குவைத் இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம் (KIFF) சார்பாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி "நாமும் சாதிக்கலாம்" என்ற மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
நூலின் முதல் பிரதியை KIFF-ன் துணைத் தலைவர் சகோதரர் ரபீக் மாஞ்சி மற்றும் நூல் வெளியீட்டின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அம்ஜத்அலி அவர்களும் வெளியிட சுப்ரீம் கார்கோவின் உரிமையாளர் ஜனாப்.அபூபக்கர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியை சகோதரர் ஹாபிழ் அப்துல் ஜமீல் கிராஅத் ஓத, சகோதரர் அப்துல் அஜீஸ் தலைமை தாங்க இனிதே துவங்கப் பட்டது. நிகழ்ச்சியில் 'மிஸ்ரா கமிஷன் கூறுவது என்ன?' என்ற தலைப்பில் சகோதரர் மாஹின் அவர்களும் அதனைத் தொடர்ந்து 'முஸ்லிம் சமுதாயத்தின் கல்வியின் நிலை' என்ற தலைப்பில் சகோதரர் அம்ஜத் அலி அவர்களும் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக சகோதரர் ஹசன் அலி நன்றியுரை ஆற்றினார்கள்.
மன்னு சல்வா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு இலவசமாக வழங்கிய "நாமும் சாதிக்கலாம்" என்ற நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்திச் சென்றனர்.
0 கருத்துகள்: on "குவைத்தில் நடைபெற்ற 'நாமும் சாதிக்கலாம்' மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா"
கருத்துரையிடுக