25 ஏப்., 2010

எஸ்.எம்.கிருஷ்ணா ஈரான் செல்கிறார்; எரிவாயு பைப்லைன் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்

புதுடெல்லி:வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஈரான் செல்கிறார். இப்பயணம் எரிவாயு பைப் லைன் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்க உதவும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஜி15....நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கெடுப்பதற்காகத்தான் அடுத்த மாதம் 14,15தேதிகளில் கிருஷ்ணாவின் ஈரான் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுடைய பெட்ரோலியத்துறை அமைச்சர்கள் எரிவாயு பைப் லைன் தொடர்பாக எப்பொழுது பேச்சுவார்த்தையை துவக்கலாம் என்பது கிருஷ்ணாவின் ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதற்கிடையே பாகிஸ்தானுடன் ஈரான் எரிவாயு பைப்லைன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவை பின்னர் இவ்வொப்பந்தத்தில் இணைப்பதில் எதிர்ப்பில்லை என்றும் இருநாடுகளும் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானின் ஏராளமான பகுதிகளை கடந்த ஈரானின் எரிவாயு பைப்லைன் வருவதால் இது பாதுகாப்புத் தொடர்பான பிரச்சனைகளை உருவாக்கும் என இந்தியா கவலைக் கொள்கிறது என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் இந்தியா இவ்வொப்பந்தம் செய்ய தயங்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆப்கான் நிலைமை, ஈரானின் அணுசக்தி திட்டம் ஆகியவற்றைக் குறித்தும் அமைச்சர் கிருஷ்ணா ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மன்ஸஹர் முத்தக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். எட்டு பில்லியன் பைப்லைன் திட்டம் தொடர்பாக ஈரானுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எஸ்.எம்.கிருஷ்ணா ஈரான் செல்கிறார்; எரிவாயு பைப்லைன் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்"

கருத்துரையிடுக