ஸ்ரீநகர்:1996 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பில் 3 பேருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து ஹுரியத் மாநாட்டு கட்சி விடுத்த முழு அடைப்பில் வன்முறை நிகழ்ந்தது.
மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் இருவர் கஷ்மீரைச் சார்ந்தவர்கள். இன்னொருவர் டெல்லியைச் சார்ந்தவர். டெல்லி விசாரணை நீதிமன்றம் எவ்வித ஆதாரமுமின்றி தூக்குத்தண்டனை வழங்கியுள்ளதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட டெல்லியைச் சார்ந்த நவ்ஷாத் கூறியுள்ளார்.
மேலும் கஷ்மீரைச் சார்ந்த இருவரின் குடும்பத்தினரும் இது அநியாய தீர்ப்பு எனக்கூறியுள்ளனர். இதனை எதிர்த்து மேல் முறையீடுச் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கஷ்மீரில் இரண்டு கஷ்மீரிகளுக்கு மரணத் தண்டனையை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹுரியத் மாநாட்டு கட்சி விடுத்த முழு அடைப்பில் வன்முறை நிகழ்ந்தது. இதில் எட்டு போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை கஷ்மீர் மக்கள் இந்தியா எதிர்ப்பு கோஷத்தை முழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏராளமான சி.ஆர்.பி.எஃப் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சி.ஆர்.பி.எஃப் படையினர் நவ்ஷெஹ்ரா பகுதியிலிலுள்ள மஸ்ஜிதிலிருந்து வெளியே வந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியது. 49 வயதான மன்சூர் அஹ்மதிற்கு வயிற்றில் குண்டு பாய்ந்ததாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு போலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார்.
தலைநகரின் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதற்கிடையில் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசீன் மாலிக் லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் எனக் குற்றஞ்சாட்டி காவலில் வைக்கப்பட்டார்.
செய்தி:twocircels.net
0 கருத்துகள்: on "கஷ்மீர்:மரணத் தண்டனையை எதிர்த்து போராட்டம்- 15 பேர் காயம்"
கருத்துரையிடுக