26 ஏப்., 2010

மார்க் ட்வைன்

"இப்பிரபஞ்சத்தின் முடிவில்லா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை " இதுப்போன்ற சிந்தனையைத் தூண்டும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரரான மார்க் ட்வைன் மரணித்து இன்றோடு ஒரு நூற்றாண்டும் 5 தினங்களும் ஆகியுள்ளன.

1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதிதான் அட்வன்சர்ஸ் ஆஃப் ஹக்கிள்பெர்ரி ஃபின்(1884), தி அட்வன்சர்ஸ் ஆஃப் டோம் ஸாயர்(1876) ஆகிய புகழ்பெற்ற நாவல்களின் சொந்தக்காரரான மார்க் ட்வைன் இறந்தார்.

ஆச்சரியமாக இருந்தது மார்க் ட்வைனின் கதை உலகம். அது வரை அமெரிக்க இலக்கியம் என்றாலே உலகம் கிண்டலாக கணித்தது. மார்க் ட்வைனிற்கு முன்பு மார்கரேட் மிச்சலும், ஹாரியட் பீச்சர் ஸ்டோவும்தான் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்கள். ஆனால் 1865 ஆம் ஆண்டு காலவேரா நாட்டில் புகழ்பெற்ற குதிக்கும் தவளைகள்(The Celebrated Jumping Frog of Calaveras Country) என்ற நூலை எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார் மார்க் ட்வைன். அன்று முதல் இன்று வரை அமெரிக்க எழுத்தாளர்களின் முதலிடத்திலிருப்பவர் மார்க் ட்வைனாகும்.

ஹனிபால் என்ற சிறு நகரத்தில் ஒரு வழக்கறிஞரின் மகனாக மார்க் ட்வைன் பிறந்தார். 11 வயதில் தந்தை மரணமடைந்தார். பின்னர் சிறு வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னர் அவர் சென்றது பத்திரிகை பணிக்கு. அங்கிருந்துதான் மார்க் ட்வைன் எழுத்துலகிலும், நாடக அரங்கிலும் பிரவேசித்தார். அசாதரணமாக இருந்தது அவருடைய வெற்றியின் வரலாறு. உலகமெங்கும் அவருடைய பெயர் புகழ் பெற ஆரம்பித்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மட்டுமல்ல இந்தியாவிலும் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளரானார் மார்க் ட்வைன்.

ஒரு முறை மார்க் ட்வைன் இந்தியாவிற்கு வந்திருந்தார். கப்பலில் இந்தியாவிற்கு வந்துவிட்டு திரும்பிச்செல்ல பல மாதங்களாகின. அமெரிக்காவைக் குறித்து இந்தியாவில் மூன்று விஷயங்களை மட்டுமே தெரிந்திருக்கிறது என்று மார்க் ட்வைன் தனது நண்பரிடம் தெரிவித்தார். அவை 1.வால்ஸ்ட்ரீட் 2. சுதந்திரதேவி சிலை 3.மார்க் ட்வைன்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மார்க் ட்வைன்"

கருத்துரையிடுக