8 ஏப்., 2010

ஆப்கான்:அமெரிக்க கூட்டுப் படையினரின் தாக்குதலில் 5 குழந்தைகள் பலி

காபூல்:கிழக்கு ஆப்கானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பு கூட்டுப் படையிலுள்ள பிரான்சு நாட்டுப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 பள்ளிக்குழந்தைகள் பலியாகினர்.3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனை ஆப்கான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்றது கபிஸா மாகாணத்திலிலுள்ள ஸோஃபியான் பகுதியிலாகும். இதனை பிரஸ் டி.வியின் நிருபர் தெரிவித்துள்ளார்.

கபிஸா மாகாண கவுன்சிலின் உறுப்பினர் நஜ்புல்லாஹ் ரஹ்மானி கூறுகையில் பிரஞ்சுப் படையினருக்கும் தாலிபான் போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலின் போதுதான் இந்நிகழ்வு ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்.

நேட்டோ தெரிவிக்கையில் குழந்தைகள் கொல்லப்பட்ட நிகழ்விற்குக் காரணம் நேட்டோ படையினருக்கும் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கும் இடையே நடந்த மோதல்தான் என்றுக் கூறுகிறது.

ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரின் கொடூரத் தாக்குதலில் சாதாரண மக்களின் மரணம் அதிகரித்து வரும் சூழலில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினருக்கெதிரான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நேட்டோ ஆக்கிரமிப்புப் படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 2 பெண்கள் ஒரு குழந்தை உள்ளிட்ட 4 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். இதனை நேட்டோ தெரிவித்துள்ளது. தற்ப்பொழுது 1,20.000 அந்நிய ஆக்கிரமிப்புப் படையினர் ஆப்கானில் உள்ளனர். தற்ப்பொழுது மேலும் 30 ஆயிரம் படையினரை ஆப்கானுக்கு அனுப்பப் போவதாக அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் அறிவித்துள்ளன.
செய்தி:presstv

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்கான்:அமெரிக்க கூட்டுப் படையினரின் தாக்குதலில் 5 குழந்தைகள் பலி"

கருத்துரையிடுக