25 ஏப்., 2010

ஷோபியானில் ராணுவம் ஒருவரை சுட்டுக் கொன்றது: மக்கள் கொந்தளிப்பு

ஸ்ரீநகர்:தீவிரவாதி என்று சந்தேகித்து ஒருவரை சுட்டுக்கொன்று இன்னொருவருக்கு காயத்தை ஏற்படுத்திய ராணுவத்தின் அக்கிரமத்தைக் கண்டித்து ஷோபியானில் கடும் எதிர்ப்பு போராட்டம் நடந்தது.

இச்சம்பவத்தைக் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டது. கோபமடைந்த மக்கள் இரண்டு ராணுவ வாகனங்களை தீவைத்துக் கொழுத்தியதையடுத்து ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.
அதிகாலை 4.15 மணிக்கு கிராமத்திற்கு வெளியேயிருந்து வந்த 3 பேர் ராணுவத்தினரை கண்டு பயந்து ஓடியபொழுது ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் இறந்ததாகவும், இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் ராணுவம் தெரிவிக்கிறது. இன்னொருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
கொலையில் கடும் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி கூறுகையில், கடந்த 15 தினங்களாக ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாகவும், ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நேசனல் கான்ஃப்ரன்ஸ் கட்சியைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் மெஹ்பூபா முஃப்தி கண்டனம் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷோபியானில் ராணுவம் ஒருவரை சுட்டுக் கொன்றது: மக்கள் கொந்தளிப்பு"

கருத்துரையிடுக