4 ஏப்., 2010

யூசுஃப் பதானின் பாராட்டுதலுக்குரிய முடிவு

புதுடெல்லி:இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராக விளங்குபவர் யூசுஃப் பதான். தற்ப்பொழுது ஐ.பி.எல் டுவெண்டி-20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் அதிவேக சதமடித்தவர் யூசுஃப் பதான்.

டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியின் பொழுது மதுபான கம்பெனியான கிங்ஃபிஷரின் சின்னம்(லோகோ) உடைய டீ-சர்ட் அணிய மறுத்துவிட்டார். இதுத் தொடர்பாக யூசுஃப் பதான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "கிங்ஃபிஷர் ஆல்கஹால்(மதுபானம்) தயாரிக்கும் நிறுவனமாகும். மதுபானத்தை அருந்துவதோ அல்லது அதன் விற்பனைக்குத் தூண்டுவதான விளம்பரத்தில் பங்கேற்பதோ எனது சொந்த மத நம்பிக்கைக்கு எதிரானது" என்றார் அவர்.

பரோடாவில் உள்ள மஸ்ஜிதில் தனது இளைமை பருவத்தில் வளர்ந்த இவருடைய தந்தை முஅத்தினாக(மஸ்ஜிதில் அதான் கூறுபவர்) பணிபுரிந்து வருகிறார்.

இதுத் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இது ஒரு சிறிய விஷயம். இது அவருடைய சொந்த விருப்பம். அவர் நன்றாக பேட் செய்கிறார். அணி நிர்வாகம் அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது" என்றார்.

இதற்கு முன் இத்தகையதொரு முடிவை தென் ஆப்ரிக்காவின் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரான ஹாஷிம் ஆம்லா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நீண்டநாள் ஸ்பான்சராக செயல்பட்டுவரும் பீர் கம்பெனியான கேசில் லேகர் என்ற நிறுவனத்தின் டீ சர்ட்டை அணிய மறுத்தார். இதற்கு தென் ஆப்பிரிக்க அணியும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யூசுஃப் பதானின் பாராட்டுதலுக்குரிய முடிவு"

கருத்துரையிடுக