பு என்கின்ற பெயரிலே
ஆளுக்கொரு மூலையிலே!!
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நம் துடிப்பு
மறக்க முடியாத நாள் பாபரி இடிப்பு!!
செத்துப்போன சுயமரியாதையை மீட்டெடுப்பது எப்போது;
வெத்து வேட்டாய் இருப்பதை விட
வெடித்து விடுவதே சிறப்பு!!
மாநபியின் போதனைகள்
வாயோடு நின்றதினால் வந்த வினை;
உருக்கி உள்ளத்தில் விட்டால் உயரும் நம் நிலை!!! (இன்ஷா அல்லாஹ்)
கவிதை:யாசர் அரஃபாத்
source:மின்னஞ்சல்
0 கருத்துகள்: on "வெத்து வேட்டாய் இருப்பதை விட..."
கருத்துரையிடுக