26 ஏப்., 2010

மேற்காசியப்பிரச்சனைகளுக்கு காரணம் நீதிமறுப்பு: ரோபர்ட் ஃபிஸ்க்

தோஹா:மேற்காசியா பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் நீதிமறுக்கப்படுவதாகும் என பிரபல பிரிட்டீஷ் பத்திரிகையாளர் ராபர்ட் ஃபிஸ்க் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதலிலும், ஃபலஸ்தீன், இஸ்ரேல் ,ஈராக், ஆப்கானிஸ்தான் பிரச்சனைகளுக்கெல்லாம் நீதி மறுக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இத்தகைய நிகழ்வுகள் ஏன் நடக்கிறது? என்பது குறித்து மேற்கத்திய ஊடகங்கள் சுயமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜார்ஜ் டவுண் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் ஃபோருக்கான சேவை கத்தர் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் செண்டர் ஃபார் இண்டர்நேசனல் அண்ட் ரீஜினல் ஸ்டடீஸ் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் வைத்து ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சியில் 'புறக்கணிக்கப்படுவதின் நிலை: மேற்கு ஆசியாவும் மேற்கத்திய ஊடகங்களும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அவர்.
"காஸ்ஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பின் நான் கனடா முதல் அயர்லாந்து வரை சுற்றுப்பயணம் மேற்க்கொண்டேன். அந்த நாடுகளின் பத்திரிகைகளெல்லாம் வெளியிட்ட செய்தி என்னவெனில் ஹமாஸ் 100 ராக்கெட்டுகளை ஏவியதைக் குறித்துதான். அயர்லாந்தில் பத்திரிகைகள் ராக்கெட்டுகளின் எண்ணிக்கையை நான்காயிரமாக மாற்றியது. ஹமாஸ் எங்கிருந்தோ பட்டனை அழுத்துவதுபோல் அப்பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. செய்திகளின் உறைவிடம் அரசு மட்டுமே என்ற அடிப்படையில்தான் மேற்கத்திய ஊடகங்களின் எண்ணம்.

ஈராக்கைக் குறித்த செய்திகளுக்கெல்லாம் மேற்கோள்காட்டுவது அமெரிக்க அதிகாரிகளை மட்டுமே என்று கூறிய ராபர்ட் ஃபிஸ்க் அவருடைய கையிலிருந்த இத்தகைய பொய்யான செய்திகள் அடங்கிய பத்திரிகையின் பிரதியை கிழித்தெறிந்தவாறு இத்தகையதொரு பத்திரிகை தொழில் நமக்கு தேவையில்லை" என்று கூறினார்.

"செமட்டிக் விரோதம் தங்கள் மீது சுமத்தப்படுமோ என்ற பயம் மேற்கத்திய ஊடகங்களுக்கு. அதனால் அவர்கள் இஸ்ரேலை கேள்விக்கேட்க அச்சப்படுகிறார்கள்.

1970 இல் ஈராக்கிலும், 1920 இல் ஃபலூஜாவிலும் நடத்திய ஆக்கிரமிப்பிற்கு கூறிய அதே காரணங்களைத்தான் பிரிட்டன் இப்பொழுதும் கூறுகிறது. எல்லா ஆக்கிரமிப்புகளுக்கும் பின்னணியில் யூத ஆதரவு மனோநிலையும், அதுத் தொடர்பான சதித் திட்டங்களையும் காணமுடியும்.

மேற்கத்தியவாதிகளின் முஸ்லிம் விரோத மனப்பான்மைக்கு காரணம் முஸ்லிம்கள் நம்பிக்கையிலும், தனி நபர் பண்பு நலன்களிலும் உறுதியாக இருப்பதேயாகும். அமெரிக்கா இனிமேல் முஸ்லிம் நாடுகளுக்கு ராணுவத்தையல்ல, பேராசிரியர்களையும், ஆய்வாளர்களையும் அனுப்ப வேண்டும். முஸ்லிம் நாடுகளிலிருந்து அவர்கள் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அரபுக்களின் லாபி பரிதாபகரமாக இருப்பதே யூத லாபி சக்திப்படுவதற்கு காரணமாகும்". இவ்வாறு உரை நிகழ்த்திய ராபர்ட் ஃபிஸ்க் கருத்தரங்கு முடிவுற்ற பிறகு கல்ஃப் மாத்யமம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்; "புலனாய்வு பத்திரிகை பணி குறைந்து வருவதை பொதுவாக கூறவியலாது. ’இண்டிபெண்டண்ட்’ போன்ற பத்திரிகைகள் புலனாய்வு ரீதியான செய்திகளுக்கு ஆர்வம் ஊட்டுகின்றது. நியூயார்க் டைம்ஸ் ஒதுக்கப்பட வேண்டிய பத்திரிகையாகும்." என்றார் அவர்.

பல ஆண்டுகளாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வசித்து வரும் ராபர்ட் ஃபிஸ்க் உஸாமா பின் லேடன் அவர்களை பேட்டியெடுத்த அபூர்வமான பத்திரிகையாளர்களில் ஒருவர். 1982 ஆம் ஆண்டு சியோனிஷ வாதிகள் நடத்திய சாப்ரா-ஷத்தீலா கொடூர படுகொலையின் பின்னணியை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காடியவர் ராபர் ஃபிஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்காசியப்பிரச்சனைகளுக்கு காரணம் நீதிமறுப்பு: ரோபர்ட் ஃபிஸ்க்"

கருத்துரையிடுக