26 ஏப்., 2010

வழக்கு நியூயார்க்கிற்கு வெளியே நடத்தவேண்டும்- உஸாமா பின் லேடனின் மெய்க்காவலர் கோரிக்கை

நியூயார்க்:தனது வழக்கை நியூயார்க் மாவட்ட பெடரல் நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தவேண்டுமென அல்காயிதா தலைவராக கருதப்படும் உஸாமா பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலர் அஹ்மத் கல்ஃபான் கெய்லானி விருப்பம் தெரிவித்துள்ளார்.

200 பேரின் மரணத்திற்கு காரணமான 1998 ஆம் ஆண்டு கிழக்கு ஆப்ரிக்காவில் இரண்டு அமெரிக்க தூதரகங்களுக்கு மீது நடந்த குண்டுவெடிப்பில் காரணமானவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணையை எதிர் கொள்ளும் தான்சானியா நாட்டைச் சார்ந்தவர் தான் கெய்லானி.

2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து கைதுச் செய்யப்பட்ட கெய்லானியை கடந்த ஆண்டு குவாண்டனாமோ சிறையிலிருந்து மன்ஹாட்டன் சிறைக்குக் கொண்டுச் சென்றனர்.

அரசின் மரியாதைக் குறைவான நிலைப்பாட்டின் காரணமாக இவ்வழக்கை தள்ளுபடிச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள கெய்லானி தான் குற்றவாளி அல்ல என்று தெரிவித்தார்.

ஃபோட்டோஷாப்பில் நல்ல திறமையுடைய நபர்தான் கெய்லானி என எஃப்.பி.ஐ யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உஸாமா பின் லேடனின் முன்னாள் மெய்க்காவலரான நஸீர் அல் பஹ்ரி தனது புத்தகத்தில் உஸாமாவைக் குறித்து எழுதிய கருத்துக்கள் பத்திரிகை உலகில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வழக்கு நியூயார்க்கிற்கு வெளியே நடத்தவேண்டும்- உஸாமா பின் லேடனின் மெய்க்காவலர் கோரிக்கை"

கருத்துரையிடுக