26 ஏப்., 2010

ஷார்ஜா:17 இந்தியர்களுக்கு மரண தண்டனை– ஆம்னஸ்டி கண்டனம்

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஷார்ஜா கோர்ட் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர்கள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்னஸ்டி அமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பரிக்கப் பிரிவு துணை இயக்குநர் ஹசீபா ஹதிஜ் ஷரோய் கூறுகையில், இது சட்டத்தைக் கேலி செய்வதாக உள்ளது. 17 பேரையும் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று தண்டனை கொடுத்துள்ளனர்.

இந்த சித்திரவதை கட்டாய வாக்குமூலம் குறித்து விசாரிக்க வேண்டும். இவர்களின் அப்பீல் மனுக்களை நியாயமாக விசாரிக்க வேண்டும்.17 இந்தியர்களையும் கட்டைகளால் அடித்துள்ளனர். மின்சார ஷாக் கொடுத்துள்ளனர். தூங்க விடாமல் சித்திரவதை செய்துள்ளனர் என்றார் அவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷார்ஜா:17 இந்தியர்களுக்கு மரண தண்டனை– ஆம்னஸ்டி கண்டனம்"

கருத்துரையிடுக